மனங்கோணா தர்மம்!
பெண் ஒருத்தி தன்வாழ்விற்கு ஆதாரமாக இட்லி கடை வைத்திருந்தாள். தினமும் கடை ஆரம்பித்த கொஞ்சம் நேரம் கழித்து வயதான முதியவர் வந்து கையை மட்டும் நீட்டி யாசிக்க இப்பெண்ணும் தவறாமல் இரண்டு இட்லி கொடுப்பாள். தினமும் இட்லி பெற்றுக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் அவன் செல்வது அவளுக்கு வருத்தத்தை அழித்தது.. வருத்தம் கோபமாக மாறியது. இட்லி நன்றாய் இருக்கின்றது என்று சொன்னால் பரவாயில்லை என்ற எதிர்பார்ப்பு அவளிடமிருந்தது. எதிர்பார்ப்பு ஓர் இனம் புரியாத வெறியாக மாற நாம் ஏன் அவனுக்கு தினமும் இட்லி தரவேண்டும். இனி தராமல் இருந்துவிடலாம் என்று நினைத்தாள். ஆனால் அடுத்த நாள் அவன் வந்த போது அவளை அறியாமல் பழக்க தோஷத்தில் இரண்டு இட்லிகளை எடுத்து கொடுத்து விட்டாள். என்ன நினைத்திருந்தோம் இப்படி செய்து விட்டோமே என வருந்தி அந்தக் கிழவனுக்கு விஷம் கொடுத்துவிட்டால் நமக்கு தினமும் இந்த தொல்லை இல்லை என்று நினைத்தாள். அதன் படி செய்ய நினைத்து இரண்டு இட்லிகளில் எலி மருந்தை தடவி தயாராக வைத்திருந்தாள். நேரம் ஆக ஆக அவள் நல்ல மனது விழித்தது. இந்தப் பாவத்தை நாம் ஏன் செய்ய வேண்டும். நமக்கு அவனுக்கு இட்லி கொடுக்க விருப்பமில்லையெனில் இட்லி இல்லை என்று சொல்லாமல் தன் மனம் இப்படி மோசமாக நினைத்தற்கு மிகவும் வருதப்பட்டாள். அந்த கிழவன் வந்ததும் இன்முகத்துடன் வேறு இரண்டு இட்லிகளைப் கொடுத்தாள். சந்தோஷத்துடன் வாங்கிச் சென்றான்.
அன்று மதியம் அவள் வீட்டு கதவு தட்டப்பட கதவை திறந்த அவள் அங்கு தன் மகன் அலங்கோலமாக நிற்பதைப் பார்த்து அதிர்ந்தாள். வீட்டில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுப் போனவன் இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வருகின்றான். வேலை எங்கும் கிடைக்கவில்லை. கிடைத்த சின்ன வேலைகளைச் செய்து எப்படியே வாழ்ந்துவிட்டு வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்ப நினைத்தவன் கையில் இருந்த காசு போதாமல் நடந்தே வந்திருக்கின்றான். வரும் வழியில் பசி மிகுதியால் களைப்படைந்து மயக்க மடையும் நிலையில் ஓர் பெரியவர் அவன் நிலைக் கண்டு தன்னிடமிருந்த் இரு இட்லிகளை அவனுக்கு கொடுத்து உதவ அதை சாப்பிட்டபின் அந்த தைரியத்திலே ஊருக்கு வந்து சேர்ந்திருக்கின்றான். இதை அறிந்த அவள் மனம் தான் தினமும் இட்லி அளிக்கும் பெரியவரைத்தான் முதலில் நினைத்தாள். அன்று அவருக்கு விஷமிட நினைத்திருந்தென். அப்படி பாவம் செய்திருந்தால் இன்று என் மகனுக்கு அந்த ஒரு வேளை உணவு கிடைத்திருக்குமா என்று எண்ணி கண் கலங்கினாள். அன்றே முடிவு செய்தாள். தர்ம காரியத்தினை மனம் கோணாமல் சந்தோஷத்துடன் செய்வது என்று! நீங்கள் எப்படி!