விருக்ஷாசனம்-மர நிலை- கடின தரம்-4
நற்பயன்கள்- சமநிலை, கூர்மையான கவனிக்கும்தன்மை, ஒருங்கிணைப்பு ஆகிய தன்மைகளை மனதில் மேம்படுத்தும். கால்களின் சதைகள் வலிமையடையும்.
1.இருகால்களையும் சேர்த்து கால்களின் முன்பாதம் சிறிது அழுத்தத்துடன் கைகள் இரண்டும் தொடைகளுக்குப் பக்கவாட்டில் அழுத்தத்துடன் இருக்குமாறும் பாதங்கள் தொடையை பார்த்த வண்ணம் நிற்க. முதுகு நிமிர்ந்து இருக்கவேண்டும்
2.மூன்று அடி தூரம் இருகால் பாதங்களுக்குமிடையில் இருக்குமாறு நிற்கவும். இரு கைகளை பக்கவாட்டில் உயர்த்தி நிலத்திற்கு சமநிலையில் இருக்குமாறு செய்யவும்.
3.கைகளின் பாதங்கள் கீழ் நிலம் நோக்கியிருக்குமாறு வைத்துக்கொண்டு கால்பெருவிரல் மற்றும் அடுத்த விரல்களை அழுத்திக் கொண்டு குதிங்காலை உயர்த்தி நிற்கவும்.
4.சீராக மூச்சை விட்டுக்கொண்டு சில நொடிகள் அப்படியே இருந்து பின் மெதுவாகப் படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்