ஓம்நமசிவய!
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.
நட்சத்திரத்தின் அதிதேவதை காமதேனு
வழிபடவேண்டிய பைரவர் தலம் வெண்கலஓசைபைரவர்-சேங்கனூர்
வழிபடவேண்டிய தெய்வம் சகஸ்ரலஷ்மீஸ்வரர். தீயத்தூர்,ஆவுடையார்கோவில்-திருப்புனவாசல்சாலை
பலன்கள் ஆயுட்காலத்தில் மகாலட்சுமிகடாட்சம் வழிபாடு.
நற்பலன் தரும் மற்ற கோவில்கள் புருஷேத்தமபெருமாள்-திருநாங்கூர், சகஸ்ரலட்சுமீஸ்வரர்-தீயாத்தூர் (ஆவுடையார்கோவில்), வைத்தியநாதசுவாமி-வைத்தீஸ்வரன் கோவில்.
வழிபடவேண்டிய கிரகம் சனி
நட்சத்திரத்திற்குரிய மரம் வில்வம்
வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- ருருரு பைரவ சேவக
வழிபட வேண்டிய சித்தர்கள் உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் , மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் –குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.
வழிபடவேண்டிய நாயன்மார்கள் தொகை அடியார்கள் ஒன்பது பேர்கள்( தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய் பணிவர்கள், பரமனையே பாடுவார்கள், சித்தத்தை சிவன்பால் வைத்தார், திருவாரூர் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார்(ஆதிசைவர்), முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிசார்ந்த அடியார்.
$$$$$