நீயும் ஒரு நாள் பார்க்கலாம்!
சந்நியாசி ஒருவர் புனித தலங்களுக்கு யாத்திரை செல்வது வழக்கம். அப்படிச் சென்ற போது ஒரு பழம் பெரும் கோவிலில் அவரைப் பார்த்த கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் வணக்கம் சாமி. தாங்கள் இந்த ஊருக்கு புதிது போலத்தெரிகின்றதே என்று பேச்சை ஆரம்பித்தார். பலத் தலங்களுக்கு பல வருடங்களாக யாத்திரை செல்லும் நீங்கள் கடவுளை பார்தது உண்டா என்றார். இல்லை என்று சொல்ல பின் எதற்காக இவ்வாறு மீண்டும் தொடர்ந்து பயணம் மேற்கொள்கின்றீர்கள் என்றார். அப்போது அங்கு ஒரு ஆட்டு மந்தையை ஒருவன் ஓட்டிச் சென்று கொண்டிருந்தான்.
சந்நியாசி சொன்னார், அந்த ஆட்டு மந்தையை காவல் காப்பதற்கு மனிதனுடன் ஒரு நாயை வளர்ப்பர். திருடனையோ மற்ற மிருகங்களையோ கண்டதும் அந்த நாய் குரைக்கும். உடன் காவல் காப்போன் எழுந்திருக்க நரியோ/ திருடனோ மறைந்தோ அல்லது ஒடிப் போவது இயற்கை. பொதுவாக காவல் காப்போன் எதையும் காணும் முன்னே நாய் கண்டு சப்தமிடுவதைக் கொண்டுதான் காவல்காரனல் ஆட்டு மந்தைக்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. ஒரு நாய் குரைத்தால் மற்ற நாய்களும் சேர்ந்து குரைக்கும். அது ஏன் குரைத்தது என்று மற்ற நாய்க்கு தெரியாது. முதலில் குறைத்த நாய்க்கு மட்டும்தான் அது ஏன் குரைத்தது என்று தெரியும்.
அதைபோல இறைவனை நால்வர்கள், அறுபத்தி மூவர்கள் போன்ற இறை அனுபூதி பெற்றவர்கள் கண்டு இருக்கின்றார்கள். அவர்கள் சொன்னதை நம்பி அவர்தம் வழி சென்று இறுதியில் இறைவனை ஒருநாள் காணலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நீயும் நம்பிக்கை கொண்டு பயணித்தால் ஒருநாள் இறையைக் காணலாம் என்றார்.-குருஸ்ரீ பகோரா