இளைஞன் ஒருவன் உழைக்காமல் செல்வம் சேர்க்க விரும்பினான். அருகிலிருந்த ஞானியிடம் அவரைப்போல் கல்லை தங்கமாக்கும் வித்தையை சொல்லிக்கொடுக்க வேண்டினான். ஞானி சொன்னார். அது தனக்கு இறைவன் அருளால் கிடைத்தது. அதைக் கொடுக்க முடியாது. வேறு வழி ஒன்று இருக்கின்றது, அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஓர் கல் இருக்கின்றது அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அது தங்கமாகிவிடும் என்றார்.
சிறிதும் யோசனையின்றி ஆற்றங்கரை சென்றான். அங்கு நிறைய கற்கள் இருக்க அதில் எது அந்த கல் எனப்புரியாமல் குழம்பினான். மீண்டும் ஞானியிடம் வந்து சேர்ந்தான். ஞானி வந்து அதை தேர்வு செய்து தரவேண்டும் என்றான்.
ஞானி சொன்னார், அதை நான் தொட்டால் அது உனக்கு பயன்படாது. நீதான் தேடி எடுக்க வேண்டும் என்றார், ஆற்றங்கரையில் உள்ள கற்களில் எந்த கல் கையில் எடுக்கும்போது வெப்பமாக இருக்கின்றதோ அந்த வெண்மையானக்கல் கைபட்டதும் இளம் மஞ்சளாக மாறும் தன்மையுடையது, இதுதான் அதன் அடையாளம் என்றார்.
ஆற்றங்கரைக்கு சென்றவன் கற்களை ஒவ்வொன்றாக எடுத்து அவைகள் வெப்பமின்றி குளிர்ச்சியாக இருக்க கீழே போட்டான். அவனுக்கு திடீரென்று ஓர் சந்தேகம். எடுத்த கல்லையே எடுத்து பார்கின்றோமோ என்ற சந்தேகம் வர, எடுத்து பார்த்த கற்களை ஆற்றில் வீசத்தொடங்கினான். எடுத்தான், குளிர்ச்சிகண்டான், வீசினான் ஆற்றில், காலம் கரைந்தது. அன்று முழுவதும் செயல்பட்டும் அவனால் அந்தக் கல்லைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அடுத்தநாள், அடுத்தநாள் என அவன் செயல் தொடர்ந்தது. பல நாட்கள் ஆகியபின் ஓர்நாள் ஒர்கல்லைக் எடுத்தான் அது வெப்பமாக இருந்தது. அதன் நிறமும் இளம் மஞ்சள் நிறமாக மாறத்தொடங்கியது. சற்றும் யோசிக்காமல் அந்த கல்லை முன்பு செய்ததுபோல பழக்கத்தில் ஆற்றினுள் வீசிவிட்டான். அதன்பிறகு யோசித்தான். அடடா! நாம் வீசிய கல் நிறம் மாறியதே, வெப்பமாகவும் இருந்ததே என்று. என்ன பயன். பழகிய மனம் அந்த பாதையில் இருந்து உடனடியாக மாறி செயல்படாது. மீண்டும் ஆற்றினுள் இறங்கி அதை தேடமுடியுமா? தேடினாலும் கிடைக்குமா! எவ்வளவு காலம் விரையமாகும்!
குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
பழகியமனம்-அநிச்சைசெயல்-இயல்பு நிலை!
Written by குருஸ்ரீ பகோராதலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.