gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

கோரக்கர் சித்தர்

Written by

கோரக்கர் சித்தர்

 

வடமாநிலத்தைச் சேர்ந்தவர் கோரக்கர். தமிழ்நாட்டில் சதுரகிரியை அடைந்து போகரை தோழராகக் கொண்டவர். சட்டைமுனி மற்றும் கோரக்கர் இவருக்கு நெருக்கமானவர்கள்.

சிவபெருமான் உமாதேவிக்கு கடற்கரையில் தாரக மந்திரத்தை உபதேசித்தபோது தேவி கண்ணயர்ந்திருக்க மீன் குஞ்சு ஒன்று அதைக் கேட்டு மீன் வடிவமாகியது. சிவன் அதை மச்சேந்திரன் எனப்பெயரிட்டு ஞானத்தை அருள் புரிய அனுப்பினார். ஓர் ஊரில் இவருக்கு மனக்குறையுடன் ஒரு பெண் பிச்சை போட்டதை யோகத்தால் அறிந்து அவள் மகப்பேறு இல்லாமல் வருந்துவதைக் கேட்டு அறிந்தார்.

மச்சேந்திரர் அந்தப் பெண்ணிடம் சிறிது திருநீறு கொடுத்து இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேறு அடைவாய் என்றார், அவள் திருநீறு பெற்றதை கேட்ட பக்கத்து வீட்டுப்பெண் அது போலியாக இருக்கும் என்று சொல்லியதால் அடுப்பில் போட்டுவிட்டாள். சில ஆண்டுகள் கழித்து அவ்வூருக்கு வந்த மச்சேந்திரர் அப்பெண்ணை அழைத்து உன் மகனைக்கூப்பிடு என்றவரிடம் தான் பக்கத்துவீட்டுபெண் பேச்சைக்கேட்டு அதை அடுப்பில் போட்டதாகக் கூற மச்சேந்திரர் அந்த அடுப்பு இருந்த பக்கம் சென்று ‘கோரக்கா’ எனக் கூப்பிட்டார். மச்சேந்திரர் நீறு கொடுத்த காலம்முதல் இது வரை என்ன வளர்ச்சியிருக்குமோ அதே வளர்ச்சியுடன் ஒரு சிறுவன் கப்பதார அடுப்புச் சாம்பலிலிருந்து வந்தவனை சீடராக்கிக் கொண்டார்.

ஒருநாள் கோரக்கர் பிச்சை எடுக்கும்போது ஓர் பெண்மணி வடை ஒன்றை அளிக்க அதை தன் குருநாதரிடம் அளித்தார். அடுத்த நாளும் அதே போல் வடைவேண்டும் என குருநாதர் கேட்க, வடைதந்த வீட்டிற்கு சென்று வடை கேட்டார். அந்தப் பெண் வடை இல்லை. தினமும் வடை சுட முடியுமா. இன்று தயிர்சாதம் தான் இருக்கின்றது என்று சொல்ல, கோரக்கர் என் குருநாதர் வடைதான் கேட்டார் என்றார். அந்த பெண் வடை என்பதால் பரவாயில்லை. இதுவே அவர் உன் கண்ணைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பாயா என்றாள். அதற்கு கோரக்கர் என் குருநாதர் எதைக் கேட்டாலும் நான் தருவேன் என்று தன் கண்ணை பெயர்த்து அப்பெண்ணிடம் கொடுத்து அதற்கு பதிலாக வடை கேட்டார். அவரின் உணர்சியைக் கண்ட அப்பெண் வடைகளை சுட்டு தந்தாள். வடையைச் சுவைத்த மச்சேந்திரர் கோரக்கா உன் கண் என்ன வாயிற்று என்றார். கோரக்கர் நடந்ததைக் கூறினார். கோரக்கரின் அன்பை அறிந்த மச்சேந்திரர் அவருக்கு மீண்டும் கண்வரச் செய்தார்.

மச்சேந்திரர் மலையாள நாட்டிற்கு சென்று அந்நாட்டு அரசி பிரேமலா என்பவரை மணந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். அவர்களுக்கு மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனை அறிந்த கோரக்கர் அங்கிருந்து தன் குருவை எப்படியும் கூட்டி வந்துவிட வேண்டும் என மலையாள நாட்டை அடைந்தார். குருவைப் பார்த்து குருவே புறப்படுங்கள் நம் இருப்பிடம் செல்வோம் என்றார். வழிச்செலவிற்கு என பிரேமலா ஒரு தங்கக் கட்டியை மச்சேந்திரரிடம் கோரக்கருக்குத் தெரியாமல் கொடுத்தார்.

வழியில் எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர் பயம் உண்டோ எனக் கேட்டுக் கொண்டே சென்றார் மச்சேந்திரர். இதைக் கவனித்த கோரக்கர் குரு அறியாமல் அந்த தங்ககட்டியை எடுத்து வீசீனார். அதற்கு பதில் ஒரு செங்கல்லை வைத்தார். ஒருநாள் பையைத்திறந்த மச்சேந்திரர் செங்கல்லைக் கண்டு கோரக்கர் மீது கோபமுற்றார். என்னுடைய பொருளை கைப்பற்றிய நீ என்னுடைய சீடனல்ல. இனி நீ என்னுடன் சேராதே என்றார்.

குருவை நல்வழிப்படுத்த எண்ணிய கோரக்கர் ஒரு சிறிய மலைமீது ஏறி சிறு நீர் கழித்தார். அந்தமலை தங்க மலையானது. கோரக்கர் குருவைப்பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அறியாமையில் உலன்ற மச்சேந்திரரைப் பிடித்த மாயை விலக மனம் தெளிவு பெற்று சீடரைப் பாராட்டினார். எனினும் கோரக்கர் தனியே பிரிந்து சென்று தவம் புரிந்து அஷ்டமாசித்திகளையும் காய சித்தியையும் பெற்றார்.

கோரக்கர் திருக்கயிலை சென்றார். அங்கு எதிர்பட்ட ஒருவரை (அல்லாமாதேவர்) நீங்கள் யார் என்றார். அவர் இறந்து போகும் உடலில் பற்று கொண்டுள்ளவரை மதித்து சொல்லத்தக்கது ஒன்றுமில்லை என்றார். கோரக்கர் நான் குருவின் அருளினால் காயசித்தி பெற்றவன் என்றார். அல்லாமாதேவரோ காய சித்தி வாழும் நாளைத்தான் அதிகமாக்கும் அன்றி நிலைத்திருக்க உதவாது, இதை அழியா உடல் எனக்கூறுவது வீண் என்றார்.

வீண் தர்க்கம் வேண்டாம். இதோ நிறுபித்துக் காட்டுகின்றேன் எனக்கூறி அல்லாமாதேவரிடம் ஓர் வாளினைக் கொடுத்து உன் தோள் வலிமையால் என்னை வெட்டு என்றார். அல்லமர் வெட்ட உடலின் மீது பட்டவாள் கிண் என்ற ஒலியுடன் தெரித்தது. உடம்பில் எந்த காயமும் ஏற்ப்படவில்லை. நல்லது நீ உன் திறமையை நிரூபித்தாய். இதோ இவ்வாளினால் உன் வலிமையுடன் நீ என்னை வெட்டு என்றார்.

கோரக்கர் வெட்ட வாள் அல்லமரின் உடலில் புகுந்து வந்தது. வெட்டும்போது காற்றை வெட்டுவது போலிருந்தது. கோரக்கர் உண்மை உணர்ந்து தன்னைவிட சக்தி மிகுந்த அல்லாமாதேவரை வணங்கி தன் தவறை ஒப்புக்கொண்டான். உடம்பிலுள்ள பற்றைநீக்கி உனது உண்மை நிலையை அறிவாய் என்றார்.

கோரக்கர் வரதமேடு எனும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியைச் சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் தவம் செய்து அரிய சித்திகளை அடைந்து ஐந்தொழிலை இயக்கும் ஆற்றல்பெற யாகம் செய்யத்தொடங்கினர். யாகத்திலிருந்து இரண்டு அழகான பெண்கள் வந்தனர். அப்போது அங்கு வந்த அக்னியும் வாயுவும் அப்பெண்களை மோகித்து நின்றனர். யாகத்தை தடைசெய்த அந்த அப்பெண்கள்மேல் கோபங்கொண்டு கமண்டல நீரைத் தெளிக்க ஒருபெண் புகையிலை (பிரம்மபத்திரம்) செடியாகவும் மற்றொருத்தி கஞ்சா செடியாகவும் மோகித்த அக்னியும் வாயுவும் நெருப்பும் நீருமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தனர். சிவபெருமான் தோன்றி இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் உண்டாக்கிய இந்த செடிகள் மூலிகைகளாகத் திகழும் என்றார்.

கோரக்கர் எங்கு சித்தியடைந்தார் எனத் தெரியவில்லை. (பேரூர் / புதுச்சேரி கோர்காடு)

கோரக்கர் தான் அறிந்த ஞானங்களையெல்லாம் வெளிப்படையாகப் பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்து விடக்கூடாது என்று நினைத்த சித்தர்கள் அவரது ஆசிரமத்திற்கு வந்தனர். கோரக்கர் அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். அதனை சாப்பிட்டவர்கள் மயங்கினர். அப்போது முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார். சித்தர்கள் எழுந்து கிடைத்ததை எடுத்துச் சென்றனர்.

கோரக்கர் சந்திரரேகை, நமநாசத்திறவுகோல், ரக்ஷமேகலை, முத்தாரம், மலைவாக்கம், கற்பம், முத்திநெறி, அட்டகர்மம், சூத்திரம், வசார சூத்திரம், மூலிகை, தண்டகம், கற்பசூத்திரம், பிரம்ம ஞானம் முதலிய நூல்களை எழுதினார். கோரக்கர் வைப்பு என்பதில் சரம்பார்க்க ஆசனவிதி, சரம்பார்க்கும் மார்க்கம், போசன விதி, கருப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை முதலியன பற்றி குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கோரக்கர் தியானப்பூசைக்கு

“சந்திர விழியும் மந்திரமொழியும் கொண்ட சிவபக்தரே

சாம்பலில் தோன்றிய தவமணியே விடை தெரியா

பாதையில் வீறாப்பாய் நடைபோடும் எம்மை கைபிடித்து

கரை சேர்ப்பாய் கோரக்க சித்த பெருமானே”

தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் கோரக்கர் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு ஐந்து முக விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து அல்லி, தாமரைப்பூ, சம்பங்கி மலர்களாலும் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.

அடுப்புச்சாம்பலில் தோன்றியவரே போற்றி

ஆசைகளற்ற அருளே போற்றி

உலக மக்களின் நண்பரே போற்றி

கஷ்டங்களை போக்குபவரே போற்றி

காவிதரிக்கும் ஞானஸ்கந்தரே போற்றி

சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி

புகலும், அருளும் நிறைந்தவரே போற்றி

பூலோகச் சூரியனே போற்றி

மாசற்ற மனமே போற்றி

மாயைகளை களைபவரே போற்றி

முருகக் கடவுளின் ப்ரியரே போற்றி

ஞான வழி காட்டுபவரே போற்றி

ஜீவ ஜந்துக்களை காப்பவரே போற்றி

வாக்கில் சுத்தமுடையவரே போற்றி

நிவேதனமாக வாழைப்பழம், கடுக்காய்த்தீர்த்தம், அரிசிப்பொறி, அவல், பொட்டுக்கடலையுடன் நாட்டுச்சர்க்கரை கலவை இவற்றுடன் கார்த்திகை நட்சத்திர நாள் மற்றும் சனிக்கிழமை கருநீல நிற வஸ்திரம் வைத்து வழிபடின் சிறப்பு,

தியானபூசைப்பலன்கள்

சனி கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக சனி தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். காரியங்களில் வெற்றி கிடைக்கும். படிப்பில் மந்த நிலை மாறும். நன்மக்கட்பேறு கிடைக்கும். எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். வீண்பயம் அகன்று தைரியம் உண்டாகும்.

“ஓம் க்லம் ஸ்ரீ கோரக்கர் சித்த சுவாமியே போற்றி”

                                         ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

 

 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26953011
All
26953011
Your IP: 3.88.114.76
2024-03-29 21:22

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg