குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
Displaying items by tag: செல்வச்சீரழிவு!
செல்வச்சீரழிவு!
ஓர் அந்தணன் ‘வேதபம்’ எனும் வித்தையை அறிந்திருந்தான். வானத்தில் கிரகங்கள் ஓர்நிலையில் இருக்கும்போது அந்த மந்திரச் சொற்களை உச்சரித்தால், நவ ரத்தினங்களும் வானிலிருந்து பெய்யும் என்பதே ‘வேதபம்’ ஆகும். அந்த அந்தணனும் அவனது சீடனும் காட்டு வழி பயணித்தபோது திருடர்கள் கூட்டம் ஒன்று சுற்றி வளைத்தது. அவர்களிடம் பணம் ஏதுமில்லையாததால், அந்தணனை பிணையாக வைத்து பணம் கொண்டு வரச்சொல்லி சீடனை மிரட்டியது. உண்மை நிலை புரிந்த சீடன் அகன்றான்.
அந்தணன், சீடன் சென்றவுடன் வானம் பார்த்தான். கிரக நிலை ஒன்றுகூடி யிருந்தது. அவர்களிடம், உங்களுக்கு பணம்தானே வேண்டும், நவரத்தின மழையே பெய்ய வைக்கின்றேன் என்றான். அவ்வாறே செய்தான். திருடர்களும் அவற்றையெல்லாம் மூட்டைக்கட்டி கிளம்பத் தயாராகும்போது வேறு ஒரு கொள்ளைக் கூட்டம் வந்து அந்த மூட்டைகளை கொடுக்கக் கூறியது. அவர்கள் அந்த அந்தணன் எவ்வளவு கேட்டாளும் நவரத்தினங்களை வரவழைத்துக் கொடுப்பவன், அவனை உங்களுக்கு கொடுத்து விடுகிறோம் எனக்கூறினர்.
அந்தணன் வானம் பார்த்தான் கிரக நிலைகள் மாறி இருந்தன, அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என்பதை புதிய திருடர்களிடம் கூறினான். அவர்கள் நம்பவில்லை. இவன் நம்மை ஏமாற்றுகிறான் என கோபத்தில் அவனைக் கொன்றனர். யாருக்குச் செல்வமான நவரத்தினங்களைத் தர வேண்டும் என்ற கணிப்பு இல்லாத அந்தணனும் இறந்தான்.
பின்னர் இரு கூட்டத்திற்கும் நவரத்தினங்கள் யாருக்குச் சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொன்றனர். இருவர் மட்டுமே மிஞ்சிய நிலையில் அவர்களும் ஒருவரை ஒருவர் கொல்ல சதி செய்தனர். இருவருக்கும் பசி எடுத்தது. நவரத்தினங்களையா சாப்பிடமுடியும். ஒருவன் அதை பாதுகாப்பது என்றும் மற்றவன் உணவு கொண்டு வருவதும் என முடிவாயிற்று. உணவு கொண்டு வந்தவன் அதில் விஷத்தைக் கலந்தான். உணவு கொண்டு வந்தவனை மற்றவன் வாளால் வெட்டிக் கொன்றான். அது விஷம் கலந்த உணவு என்பதை அறியாமால் உண்டு அவனும் மாய்ந்தான். பொதுவாக இரத்தினங்கள் ராசிகளுடையவை. அந்த ராசி ஒத்துப் போகாதவர்களிடையே அது தங்காது. தங்கினால் நாசம் விளைவிக்கும். பொதுவாக சீரில்லா செல்வம் சீரழிவைத்தரும்.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.