gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சிவ யோகம்

Written by

                      ஓம் நமசிவாய!
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
                            ******
சிவயோக கருத்து:-
தன் உணர்வு கொண்ட ஒரு தனிப் பொருள் பரமசிவம். இதை அநாகத சிவம் எனலாம். இது ஒரு ஜோதியாகும். சோதி-சிவன்-பிரகாசம், பரவிய வெளிச்சம்-சக்தி-விமர்சம் ஆகும். சித்தாந்தத்தில் கூறப்படும் சிவத்தின் அருட்பகுதியாகிய சக்தி இதுவே. சூரியனை சிவனாகவும் அதன் கதிர்களை சக்தியாக கொண்டால், ஆகாயத்தில் சூரியணும் பூமியில் அதன் கதிர்களும் இருந்தாலும் இரண்டும் ஒரு பொருளின் இரு தன்மைகளே அன்றி வேறு வேறு அல்ல. பரம் பொருளாகிய சிவத்தோடு பிரிக்கப்படாத சக்தியை ‘சித்’ / ‘பராசக்தி’ / சித்ரூபிணி சக்தி’ எனக் கூறலாம்.
சித் - தன்னைத்தானே உணரும் கடவுளின் தன்மையாகும். இந்த உலகமும், உடலும், நம்மிடம் உள்ள எல்லாம் கடவுளிடமிருந்துதான் தோன்றியுள்ளன. கடவுள் பெண்ணை விருப்பியதால் தான் உடலில் பாதியை தந்து அந்த உணர்வை நமக்கு தந்துள்ளான். அப்படி கடவுள் விரும்பாவிடில், உலக உயிர்களும் விரும்பாது போய் உலக வாழ்வில் ஈடுபடாது கடவுளிடம் ஒன்றிவிடும். எனவே எந்த ஓர் உணர்வும் கடவுளிடமிருந்துதான் உயிர்களுக்கு வரமுடியும். நம் உணர்வுகள் எல்லாம் கடவுளின் உணர்வுகளே.
‘சச்சிதானந்தம்’ என்பது ஸத் + சித் + ஆனந்தம் ஆகும். 
ஸத்-என்றும் வாழ்ந்து இருப்பது-உயிர்களுக்கு கிடைக்கும் உயிர் வாழும் தன்மையாகும். 
சித் -எங்கும் உணர்வைப் பரப்புவது- நான் என உணரும் அறிவுத் தன்மை உயிர்கள் அடைதல்
ஆனந்தம் -தானே இயல்பாய் இன்பமுடன் இருத்தல்-இன்பம் என்பதை உயிர்கள் அடைகிறது
கண்ணாடியான மனத்தில் அழகு, சுவை, நன்மை, பாசம், ஆசை ஆகியவை பட்டு பிரதிபலிக்கும்போது மனத்தின் ஆத்மாவிற்கு இன்பம் ஏற்படும். அந்த இன்பம் நம் உள்ளே இருப்பதாகும். அந்த பொருள்களால் வரவில்லை. ஒருவருக்குப் பிடித்த பொருள் இன்னொருவருக்குப் பிடிப்பதில்லை. இனிப்புள்ள பதார்த்தங்களில் இனிப்பு இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் எல்லாம் பிடிப்பதில்லை.
இச்சா- இச்சை - விருப்பம் உலகம் முதலியவற்றைப் படைக்கும் எண்ணம்.
ஞானம்- அறிவுடைமை - எண்ணற்ற பொருள்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளை முன்பே அறிந்து படைக்கப்படுதல்.
கிரியா- செயல்படுதல் - இச்சா, ஞானம் ஆகிய இரண்டையும் செயல்களாக ஆக்கும் வாய்ப்பு.
இந்த மூன்றும் நம்மிடம் இருக்கின்றன. ஒன்றை விரும்புவதும், அதை அடையும் வழியை ஆராய்வதும், ஆராய்ந்து அதை அடைவதும் ஆகியவைகள் எல்லா நிகழ்வுகளிலும் நமக்குள் நடைபெறுகின்றது. இதுவே ‘இச்சா, கிரியா, ஞான சக்தி’ எனப்படும்.
முழுமையும் கடவுள் தன்மை கொண்டிருந்த பராசக்தி, உலகத்தையும், உடல்களையும், எல்லா பொருள்களையும் படைத்து உருவாக்குவதற்காக மயாசக்தி என்ற வடிவத்தை பெற்று, கண்ணிற்குத் தெரியாத கடவுள் குணங்களையும் உள் உணர்வுகளையும் படைக்கும்போது சுத்தமயாவாகவும், வெளிப்படையான பொருள்களைப் படைக்கும்போது அசுத்த மாயாசக்தியாகவும் ஆகின்றது. கஞ்சுகம்- உடலை மறைக்கும் சட்டை. மாயா சக்தியின் 1.கலை, 2.வித்தை, 3.ராகம், 4.காலம், 5.நியதி ஆகிய ஐந்து விதச் சட்டைகளால் படைப்புகளும் அதில் வந்து இருந்து போகும் எல்லாமும் அடக்கப்படும். இது மயா கஞ்சுகம் எனப்படும். இந்த ஐந்தினாலும்தான் படைப்புகளில் உயிர் வாழ்தல் நிகழும்.
1.கலை- கடவுள் உணர்வு எல்லாவற்றையும் இருந்த இடத்தில் இருந்தே செய்வதாகும். அந்த உணர்வைக் குறைத்து அணுவளவாக்கித் தன்னளவில் மட்டும் செய்யக்கூடியதாகவும், தன் செயல்களில் மட்டும் செய்யக் கூடியதாகவும் ஆத்ம சக்தியைக் குறைப்பதே கலையாகும்.
2.வித்தை-வித்யா- ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்கும் பரத்துவத்தினால் யாவற்றையும் அறிவது கடவுளின் குணம். அதைக் குறைத்து சிறிய அளவிற்கு சிற்றறிவு தருவது வித்தையாகும்.
3.ராகம்- எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாது எல்லாவற்றையும் நிறைவாக குறைவில்லாததாக உணரும் கடவுளின் பூர்ணத்துவத் தன்மையை நீக்கிச் சில பொருள்கள் மட்டும் தனக்கு விருப்பம் உள்ளவையாகவும் பிறவற்றின்மேல் விருப்பம் இல்லாததாகவும் மாற்றுதல் ராகம் ஆகும்.
4.காலம்- என்றும் எக்காலத்திற்கும் அழிவில்லாத கடவுளின் குணத்தைக் ஒரு காலத்திற்குக் கட்டுப்பட்டு, அழிவு அல்லது மாற்றத்திற்கு உட்படுவதாக மற்றுவது காலம் ஆகும்.
5.நியதி- எங்கும் வியாபித்து பரவியிருப்பது, சுதந்திரமாயிருப்பது என்ற கடவுளின் குணத்தை இடம், வடிவம், காரணம் ஆகியவற்றுக்கு கட்டுப்படுவதாக மாற்றி முறைப்படுத்துதல் நியதியாகும்.
இந்த ஐந்தும் இன்றி உயிர்கள் உயிர் வாழமுடியாது. பரந்த கடவுளின் தன்மையிலிருந்து பிரிந்து மாயா சக்தியால் அணுவாகிய ஆத்மா புருஷன் எனப்படும். எனவே ஆத்மா தெய்வத்தன்மை குறைந்து அணுக்கள் பலவாகப் பிரிந்து நம்மிடம் ஜீவாத்மா’வாகிறது.
சிவம்- பராசக்தி –மாயா சக்தி ஆனதுபோல் சிவம்- மாயாசக்தியினால் புருஷனாகி பல அணுக்களாகப் பிரிவதற்குமுன் மூலப் பிரகிருதி என்றாகும். இம்மூலப்பகுதியே பிரிந்து ‘தநு - உடல், கரண - உள்கருவிகள், புவன - பிரபஞ்சம், போகங்கள் - வாழ்வதாகிய அனுபவம்’ ஆகியது. இந்த மூலப் பிரகிருதியிலிருந்து பிரியும் 1.ஸத்துவம், 2.ராஜஸம், 3.தாமஸம் என்ற மூன்று குணங்களே பிரபஞ்சத்தின் எல்லாப் பொருள்களின் குணங்களாக இருக்கின்றது.
1.ஸத்துவம்-அமைதி, இன்பம், ஒளி, ஒழுக்கம் முதலிய நற்குணங்களைக் கொண்டது.
2.ராஜஸம்-குழப்பம், துன்பம், இருள், சோம்பல், வெறுப்பு ஆகிய தீய குணங்கள்.
3.தாமஸம்-மேல் சொன்ன இரண்டு குணங்களுக்கும் நடுவில் உள்ளவை. பாசம், பற்று ஆகியவைகளினால் ஏற்படும் பலவித உணர்வுகள் மற்றும் செயல் திறம் ஆகிய உணர்வுகளின் தொகுதியாகும்.
புத்தி-ஸத்துவ குணத்திலிருந்து தோன்றியது. எல்லாப் பொருள்களும் புத்தியாகி அறிவில் ஒளியாக பதிவாகிறது.
வெளி உறுப்பாகிய கண் ஒரு பொருளை பார்த்து புத்திக்கு அணுப்புகிறது. காதின் வழி அதன் பெயரும் அனுப்பப்பட்டு, பொருளின் வடிவம், நிறம், பெயர், அசைவு, பயன்கள் யாவும் பதிவு செய்யப்படும். மீண்டும் அந்தப் பொருளைப் பார்க்கும் போதும், அதன் பெயரைக் கேட்கும்போதும் அந்த பொருள் பற்றியவைகள் அறிவுக்குள் உணர்வாகவும் அதன் உருவமும் தோன்றும். இந்த நினைவு அலைகள் ஸம்ஸ்காரங்கள் எனப்படும்,
அகங்காரம்-நான் எனும் உணர்வுப் பகுதியைக் கொடுக்கும் இது புத்தியிலிருந்து உருவாக்கப்பட்டதும் தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு சக்தியும் ஆகும், இந்த அகங்காரப்பகுதி பழுது பட்டால் கோமா என்ற நோய் நிலையாகும். எனவே வாழ்விற்கு முக்கியமானது.
மனம்-அகங்காரத்திலிருந்து தோன்றியது. இந்திரியங்களோடு கூடியும் கூடாமலும் நினைவுகளையும், வடிவங்களையும், காட்சிகளையும் உருவாக்கித் தருவது ஆகும். 
கடவுளின் மூன்று உணர்வுப் பிரிவுகள் மூலப்பிரகிருதியின் முக்குணங்களாக விரிந்துள்ளன, அவை நான்கு பகுதிகளாக மும்மூன்று பொருள்களாக வெளிவந்தன.
ஸத்-இச்சா சக்தி-தாமஸ குணம்-அகங்காரம் 
சித்-ஞான சக்தி-ஸத்துவ குணம்-புத்தி
ஆனந்தம்-கிரியா சக்தி-ராஜஸ குணம்-மனம்
சித்தம் என்பது நன்மையின் பக்கமும் தெய்வத்தின் பக்கமும் உயிர்களை அழைத்துச் செல்லும் பகுதி. இந்த சித்தம் பழுதடைந்த போது புதியவற்றை நினைக்கும் மனமும், அதை ஆராய்ச்சி செய்யும் புத்தியும் பழுதடைவதால் ஆத்மா தான் என்பதில் வெறுப்புற்று வாழ்வில் தோல்வியின் விளிம்பிற்கு சென்று விடுவர்.
தன்மாத்திரைகள் - மூலப் பொருள்களின் அணுவடிவமே தன் மாத்திரைகள். தன்-அதனுடைய, மாத்திரை- அளவு. கடவுளிடமிருந்து மும்மூன்றாக வந்தவைகள் அசுத்தம் காரணமாக ஐந்தாகின. அசுத்த மாயை சுத்த மாயையில் கலந்து மூன்று ஐந்தாக விரிந்தன. வெளியில் தோன்றாதது சுத்தம். வெளியில் தோன்றுவது அசுத்தம். ‘சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்’ என்ற ஐந்து தன்மாத்திரைகள் மூன்றில் அடங்கும்.
அகங்காரம்-நிலம்,நீர்
புத்தி-நெருப்பு
மனம்-காற்று,ஆகாயம்.
1. சப்த-ஒலித் தன்மாத்திரை-ஆகாயம்-செவி
2. ஸ்பரிச-தொடுவுணர்வுத் தன்மாத்திரை-ஊறு-காற்று-தோல்
3. ரூப-வடிவ தன்மாத்திரை-ஒளி-நெருப்பு-கண்
4. ரஸ-சுவைத் தன்மாத்திரை-நீர்-வாய்
5. கந்த-மணத் தன்மாத்திரை-நிலம்-மூக்கு 
என அணு வடிவமாகிய தன் மாத்திரைகளிலிருந்து பெருவடிவங்கள் தோன்றி அவை மகா / பஞ்ச பூதங்கள் (ஆகாயம்,காற்று,நெருப்பு,நீர்,நிலம்) எனப்பட்டன, அகங்காரத்தில் தன் மாத்திரைகள் இணைந்து புத்தியின் தொடர்புடைய ஐந்து ஞானேந்திரியங்கள் (செவி, தோல்,கண்,வாய்,மூக்கு)உருவாகின. கால்-நடத்தல், கை-கொடுத்தல், நாக்கு-பேசல். நீர்வாய்-சிறுநீர் கழித்தல், மலவாய்-மலம் கழித்தல் முதலிய செயல்கள் செய்வதால் கருமம்-கன்மம்-செயல் பொறிகள் அல்லது கன்ம இந்திரியங்கள் எனப்படும். ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் பிராணன் எனும் வாயுவிலிருந்து பிரிந்த தச-பத்து வாயுக்களால் செயல் படுகின்றன.
வாழ்வு- என்பது இருத்தல், மாறுதல், ஆய்தல், அனுபவம் ஆகிய செயல்கள் உடையது. இந்த வாழ்வு போகத்தை அடைய ஆத்மாவிற்கு ஊடலையும் உலகத்தையும் பொருள்களையும் மாயா சக்தி மூலம் கடவுள் தந்து அருள் புரிகின்றார். இருத்தல் - கடல்,நிலம்,மலை,மரம் இடம் மாறாமல் இருந்து வாழ்வது-இது உடலின் செயலாகும். மாறுதல்-இருத்தலில் இருந்து இல்லாது மறைந்து போதல். உடல் வளர்தல், உடல் தேய்தல், வம்சம் தோற்றுவித்தல். ஆய்தல்- ஒப்பிடுதல், எண்ணுதல், நினைத்தல், வகுத்தல்,தொகுத்தல் ஆகியன அறிவு, மனம் இவற்றின் செயலாகும்.அனுபவம்-இன்பம் துன்பம்,உயர்வு,தாழ்வு,அழகு முதலியவற்றை அனுபவித்தல்.
அடிமை- நிலையில்லாதவற்றை நிலையானது என்றும் பொருள்களின்மேல் பற்றும் கொள்வது அறியாமையாகும். இந்த அறியாமையை சென்ற பிறவியின் செயல், மலங்களால் அடைகின்றோம். இதன் பலன் அற்பப் பொருள்களுக்கு அடிமையாவதாகும்.
மலம்- அசுத்தம்-குற்றம்-ஆணவமலம்,கன்மமலம்,மாயாமலம் என மூன்றும் உயிர்களுக்கு ஏற்படுவதாகும். ஆணவமலம்- கடவுளின் குணங்கள் எல்லாம் உரிய அளவில் வராமல் அணு அளவாக வருமாறு செய்தல் இதன் செயல். இதனால் திமிர், அறியாமை அதிகமாகும். கன்மமலம்- பல பிறவிகளில் நாம் செய்து பழகிய உணர்வுகள், செயல்கள்,வாசனை என்ற பெயரில் அசுத்தமாகும். ஒவ்வொருவருக்கும் ஒரு சுவை, நிறம்,அழகு,செய்கை பிடிக்கும். இது வாசனை மலத்தால் ஏற்படும் கன்ம மலமாகும். மாயாமலம்- மாயையின் காரணமாக பல செய்திகள் நமக்கு மறைக்கப்பட்டுள்ளன. ஒர் இடத்திலிருந்து பார்க்கும்போது பார்வைக்கு மட்டுமே தெரியும். மற்றவைகள் தெரிவதில்லை. சிற்றறிவால் ஒவ்வொரு பொருளிலும் மறைவு உண்டாகிறது. இது மாயா சக்தியாகும்.
விடுதலை- மூவகை மலங்களால், அசுத்தங்களால் மறைதல், மறுபிறவிகள் என்ற பயன் கிடைக்கும். நீர் கலந்து அசுத்தமாகிய பாலைக் காய்ச்சினால் நீர் ஆவியாகி சுத்தமான பாலாவது போல், மும்மலங்களால் சூழப்பட்டு அசுத்தமாகிய ஆன்மாவை யோகத்தினால் சுத்தம் செய்து முக்தி- விடுதலை என்ற பயனை அடையச் செய்ய முடியும். யோகமானது உடல், உள்ளம், ஆன்மா மூன்றையும் சுத்தப்படுத்தி ஆத்மா முக்தியடைய உதவும்.
குண்டலினி - உடம்பிலும் உள்ளத்திலும் எண்ணற்ற நிகழ்வுகளை செய்ய வைப்பது ஆறு கோடி மாயா சக்திகள் ஆகும். இச்சக்திகளை முறைப்படி இயங்க வைப்பது 1.யாராலும் பகுத்து உணரக்கூடிய சக்தி-பிராணசக்தி, 2. யோக வல்லவர்கள் உணரக்கூடிய சக்தி- குண்டலினி. இது முதுகு தண்டின் கீழ்ப்பகுதியில் இருந்து புறப்பட்டு நாபியில் மையம் கொண்டிருப்பதாகும். உலகங்கள் பலவற்றையும் காக்கும் ஆதார சக்தி அணுத்தன்மையாகவும் மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாகவும் உள்ளது. இது ஒரு நெருப்பு சக்தி. வளைவது, சுழல்வது, நாடிகளில் புகுந்து ஓடுவது போன்ற செயல்களால் நாகத்துடன் ஒப்பிடப்பட்டது.
தியானம்- உடலில் உள்ள குண்டலினி சக்தி பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டால் அற்புதச் சித்திகள் கிடைக்கின்றன. பயிற்சியால் பிரபஞ்சக் குண்டலினிக்கும் மேலாகிய பராசக்தியுடன் தொடர்பு ஏற்பட்டு பரமசிவத்திடம் தொடர்பு கொள்ள முடியும். மந்திரங்களையும், உணர்வுகளையும், சிகப்பு நிற ஒளி ஆகியவை நாபியிலிருந்து உச்சந்தலைவரையும் அதற்கு மேலும் செல்ல முயற்சிப்பதால் பிராணசக்தி- குண்டலினி சக்தி நாடிகளில் ஏறி உடல் முழுவதும் பரவுவதே தியானத்தின் உச்சமாகும். காலை உதயம், நண்பகல், மாலை அத்தமனம், இரவு படுக்கைக்கு முன் ஆகிய காலங்களில் தியானம் செய்வது குண்டலினியும் உள் ஒளியையும் தூண்டும். தியானத்திற்கு தன்னுடைய ஆத்மாவையோ, காணும் ஒரு வடிவையோ, கடவுளையோ மையமாக வைத்து தியானம் செய்து பழகவேண்டும். தியானம் செய்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒர் நேர்கோட்டில் நெருங்கி வந்து சிவமும் யோகியும் ஒன்றாக இனைவார்கள்.
எனவே தியானிப்பவன் தியானிக்கும் பொருளை அடைவான். பிரபஞ்சத்தின் கீழ்கண்ட 17 பகுதிகளை நிலம் முதல் சிவம் வரையிலும் பிறகு சிவம் முதல் நிலம் வரையிலும் மனத்தில் நினைத்து தியானிக்க வேண்டும்
பஞ்சபூதங்களாகிய 1.நிலப்பூதம், 2.நீர்ப்பூதம், 3.நெருப்புப்பூதம், 4.காற்றுப்பூதம், 5.ஆகாயப்பூதம், நுண்பூதங்களாகிய தன்மாத்திரைகள் 6.சப்த-ஒசை, 7.பரிச-ஊறு, 8.ரூப-ஒளி, 9.ரஸ-சுவை, 10.கந்தம்-மணம்/நாற்றம், இவைதோன்றிய 11.அகங்காரம், 12.புத்தி, 13.மனம், இவைகளுக்கு காரணமான 14.மூலப்பிரகிருதி, மற்றும் 15.மாயாசக்தி, 16.பராசக்தி, 17.சிவம்
இது பிரபஞ்சம் முழுவதையும் நினைவால் அளப்பது ஆகும். ‘ஜகத்’ என்பது நிலம் முதல் மூலப்பிரகிருதி(பராசக்தி) வரை குறிக்கும் குறியீடு ஆகும். அதோடு சிவத்தையும் இனைத்தால் நிலம்-மூலப்பிரகிருதி-சிவம் வரை நினைப்பது ஆகும். ஜகத் என்பது பிரமாண்டம் என்பதைவிடப் பெரியது. பிரம்மனால் படைக்கப்படும் அண்டமே பிரம்மாண்டம். பல பிரம்மாக்களால் படைக்கப்பெறும் பிரபஞ்சம் பெரியது, எனவே பிரபஞ்சம்-ஜகத் என்பது எல்லாவற்றிலும் பெரியது.
‘ஓம் ஸர்வம் சிவமயம் ஜகத்’ என்று தியானைத்தால் பிரபஞ்ச தியானம் வசமாகும். மூலாதாரம் முதல் உச்சந்தலை வரை மேல் நோக்கிய நேர் கோடாக உடல் நடுவே இத்தொடரை சொல்வதே பிரபஞ்ச தியானம். மூலாதாரம் முதல் தொப்புள்- நாபி வரைக்கும் கீழ்த் தட்டாக ‘பூர்’ என்றும், நாபி முதல் நடு மார்பு வரை நடுத் தட்டாக ‘புவ’ என்றும், நடு மார்புக்கு மேல் தலை வரை மேல்த் தட்டாக ‘ஸ்வ’ என்றும் அளந்து உணர்வது பிரபஞ்சத்தை உடலில் பாவித்து தியானிப்பது ஆகும். பிரபஞ்ச தியானத்தினால் அணுத்தன்மையாகிய ஆன்ம சக்தி பரந்து விரிந்து கடவுள் சக்தியாக மாறி பயனாகும்.
புரியட்டகம்- உடல் பஞ்சபூதங்கள் மற்றும் மனம், புத்தி, அகங்காரம் ஆகியவற்றின் பினைப்பு என்பதால் எட்டு விதமான பினைப்புகள்–புரியட்டகம் எனலாம். இதை பஞ்சபூதம்+சூரியன்+சந்திரன்+அக்னி ஆகிய எட்டு என்றும் கூறலாம். தியானத்தின்போது இந்த எட்டும் அணுத்தன்மையடைந்து ஒன்றுபட்டு ஆன்ம சக்திக்கு துணையாக நிற்கும். சத்+சித்+ஆனந்தம்=சச்சிதானந்தம் என்ற சிவகுணம் தியானிப்பவனை வந்து சேரும்.
துரியம்- நான்காம் நிலை. அட்டாங்க யோகத்தில் கூறப்படும் சமாதி நிலை இதுவே ஆகும். அடுத்த ஐந்தாம் நிலை நான்காம் நிலையின் உச்சமாகி துரியாதீதம் (துரிய+அதீதம்) எனப்படும். சமாதி 1. விகல்ப சமாதி- தாமாக மீண்டு வரும் நிலையாகும் 2. நிர்விகல்ப சமாதி –தன் முயற்சி இல்லாமல் தெய்வாதீனமாகவோ அல்லது குருநாதர் மூலமாகவோ விடுவிக்கப்பெறும் நிலையாகும் என இருவகைப்படும். அவத்தைகள் எனப்படும் 1.நனவு, 2.கனவு, 3.உறக்கம் என்ற நிலைகள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இந்த மூன்று நிலைகளுக்கும் மேலான நிலை உறங்குவது போலிருந்தும் உறங்கா நிலை, நனவு உணர்ச்சியிருந்தும் அயலில் நடப்பதை உணராத நிலை துரிய நிலையாகும். தியானம் முதிர்வு நிலையடையும் போது தானகவே இந்த நிலை அடையலாம்.
பயிற்சி முறைகள்- ஓம் ந ம சி வா ய அல்லது ஓம் சி வா ய ந ம என்ற மந்திர ஒலிகளை யோக ஆதாரங்கள் ஆறிலும் பதியவைத்து சொல்வதாகும். நீர் விடும் வாய்க்கு கீழே இரு விரலும் மலவாய்க்கு மேலே இருவிரலும் அளந்தால் அதுவே மூலாதாரம் நீர்த்துளையே சுவாதிட்டானம். நாபி-தொப்புளின் உட்பகுதி மணிப்பூரகம். மார்பின் இருகாம்புகளுக்கு நடுவே உள்ள புள்ளி அநாகதம். தொண்டைக்குழியின் உட்பகுதி விசுத்தி. இரு புருவங்களுக்கு நடுப்பகுதி ஆக்ஞா.                                             முதல்முறை-

மூலாதாரத்தில் ஆரம்பித்து

ஓம் அல்லது

ஓம்

சுவாதிட்டானம்

சி

மணிபூரகம்

வா

அநாகதம்    

சி

விசுத்தி

வா

ஆக்ஞா

இரண்டாம்முறை-

சுவாதிட்டானம் ஆரம்பித்து

ஓம் அல்லது

ஓம்

மணிபூரகம்

சி

அநாகதம்    

வா

விசுத்தி

சி

ஆக்ஞா

வா

மூலாதாரத்தில்

‘வா’/ந என்ற ஒலி ஆக்ஞா அடையும்போது ‘ய’/ம என்பதை சொல்லத்தயாராகி மண்டைமேல் ஏறி முதுகுவழியாக கீழிறங்கி ஆசனவாயைக் கடந்து முன்புறம் வந்து மூலாதாரத்தில் முடிக்கவும்.

மூன்றாம்முறை-              

மணிபூரகம் ஆரம்பித்து

ஓம் அல்லது

ஓம்

அநாகதம்    

சி

விசுத்தி

வா

ஆக்ஞா

சி

மூலாதாரத்தில்

வா

சுவாதிட்டானம்

               

‘சி/ய’ என்ற ஒலி ஆக்ஞா அடையும்போது ‘வா/ந’ என்பதை சொல்லத்தயாராகி மண்டைமேல் ஏறி முதுகுவழியாக கீழிறங்கி ஆசனவாயைக் கடந்து முன்புறம் வந்து மூலாதாரம், மற்றும் சுவாதிட்டானத்தில் முடிக்கவும்.

நான்காம்முறை-              

அநாகதம் ஆரம்பித்து

ஓம் அல்லது

ஓம்

விசுத்தி

சி

ஆக்ஞா

வா

மூலாதாரத்தில்

சி

சுவாதிட்டானம்

வா

மணிபூரகம்

               

‘ம/வா’ என்ற ஒலி ஆக்ஞா அடையும்போது ‘சி/ய’ என்பதை சொல்லத்தயாராகி மண்டைமேல் ஏறி முதுகுவழியாக கீழிறங்கி ஆசனவாயைக் கடந்து முன்புறம் வந்து மூலாதாரம், சுவாதிட்டானம், மற்றும் மணிபூரகத்தில் முடிக்கவும்

ஐந்தாம்முறை-                

விசுத்தி ஆரம்பித்து

ஓம் அல்லது

ஓம்

ஆக்ஞா

சி

மூலாதாரத்தில்

வா

சுவாதிட்டானம்

சி

மணிபூரகம்

வா

அநாகதம்    

              

‘ந/சி’ என்ற ஒலி ஆக்ஞா அடையும்போது ‘ம/வா’ என்பதை சொல்லத்தயாராகி மண்டைமேல் ஏறி முதுகுவழியாக கீழிறங்கி ஆசனவாயைக் கடந்து முன்புறம் வந்து மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம் மற்றும் அநாகதத்தில் முடிக்கவும்.

ஆறாம்முறை-        

ஆக்ஞா

ஓம்

சிகரம்-நெற்றி உச்சி

சி

பிரம்மநாளம்-தலைநடு உச்சி

வா

நிரோதினி

சக்தி

மனோன்மணி

ஆக்ஞாவிலிருந்து தலைக்குமேல் ஒரு சாண் தூரம் உணர்வு பகுதி. இதன் உச்சியில் அணு நிலையில் ஜீவாத்மா இயங்கிக் கொண்டிருக்கின்றது. இது இறைவன் திருவடிகள் இருக்குமிடம். இது புருவ மத்தியிலிருந்து நான்கு விரல் அளவு. இந்த முறையில் தூல பஞ்சாட்சாரமாகிய ‘நமசிவாய’ எனும் மந்திரத்தை சொல்லக்கூடாது. உடம்பின் மேல் மட்டுமே கூறவேண்டும். உடம்புக்கு மேல் வெளியில் கூறுவதால் சூக்கும பஞ்சாட்சாரமாகிய ‘சிவாயநம’ என்ற மந்திரத்தைக் கூறவேண்டும். தலைக்குமேல் கூறினாலும் உணர்வினால் அந்த இடங்கள் நினைவுக்கு பதிவாகும்.

ஏழாம்முறை- இது உடம்பின் உட்பகுதியில் கூறுவதால் ‘ஓம் சிவாய நம’ மந்திரம் மட்டும் கூறவும். இது நம் ஆத்மாவை மந்திராத்மாவாக மாற்றும். இதன் முதிர்வில் துரிய நிலை எளிதில் அடையலாம். முதல் நிலை மேல்மூலம் எனப்படும் உண்ணாக்கு ஆகும். உண்ணாக்கின் நடுவே உள்ள துளையை மனத்தில் நினைத்துச் சொல்ல வேண்டும். இது முக்திக்குச் செல்லும் வாயில் ஆகையால் இந்திரயோனி எனப்படும். இதிலிருந்து நான்கு விரல்கள் அளந்தால் ஆக்ஞாவின் உட்பகுதியாகும். ஆக்ஞாவிற்குமேல் பன்னிரண்டு விரல் துவாதசாந்தம் ஆகும். ஒவ்வொரு விரலுக்கும் ஒரு கலை-சக்தியின் பெயர் உள்ளது. ஆக்ஞாவிலிருந்து பிரம்மரந்திரம் நான்கு விரல். மேலும் ஒருவிரல் அளவுதலை உச்சிப் புழையாகிய பிரம்ம நாளம். இது ஆதார யோகம்- உறுப்புக்குள் உள்ள ஆதாரம். இதற்குமேல் 12-5=7விரல் அளவு நிராதாரம்- உடம்பு பகுதியான தூலப் பகுதியில் இல்லாது ஆகும். 
ஆக்ஞாவிற்கு வந்து போகும் 12 சக்திகளின் பெயர்கள்.
1. மேதை 3-ம் நிலை
2. அருக்கீசம்
3. விடகலை

4. விந்து 4-ம் நிலை
5. அர்த்தசந்திரன்
6. நிரோதினி

7. நாதம் 5-ம் நிலை
8. நாதாந்தம்
9. சக்தி

10.வியாபினி 6-ம் நிலை
11.சமனை
12.உன்மனை(மனோன்மணி) 
இந்த ஏழாம் வகை யோகத்தில்
1. இந்திரயோனி-ஓம் | ஆதாரயோகம்-உணர்வுக்கோடு உடலில் ஆறுபோல் பாயும்
2. ஆக்ஞா-சி |  
3. சிகரம்-நெற்றி உச்சி-வா | 
4. நிரோதினி-ய } நிராதாரயோகம்-ஒளிக்கோடாகத் தெரியும்.
5. சக்தி-ந } 
6. மனோன்மணி-ம }
பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் நினைத்ததுமே தலைக்குமேல் உணர்வுக்கோடு செல்வதை உணரலாம். உணர்வுக் கோடு பதியப்பட்டவருக்கு மரணம் ஏற்படாது. துன்பம் குறையும். துன்பத்தினால் துவல்வதும் இன்பத்தில் மிதப்பதும் இன்றி அமைதி காண்பர். நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் முன்னதாகவே தெரியும். வாக்குப் பலிக்கும். இந்த உணர்வை மூன்று முறை உணர்ந்து செய்யும் செயலும் வாழ்த்தும் நலமாகும். இது தெய்வத் தொடர்பாகும்.
விச்வ த்யானம்- பிரபஞ்சமாகிய பெரிய பரப்பைத் தியானம் செய்வது.
விச்வமய த்யானம்- விசுவத்தில் கரைந்திருக்கும் எல்லத் தெய்வ சக்தியையும் இணைத்து தியானிப்பது.
விச்வரூப த்யானம்- விசுவத்தை ஒரு வடிவத்தில் அடக்கித் தியானம் செய்வது. 
இவைகள் துரிய நிலை கூடுவதற்கான பயிற்சிகளாகும். இதைச் செய்வதன் மூலம் நமக்கும், நம் அன்பை விரும்புவர்க்கும் நோய் நீக்கம்,, துன்ப நீக்கம், அருள் கிடைத்தல் முதலியவைகளை பதிய வைத்து பலிக்க வைக்கலாம். விச்வத்யானம் செய்து கடவுளை வணங்கி வாழ்த்துரைத்தால் பலிக்கும்.
பயிற்சி முறை- 1. விநாயகர் வணக்கம். 2.வாழ்த்துரைப்பவரின் குலதெய்வ வணக்கம். வாழ்த்துபெறுபவரின் குலதெய்வ வணக்கம் 3. வாழ்த்துபெறுபவரின் நட்சத்திரம்- அவரின் நோய் / துன்பம் / பகை விலக வாழ்த்து, 4.இஷ்ட தெய்வ பிரார்த்தனை, 5. வாழ்த்துபெறுபவரின் நலத்தை விரும்பாத சக்தியும் தடைசெய்யும் சக்தியும் அவரை விட்டு விலகுவதாக “ஓம் பட்ஸ்வாஹா” 6. வாழ்த்துபெறுபவரும் அவர் குடுப்பத்தினரும் சுற்றத்தினரும் நலம் பெறுக. 7.இப்போது செய்யும் இந்த தியானப்பலன் எப்போதும் பயன் கிடைப்பதாகுக. 8.இந்த தியானமும் அதன் பலனும் நிகழச் செய்த கடவுளுக்கு-இஷ்ட தெய்வத்தின் பெயரை நினைத்து நன்றி வணக்கம் செய்கின்றேன்.
இதை காலை விழித்ததும், குளித்தபிறகும், நண்பகல் 12 மணிக்கும், மாலை சூரியன் அடங்கும்போதும், இரவு படுக்கப்போகும் போதும் ஆகிய ஐந்து நேரங்களில் ஓரிரு நிமிடங்கள் செய்து வந்தால் வாழ்த்திய பலன் முழுவதுமாய் கிடைக்கும். அப்போது உலக உயிர்கள் ஆரோக்கிய ஆனந்தத்துடன் வாழ வேண்டி ஒருநிமிடமாவது தியானிக்கவும்.
பிரபஞ்சத் தியானம் செய்யும் முறை- 
1. கிழக்கு அல்லது வடக்கு பக்கம் பார்த்து பத்மாசனம் அல்லது வசதியான ஆசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.
2. தன்னுடைய கால்கள், கைகள், உடல் முன்பும், பின்பும், கழுத்து, தலை முன்பும், பின்பும் அதாவது தோல் பகுதி முழுவதும் மனத்தால் தடவித் தடவி உணர்ந்து கொள்ளவும். எல்லா எலும்புகளும் இணைந்திருப்பதை உணர்க. எல்லா நரம்புகளும் உள் உறுப்புகளும் இணைந்திருப்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளவும்.
3. மூன்று முதல் ஒன்பது முறை பிராணாயாமம் செய்க. மூக்கின் வலப்புறம் இழுத்து மூச்சை அடக்கி இடப்புறம் வெளிவிடுக. பிறகு இடப்பக்கம் இழுத்து மூச்சை அடக்கி வலப்பக்கம் வெளிவிடுக .இடமும், வலமும் சேர்ந்து செய்தால் ஒரு பிரணாயாமம் எனக்கொள்க.
4. தொப்புளில் வலது சுட்டு விரல் வைத்து வலப்பக்கமாகக் கோடு இழுத்து விலாப்பக்கம் வந்து நடு முதுகில் நிறுத்தவும். அதேபோல் இடதுகைச் சுட்டு விரலால் கோட்டைத் தொடர்ந்து வரைந்து இடபக்க விலா வழியாக வந்து தொப்புளில் முடிக்கவும்
5. நடுமார்பில் வலது சுட்டு விரலை வைத்து உடம்பை வளைத்து கோடிட்டு முதுகில் நிறுத்தி அதை இடதுகையால் தொடர்ந்து இடது மார்பு வழியாக தொடங்கிய இடத்தில் முடிக்கவும். கை செல்லாத இடத்தில் பாவனையாக கோடிடவும்.
6. புருவ மத்தியில் வலது சுட்டு விரலால் ஆரம்பித்து பின் மண்டையில் நிறுத்தி அதை இடது சுட்டுவிரலால் தொடர்ந்து ஆரம்பித்த இடத்தில் முடிக்கவும்.
7. இந்த மூன்று வட்டக் கோடுகளையும் கீழ், நடு, மேல் என கருதவும்.
8. பாதம் முதல் தொப்புள்வரை உள்ள உடம்புப் பகுதி, முன்கைப்பகுதி கீழ்த்தளம் ஆகும்.
9. தொப்புளுக்குமேல் மார்பு வரை உள்ள உடம்பும் கையும் சேர்ந்து நடுத்தளம் ஆகும்.
10. மார்புக்கு மேற்பட்ட கை தோள் கழுத்து முகம் முதலிய உடம்பு, புருவம் மேல்தளம் ஆகும்.
11. பிரபஞ்சம் மூன்று அடுக்குகளாக இருப்பதால் இந்த மூன்றும் மூன்று தளங்களாக கொள்க.
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பரும் தன்மை 
வளப்பரும் காட்சி ஒன்றினொடு ஒன்று நின்று எழில் பகரின் 
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இல்நுழை கதிரின்
துன் அணுப்புரைய சிறிய வாகப் பெரியோன்.
12. இந்த தளங்களில் 101 கோடிக்கு அதிகமான அண்டங்கள்- உலகு இருப்பதாக நினைக்க.
13. ஓர் பிரம்மாவினால் படைக்கப்பட்ட ஓர் அண்டம் பிரம்மாண்டம் ஆகும். இப்படி எண்ணில் அடங்காத பிரம்மாண்டங்கள் உள்ளன.
14. சூரியன் நடுவே. அதைச் சுற்றி புதன், அடுத்த வட்டத்தில் சுக்கிரன், அடுத்த வட்டத்தில் பூமியும், நிலவும், அடுத்த வட்டத்தில் செவ்வாய், அடுத்த வட்டத்தில் குரு, அடுத்த வட்டத்தில் சனி, அடுத்த வட்டத்தில் யுரேனஸ், அடுத்த வட்டத்தில் புளூடோ அடுத்த வட்டத்தில் நெப்டியூன். மேலும் பல வட்டங்களும் கோள்களும் தம் வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன.
15. கைகளின் கட்டை விரலும் சுட்டு விரலிலும் உல்ள வட்ட வளையங்களும் நடுவில் உள்ள அடையாளமும் சூரிய குடுப்பத்தை ஒத்திருப்பதாக நினை. பெரிய வட்டங்கள் சிறியனவாக உள்ளதாக நினைக்க. சின்முத்திரை காட்டி தியானம் செய்க. அவை மேலும் அணு அளவு குறைவதாக கற்பனை செய்.
16. பெரிய வட்டத்தை அங்குலாஸ்தியாக்கி அதை அணுவாக கற்பனை செய்து அது நம் உடம்பில் முன்று தளங்களாக உள்ளும் புறமும் பதிந்திருப்பதாக நினைக்கவும்.
17. ஓம் ஒலி மூலாதாரப் பகுதியிலிருந்து உச்சித்தலைவரை செல்லுவதாக நினைக்க,
18. புருவத்துக்குக் கீழ் மட்டுமே இந்த அண்டங்கள் அணுக்களாக உள்ளன, மூளை என்பது அண்டங்கள் தோன்றக் காரணமான மூலப்பிரகிருதி என நினை.
19. அதற்குமேல் நிராதாரமாக உள்ள பன்னிரண்டு விரல் அளவும் சுத்த தத்துவமாகிய தெய்வங்களின் இருப்பிடம் என்பதை உணர்க.
20. எல்லாவற்றிற்கும் மேலாக பரம் பொருளின் திருவடிகள் என நினை.
21. பாதம் முதல் புருவம் முடிய 8சாண். நம் உடல் 8x12 = 96 விரல்கள் + துரியம் 12 விரல்கள் மொத்தம் 108 விரல்கள். ஆகவே 108 முறை ஓம் சொல்வது நலம். நேரமில்லாபோது 9 அல்லது 12 முறை சொல்லி 108 ஆக வேண்டுக.
22. ஓம் எண்ணும்போது வலது கையால் 10 எண்ணுக. இடது கையால் ஒவ்வொரு பத்துக்கும் ஒன்று என எண்க. வலது கையில் உள்ள சுட்டு விரலிலும் சுண்டு விரலிலும் 4 கோடுகளில் கீழிருந்து மூன்று மட்டும் எண்ணுக. நடுவிரல் மற்றும் மோதிர விரல்களில் மேலும் கீழும் ஆகிய இரு கோடுகள் மட்டும் எண்ணுக. 3+3+2+2=10 என ஒரு வட்டம் பத்து எண்ணிக்கைத் தரும். நுனி விரலையும் கை ரேகையும் எண்ணக் கூடாது.
23. எதையும் முன்று தரம் செய்வது என்பது மனம், மொழி, மெய் சாட்சியாகவும் இந்த விசுவமாகிய மூன்று அடுக்குத் தளங்கள் சாட்சியாகவும் கருதவும். திருநீறு பூசும் மூன்று விரல் முயற்சியில் எல்லாம் இம்மூன்று தளங்களை நினைக்க.
******

சிவ யோகம்

சிவத்தை அடைய செய்யும்  இது ஒரு யோக சைவர்களின் முறையாகும். வேதம் என்பது கடவுள் தாமே வெளிப்படுத்தியது. கடவுள் கூறியதை புரிந்த கொண்டு ஒரு மனிதன் கூறியது ஆகமம் ஆகும். எனவே இது ஆகமம் ஆகும். சாம்பவன்– சிவன், சிவனிடம் இருந்து பிரிந்து வந்த பொருள்களே உலகமாகவும் உடலாகவும் உள்ளது. எல்லாம் சிவமயமாகிய உடம்பின் மூலம் சிவத்தை அடையலாம். உடலால் ஆன்ம முயற்சி பற்றிய யோக முறையாகும். சிவபரம் பொருளே நம் ஆத்மம் ஆகும். நல்ல (தூய), நிகழ்வு (உற்பத்தி). வழிமுறை சிவ யோகம் எனப்படும்.
1.ஆத்மாவின் இயற்கையே சைதன்யம் ஆகும்.
சேதனம் என்பதிலிருந்து சைதன்யம் உண்டானது. சேதனம் – அறிவு. (அசேதனம் - அறிவற்றது.) எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களின்மேல் தன் அறிவை, உணர்வை இணைத்து வைத்திருப்பது. சிவமாகிய பரம்பொருள் எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் தன் ஞானத்தால் உணர்வினால் தழுவி உள்ளது. அதனால் சிவம் சைதன்யம் எனப்பட்டது. இதை தியானத்தால் உணரலாம். தியானத்தில் உண்டாவதும் அதை வளர்ப்பதும் முடிவாக கிடைப்பதும் சிவமே. தியானத்தால் பிரபஞ்சம் முழுவதும் நம் உள் உணர்வால் தொடர்புடையதாகும். எல்லப் பொருளையும் இருந்த இடத்தில் இருந்தே உணர முடிவதற்கு காரணம் பரம்பொருள் சைதன்ய வடிவமாய் இருப்பதே.
2.பந்தத்தால் ஞானம் அளவுக்குட்பட்டதாகும்.
ஆத்மா இயற்கையிலே ஞானம் உடையது. ஆத்மாவின் ஆணவ மலம் காரணமாக ஞானம் தன் பரப்பளவிலும் இயற்கையிலும் குறையும். பல பிறவிகளில் செய்த கருமத்தின் காரணமாக மாயத்தால் மலத்தால் வருவது பந்தம். ஞானம் பந்தம் காரணமாக அளவிற்கு சிறியதாகும்.
3.உடல் வர்க்கம் கலாசரீரமாகும்.
யோனி வர்க்க மூலமாக தோன்றும் உடல். உடலின் இயக்கத்திற்கு காரணமான ஒலி, ஒளி, நிறம் முதலிய தாதுப் பொருள்களான கலைகளால் உருவாக்கப்பட்டது. பொருள்களில் பிரதிபலிப்பது, சூரிய ஒளியின் நிறங்கள் எல்லாம் கலைகள். சூரிய, சந்திர, நட்சத்திர, கோள்கள் மூலம் வெளிப்படும் ஒளிக்கும் நிறத்துக்கும் உள்ள சக்திகளே நம் உடலின் இயக்கங்களைத் தருகின்றன. கலைகள் நாடி நரம்புகளில் இயக்கம் தருவதால் இதயம் துடிக்கிறது. உடலை இயக்கும் வானசக்தி– பிராணசக்தி கலை ஆகும். கலை இயற்கைச் சக்திகள். யோக முயற்சியை வெற்றி பெற செய்யும். எனவே யோனிகளில் தோன்றிய உடல்கள் கலா சரீரமாக இருக்கும்.
4. ஞானம் மொழிகளின் எழுத்தோசையில் அடங்கும்.
ஞானம்-அறிவு. நம் குணங்களாலும் மலங்களாலும் அறிவு குறைக்கப்படுள்ளது. எல்லா எழுத்துக்களும் ஒலியும் ஒளியும் நிறமும் கொண்டு ஒவ்வொரு சக்திக்கும் பொதுவாக பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்தோசையில் உள்ள தாய்ச் சக்தி மாத்ருகா எனப்படும். ஒரு பெயரை அறிந்து கொண்ட ஆத்மா உரிய பொருளை நினைத்தாலும், படித்தாலும் தோன்றும் உணர்த்தும் ஞாபக சக்தியை செயல்படவைப்பது மாத்ருகா ஆகும். நாமார்ந்த பிரபஞ்சம் 1. பொருட் பிரபஞ்சம், 2. சொற்பிரபஞ்சம் என இருவகையாகும். எல்லாப் பொருள்களையும் பொருட்பிரபஞ்சம் என்றும் அப்பொருட்களின் பெயர்கள் மட்டும் சொற்பிரபஞ்சம் எனப்படும். ஒரு பொருளை அதன் பெயர் சொல்லி அழைக்கும்போது அப்பொருளுக்கும் அதைச் சொல்லுபவனுக்கும் தொடர்பு மாத்ருகா சக்திகளால் ஏற்படும். ஒரு கட்டளைச் செய்தி சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் சக்தி அறிவிப்பாகிறது. நன்மை, தீமை முதலிய எல்லாப் பொருளுக்கும் நினைப்புச் சக்தி பயன் தரும்.
வடமொழியின் எழுத்து ஓசையும் அதன் மாத்ருகா சக்தியும் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது,

1

வடமொழி 16 உயிர் எழுத்துக்கள்

மகாலட்சுமி

2

க1, க2, க3, க4, ங   

பிராஹ்மி

3

ச1, ச2, ஜ1, ஜ2, ஞ

மஹேஸ்வரி

4

ட1, ட2, ட3, ட4, ண  

வைஷ்ணவி

5

த1, த2, த3, த4, ந

கௌமாரி

6

ப1, ப2, ப3, ப4, ம

வராஹி

7

ய, ர, ல, வ  

இந்திராணி

8

ச’, ஷ, ஸ, க்ஷ     

சாமுண்டா

இம் மாத்ருகா சக்திகள் 1.நிவிர்த்தி, 2.பிரதிஷ்டா, 3.வித்யா, 4.சாந்தி, 5.சாந்தியாதீதா என்ற ஐந்து விதக் கலைகளை செயல்படுத்தும். மேலும் 1.வர்ணம், 2.பதம், 3.மந்திரம், 4.கலை, 5.தத்துவம், 6.புவனம் என்ற ஆறு அத்துவாக்கள்-வழி மூலம் இச்சக்திகள் நாமார்ந்த பிரபஞ்சத்தை செயல்பட வைக்கும்.
5.உடலில் மேல் நோக்கி எழும் தியான உணர்ச்சியே பைரவர்.
உத்-மேல், யம்-கைப் பற்றுவது. சிவத்தின் இன்னொரு பெயர் பைரவர். ஒவ்வொருவர் உள்ளும் இருக்கும் இச்சக்தி, தியானமுயற்சியை உண்டாக்குபவர், தாமே அந்த வடிவமாய் உள்ளவரே பைரவர்.
6.சக்திகளை ஒன்றாகச் செய்யும் ஆழ்ந்த தியானத்தால் பிரபஞ்சம் முழுவதும் நினைவுக்கு வராது மறைந்து போகும்.
ஸந்தானே- ஒன்றில் ஒன்று தோன்றி நிற்கும் தொடர்ந்த பொருள். ஸம்ஹாரம்- பிரபஞ்சம் மறைவது. விச்வம்-பெரிய பரப்புள்ள பிரபஞ்சம். ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு நிலையிலும் உள்ள சக்திகள் காரணம், ஞாபகம் முதலிய செயல்களால் பிரபஞ்சத்தை நினைவூட்டினாலும் அச்சக்திகள் தியானதிற்கு துணையாவதால் பிரபஞ்சம் மறையும்.
7.நனவு-விழிப்பு, கனவு, உறக்கம் என்பது தனித்தனி தன்மை உடையது. துரியநிலை ஆழ்நிலைத் தியானத்தினால் உச்சமாய் இருக்கும்.
உணரும் கருவிகளால் உலகைக் காண்பது முதலிய அனுபவங்கள் நனவு ஆகும். காணுதல், கேட்டல் முதலியன கருவிகள் இல்லாமல் உள் உணர்வால் காணுதல், கேட்டல் ஆகிய செயல்களை உடையது கனவு ஆகும். உறங்குவதைக்கூட அறியாமல் மூச்சை இழுப்பது மட்டுமே நடப்பது உறக்கமாகும். செவியும் திறந்திருந்தாலும் கேட்கும் திறனின்றி இருப்பதும் உறக்கத்தின்போது நடைபெறும். இந்த மூன்றும் உயிர்களுக்குப் பொதுவானவை. துரியம் யோகியர்களுக்கு உரியது ஆகையால் இந்த மூன்றிற்கும் அடுத்த நான்காம்நிலை எனப்பட்டது.
துரிய நிலையில் ஐம்புல உணர்வின்றி எல்லாவற்றிற்கும் சாட்சியாகத்தான் இருக்கும் உணர்வு இருக்கும். நான் என்ற ஆணவமாக அன்றி சிவத்தோடு ஒன்றும் போகத்தை உணருவதாக இருக்கும்.
8.அறிவு நனவு நிலையில் தொழில்படும்.
நனவு நிலையில் கண்ணை மாற்றி மாற்றி நாம் நினைத்தபடி நம் புலன் உணர்வை மண்ணைப் பார்த்தல், விண்ணைப் பார்த்தல் கடலைப் பார்த்தல் என தொழில்பட செய்யலாம்.
9.மனத்தின் ஆதிக்கத்தில் மட்டும் புலன் உணர்வு கனவு நிலையில் தொழில்படும்
மனம் காட்டும் காட்சிகலையே நாம் கனவு நிலையில் உணர முடியும். அது விகற்பம் ஆகும்.
10.விழிப்புணர்வு இல்லாதிருந்திருந்து மாயையில் ஆழ்வதால் வருவது உறக்கம்
உறக்க நிலையில் நமக்கு இயல்பான விவேகம் இல்லாததால் மாயையில் ஆழ்கின்றோம்.
11.நனவு, கனவு, உறக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் அனுபவம் அடைந்தால் எல்லாப் பொறிகளையும் வசம் செய்யலாம்.
நனவில் பொறிகளை விருப்பம்போல் வசம் செய்யலாம். கனவில் மனத்தளவில் நிகழும். உறக்கத்தில் மனமும் உடலும் உறங்குவதால் எல்லாம் அவற்றுடன் அடங்கி இருக்கும்.
12.கவர்ச்சியான அதிசயங்களை உருவாக்கும் யோகம் பல்வேறு நிலைகளைக் கொண்டது.
யோகபூமிகா-துரிய நிலை. விஸ்வமயம்- அளவிடற்கரியது. பூமியில் பல இடங்கள் போல யோகம் பல நிலை கொண்டது. கோவில்களில் துவாரகபாலகர் காண்பிக்கும் முத்திரை விஸ்மய முத்திரையாகும். விஸ்வமாகிய பிரபஞ்சம் முழுவதும் சென்று உணர முடிவதாலும், தெய்வ சந்நிதானத்தை அடையும் நிலை கிடைப்பதாலும் யோக நிலை விஸ்மயமானது ஆகும்.
13.இச்சா சக்தியான யோக முயற்சி மேற்கொள்ளும் யோகி உமா என்ற சக்தி யாகின்றார்.
இச்சா-விருப்பம். சிவனை அடைவது யோக முயற்சியாதலால் அந்த முயற்சி சிவனின் துணைவியாகிய உமா தேவியாகிறது. உ+ம்+அ=உமா என்பது அ+உ+ம் என்ற பிராணவ மந்திரத்தின் உருவமேயாகும். ஸகஸ்ராரத்தில் 1000 தாமரை நடுவே சிவனும் கீழுள்ள மூலாதாரத்தில் நான்கிதழ் தாமரையில் சிவனை அடைய விரும்பும் சக்திதேவி குமாரியாக உமாவாக இருப்பதாக கருதவும்.
14.யோகியின் உள்ளிலும் வெளியிலும் உள்ள எல்லாப் பொருள்களும் அவன் உடம்பாகவே இருக்கும்.
த்ருச்யம்- உள்ளும் வெளியும் ஆன பொருள்கள். கடவுளிடம் இருந்து பிரிந்து வந்த பிரபஞ்சத்தின் எல்லப் பொருட்களையும் யோகி பிரிந்து நில்லாமல் தன்னோடு ஐக்கியப்படுத்தி தெய்வத்தை நெருங்குகின்றான்.
15.சித்தத்தின் தொடர்பால் உள்ளும் வெளியுமான பொருள்கள் யோகியின் இதயத்தில் காணப்படும்போது அதன் உள்ளீடுகளை அவனால் உணர முடியும்.
பிரபஞ்சம் முழுவதையும் உணரும் புள்ளியாக மார்புக் காம்புகளுக்கு நடுவில் ஊள்ள புள்ளியை நினைப்பதால் அது சித் + ஆகாசம் = சிதாகாசம் அல்லது தகராகாசம் (தகரம்- சிறியது) –சிறிய ஆகாசம் – சிற்றம்பலம் – சிதம்பரம் ஆகும். சித்தஸம்காத்தாத்- சித்தத்தால் தொடர்பு. த்ருச்யம்- உள்ளும் வெளியுமான எல்லா பொருள்கள். ஸ்வாதர்சனம்- அப்பொருளின் தன்மையை உணர்வது. எல்லாப் பொருள்களுக்கும் வர்ணம், பதம், மந்திரம், கலை, தத்துவம், புவனம் என்ற ஆறு உள் இயற்கை உண்டு. இதனுடன் பொருள், இடம், காலம், சினை, குணம் தொழில் ஆகியனவும் சேர்த்து எண்ணப்படும். பொருள் இயற்கையை யோகியே உணரமுடியும். இயக்க முடியும்.
16.சுத்த தத்துவமாகிய பரம் பொருளை இடைவிடாது தியானித்தால் நாமும் நம் சிற்றறிவும் விடுபட்டுப் பரம் பொருளின் தன்மையை அடைவோம்.
சுத்த தத்துவம்- சிவம். ஸந்தானாந்- தொடர் தியானம். அபசு சக்தி – சிற்றறிவு. காந்தத்தின் அருகில் இருக்கும் இரும்பு காந்தத்தின் சக்தியை அடைவது போல சுத்த தத்துவத்தை தியானிப்பவன் சுத்த தத்துவமாகின்றான். மழையை தியானித்தல் உடல் குளிர்ந்தும், தீயைத் தியானித்தால் வெப்பம் மிகுதியாவதும் உண்மை. அதுபோல் சிவனைத் தியானித்தால் சிவமே ஆகுவாய்.
17.தளர்ச்சியற்ற ஆன்ம ஞானம் இது.
விதர்க- தடுமாற்றம் இல்லாத. சிற்றறிவு சிறுமைகளை உணராது இருப்பதே விதர்க ஆகும். ஆத்ம ஞானம்- பரிபூர்ண திருஷ்டி. அஹம் ப்ரஹ்மாஸ்மி – தானே சிவம். சிவ அஹம்- சிவோஹம். தன்னைச் சிவன் என்று உணர்ந்தால் சிவத்தன்மை உண்டாகி எண் குணமும் உருவாகி ஆத்மஞானம் சிறக்கும். வழிபடுவோன் தான் வழிபடும் கடவுள் உருவைத் தன் உருவமாக்கி வழிபடவேண்டும் –ஸர்வ தர்மோத்திர ஆகமம்.
18.தான் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருந்து காண்பதாகிய ஆனந்தம் எப்போதும் அப்படி இருக்கும் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும்.
லோகம்- யோகி காணும் பொருளும் அவரின் ஆத்மாவும். எல்லாப் பொருள்களிலும் தன்னைக் காணும் ஆனந்தத்தை அறியும்போது தானே யாவற்றிற்கும் சாட்சி என்பதை அறியலாம். ஸ்மாதி சுகம்- இந்த சுகம் தனக்கு உரியது என உணர்ந்து அதை தன்னுள் தக்க வைப்பதாகும்.
19.ஏகாக்ர சித்தத்தோடு யோகம் செய்தால் பரம்பொருளோடு ஒன்றி தான் வேண்டும் உடலையும் உண்டாக்கி கொள்ளமுடியும்.
சக்திஸந்தானே-ஏகாக்ர சித்தம்- யோகத்தை ஒரே நினைவுடன் செய்யும்போது எல்லாச் சக்தியோடும் தொடர்பு கொள்ள முடியும். சரீர உற்பத்தி –தான் விரும்பும் உடலைத் தேடிக்கொள்வது. பூத உடலாகவும், ஞான தேகமாகவும், சூக்கும உடலாகவும் மாற்ற யோகியால் முடியும்.
20.பூதப் பொருள்களோடு ஒன்றுதல், அவற்றிலிருந்து பிரித்தல், நினைத்த எதையும் கொண்டு வருதல் ஆகியன யோகியின் செயல்.
பூத ஸந்தான- ஐம்புதங்களுடன் ஒன்றுதல். பூத ப்ருதக்த்வ- பூதங்களில் இருந்து பிரிதல்.விச்வஸந்தாஹ- ஆக்கல், அழித்தல், காத்தல் முதலியன செய்தல். விச்வம்- பிரபஞ்சம் முழுவதும் பரவிய பரம்பொருள்.
21.சுத்த வித்யாவாகிய பரம ஞானத்தை அடையும்போது எல்லாச் சக்திகளையும் ஆளும் சித்தி உண்டாகும்.
சுத்த வித்யா- ஞானம். சத்வஸித்தி- பரம் பொருள்போல் சத்துவ குணத்தோடு ஆளும் தகுதி.
22.இருதயத்தில் உள்ள தெய்வீக ஆற்றலின் யோகத்தால் தொடர்பு கொள்ளும்போது எல்ல மந்திர சக்திகளின் வீரியமும் கை வரப் பெற்றுப் பரம்பொருள் நிலை அடையலாம்.
மஹாஹ்ருதயம்- மார்பின் நடுவில் உள்ள சிதாகாசப் பகுதியாகும். மகா என்றால் யாவற்றிற்கும் காரணமான உள்ளார்ந்த ஒன்று என கொள்க. அனுஸந்தானாத்- யோகத்தால் மகாஹ்ருதயத்தை இடைவிடாது தொடர்பு கொளவது ஆகும். மந்த்ர வீர்யானுபவஹ- மந்திரங்களின் சக்தியால் ஸித்தி. அஹம் பிரஹ்மாஸ்மி என்பது இந்த யோக பாவனையின் பயனாகும்.
22 சிவ யோகக் கருத்துகளின் தொகுப்பு:-
1. சிவமே சைதன்யப் பொருளாக எங்கும் நிறைந்துள்ளது.
2. பந்தங்களால் நம் அறிவு குறைவுபட்டுள்ளது.
3. எல்லா உடல்களும் கலைகளால் உருவாக்கப்பட்டதாகும்.
4. எழுத்துகளின் ஒசைகள் யாவும் மாத்ருகா சக்தியாகும்.
5. மேல் நோக்கி எழும் தியான உணர்ச்சி பைரவரேயாவார்.
6. சக்திகளை ஒன்றாகச் செய்யும் ஆழ்ந்த தியானத்தால் இப்பிரபஞ்சம் மறைந்து போகும்.
7. நனவு, கனவு, உறக்கம் மூன்றும் தனித்தனி வேறுபாடுகள் உடையன, துரியம் நான்காவது நிலை யாவற்றிற்கும் சாட்சியாய் நிற்கும்.
8. நனவு நிலையில் அறிவு தொழில் படும்.
9. கனவு நிலையில் மனத்திற்கு மட்டும் அறிவு அடங்கி நிற்கும்.
10.விழிப்புணர்வு இல்லாதிருத்தல் மாயையில் ஆழ்வதால் வருவது.
11.நனவு, கனவு, உறக்கம் ஆகிய மூன்று நிலைகளில் அனுபவம் கொள்பவர் பொறிகள் எல்லாவற்றையும் வசம் செய்பவர் ஆவார்.
12.பல்வேறு நிலைகளைக் கொண்ட யோகம் மிகவும் கவர்ச்சியான அதிசயங்களை உருவாக்கும்.
13.இச்சா சக்தியாகிய யோகமுயற்சி உமா எனும் சக்தி ஆகும்.
14.யோகியின் உள்ளிலும் வெளியுலுமுள்ள எல்லாப் பொருள்களும் அவன் உடம்பாகவே உள்ளன.
15.உணர்வுகளின் நடுவாகிய இதயத்தில் சித்தத்தின் தொடர்பால் பொருள்களின் உள்ளீடுகளை அறிய முடியும்.
16.பரம்பொருளை இடைவிடாது தியானிப்பவருக்குப் பரம்பொருள் தன்மை வந்து சேரும்.
17.திட சித்தமாகத் தான் சிவமே என உணர்தலே ஆத்ம ஞானம்.
18.காணும் யாவுக்கும் தானே சாட்சியாக இருப்பதை உணருதலே ஆனந்தத்தை தக்க வைத்தல்.
19.ஏகாக்ர சித்தத்தோடு யோகம் செய்பவர் விரும்பிய உடலை தமக்கு என உருவக்க முடியும்.
20.யோகியால் பரம்பொருள்போல் ஐந்தொழில் புரிய முடியும்.
21.பரம்பொருளை அடையும்போது சுத்த வித்யாவாகிய பரமஞானம் கைவரும். சகலமும் ஸித்தி அடையலாம்.
22.மஹா ஹ்ருதயத்தில் யோகம் கூடுமானால் பரமஞானம் கை வரப்பெறும். எல்லா மந்திரங்களின் வீரிய சக்தியும் யோகிக்கு கிடைக்கும்.                                                             ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880113
All
26880113
Your IP: 34.236.152.203
2024-03-19 12:49

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg