குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
Displaying items by tag: முதல் ஒளி
முதல் ஒளி
முதல் ஒளி:
தனக்குப்பிறகு பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பதை முடிவெடுக்க தன் மகன்கள் மூவரையும் அழைத்து முடிந்த இந்த ஆண்டில் நீங்கள் செய்த சிறப்பான காரியம் எது எனக்கேட்டார்.
முதல்வன் சொன்னான். அந்த ஊரின் மிகப்பெரிய தனவந்தர் தீர்த்த யாத்திரை செல்ல இருப்பதால் தன்னிடமுள்ள இரத்தினங்கள், நகைகளை பாதுகாப்பாக வைத்திரு என என்னிடம் கொடுத்துவிட்டு சென்றார். திரும்பி வந்து கேட்டபோது அவர் எந்தக் கணக்கும் வைத்துக் கொள்ளாத நிலையில் முழுவதுமாக கொடுத்துவிட்டேன் என்றான்.
தந்தை சொன்னார் நீ செய்தது நல்ல காரியம்தான். உண்மையில் நீ அதிலிருந்து கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தால் குற்ற உணர்ச்சியும் அவமானமும் உன் மனதினுள் படிந்திருக்கும். அதிலிருந்து தப்பிக்கவே நீ அப்படியே திருப்பிக் கொடுத்துள்ளாய். இது உன்னைபற்றி சிந்தித்தல் ஆகும். ஆனால் சுயநலமற்ற செயலாகாது என்றார்.
இரண்டாமவன் சொன்னான். ஒருநாள் ஏரிக்கரையோரம் செல்லும்போது நீரில் மூழ்கியவாறு ஒருவன் தத்தளித்துக் கொண்டிருந்தான். அவசரமாக சென்று கொண்டிருந்த நான் ஏரியில் குதித்து அவனைக் காப்பாற்றினேன் என்றான். தந்தை சொன்னார் இதுவும் நல்ல செயலே. ஆனால் அவன் கூக்குரலை நீ அலட்சியம் செய்து விட்டிருந்தாயானால் அந்த மரண ஓலம் உன் வாழ்நாள் முழுவதும் எதிரொலிக்கும். அந்த அச்சத்திலிருந்து மீளவே நீ அவனைக் காப்பாற்றியுள்ளாய். இதனை ஒருபெரிய சுயநலமற்ற செயல் என நினைத்துக் கொள்ளவேண்டாம் என்றார்.
மூன்றாமவன் சொன்னான். காட்டு வழியே சென்று கொண்டிருந்தபோது பாறை விளிம்பில் ஒருவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். சற்று புரண்டாலும் கீழே விழுந்துவிடுவான். அருகில் மெதுவாக சென்று பார்த்தபோது அது என்னுடைய பரம விரோதியாயிருக்கக் கண்டேன். மிகுந்த எச்சரிக்கையுடன் அருகில் சென்று அவனைக் காப்பாற்றினேன். தற்கொலை செய்துகொள்ள அங்கு வந்தவன் அசதியில் சிறிது படுத்திருந்திருக்கின்றான். அதை நான் கொடுத்துவிட்டதாக கூறினான். இதைக் கேட்ட தந்தை சொன்னார். இது நல்ல செயல்தான். ஆனால் பிறர் நலம் பேணும் செயல் இல்லை. எதிரி என்று தெரிந்தும் காப்பாற்றியதன் மூலம் உன் அகந்தையை வளர்த்துக் கொண்டாய். சொல்லும்போது கண்களில் பிரகாசம் தென்பட்டது. உன் மார்பு விம்மிப் புடைத்தது. நுட்பமான வழியில் ஆணவத்தை அதிகப்படுத்தியுள்ளாய்.
நீங்கள் மூவரும் செய்த எதுவும் மேலானதாக தெரியவில்லை. மற்றவர்களுக்கு உதவி செய்வதாக நினைக்கின்றீகள் உண்மையில் அப்படி ஏதுமில்லை. உங்களின் ஆணவ எண்ணத்திற்கு ஏற்றபடி சேவை என்ற பெயரில் உங்களுக்கு பெயர் வரும்படியாக ஒருவித சுரண்டலைச் செய்கின்றீர்கள். உங்களுக்குச் சொந்தமானது என்று எதுவும் கிடையாது. உயிர் ஒன்றுமட்டுமே உடலுக்குச் சொந்தம். மற்ற அனைத்தும் உடலுக்கு புறம்பானவை. அன்னியமானது என்ற பிணைப்பை உடைத்தெரியும் போதுதான் உங்கள் உள்ளத்தில் மாற்றத்திற்கான முதல் ஒளி இறை ஒளி கீற்றாகத் தெரியும்.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.