மன்னன் ஒருவன் தன் நம்பிக்கைக்கு உகந்த பணியாளுடன் தினமும் வேட்டைக்குச் செல்வது வழக்கம். ஒருமரத்தில் ஒரே ஒரு கனிமட்டும் இருப்பது கண்டு அதை பறித்துவர ஆணையிட்டார். கனி கைக்குவந்ததும் அதை துண்டக்கி ஒரு பகுதியை பணியாளுக்கு கொடுத்துவிட்டு மீதியை தான் உண்டார். அந்தக் கனி மிகவும் சுவையாக இருந்தது.
தினமும் வேட்டைக்குச் செல்லும்போதெல்லாம் அந்தமரத்தில் உள்ள ஒரே ஒரு கனியைப் பறித்து ஒரு துண்டை பணியாளுக்கு கொடுத்துவிட்டு மீதியை தானே உண்டார். ஒருநாள் அவ்வண்ணம் கனியைப் பறித்து துண்டாக்கி பணியாளிடம் கொடுத்தவுடன் அவன் அதைச் சாப்பிட்டுவிட்டு இன்னொரு துண்டு கேட்க, மன்னன் அளிக்க அதையும் உண்டவுடன் மீண்டும் கேட்க, மன்னன் அளிக்க, அதையும் விரைவாக உண்டபின் மீண்டும் துண்டு கேட்க மன்னனுக்கு கோபம் வந்தது. என்ன இன்று பழம் அவ்வளவு சுவையா! எனக்கு கொஞ்சமாவது வேண்டாமா என மீதமிருந்ததை சுவைக்க வாயில் வைத்தார். உடனே அதைத் துப்பினார். மடையா! இவ்வளவு கசக்கிறது. எப்படி இன்னும் வேண்டும் என்று கேட்கிறாய் என்றார்.
மன்னா! இத்தனை காலமாக மரத்தில் பறித்த சுவைமிக்க கனியை தங்களின் கரத்தில் வாங்கி உண்டேன். இன்று உங்கள் கையில் வாங்கி தின்னும் ஒரு கசப்பான கனிக்காக குறைபட்டுக் கொள்ளக்கூடாது, மேலும் தாங்கள் அந்த கனியை தின்னக்கூடாது என்பதற்காகவும்தான் என்ற பணியாளனை இறுகத் தழுவிக்கொண்டார் மன்னன்.
இதைப்போலத்தான் மற்ற ஆத்மாக்களால் வாழ்வில் எத்தனையோ சந்தோஷங்களை அடைந்து ஆனந்தித்த நீங்கள் இடையிடையே ஏற்படும் துன்பத்திற்காக யாரையும் நிந்திக்கக்கூடாது. சற்றே சிந்தியுங்கள்!
குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
துன்பத்தால் இகழக்கூடாது!
Written by குருஸ்ரீ பகோராதலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.