குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
தர்மத்தின் கணக்கு!
Written by குருஸ்ரீ பகோராதர்மத்தின் கணக்கு!
அன்று பலத்த மழை. வழிப்போக்கர்கள் மூவர் அங்கிருந்த சத்திரத்தில் தங்கினர். இரவு வெகு நேரமாகியும் மழை விட வில்லை. அருகில் உணவிற்கு ஏதும் வழியில்லை. அப்போது ஒருவன் 3 ரொட்டிகளும் இன்னெருவன் 5 ரொட்டிகளும் கொண்டு வந்திருந்தனர். மூன்றாவது நபர் வீட்டிற்குச் சென்று விடலாம் என்று நினைத்து வந்தவன் எதிர்பார மழையில் மாட்டிக் கொண்டான். அப்போது 5 ரொட்டி வைத்திருப்பவன் என்னிடமுள்ள ரொட்டிகளை 3 துண்டாகப் போட்டால் 15 துண்டுகள் வரும் உன்னிடம் இருப்பதை 3 துண்டுகளாகப் போட்டால் 9 துண்டுகள் வரும். மொத்தம் 24 துண்டுகள். அதை சமமாகப் பிரித்து ஆளுக்கு 8 துண்டுகள் எனப் பங்கிச் சாப்பிடலாம் என்ற யோசனையை ஏற்று மூவரும் பசியாறினர். அப்படியே அசதியில் உறங்கினர். மழை விட்டிருந்தது. காலையில் எழுந்ததும் அவரவர் வீட்டிற்கு செல்லத் தயாரானார்கள். அப்போது ரொட்டி கொண்டு வராதவன் அன்பர்களே நீங்கள் எனக்கு எட்டு ரொட்டித் துண்டுகளை அளித்தீர்கள். சமயத்தில் நீங்கள் மனதாரச் செய்த உதவியை நான் மறக்க மாட்டேன். இருந்தாலும் என் நினைவாக இந்த காசுகளை வைத்துக் கொள்ளுங்கள் என எட்டு காசுகளை அவர்களிடம் தந்தான். அப்போதுதான் குழப்பம் உருவாயிற்று 3 ரொட்டிகள் கொடுத்தவர் ஆளுக்குச் சமமாக 4 காசுகள் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்ல மற்றவர் 3 ரொட்டி கொடுத்தவருக்கு 3 காசுகள் 5 ரொட்டி கொடுத்தவருக்கு 5 காசுகள் என்றார், இருவரும் ஒத்துப் போகாததால் குழப்பம் நீடித்தது,
அப்போது அந்தப் பக்கம் ஒரு ஞானி வந்தார். அவரிடம் முறையிட்டனர். நடந்ததைக் கேட்டறிந்தவர் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு 3 ரொட்டிகள் தந்தவருக்கு 1 காசும், 5 ரொட்டிகள் தந்தவருக்கு 7 காசும் கொடுக்க வேண்டும் என்றார். இதைக் கேட்ட 3 ரொட்டி கொடுத்தவன் இது அநியாயம் என்றான். ஞானி சொன்னார், உன்னிடம் இருந்தது 3 ரொட்டிகள் அதை 3 ஆக பிரித்தால் மொத்தம் 9 துண்டுகள். அதில் 8 துண்டுகள் உன்னிடம் வந்து நீ உண்டாய். ஆக நீ தானம் அளித்தது ஒரு துண்டுதான் அதற்கு ஒரு காசு போதும். அவர் தானம் அளித்தது 7 துண்டுகள் அதற்கு 7 காசுகள் என்று கூறி அனைவரையும் சமாதனப்படுத்தி .இதுவே தர்மம் என்றார்.-குருஸ்ரீ
&&&&&
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.