நல்ல முயற்சிக்குத் தெய்வம் துணை நிற்கும்!
ஒரு பக்தன் எந்தத் தொழிலை தொடங்கினாலும் இறைவனை வணங்கி விட்டுத்தான் செய்வது வழக்கம். தனக்கு கடவுளின் அனுக்கிரகம் இருப்பதால்தான் தன்னால் எல்லாம் நன்றாகச் செய்ய முடிகின்றது என்று நம்பினான். அவன் வாழ்க்கைச் சீராக சென்று கொண்டிருந்தது.
வழக்கம்போல் செயல் பட்டுக்கொண்டிருந்த அவனுக்கு திடீரென்று ஒரு சின்ன சந்தேகம் வந்துவிட்டது. அதாவது உண்மையிலே கடவுள் உதவுகின்றாரா! அல்லது தன் உழைப்பின் பயனால் நன்றாக நடக்கின்றதா என்று தோன்ற அதை சரி பார்க்க நினைத்தான். அப்போது அவன் செய்து கொண்டிருந்த வேலை திடிரென்று நின்றது. இயந்திரங்கள் இயங்கவில்லை. மின்சார தொடர்பில் ஏதோ கோளாறு. அப்போது அவன் நினைத்தான் இறைவன் எனக்கு உதவி செய்து மீண்டும் முன்புபோல் இயந்திரங்களை இயக்கட்டும் என்று ஒன்றும் செய்யாமல் அமைதியாக அமர்ந்து விட்டான்.
மதிய உணவு வேலை கடந்து மாலை நெருங்கிற்று. இயந்திரங்கள் சரியாகி ஓடவில்லை. பொறுமை இழந்தான். இனி இறைவனை நம்பிப் பயனில்லை. தன் உழைப்பே தனக்கு உதவும் என்று மின் இனைப்பை பார்த்தான். அது சரியாயிருக்கவே இயந்திரத்தில் என்ன கோளாறு என்று பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த இயந்திரத்தைப் இதற்குமுன் பழுது பார்த்தவர் அகஸ்த்தமாக அங்கு வந்தார். அவன் கேட்டுக் கொள்ள இயந்திரம் பழுது பார்க்கப் பட்டது. அப்போது அவர் சொன்னார் நான் பக்கதில் ஒரு கம்பனியில் பழுது பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்ல நினைத்தேன். எதிர்பாரமல் திடிரென்று உங்கள் நினைவு வர உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று இங்கு வந்தேன். நான் இங்கு வந்ததிற்கு நீங்கள் அந்த இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எனெனில் நாளை நான் ஊருக்குப் போகின்றேன் திரும்பி வர ஒரு வாரம் ஆகும் என்றான்.
அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. இறைவன் தானாக வந்து உதவி செய்யமாட்டார். நாம் சிறிதளவாவது முயற்சி செய்யவேண்டும் என்பதை உணர்ந்தான். நீங்கள் செய்யும் நல்ல முயற்சிக்குத்தான் தெய்வம் துணை நிற்கும்!