சிக்கலில் தெளிவு! தீர்க்கமான கவனம் ஒன்றில்!
மான் ஒன்று பிரசவ வலியில் இருந்தது. மழை மேகங்கள் திரண்டு இருக்க அருகில் இருந்த மரத்தனடியை நாடியது. துரதிஷ்டமாக அதன் வலப்புறம் வேடன் ஒருவன் அம்பை தன்மீது எய்ய முயற்சிப்பதும் இடப்பக்கம் புலி ஒன்று பசியுடன் தன்னை நோக்கி வருவதையும் கண்டு பதற்றமடைந்தது. வேடன் அல்லது புலிக்கு எப்படியும் பலியாகி விடுவோம். அதற்குள் தன் கருக்குழந்தையை இந்த உலகத்திற்கு தந்துவிட வேண்டும் என்று நினைத்து இறையிடம் வேண்டியது. எதிர்பாரவண்ணம் கண்ணை பறிக்கும் மின்னல் தோன்ற அதில் கண் கூசியதால் வேடன் மானை நோக்கி விட்ட அம்பு குறிதவறி எதிரில் வந்த புலியின்மீது பாய இரு துன்பத்திலிருந்தும் ஒரே சமயத்தில் தப்பி பிழைத்த மான் தன் குட்டியை ஈன்றது. கடவுளுக்கு நன்றி என நினைத்தது.
வாழ்க்கையில் பயணிக்கையில் வரும் துயரங்களுக்கிடையில் எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் கவனத்தைச் செலுத்தி மற்றதை நடப்பது இறைவன் செயல் என விட்டு விடுங்கள். நன்மையாகவே உங்கள் கர்ம விணைக்கேற்ப நடக்கும்.