நாகாசனம்-நாக நிலை- கடின தரம்-4
நற்பயன்கள்- தொடர்ச்சியான பயிற்சி எல்லா நோய்களையும் குணப்படுத்தும். குண்டலினியை விழிப்பு நிலை ஏற்படுத்தும். முதுகுத்தண்டு, கீழ் முதுகு ஆகியவற்றை பலப்படுத்தும். மணிகட்டு, மார்பு தசைகளையும் வலிமையுடையதாக்கும். வயிறு மற்றும் ஆண், பெண் உறுப்புகளின் தசைகள் நரம்புகள் வலிமையடையும். தொடர்ந்து இந்த ஆசனம் பயின்றால் இடம் நகர்ந்த தண்டுவத்தின் தட்டுகள் பழைய நிலைக்கு வரும்.
1.வயிற்றை கீழே நிலத்தில் படுமாறு படுக்கவும். தலை ஒருபக்கம் திரும்பியிருந்தவாறும் கைகளின் பாதங்கள் மேலேபார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட்டவாறு தலையை நேராகத் திருப்பி தாவாக்கட்டை நிலத்தை தொடுமாறும் கைகளின் பாதங்கள் இரண்டும் ஒன்றின்மேல் ஒன்று இருக்குமாறு மார்புக்கு நேர்கீழ் வைக்கவும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, கைகளை அழுத்தியவாறு உடம்பை இடுப்புவரை மேலே உயர்த்தவும். கைகளை முழங்கை மடங்காமல் நேராக இருக்கும்படி கொண்டுவந்து முதுகை வளைக்கவும். தலைமேல் நோக்கி நிமிர்ந்து இருக்கட்டும். இதற்குமேல் வளையமுடியும் என்றால் கைகளை அப்படியே இடுப்பு பக்கம் நகர்த்தி முதுகை வளைந்து கொடுக்க வசதி செய்யவும்..
4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்