gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சபைகள்! (18)

திங்கட்கிழமை, 23 July 2018 20:42

ஐயப்பன்!

Written by

ஓம்நமசிவய!

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.

####

ஐயப்பன்!

தத்தாத்ரேயர்

அனுசூயையின் கற்பை சோதிக்க தம் தம் கணவர்களான மும்மூர்த்திகளை அனுப்ப அனுசூயையின் கற்பின் சக்தியால் அவர்கள் குழந்தையாய் மாற முப்பெரும் தேவியரின் வேண்டுதல்களுக்கு இணங்கி மீண்டும் மும்மூர்த்திகளாய் மாற்ற, தங்கள் மூவரின் அம்சமாக அனுசூயைக்கு தத்தாத்ரேயரை அளித்துச் சென்றனர்.

லீலாவதி!

இதனால் முப்பெரும் தேவியரும் தங்களின் அம்சங்களை ஒன்றாக்கி காலவ முனிவரின் மகளாகத் தோன்றினர். லீலாவதி என்று பெயரிட்டு வளர்த்து அவளை தத்தாத்ரேயருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்.

அவதார நோக்கம் முடியும் காலத்தில் பழையபடி மும்மூர்த்திகளுடன் இணைய விரும்பிய தத்தாத்ரேயர் சன்யாசம் மேற்கொள்ள தீர்மானித்தார். ஆனால் லீலாவதி பிடிவாதமாக சன்யாசம் வேண்டாம் சம்சாரத்தில் இருக்கவே விரும்பி பலவிதமான சாகஸங்களால் தடங்கள் செய்தாள். பொறுமை கடந்த தத்தாத்ரேயர் எருமைபோல் இடைஞ்சல் பண்னும் நீ எருமையாக போகக்கடவுது எனச் சபமிட பதிலுக்கு மனைவியின் அருமை தெரியாத நீங்களும் எருமையாக வேண்டும் எனப் லீலாவதி பதில் சாபமிட்டாள்.

மகிஷி!

ரம்பன் அண்ணன், கரம்பன் தம்பி. எருமை உருவம் கொண்ட அசுரர்கள். ரம்பனின் மகன் மகிஷாசுரன். கரம்பனின் மகள் கரம்பி என்ற மகிஷி. இவள்தான் தத்தாத்ரேயரால் போன பிறப்பில் எருமையாகப் போக சாபம் பெற்ற லீலாவதி. அண்ணன் மகிஷாசூரனை அம்பிகை வதம் செய்ததால் கோபம் அடைந்த மகிஷி பிரம்மனை நோக்கி தவமிருந்து இருமூர்த்தி வடிவாக பிறக்கும் ஒருவன் குழந்தையாய் பன்னிரண்டு ஆண்டுகள் பூவுலகில் வாழ வேண்டும், அவனால்தான் தனக்கு முடிவு ஏற்பட வேண்டும் என்றும் வரம் பெற்றாள்.

சுந்திர மகிஷம்!

வரம் பெற்றதும் அட்டகாசங்கள் புரிந்து தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப் படுத்தினாள் மகிஷி. மும்மூர்த்திகளும் உரிய காலம் வரை பொருத்திருக்கச் சொன்னார்கள். மூவரும் தங்கள் அம்சங்களை உள்ளடக்கிய எருமை ஒன்றை உருவக்கி, அழகிய அதற்கு சுந்திர மகிஷம் எனப் பெயரிட்டனர். இந்த எருமையே மனைவி லீலாவதி சாபப்படி எருமையாக பிறப்பெடுத்த தத்தாத்ரேயர். சுந்திர மகிஷத்தைக் கண்டதும் முற்பிறப்பின் பந்தம் காரணமாகத் தான் செய்து வந்த கொடுமைகள மறந்து அன்பு கொண்டாள்.

ஹரிஹர சுதன்-மணிகண்டன்!

காலம் ஓடியது. மும்மூர்த்திகளும் சுந்திர மகிஷனை மறையச் செய்தனர். சுந்திர மகிஷம் காணாமல் போகவே பழையபடி தன் அட்டூழியங்களைத் தொடர்ந்தாள் மகிஷி. விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். மோகினியை பார்த்தார் சிவன். கண்கள் கலக்க பிறந்த குழந்தையின் கழுத்தில் மணி ஒன்றைக் கட்டி அங்கேயே விட்டு மறைந்தனர். அடர்ந்த காட்டிற்கு வேட்டைக்குவந்த பந்தள மன்னன் குழந்தையைக் கண்டு எடுத்துச் சென்றான். பிள்ளையில்லாத தன் குறைதீர்க்க கடவுளின் பரிசு என மகிழ்ந்து குழந்தைக்கு கண்டத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என பெயரிட்டு வளர்த்தான்.

மணிகண்டனுக்கு பன்னிரண்டு வயது நிரம்பியது. மணிகண்டனை தன் குழந்தையாய் வளர்த்த அரசிக்கு தாயாகும் பாக்கியத்தை தேவர்கள் அளிக்க குழந்தை பிறந்தது. சொந்தக் குழந்தைமேல் பாசம் அதிகம் கொண்டதால் மந்திரியின் ஆலோசனைப்படி மணிகண்டன் இளவரசன் ஆகமல் இருக்க நோயால் பீடிக்கப்பட்டவள் போல நடித்து மணிகண்டனை நோய்க்கு மருந்தாகப் புலிப்பால் கொண்டுவர காட்டிற்கு அனுப்பினாள்.

ஐயப்பன்!

வழியில் மணிகண்டனைப் பார்த்த தேவர்கள் அவனை அழைக்க அவன் திரும்பவில்லை. காட்டில் தென்பட்ட மதயானையை அடக்கியபோது ஐயா அப்பா சரணம் என்று தேவர்கள் கூச்சலிட்டதும் திரும்பிய மணிகண்டனிடம், மகிஷியின் அட்டகாசத்தைக் கூறி அவளை அழிக்க வேண்டினர். எருமையாய் காட்டில் அலைந்து கொண்டிருந்த மகிஷியை மணிகண்டன் வதம் செய்ய எருமை வடிவம் நீங்கி அழகிய நங்கையாக மாறினாள் மகிஷி. தேவர்கள் ஐயப்பா சரணம் என மகிழ்ந்தனர். தன் சாபம் நீங்கச் செய்த ஐயப்பனிடம் தன்னை மணக்க வேண்டுகோள் வைத்தாள்.

அதற்கு ஐயப்பன் தான் இப்பிறவியில் பிரமச்சாரிய விரதம் பூண்டு தவம் இருக்கப் போகின்றேன். எனவே உன்னை மணக்க இயலாது என்றார். அவளது இயற்கையான அடம் தலைதூக்கவே நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப் படுத்தினாள். மும்மூர்த்தி அம்சமான தத்தாத்ரேயரின் பத்தினியாக முப்பிறப்பில் பிறந்தவளுக்கு தான் தற்போது இரு மூர்த்திகளின் அம்சமாக இருப்பதால் அவளை மணக்க இயலாது என்பதைப் புரியவைக்க முயற்சித்தார். அவள் அதை புரிந்து கொள்ளவில்லை.

கன்னிசாமி, மாளிகைபுரத்து அம்மன்!

யோசித்த ஐயப்பன், மகிஷியே சபரிமலைமீது யோகத் தவம் செய்யப் பொகும் எனக்கு அருகிலேயே நீயும் அமர்ந்து கொள். உனக்கு மாளிகைபுரத்து அம்மன் எனப் பெயரடைவாய். பக்தர்கள் உன்னையும் என்னையும் வணங்குவர். ஆண்டுதோறும் வரும் புதுப்புது பக்தர்களை .நீ பார்த்துக் கொண்டிரு. எந்த வருடத்தில் புதுபக்தர்கள்–கன்னி சாமி வரவில்லையோ அந்த வருடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்கின்றேன் என்று சொல்ல சபரிமலயில் மகிஷியும் மாளிகைபுரத்து அம்மனாக அமர்ந்தாள்.

புலிப்பால்!

தன் வளர்ப்பு தாய்க்கு புலிப்பால் கொடுப்பதற்காக புலியாக மாறிய தேவர்களுடன் சிம்மமாகமாறிய இந்திரன்மீதேறி அரண்மனை சென்றார்.

யோகத்தவம், பூதநாத கீதை!

புலிகளுடன் வந்த வளர்ப்பு மகனைக் கண்ட அரசனும் அரசியும் அவன் சாதாரண பிறப்பல்ல என்பதை உணர்ந்தனர். அரசி தன் செயலுக்கு மிகவும் வருந்தினாள். அரியனை அவசியமில்லை எனச் சொல்லி தான் யோகத்தவம் இருப்பதாகக் கூறி கானகம் சென்றான். தன் வளர்ப்பு மகன் இப்படிச் செல்வது கண்ட மன்னன் அவனைத் தனக்கு குருவாக இருக்க கேட்க தந்தைக்கு குருவாக இருப்பது தவறு என அகத்தியரை அழைத்து தனது போதனைகளை அவரிடம் கூறி அதனை பந்தள அரசனுக்கு பாடமாகக் கூறவைத்தார். அந்த போதனைகள் பூதநாத கீதை எனப்படும். மனிதன் அறவழியில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். கலியில் பக்தி மார்க்கமே சிறந்தது என்ற இரண்டு கருத்துக்களை இது வலியுருத்துகின்றது.

திரு ஆபரணம். அரசன்போல் காட்சி!

சபரிமலையில் யோகப்பட்டம் தரித்து ஐயப்பன் அமர்ந்தர். மகனைத் தேடிவந்து தரிசித்த பந்தள மன்னன் கண்ணாய் மணியாய் வளர்த்த மகன் இப்படி ஆண்டியாய் காட்சி தருகின்றானே எனவருந்த ஆண்டிற்கு ஒருநாள் தைமாதம் முதல் நாள் ஆபரணங்கள் அணிந்து அரச கோலத்தில் தன் தந்தைக்கு காட்சி அளிப்பதாக வாக்குக் கொடுத்தார்.

மகரஜோதி!

தை மாதம் முதல் நாள் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பதால் மகர சங்கரந்தி என்றும் அந்த மாதம் முழுக்க மகர ராசியிலேயே இருப்பதால் தை மாதத்தை மகர மாதம் என்பர். மகர மாதத்தில் தெரியும் ஜோதியை மகர ஜோதி என்றாலும் அதில் ஒரு தத்துவம் உள்ளது.

தர்மசாஸ்தா!

சன்னியாசி ஆன பின் அரசனுக்குரிய ஆபரணங்கள் அணிவது முறைப்படித் தவறு. இருப்பினும் தந்தைக்கு அளித்த வாக்கை நிறைவேற்றவே இது நடந்தாலும் மனதிற்கு சரி எனப் படாததால் ஐயப்பன் தனது அவதார அம்சத்தினை ஜோதி வடிவாக்கி அருகில் உள்ள காந்த மலையில் இருத்திவிட்டு அதன் பிறகு பந்தள மகராஜனின் ஆபரணங்களை அணிந்து கொள்கின்றார். தான் ஏற்றுக் கொண்ட சன்யாச தர்மத்திற்கு எந்த வகையிலும் குறைவராதபடி தர்மத்தைக் காத்ததால் தர்ம சாஸ்தா எனப் பெயரடைந்தார்.

சிதம்பரத்தின் எட்டுத்திசைகளிலும் மகா சாஸ்தா, பால சாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, ஜகன்மோகன் சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, ருத்ர சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, என சாஸ்தாவின் அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

காந்த மலையில் தேவர்கள் ஜோதியை ஆராதித்தார்கள். இந்த ஐதீகத்தின் படியே மகர ஜோதியை பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

தரிசிக்க-விரதம்!

கார்த்திகை மாதத்தில்தான் சிவன் ஜோதிவடிவாகத் தோன்றினார். மாதங்களில் நான் மார்கழி என விஷ்ணு சொல்லியுள்ளார். எனவே ஐயப்ப பக்தர்கள் சிவனுக்குரிய கார்த்திகை மாதம் மாலை தரித்து விஷ்ணுவுக்குரிய மார்கழி மாதம் வரை விரதம் இருந்து சிவ விஷ்ணு அம்சமான ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும். தை மாதத்தில் தோன்றும் மகர ஜோதியை தரிசிக்க வேண்டும். என்பதே சிறப்பான பலகளைத் தரும் விரதமாகும்.

இருமூர்த்தி அம்சம்!

ஐயப்பன் இரு மூர்த்தி வடிவம் என்பதை மீலாவதி-மகிஷி-மாளிகைபுரத்து அம்மனுக்கு உணர்த்தவே சிவரூபமான தேங்காயில் விஷ்ணு அம்சமான நெய் ஊற்றி எடுத்து வருகின்றனர். பசு நெய் மகாலட்சுமி அம்சம். மகாலஷ்மி மகாவிஷ்ணு மார்பில் எப்போது குடியிருப்பவள் அதனால் நெய் விஷ்ணுவின் ஸ்வரூபமாகும். மேலும் இருமுடி என்பது இரு மூர்த்தி வடிவம் என்பதையே குறிக்கும். கெடும் பாலிலிருந்து கிடைக்கப்பெறும் கெடாத நெய் போல அழியும் உடம்பில் அழியாத ஆன்மா இருப்பதைக் குறிக்கும் நெய்த் தேங்காயை ஆன்மா பிரிந்ததும் உடலை நெருப்பில் இடுவதுபோன்றே தேங்காயிலிருந்து நெய்யை எடுத்ததும் தேங்காயை நெருப்பில் போட்டு விடுவர்.

மஞ்சள் மாதா!

வருடாவருடம் தொடர்ந்து வரும் புதுப் பக்தர்கள்-கன்னி சாமிகளால் தான் தன் திருமணம் தடைபெறுகின்றது என்பதால் மாளிகைபுரத்து அம்மன் கோபம் கொள்ளாமல் சாந்தம் அடைய வேண்டும் என்பதால்தான் மஞ்சள் தூவி தேங்காய் உருட்டுகின்றனர்.

புதிதாக வரும் கன்னி ஐயப்ப சாமிகள் சரங்குத்தி மரத்தில் சரம் குத்த வேண்டும். மாளிகைபுரத்து அம்மனாக மஞ்சள்மாதாவாக அங்கே காத்திருக்கும் அந்தக் கன்னிகை ஒவ்வொரு வருடமும் அந்த சரங்குத்தி மரத்திற்கு வந்து சரங்குத்தியிருப்பதைப் பார்த்து கன்னிசாமி வந்துள்ளார்கள் என ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வாள்

ஐயப்பன் வகனங்கள்!

வில் அம்பு ஏந்தி புலி வேட்டைக்குப் புறபட்டது குதிரையில் என்பதால் குதிரையே அவர் முதல் வாகனம். காட்டில் மதயானையை அடக்கி அதன் மீது அமர்ந்து .சென்றதால் இரண்டாவது வாகனம் யானை. தேவர்கள் யாவரும் புலியாக மாறியதும் இந்திரன் சிம்மமாகமாற அதன்மீதேறி அரண்மனை வந்ததால் மூன்றாவது வாகனம் சிங்கம். பின்னாளில் புலி ஐயப்பன் வாகனமானது. ஹரிவராசனம் என்ற ஐயப்பனின் பக்திப் பாடலில் வரும் ‘களப் கேசரி, வாஜி வாகனம்’ என்பது களபம்-யானை, கேசரி-சிங்கம், வாஜி-குதிரை என்பதை உணர்த்துவதாகும்.

ஹரிவராசனம்!

இந்தப்பாடல் கும்பக்குடி குளத்தூரார் என்பவரால் 1950–ல் இயற்றப்பட்டது. இரவில் நைவேத்யமாக பானகம் படைக்கப்பட்டபின் ஐயப்பன் துயில்வதற்காக இரவு பதினொன்னரை மணியளவில் பாடப்படும். ஒவ்வொரு விளக்காக அனைத்து விட்டு பின்னால் நடந்து வந்து கடைசி வரிகள் பாடப்படும் போழுது கடைசி விளக்கை அர்ச்சகர்கள் அனைப்பர்.

காவல் தெய்வம்!

பொதுவாக ஐயப்பனை காவல் தெய்வம் என்றே புராணங்கள் சொல்கின்றன. சூரபதுமனிடமிருந்து இந்திராணியைக் காப்பாற்ற ஐயப்பனையே காவலுக்கு நிறுத்தியதாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

சபரிமலை சித்தர்கள் வாழுமிடம்!

சித்த யோகினியாக வாழ்ந்த சபரி அம்மன் ஜீவசமாதி அடைந்த இடம் சபரிமலை. சித்தர்கள் வாழும் பகுதி என்பதால் யோகப்பட்டம் தரித்து ஐயப்பன் யோகம் செய்ய இந்த இடத்தை தெரிவு செய்தார். பதினெட்டுப் படிகளில் பதினென் சித்தர்கள் இருப்பதாக ஐதீகம்.

பதினெட்டாம் படிகள்!

மனிதனிடம் உள்ள பஞ்சேந்திரியங்களான செவி, பார்வை, நுகர்வு, தொடு உணர்ச்சி, சுவை ஆகிய ஐந்தை முதல் ஐந்து படிகள் குறிக்கின்றன. காமம், குரோதம், பேராசை, மோகம், அகந்தை, போட்டி, பொறாமை, தற்பெருமை ஆகிய எட்டை அடுத்த ஆறு முதல் பதின்மூன்று வரைலான படிகளும், சத்வகுணம், ராஜோ குணம், தாமஸ குணம் என்ற மூன்றையும் அடுத்த பதினான்கு முதல் பதினாறு வரையிலான படிகளும் வித்யா, அவித்யா என்ற அறிவையும், அறியாமையும் அடுத்துள்ள பதினேழு, பதினெட்டாம் படிகளும் குறிக்கின்றன. ஒவ்வொரு படியைக் கடக்கும் போது ஒரு தீய பழக்கம் நம்மை விட்டு நீங்குவதாக ஐதிகம். உலகியல் மயக்கங்கள் எல்லாவற்றையும் கடந்து இறைவனிடம் பரிபூரணமக சரணடைந்தால் மெய்ஞானம் பெறமுடியும் என்பதை இந்த 18 படிகள் உணர்த்தும்.

மேல்சாந்தி!

நிர்வாகப் பொறுப்பு முதல் பூஜைகளைத் தொடங்கி வைக்கும் பொறுப்பும் கோவிலை திறந்து வைக்கவும் மூடவும் அதிகாரமும் உள்ள முதல் அர்ச்சகர்-மேல்சாந்தி. வேதங்கள், தாந்திரீகம், சாஸ்திரங்களை முறையாக கற்று மற்ற கோவில்களில் மேல் சாந்தியாக அனுபவம் பெற்றவர்களிலிருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இவரது பதவிக் காலம் ஓரண்டு. ஆண்டு முழுவதும் சபரிமலையிலேயே தங்கியிருக்க வேண்டும். வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே சபரிமலையின் மேல்சாந்தியாக முடியும்.

ஐயப்ப விரதம்- சபரிமலை!
ஐயப்பனுக்கு ஒரு பக்தன் மாலை அணிந்து இருமுடிகட்டி 41 நாட்கள் முறைப்படி விரதம் மேற்கொண்டு 48 மைல்கள் நடந்து செல்ல வேண்டும் என்பதே முன்னோர் வழி முறைப்படுத்திய நெறியாகும். விரத காலத்தில் மனதிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மையைக் கடைபிடித்து சைவ உணவு உண்டு காமம், கோபம், பொறாமை ஆகியவறை கட்டுப்படுத்தி தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

சபரிமலை யாத்திரைக்கு மூன்று காலங்கள் முக்கியமானதாக் கருதப்படும். கார்த்திகை முதல் தேதியில் தாய், தந்தை, குரு, பெரியோர்களிடம் ஆசி பெற்று குருநாதர் முன் தெய்வ சன்னதியில் பூஜை செய்து துளசி மாலையை அணிந்து கொள்ளல் வேண்டும்.

தினமும் சரணாகதி நிலையைக் குறிக்கும் முழுமையாக இறைவனிடம் நம்மை சமர்ப்பணம் செய்யும் சரணங்களை கூறிவழி படவேண்டும்

இரண்டு பகுதிகள் கொண்ட துணிப்பையில் முன்பகுதியில் சுவாமிக்குரிய பூஜைப் பொருட்கள் மற்றும் நெய்த்தேங்கயும் பின் பகுதியில் யாத்திரிகனுக்குரிய உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் தத்துவம் சுவாமிக்குரிய பொருட்கள் புண்ணியம், யாத்ரிகனுக்குரியது பாவச்சுமை. பயணத்தில் யாத்ரிகன் மலையை நெருங்க நெருங்க அவனுக்குரிய பொருட்கள் குறையும். அதாவது இறைவனை நெருங்க நெருங்க பாவச் சுமை குறைந்து கொண்டு வந்து முடிவில் புண்ணியம் மட்டும் மிஞ்சும்.

இறைவன் முன் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லை என்பதை உணர்த்தும் விதமாகவே ஐயப்ப பக்தர்கள் ஒருவரை ஒருவர் சமி என அழைத்துக் கொள்வது வழக்கமானது.

கார்த்திகை முதல் தேதி தொடங்கி மார்கழி, தை மாதங்களில் நடைதிறக்கப்படும் சமயத்தில் சபரிமலை சென்று மகர விளக்கு- காந்த மலை ஜோதி தரிசித்து வருதல் சிறப்பு ஆகும். நல் ஒழுக்கத்தைக் கடைபிடித்து தன்னை நாடிவந்து வணங்குவோரின் மெய்யில் நலம் நீங்காதிருக்க என்றும் ஐயப்பன் அருள்வார்-.

#####

திங்கட்கிழமை, 23 July 2018 20:27

தத்தாத்ரேயர்!

Written by

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

####

தத்தாத்ரேயர்!

தங்களைவிடப் பதிவிரதைகள் பூலோகத்தில் இல்லை என்பதை நாரதர் மறுக்க கோபம் கொண்ட அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோரிடம் இரும்பு கடலையைக் காட்டி வேகவைக்க முடியுமா என்றார். பதிவிரதை என நீங்கள் சொன்ன அனுசூயையினால் கூட இதை வேகவைக்க முடியாது என்றனர் மூவரும். அனுசூயை இருப்பிடம் சென்ற நாரதர் அவரிடம் அந்தக் கடலைகளைக் கொடுத்து அவற்றை வேக வைக்கச் சொன்னார். அவர் தன் கணவர் அத்ரிமுனியை எண்ணி நீர் விட அந்த இரும்புக்கடலைகள் வெந்தன. இதை அறிந்த மூவரும் அனுசூயை சோதிக்க எண்ணம் கொண்டனர். தங்கள் கணவர்களை முனிவர்களாக மாறிச் சென்று அனுசூயையிடம் பிட்சைகேட்கவும் அனுசூயையை ஆடையின்றி பிட்சையிடவும் நிபந்தனை விதித்தனர்.

மும்மூர்த்திகளும் அத்ரி இல்லம் சென்று பிட்சை கேட்டனர். ஆடையின்றி அமுது அளிக்க வேண்டுகேள் வைத்தனர். முனிவர்களின் கோரிக்கையைக் கேட்டு அதிர்ந்த அனுசூயை தன் ஞானதிருஷ்டியில் வந்திருப்பது மும்மூர்த்திகள் என அறிந்து அவர்களது கோரிக்கைக்குச் சம்மதித்து அவர்களுக்கு இலைபோட்டு அமரவைத்தாள். தன் கணவரைத் துதித்து நீரை அவர்கள்மேல் தெளிக்க மூவரும் குழந்தைகளானார்கள். மும்மூர்த்திகள் விருப்பம் போல் அவர்களுக்கு தாயன்புடன் உணவு ஊட்டினாள். அரன் அரி அயன் மூவரும் குழந்தைகளாக விளயாடிக் கொண்டிருக்க கண்ட தேவியர்கள் அனுசூயையிடம் மன்னிப்புகோர அனுசூயை அவர்களை மீண்டும் மூர்த்திகளாய் மாற்றினார். மும்மூர்த்திகள் தங்கள் அம்சமாக தத்தாத்ரேயரை அந்த தம்பதியினருக்கு அளித்தனர்

மூன்று முகங்கள் ஆறு கரங்களுடன் அத்ரி முனிவர் அனுசூயாதேவி ஆகியோருக்கு மகனாக மும்மூர்த்திகளின் அருளால் பிறந்தவர் தத்தாத்ரேயர். ஒளதும்பரம் என்ற அத்திமரத்தடியில் பசு அருகில் இருக்க நான்கு நாய்களுடன் தரிசனம் தருபவர். பசு தர்ம தேவதையையும் பூமியையும், நான்கு நாய்கள் நான்கு வேதங்களின் அம்சமாகவும் கருதப்படும். கர்த்த வீர்யார்ஜுனனுக்கும் பிரகலாதனுக்கும் குருவாகத் திகழ்ந்தவர். அனுமனும் தத்தரும் யோகிகளுக்கு காட்சி தருவதுண்டு. ஆதிசங்கரர் இவரைச் சந்தித்து தமது அத்வைத கருத்துக்களுக்கு ஒப்புதல் பெற்றார்.

பஹுதர், குடீசர், ஹம்சர், பரமஹம்சர் என நான்கு சன்யாசி பிரிவுகளில் பரமஹம்சர்கள் மேம்பட்டவர்கள். அவதூதர்கள் அவர்களைவிட உயர்ந்தவர்கள். அவதூத சன்னியாசிகளின் முன்னோடி. ஜீவன் முக்த கீதை மற்றும் அவதூத கீதை என்ற அரிய நூலை எழுதியுள்ளார். வித்வத் சந்நியாசம் என்ற அவதூத பரம்பரைக்கு மூலகாரணபுருஷர் தத்தாத்ரேயர். அவதூத ஆஸ்ரமத்தை துவக்கி வைத்தார் தத்தாத்ரேயர். சதாசிவபிரமேந்திரான், புதுக்கோட்டை சாந்தானந்தர், ஜட்ஜ் சுவாமிகள் ஆகியோர் இந்த ஆசிரமத்தில் சந்நியாசம் பெற்றவர்கள்.

மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் தத்தாத்ரேயருக்கு பிரியமான இடம். கும்பமேளா சமயத்தில் எண்ணற்ற அவதூத சந்நியாசிகள் கூடுகின்றனர். இவர்களுக்கு தண்டம் கமண்டலம் கிடையாது. இவர்களின் பாதுகைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்வது வழக்கம்.

இமயமலையில் ஆத்ரேய மலைப்பகுதியில் தத்தாத்ரேயர் தங்கி தவமியற்றிய தத்தர்குகை உள்ளது. பதினாயிரம் படிகளை உடைய கிர்நார் மலியின் உச்சியில் தத்தாத்ரேயர் சரண பாதுகை உள்ளது. ஸஹ்யமலை- தத்த சேத்திரம்- மகாபலேஷ்வர் என அழைக்கப் படுகிறது. குல்பர்கா அருகில் காங்காப்பூரில் தத்தாத்ரேயர் அமர்ந்த நிலையில் உள்ளார். இவரை ஜன்னல் மூலம் தரிசனம் செய்ய வேண்டும். மராட்டிய கிருஷ்ணா நதி தீரத்தில் தத்தர் ஆலயம்- பாதுகைகள் வழிபாடு. உத்தரப்பிரதேசத்தில் குருமூர்த்தி என அழைப்பட்டு தத்தகுரு ஆராதனை சிறப்பு. ஆந்திரா கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஒளதும்பரம் தத்த க்ஷேத்திரம். சேலம், சேர்ந்தமங்கலம் தத்தகிரி குகாலயத்தில் சிலாரூபம், குடவாசல் எனும் புதுக்குடியில் தத்த குடீரம், உடையார்பட்டியில் பதினாறு அடி உயரமுள்ள சிலாரூபம், சுசீந்திரன் தாணுமாலயன் ஒரு தத்த க்ஷேத்திரம்மைசூரில் புகழ் பெற்ற தத்தாத்ரேயர் கோவில் உள்ளது. தஞ்சை வடகுடியில் தத்தாத்ரேயருக்கும் கார்த்தவீர்யார்ஜுனனுக்கும் கோவில்.

#####

திங்கட்கிழமை, 23 July 2018 19:30

நாரதர்!

Written by

ஓம்நமசிவய!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

####

நாரதர்!

நாரதர் என்றால் என்ன! முன் ஜென்ம விருப்பம்!

வேத வித்துக்களிடம் பணி புரிந்த வேலைக்காரின் மகனாகப் பிறந்து அவர்களுக்கு பணிவிடை செய்து வந்ததால் பிரம்ம வித்தையை உபதேசம் பெற்று எதையும் அர்ப்பணமாக செய்து வர பக்தியும் ஞானமும் வளர்ந்தது. தாயார் இறந்துவிட வடக்கே புறப்பட்டுச் சென்று ஓர் நதியில் நீராடி நீரை அருந்தி உபதேச மந்திரத்தை ஜபித்து கிருஷ்ணனை தியானிக்க உள்ளத்தில் தோன்றி மறைந்து விட்டார். பின்னர் இப்பிறவியில் என்னைக் காணும் தகுதி உனக்கில்லை என் அசரீரி எழுந்தது. உள்ளத்தை இருத்தி பற்றின்றி இருக்க பஞ்சபூத சரீரம் விழ புண்ணிய சரீரம் கிடைத்தது.

சத்ய யுகத்தில் சாரஸ்வதன் என்பவன் அவந்தி நகரில் வாழ்ந்திருந்தான். ஒருநாள் அமைதியாக அமர்ந்திருந்தவனுக்கு வாழ்க்கை நிலையில்லாதது, பயனற்றது எனதோன்றியது. எதனால் இந்த எண்ணம் வந்தது என அவனுக்குத் தெரியவில்லை. தனது செல்வங்கள் எல்லாவற்றையும் தனது புத்திரர்களிடம் அளித்துவிட்டு ஸ்ரீமன்நாராயணனை நோக்கி தியானம் செய்ய ஆரம்பித்தான். தன் முன் தோன்றிய பகவானிடம் என்னை தங்களுக்குள் இனைத்துக் கொள்ளுங்கள் என வேண்டினான். சாரஸ்வதா சிறந்த பக்திமானான நீ இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டியுள்ளது. உனது முன்னோருக்கு நீ தர்ப்பணமாக அளித்த உணவும் நீரும் எனக்கு மகிழ்வைத் தந்தன. அதனால் உனக்கு நாரதன் என்ற பெயரை அளிக்கின்றேன். (நாரதர்-நீர் அளித்தவர்) சிறிது காலத்தில் சாரஸ்வதன் இயற்கையெய்தி பிரம்ம லோகத்தில் இருந்தான். பின்னர் பிரம்மாவின் புத்திரனாக தோன்றி பகவான் அளித்த பெயரால் நாரதன் என அழைக்கப்படலானான்.

மனிதர்கள் எதனால் நரர்கள் எனப்பட்டனர்! ஐம்பூதங்களும் ஒரு மனித உடலில் பரவியிருந்தாலும் நீரின் அளவே அதிகமாகும். பிராண ஆதாரம் நீராகும். அதனால்தான் மனிதர்கள் நரர்கள் எனப்பட்டனர். அந்த நீரில் உறைபவனான விஷ்ணுவை நாராயணன் என்றனர்

நாரதர் பெற்ற சாபங்கள்!
பிரம்மாவின் மூச்சுக்காற்றில் கலந்து மாரீசி போன்ற ஒன்பது முனிவர்களுடன் மானச புத்திரனாக தோன்றினார் நாரதர், பிரம்மன் நாரதரை அழைத்து மற்றவர்களைப் போலவே நீயும் எனக்கு படைப்புத் தொழிலில் உதவி செய்ய வேண்டும் எனக் கேட்க, தந்தையே என் மனம் மோட்ஷத்தை அடைய விரும்புகின்றது. பிரம்மச்சாரிய விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகளை எனக்கு தாங்கள் போதிக்க வேண்டும் என்றார். கோபம் கொண்ட பிரம்மன் நாரதா நீ மேற்கொள்ள என்னும் பிரம்ச்சரிய விரதம் அழிந்து குடும்பஸ்தனாக இருந்து பல சிக்கல்களுக்கு ஆளாக வேண்டும், கந்தர்வ குலத்தில் பிறந்து பல பெண்களை மணந்து அவதிப்பட்டபின் ஒரு முனிவரின் சாபம்பெற்று தாழ்குலத்தில் மானிடனாக பிறந்த பின்னரே உனக்கு சாப விமோசனம் கிட்டும் எனச் சாபம் கொடுத்தார்.

பிரம்மனின் சாபப்படி கந்தர்வர்களில் சிறந்த இசைமேதையான உபன் மகனாக உபவருக்கன் என்ற பெயரில் பிறந்து மகதி என்ற யாழ் கொண்டு பாடும் பேராற்றல் பெற்றிருந்தான். முனிவர்கள் உபவருக்கனை தங்கள் ஆஸ்ரமத்திற்கும் யாக சாலைக்கும் அழைத்து சாமகானம் இசைத்துப் பாடச் சொல்லி ஆனந்தப்பட்டனர்.

பிரம்மசிரேஷ்டிரர் முனி தன் யாகசாலைக்கு உபவருக்கனை அழைக்க சாமகான வேதத்தை யாழிசையுடன் இசைத்துக் கொண்டிருக்கும்போது அங்கிருந்த இளம் பெண் இந்த இசையில் மயங்கியிருக்க அவளைப் பார்த்த உபவருக்கனும் மயங்கியதால் இசையில் தடுமாற்றம் ஏற்பட பிரம்மசிரேஷ்டர் உபவருக்க என இடி குரலில் அழைத்து சாம வேதகானத்தில் பிழையை உண்டாக்கியதால் நீ ஈன குலத்தில் மானிடனாய் பிறப்பாய் என சாபமிட்டார்.

முனியின் சாபத்தைப் பெற்றதால் வருத்தமுற்ற உபவருக்கன் யோகத்தில் ஆழ்ந்து தன் உயிரை விட்டான். கன்யாகுப்ஜ நாட்டில் தருமியன்-கலாவதி என்ற தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவர் பிறந்ததும் நாட்டில் சுபிட்சமாக மழை பொழிந்ததால்- நீரை வர்ஷித்ததால் அவனுக்கு நாரதர் எனப் பெயரிட்டனர். தாய் தந்தையர் இறக்க காட்டில் தவம் மேற்கொண்டார். நாராயணர் தோன்றி நாரதா நீ இப்பிறவியில் என்னைக் காணமுடியாது. அடுத்த பிறவியில் உன் எண்ணம் நிறைவேறும் என்றதால் தெளிந்த நாரதர் மீண்டும் யோகத்தில் அமர்ந்து தன் உயிரை விட்டார்.

உடலைக் களைந்து சுய ரூபம் அடைந்து சத்ய லோகமடைந்து தந்தை பிரம்மனை வணங்கி, கையிலையில் சிவனை வணங்கி மோட்சம் பெறும் வழியைக் கேட்டார். பிரமச்சரிய விரதம் கொண்டு மனதையும் ஐம்புலன்களையும் அடக்கி இன்சொல் கூறி அறவழியில் நடந்து இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை மட்டும் உண்டு சதா இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

அதன்படி சதா சர்வ காலம் இறைவனை நினைத்து திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்த நாரதர் பத்திரிகாசிரமம் சென்று நாராயணனை தரிசிக்க அவர் நாரதரை பூலோகத்தில் சிருஞ்சியர் மகள் சுவர்ணகிரீயை மணந்து வாழ அறிவுருத்த அவ்வாறே சுவர்ணகிரீயை மணந்து வாழ்ந்து கொண்டிருந்த நாரதருக்கு அங்குவந்த சனத்குமாரர் தாரக மந்திரத்தை உபதேசித்தார்.

நாராயணனின் தாரக மந்திரத்தை உபதேசம் பெற்றதும் நாரதர் பற்றற்ற நிலையை அடைந்து கானகம் சென்று தவமேற்கொண்டார். மகாவிஷ்ணு காட்சியளிக்க இசையில் வல்லவராக வரம் பெற்றார்.

தன் தாயையும் தந்தையையும் வணங்கி தாயிடம் உள்ளது போன்ற வீணையையும் அதை மீட்டும் ஞானமும் பாடும் திறமையும் பெற்றார். அவரின் இசை நாரத கானம் என்றாயிற்று.

நாரதர் திரிலோக சஞ்சாரி எப்படி ஆனார்!

தான் தோன்றியதிலிருந்தே நாராயணனை தன் சிந்தையில் வைத்து துதித்து வந்தார். தட்சப்பிரஜாபதி தன் குலத்தை விரிவாக்க 1000 மகன்களை மூன்றுமுறைத் தோற்றுவிக்க ஒவ்வொரு முறையும் அவர்களை பக்தி வழியில் ஈடுபடவைத்து முக்தி மார்க்கத்தில் நாரதர் செலுத்திவிட கோபம் கொண்ட தட்சப்பிரஜாபதி, நாரதா நீ இனி ஒரே இடத்தில் தொடர்ந்து ஒரு முகூர்த்த காலத்திற்குமேல் தங்கக் கூடாது. அப்படி தங்கினால் உன் தலை வெடித்து விடும் எனச் சாபம் கொடுத்தார்.

தன் தாயின் (சரஸ்வதி) தந்தையின் (பிரம்மா) ஆலோசனைப்படி நாரதர் மாதையூர் சென்று சிவனை வழிபட்டு தவமிருந்தார். சிவனிடம் தான் நினைத்தவுடன் எந்த உலகிற்கும் செல்லும் ஆற்றலையும் புகழையும் வேண்டிப் பெற்றார். தான்பெற்ற சாபப்படி நாரதர் ஒரே இடத்தில் இல்லாமல் எல்லா உலகங்களுக்கும் பயணித்தவாறே இருக்கின்றார். பகவானின் பரம பக்தனாக எந்நேரமும் நாராயணன் நாமம் உச்சரிக்கும் திரிலோக சஞ்சாரியாக பேறு பெற்றான்.


நாரதரின் ஆசை!

நாரதி, தமிழ் வருடங்களின் பிறப்பு! நாரம்- என்றால் தீர்த்தம் அல்லது மனிதமனம். நாரம் எனும் தீர்த்தத்தினை இருப்பிடமாகக் கொண்டுள்ளதால் நாராயணன். மனிதர்களின் மனத்தைப் புரிந்து கொள்கின்ற தன்மை இருப்பதனால் நாரதர். இந்த இருவர் சமபந்தப்பட்ட நிகழ்வே தமிழ் வருடங்கள்.

நாரதர் கட்டை பிரமச்சாரி. கங்கைக் கரையில் மக்கள் குடும்ப சகிதமாக செல்வதைக் கண்ட நாரதருக்கு ஒர் ஆசை தோன்றியது. குடும்பம் என ஒன்றில்லாததால் இல்லற சுகம் என்பதை தான் அறியமுடியவில்லை என நினைத்தார். அப்போது கங்கையில் ஓர் பெரிய மீன் தன் குஞ்சுகளுடன் நீந்தி செல்வது அவருக்கு மிகவும் மகிழ்வைக் கொடுக்க தானும் அதுபோல் குடும்பமாக சென்று அந்த சுகத்தினை அனுபவிக்க ஆசை கொண்டார். தன் நாவில் எப்போதும் உச்சரிக்கும் நாராயனின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ணரைச் சந்தித்தபோது தன் ஆசையைக் கூறினார். மேலும் தாங்கள் ஆயிரக்கணக்கான மனைவிகளுடன் எப்படி குடும்பம் நடத்துகின்றீர்கள் என அறிய ஆசைப் படுவதாகச் சொல்ல கிருஷ்ணர் தனது மனைவிகள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று நேரில் அறிந்து வரும்படி கூறினார். எல்லா வீட்டிலும் கிருஷ்ணர் தன் மனைவி மக்களுடன் ஆனந்தமாக இருப்பதைக் கண்டு தானும் அப்படி இருக்க விரும்பிய எண்ணங்களுடன் கங்கையில் மூழ்கி நீராடினார்.

நீராடி எழுந்தபோது கிருஷ்ணரின் அருளால் பெண்ணாக மாறியிருந்தார். நாரதர் நாரதி ஆனார். கரையேறிய நாரதியை கங்கைக் கரையில் இருந்த ஓர் சந்நியாசி கையைப் பிடித்து அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். நாரதியின் மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருந்தது. முதல் குழந்தைக்கு பிரபவ எனப் பெயரிட்டனர். ஆண்டுக்கு ஓர் குழந்தை என பிறக்க நாரதியின் உடல் நலம் குன்றியது. இப்படியே நாரதிக்கு அறுபது குழந்தைகள் பிறந்தன. அறுபதாவது குழந்தைக்கு அக்க்ஷய எனப் பெயரிட்டனர். அந்தக் குழந்தைகளுக்கு உணவு, மருந்து அளிக்க முடியா நிலை ஏற்பட்டது. இனியும் தாங்க முடியாது என்ற நிலையில் கிருஷ்ணரை மனதாரத் துதித்தாள்.

அப்போது இதுவரை அவள் கணவராக இருந்துவந்த முனிவர் மறைந்து ஸ்ரீகிருஷ்ணர் தோன்றினார். நாரதியிடம் குடும்ப வாழ்க்கையின் சுகம் போதுமா! என வினவினார்! மணவாழ்க்கை மலர்ப் படுக்கை என நினைத்து ஏமாந்து விட்டேன் .இதிலிருந்து என்னை மீட்க உதவி செய்யுங்கள் என வேண்டினாள். அறுபது வருடங்களாக மாயையில் ஆழ்ந்திருந்த நாரதி விழிப்பு ஏற்பட்டு நாரதாராக மாறினார்.

தன் தாயும் தந்தையும் நிலை மாறியதால் கலக்கமடைந்த அறுபது குழந்தைகளும் தங்களின் நிலை என்ன வென்று வேண்ட நாரதர் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்க்க, அவர் அறுபது பிள்ளகளையும் அறுபது ஆண்டுகளாக இருந்து ஒவ்வொருவரும் ஓர் ஆண்டு இப்பூவுலகை சுகத்துடன் ஆண்டு வர ஆசிகூறினார். அதன்படி முதல் குழந்தை பிரபவ –ல் தொடங்கி அறுபதாவது குழந்தை அக்க்ஷய –ல் முடியும் ஆண்டுகளாக மாற்றம் பெற்று பூவுலகில் ஆட்சி செய்து வருகின்றனர்.

60 ஆண்டுகளின் பலன்கள்- புராணங்கள் கூறுவது
பிரபவ- உற்பத்தி
விபவ- செல்வம்
சுக்கில- வெளுப்பு,
பிரமோதூத- பிரபையுடன் கூடிய தூது
பிரஜோத்பத்தி- ஜனப்பெருக்கம்
ஆங்கீரஸ- வளமான செல்வ பெருக்கம்
ஸ்ரீமுக- லக்ஷ்மிகடாட்சம்
பவ- இறையருள் பொங்கிப் பெருகும்
யுவ- இளமை
தாது- வறட்சி நீங்கி வளம் பெரும்
ஈஸ்வர இறையருள் பரிபாலிக்கும், அமைதி நிலவும்,
வெகுதான்ய- விளைச்சல் அமோகம்
பிரமாதி- சில தவறுகள் நேரும்
விக்ரம- வீரமும், விளைச்சலும் அதிகரிக்கும்
விஷு- எல்லாப் பொருள்களும் பெருகும்
சித்ரபானு- மகிச்சிதரும் சம்பவங்கள் நிகழும்
சுபானு- இன்பமும் சுகமும் நிறைந்திருக்கும்
தாரண- மழை அதிகமாக இருக்கும்
பார்த்திப- உணவுப் பொருள் அதிகம் கிடைக்கும்
விய- அதிக செலவாகும்
சர்வஜித்- எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி
சர்வதாரி- மழை அதிகம்
விரோதி- மழை அதிகம் இருக்காது
விக்ருதி- கஷ்டங்கள் அதிகம்
கர- வெற்றியில் வீரம் வெளிப்படும்
நந்தன- அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பர்
விஜய- விசேஷ வெற்றி
ஜய- வெற்றி
மன்மத- நோய்களினால் துன்பம்
துர்முகி- கலகங்கள் நேரும்
ஹேவிளம்பி- பணக் கஷ்டம்
விளம்பி- துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்
விகாரி- மாற்றங்கள் ஏற்படும்
சார்வாரி- எல்லா வளங்களும் பெருகும்
பிலவ- அனைத்தும் இழுபறி
சுபகிருது- சுபங்கள் நடைபெறும்
சோபகிருது- மங்களங்கள் பெருகும்
குரோகி- குரோதம் வளரும்
விஸ் வாவஸு- தெய்வ அருள் பெருகும்
பராபவ- தோல்வியை எதிர் கொள்ள வேண்டும்
பிலவங்க- துயரங்களைச் சமாளித்தல்
கீலக- தீர்க்கமாக இருத்தல்
சௌமிய- அமைதியாக இருக்கும்
சாதாரண- இன்ப துன்பம் சமம்
விரோதி கிருது- விரோதத்தை வரவழைக்கும்
பரிதாபி- பரிதாபத்தைக் கொடுக்கும்
பிரமாதீச- அஞ்ஞானம் அகன்று ஒளி கிடைக்கும்
ஆனந்த- ஆனந்தம் பெருகும்
ராக்ஷஸ- கொடூரம்
நள- சமையல், சமயத் தொடர்பான மேன்மைகள்
பிங்கள- வளப்பமிக்க விளைச்சல்கள்
காளயுக்தி- அதீத புத்திசாலித்தனமிக்க கண்டுபிடிப்புகள்
சித்தார்த்தி- சாதனைகள்
ரௌத்ரி- கோபதாப எரிச்சல் அதிகம்
துர்மதி- குறைவான மழை, கெட்ட எண்ணம் மிகுதியாக இருக்கும்
துந்துபி- மகிழ்ச்சி நிலவும்
ருத்ரோத்காரி- பூரண மழை பெய்வதுடன் கோபமான சம்பவங்கள் நிகழும்
ரக்தாக்ஷி- சிவந்தகண்கள் கோபப்படுவதும் பயக்கண்ணீர் விடுவது நடக்கும்
குரோதனா- கோபம், குரோதம் வெறுப்பும் அதிகரிக்கும்
அக்ஷய- பணப்பஞ்சம். கெடுதல் இல்லா சுபிட்சம் நிலவும்.

நாரதர் பெற்ற சாபம்! வீணை மண்ணுலகத்திற்கு வந்தது!
தேவேந்திரன் அகத்தியரை வரவேற்று உபசரித்தான். வரவேற்பு நிகழ்ச்சியில் ஊர்வசியின் ஆடலுக்கு நாரதர் வீணையை மீட்டினார். இந்திரன் மகன் சயந்தன் ஊர்வசியின் ஆடல் கண்டு காதல் கொள்ள அதை அறிந்த ஊர்வசியும் அவன்மேல் காதல் கொள்ள ஊர்வசியின் ஆடலில் பிழை ஏற்பட்டது. தாள சுருதிக்கு ஏற்ப ஊர்வசி ஆடாமல் காதலினால் தவறாக ஆடுவதைக் கண்ட நாரதர் ஊர்வசியின் ஆடலுக்கு ஏற்ப இசையை காதல் கானமாக இசைத்தார். இசையில் வல்லவரான அகத்தியர் இதை உணர்ந்து கோபம் கொண்டு சயந்தனை மூங்கிலாகும்படியும், ஊர்வசியை பூவுலகில் மானிட பிறவி எடுத்து வாழவும் சபித்தார். ஊர்வசி சாபம் பெற நாரதரும் இன்பரசம் பொங்க பிழைபட வாசித்து தன்னை அவமதித்தார் என்பதால் ‘வீனை மண்மிசை தங்குக’ என்று சாபமிட வீணை மண்ணுலகிற்கு வந்தது.

குரங்கு முகம்! நரதர்பெற்ற சாபம்!
பர்வத ரிஷியும் நாரதரும் நண்பர்கள். இருவரும் உலகை சுற்றிப் பார்த்து வரும்போது உணவு, மங்கை, பொருள் ஆதியவற்றின்மீது அவ்வப்போது ஏற்படும் உணர்வுகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். சஞ்சயம் என்ற நாட்டின் அர்சன் அவர்களை வரவேற்று அன்புடன் உபசரித்தான். அவர் மகள் தமயந்தியை அவர்களுக்கு பணிவிடை செய்ய நியமித்தான். இரு முனிவர்களின் குறிப்பறிந்து அவர்கள் கேட்காமலே அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். நாளடைவில் அவள் நாரதருக்கு செய்யும் பணிவிடைகளில் அதிக அக்கறை தெரிந்தது. இதுபற்றி நாரதரிடம் கேட்க அவர் நாங்கள் இருவரும் காதலிக்கின்றோம் என ஒப்புக்கொண்டார். நம் ஒப்பந்தப்படி நீர் ஏன் என்னிடம் இது பற்றி சொல்லவில்லை என பர்வத ரிஷி கோபங்கொண்டு நாரதரை குரங்கு முகமாக மாற சாபமிட்டார். நண்பர் என்று பாராமல் அவர் சாபம் இட்டதும் நாரதரும் உமக்கு சுவர்க்க வாசமில்லாமல் மிருத்ய லோகத்தில் வாசம் உண்டாகட்டும் என எதிர் சாபமிட்டார்.

பர்வத ரிஷி வருத்தத்துடன் வனப்பக்கம் சென்று விட்டார். நாரதரின் இசை கேட்டு மகிழ்ந்தபடி வந்த தமயந்தி அவர் முகம் குரங்கு முகமாக மாறியிருப்பது கண்டு வருத்த முற்றாலும் அவருக்குச் செய்யும் பணிவிடைகளில் எந்த வித மாற்றமும் இல்லாமல் அன்புடன் செய்து வந்தாள்.

தன் மகளுக்கு திருமணப் பருவம் வந்துவிட்டதால் அவளுக்கு நல்ல அரச குமரனை தேர்ந்தெடுத்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தமயந்தி தன் தோழியின் மூலமாக தந்தைக்கு தூதுவிட்டாள். தந்தை வருந்தி தன் மனைவிடம் சொல்லி மகளை அரசகுமரனை மணந்து கொள்ள தூது அனுப்பினார். தாய் எவ்வளவோ சொல்லியும் மகள் கேட்காமல் உறுதியாக குரங்கு முகம் கொண்ட நாரதர்மேல் அன்பு கொண்டிருக்க அவர்களுக்கு திருமணம் செய்வித்தார் மன்னன். நாரதர் அங்கேயே இருந்து வழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் நண்பன் பர்வத ரிஷி அங்கு வந்து நண்பன் குரங்கு முகத்துடன் வாழ்க்கை நடத்துவது கண்டு வருத்தப்பட்டு தன் சாபத்தை விலக்கிக்கொள்ள நாரதரும் அவர்மேல் தான் இட்ட சாபத்தை விலகிக்கொண்டார்.

நாரதர் கலகம்!
தேவலோகம் சென்ற நாரதரை வறவேற்று உபசரித்த தேவேந்திரன் அவரிடம் ஓர் பாரிஜாத் மலரை அளித்தான். அம்மலருடன் கிருஷ்ணரைக் காணவந்தவர் கிருஷ்ணனிடம் கொடுக்க அதை அவர் அருகில் இருந்த ருக்மணியிடம் கொடுத்தார். பின் சத்யபாமவைப் பார்க்கச் சென்ற நாரதர் அவரிடம் தான் பாரிஜாதமலரை கிருஷ்ணரிடம் கொடுத்தது அவர் அதை ருக்மணியிடம் கொடுத்தது எல்லாம் சொல்லிச் சென்றுவிட்டார். பிறகு அங்கு வந்த கிருஷ்ணன் சத்யபாமாவின் முகம் வாடியிருக்க காரணம் கேட்டு ஒரு பாரிஜாத மலருக்கா இத்தனை சோகம் என நாரதரை அழைத்து தான் சொன்னதாகக் கேட்டு தேவேந்திரனிடம் ஒரு பாரிஜாத மரத்தை வாங்கி வரச் சொன்னார். போன கையில் திரும்பி வந்த நாரதர் தேவேந்திரன் அந்த மரத்தை பூவுலகிற்கு தரமுடியாது எனச் சொன்னதை சொல்ல கிருஷ்ணருக்கும் தேவேந்திரனுக்கும் போர் நடந்தது. காசிப முனிவர் வந்து இருவரையும் சமாதானம் செய்து பாரிஜாதமரத்தை இந்திரன் துவாரகைக்கு அனுப்பி வைத்தான். சத்யபாமா நந்தவனத்தில் நட்ட மரம் பூத்து குலுங்கி ருக்மணி வீட்டில் விழுந்தது கண்டு பாமா கோபம் கொள்ள கிருஷ்ணர் பாமாவுடன் ருக்மணி வீட்டை அடைய பாரிஜாத மாலையை கிருஷ்ணர் கழுத்தில் போட்டு வரவேற்றாள் ருக்மணி. எல்லா மலர்களையும் மாலையாக தொடுத்து விட்டாயே உனக்கு மலர்கள் இல்லையா என்று கேட்டதற்கு என்னையே தங்களுக்கு தந்துவிட்ட பின் எனக்கு எதற்கு மலர்கள் என்றாள் ருக்மணி. ருக்மணியின் அன்பு கண்டு பாமா வெட்கினாள்.

பாமா ஒரு சமயம் கிருஷ்ணனின் அன்பு நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என நாரதரிடம் கேட்டாள். துலாபாரத்தில் கிருஷ்ணனை இருத்தி எடைக்கு எடை தங்கம் தானம் செய்தால் நல்லது நடக்கும் என்றார் நாரதர். அதன்படி ஏற்பாடுகள் நடந்தது. பாமா கிருஷ்ணனை வரவழைத்து துலாபாரத்தின் ஒரு தட்டில் அமரவைத்து மற்ற தட்டில் தன்னிடமுள்ள பொன் பொருள்களை வைக்க ஆரம்பித்தாள். எடைக்குமேல் பொன் தன்னிடம் வைத்திருப்பதாக கர்வம் இருந்தது. அவள் நினைத்ததுபோல் அவ்வளவு சீக்கிரமாக எடையை சரி செய்ய முடியவில்லை. எல்லாவற்றையும் வைத்தும் தராசு சரியாக வில்லை. தானம் பெற வந்தவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்தனர். என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. பாமாவிடம் ருக்மணியை அழைத்து ஏதாவது செய்ய முடியுமா எனப் பார்க்கச் சொன்னார்கள். என்னால் முடியாததை அவள் எப்படி சரி செய்வாள் என நினைத்தவளுக்கு அனைவரின் பேச்சை தட்ட முடியாமல் ருக்மணியை அழைத்து வந்தாள். ருக்மணி தட்டிலுள்ள பொன் பொருட்களை எல்லாம் எடுக்கச் சொன்னாள். பின் கிருஷ்ணரை நினைத்து வழிபட்டு துளசி தளம்- இலை ஒன்றை வைத்தாள், என்ன ஆச்சரியம் தட்டு சமனாகியது. சத்ய பாமா தன் கர்வம் அழிய ருக்மணியைப் பார்த்தாள்.

இறைமேல் நம்பிக்கை!
நாரதர் பூமியை சுற்றி வரும்போது தற்செயலாக மூவர் அவரைப் பார்த்து விட்டனர். அவர்களில் செல்வந்தர், புலவர் இருவரும் நாரதரிடம் நீங்கள் வைகுந்த வாசனிடம் எங்களுக்கு வைகுந்த வாசம் கிடைக்குமா! எனக் கேட்டு வாருங்கள் என்றனர். மூன்றாவது நபர் ஓர் ஏழைத் தொழிலாளி. அவர் நாரதரிடம் ஒன்றும் கேட்கவில்லை.

உலகைச் சுற்றி விட்டு வைகுந்தம் சென்று விஷ்ணுமுன் நின்றார். நாரதர் பேச ஆரம்பிக்குமுன், நீ பூலோகம் சென்று அந்த மூன்று பேரிடமும் நான் ஊசியின் காதில் யாணையை நுழைத்துக் கொண்டிருப்பதாக கூறு. அவர் நுழைத்து முடித்த பின்னர் உங்கள் கேள்விக்கான பதிலைச் கேட்டுச் சொல்கின்றேன் எனச் சொல் உனக்கே எல்லாம் புரியும் என்றார்.

இதை அந்த மூவரிடமும் சொன்னார். புலவரும், செல்வந்தரும் இதைக் கேட்டுச் சிரித்தனர். ஊசியின் காதில் யானை நுழைக்கவே முடியாத காரியத்தை விஷ்ணு செய்கின்றாராம் என கிண்டலடித்து மீண்டும் சிரித்தனர். ஆனால் ஏழைத் தொழிலாளி, ஆண்டவன் எவ்வளவு வல்லமை கொண்டவர். அவர் நினைத்தால் எதையும் செய்வார். சின்னஞ்சிறு விதைக்குள்ளே பெரிய மரத்தை ஒளித்து வைத்திருக்கும் அவரால் எதுவும் முடியும், எனப் பரவசப்பட்டான்.

நாரதர் அந்த தொழிலாளியைப் பார்த்து, அன்பனே, இறைவனால் எதையும் செய்ய முடியும் என நம்புவர்க்கே அவர் துணை கிட்டும் எனக்கூறி மறைந்தார்.

கர்வம் கொண்ட நாரதர்!

1.இறை நம்பிக்கை உணர்வே ஆன்மீக ஆதாரம்!
நாராயணன் திருநாமத்தை சர்வ காலமும் சொல்லிக் கொண்டிருப்பது தான் ஒருவன் தான் என்ற நினைவு கொண்டதனால் கர்வம் கொண்ட நாரதர் அதை பெருமாளிடம் பெருமையாகச் சொன்னார். விஷ்ணு புன்னகைத்தார். நாரதா எவ்வளவு பெருமை உன்னிடம் இருக்கின்றது. நீ ஒருவனால் மட்டுமே அதைச் செய்யமுடியும் என்று சொல்லி அவரிடம் எண்ணெய் நிறைந்த கிண்ணம் ஒன்றைத் தந்து, “நாரதா இது புனிதமான எண்ணெய். ஒரு சொட்டு கூட கீழே சிந்தாமல் சுமந்தபடி உலகை மூன்றுமுறை வலம் வரவேண்டும். இப்போதே புறப்படு என்றார்.”

இது என்ன பிரமாதம் என கிண்ணத்தை கையில் ஏந்திக்கொண்டு ஓர் அடியெடுத்து வைக்க எண்ணெய் அசைந்தது. எங்கே கீழே சிந்தி விடுமோ என்ற பயம் பிடிக்க நாரதரின் கவனம் பார்வை முழுவதும் எண்ணெய் கிண்ணத்தின் மீதிருக்க அடிமேல் அடியெடுத்து வைத்து ஜாக்கிரதையாக ஒருமுறை வலம் வந்தார். அப்போது பரந்தாமனைப் பார்த்து இந்த எண்ணெய்யை சிந்தாமல் எடுத்துக் கொண்டு வருவது என்பது என்னால் முடியாது. வேரு ஒருவரிடம் இப்பொறுப்பை ஒப்படையுங்கள் என்றார்.

திருமால் பூ உலகின் பக்கம் பார்த்து அங்கிருந்த பக்தன் ஒருபெரியவரை அழைக்க வந்தவரிடம் எண்ணெய்யை கீழே சிந்தாமல் உலகைச் 3முறைச் சுற்றிக்கொண்டு வரவேண்டும் என்று கிண்ணத்தை கொடுத்தார். கிண்ணத்தை வாங்கியபோது அப்பெரியவரின் கை நடுங்கியது கண்ட நாரதருக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டார். சிரஞ்சீவியான தன்னாலேயே முடியாதபோது உடல் நலம் குன்றிய வயதான பெரியவர் எப்படி இதைச் செய்யமுடியும். இன்று பெருமாளுக்கு ஏதோ குழப்பம் போலிருக்கின்றது என நினைத்தார்.

கிண்ணத்தை கையில் வாங்கிய பெரியவர் தள்ளாடியபடி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நடக்கத் தொடங்கி ஒன்றல்ல, சொல்லிய வண்னம் மூன்று முறை வலம் வந்து முடித்து துளிக்கூட எண்ணெய் சிந்தாமல் கிண்ணத்தை பெருமாளிடம் கொடுத்தார். அருகில் இருந்து பார்த்த நாரதர் முழித்தார். அப்போது பெருமாள் நாரதா உன்னிடம் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன் மறந்துவிட்டேன். நீ உலகைச் சுற்றிவரும்போது என்னென்ன பார்த்தாய் என்றார். என்னது! வேடிக்கைப் பார்ப்பதா! எதுவும் செய்யத் தோன்றவில்லை. கவனம் முழுக்க எண்ணெய் கிண்ணத்தில் தான் இருந்தது என்றார். இதே கேள்வியைப் பெரியவரிடம் கேட்க, பெருமாளே உலகில் படைக்கப்பட்ட பல உயிர்கள், நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்தேன். நடுவில் சில சமயம் தங்களை நினைத்துக் கொண்டேன். எப்படி ஒர் பொன்னான வாய்ப்பு என்று எண்ணி சந்தோஷம் கொண்டேன் என்றார். அப்படியானல் எண்ணெய் கிண்ணத்தை கவனிக்கவே இல்லையா என்று கேட்க, அதை ஏன் கவனிக்க வேண்டும், பெருமாளால் அதை நான் செய்வேன் என்று என்னிடம் ஒப்படைக்கப் பட்டதை அவர் பார்த்துக் கொள்வார். நான் செய்வேன் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கும்போது அதை கீழே கொட்டிவிடுவேனோ என்று நான் சந்தேகப்பட்டால் அது முட்டாள்தனம்! கொஞ்சமும் சிந்தாமல் கொண்டு வர பெருமாள் உதவி செய்வார் என நம்பினேன். சுலபமாய் சுற்றிவந்தேன் என்றார். 

நாரதரைப் பெருமாள் பார்த்தார். அதன் அர்த்தம் அவருக்குப் புரிந்தது. உங்களுக்கு புரிந்ததா! உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு நீங்கள் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கையால் ஏற்பட்டது. உங்களிடம் செய்து முடிப்பேன் என்ற தன்னம்பிக்கை இருந்தால் நீங்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறுவீர்கள். இறைவனிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். செயலாற்றுங்கள். நடப்பது நடந்தே தீரும். இறை நம்பிக்கைதான் ஆன்மீக ஆதாரம். வாழ்வின் துடுப்பு!

2. பெண்ணாசை இல்லை!
வைகுந்தத்தில் உரையாடலின்போது தான் பெண்ணாசை இல்லாதவர் என நாரதர் கர்வத்துடன் கூற அதைப் பரிசோதிக்க எண்ணிய திருமாள் நாரதர் சொல்லும் வழியில் ஓர் பசுஞ் சோலையையும் அதில் ஒரு பெண் படுத்திருக்கவும் செய்தார். அப்பெண்ணைக் கண்ட நாரதர் மையல் மேலிட அவளை திருமணம் செய்து கொள்ள விருப்புவதாக கூறினார். அப்பெண் நான் நாராயணன் போல் உள்ள ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றாள். நாரதர் எப்போதும் நாராயணன் திருநாமத்தை உச்சரிக்கும் தனக்கு அந்த நாரயணன்போல் உரு கொள்வதில் சிக்கலில்லை நான் திரும்பி வரும் வரையில் நீ இங்கேயே இரு எனக் கூறி வைகுந்தம் சென்றார். திருமாலிடம் பூவுலகில் நடந்த விசயத்தை மாற்றி ஒரு பெண்ணைக் கண்டதாகவும் அவள் சபதப்படி தங்களது சங்கு சக்கரத்தைத் தந்தால் நான் அவளிடம் காண்பித்து திரும்பிவந்து விடுவேன் என்றார். திருமால் சங்கு சக்கரத்தைக் கொடுக்க அதை எடுத்துக் கொண்டு பூவுலகம் சென்றவர் அங்கு அந்த பெண்ணைக் காணாமல் சேர்ந்துபோனார். அப்போதுதான் இது திருமால் செய்த நாடகம் என்பது புரிந்து அவர் கர்வம் அழிந்து வைகுந்தம் திரும்பினார். அவரைப் பார்த்த திருமால் எதை விரும்பி என்னிடம் மறைத்து பொய் கூரினாயோ அந்தச் செயலுக்காக பேடியாக மாற சாபமிட்டார். நாரதர் வகுளாரண்ய சேத்திரமாகிய இங்கு வந்து வழிபட்டு சாபம் நீங்க அருள் பெற்றார். நாரதர் பெண்ணாசை கொண்டதால் பேடியாகி விஷ்னு சாபம் தீரவழிபட்ட தலம். நாரதர் தவமிருகும்போது மகிழமரத்தின் பழங்கள் மேல் விழ மகிழம் காய்க்காமல் இருக்க வும், குளத்தில் நீராடும்போது தாமரை மலர்கள் இடைஞ்சலாக இருக்க இங்கு தாமரை பூக்காமல் இருக்கவும் சாபமிட்டார் நாரதர். பூக்காத பொய்கை-பூத்தாலும் காய்க்காத மகிழ மரம். குடும்ப அமைக்கு ஒற்றுமைக்கு வழிபாடு. வகுளம்-மகிழமரம்-ஆரண்யம்-காடு-வகுளாரண்யம். .- கடலங்குடி

#####

திங்கட்கிழமை, 23 July 2018 19:15

விஷ்வக்க்ஷேனர்!

Written by

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

####

விஷ்வக்க்ஷேனர்!

விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 2வது ஸ்லோகம்-சொல்வது கஜநாதன், “ஜயத்சேநன், ஹரிவக்ரர், காலப்ரக்ருதி போன்ற படைத்தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பரிஜனங்கள் எவருடைய ஆணைக்கு கீழ்படிந்து நடக்கின்றார்களோ அப்படிப்பட்ட விஸ்வக்‌ஷேனரை சகலவிதமான விக்னங்களும்-தடைகள் விலகுவதன் பொருட்டு வணங்குகின்றேன்.”

ஸஹஸ்ர நாமத்தைச் சொல்லும்போது விஷ்ணுவின் சேனைத் தலைவரான விஷ்வக்‌ஷேனரை பற்றிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லியே தொடங்குவது வழக்கம். சேனைத் தலைவர் என்பது தழிலில் சேனைமுதலி, சேனைநாதன் என்பர். மரியாதை நிமித்தமாக சேனைமுதலியார் என்பதுமுண்டு. சைவர்கள் எந்த செயலையும் தொடங்கும் முன்பாக விநாயகரை வணங்கித் தொடங்குவதுபோல் வைஷ்ணவர்கள் விஸ்வக்‌ஷேனரை வணங்கியே முயற்சிகளைத் தொடங்குவர்.

விஸ்வக்‌ஷேனரின் முக்ய வேலை திருக்கோவில்களைப் பராமரித்து கோவிலுக்கு வந்து போவோரை கண்காணித்து கோவிலை தூய்மையாக வைத்துக் கொள்வதாகும். பொதுவாக இவரை வணங்கிய பின்னரே பெருமாளை தரிசிக்க வேண்டும். பிரமோற்சவத்தின் முதல் நாள் சேனை முதலியார் உற்சவம் என்று இவரை ஆராதித்த பின்னரே தொடங்குவர். விஸ்வக்‌ஷேனர் ஐப்பசி மாதம் பூராட நட்சத்திரத்தில் அவதரித்தார். வைஷ்ணவ சித்தாந்தத்தின்படி முதல்குரு ஸ்ரீமந்நாராயணன், அடுத்தது தாயார். தாயார் பெருமாளிடமிருந்து உபதேசம் பெற்று விஸ்வக்‌ஷேனருக்கு உபதேசிக்கிறார்.. அதனால் ஆச்சாரியர்கள் வரிசையில் மூன்றாவதாகப் போற்றப்படுகின்றார்.

#####

வெள்ளிக்கிழமை, 20 July 2018 18:46

வீர, விவேக, ஞான ஆஞ்சநேயர்!

Written by

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

####

சின்னதிருவடி! வீர, விவேக, ஞான ஆஞ்சநேயர்!

மாமனாரால் மரணம் என்று ஈசனிடம் இராவணன் வரம் பெற்றதனால் மண்டோதரியின் தந்தையான விஷ்ணு மானிட அவதாரம் எடுக்க வேண்டிய நிலை உருவானது. மேலும் உமை ஒருமுறை தான் தன் கணவனை பிரிந்து. இருப்பது அறிந்தும் அதற்கு தன் சகோதரன் திருமால் உதவ வில்லை என்ற கோபத்தால் நீயும் ஒருநாள் உன் மனைவியைப் பிரிந்து துயரப்படுவாய் என்று சாபம் கொடுத்துள்ளார். இவைகளே விஷ்ணுவின் இராமவாதரத்திற்கான காரணங்கள்.

11வது ருத்திரர்!

இந்த நிகழ்வுகள் நடைபெற விஷ்ணு இராமா அவதாரம் எடுக்க முடிவானதும், அந்த சாதாரான மனித அவதாரத்தில் அசாதாரண காரியங்கள் எதுவும் இராமரால் செய்ய முடியாது என்பதாலும் சிவபக்தனான இராவணனை சிவாம்சத்தின் உதவியினால்தான் அழிக்க முடியும் என்பதால் அவருக்கு உதவிட 11வது ருத்திர அம்சமாக ஓர் அவதாரம் எடுக்க ருத்திரர் முடிவு செய்தார். ஏனெனில் இராவணன் சிவபெருமானின் அருள் பெற வேண்டி 11 ருத்திரர்களுக்கும் சிர ஆகுதி யாகம் செய்தான். அவனுக்கு பத்து சிரங்கள்தான் இருந்ததால் அவனால் பத்து ருத்திரர்களைத் தான் திருப்திப்படுத்த முடிந்தது. எனவே அந்த 11வது ருத்திர அம்சம் அவன் பக்திக்கு கட்டுப் படாது. அதனால் அந்த 11வது ருத்திர அம்சமாக அவதாரம் எடுக்க சிவன் முடிவு எடுத்தார். அப்போது உமையும் கூட வருவதாகக் கூறினார்.

வானர உருவம்!

வானரவீரன் ஒருவன் ஈசனை நோக்கி தவமிருந்து மகன்வரம் கேட்க இப்பிறவியில் உனக்கு புத்திர பாக்கியம் இல்லை இருப்பினும் என்னை நோக்கி தவமிருந்ததால் உனக்கு ஓர் மகள் தருகின்றேன் அவள் மூலம் நீ வேண்டிய பலசாலியான, புத்திசாலியான மரணமில்லாத மகன் பிறப்பான் என்று அருள். அஞ்சனை என்ற பெண்னைப் பெற்றான். அவள் வானர வானர மன்னன் கேசரியை காதலித்து மணம் புரிந்து குழந்தை இல்லாததால் வருந்த தேவதை வடிவான குறத்தி சொல்லியபடி வேங்கடகிரியில் பிள்ளை வரம் வேண்டி ஈசனை நோக்கி தவமிருந்தாள்.

எந்த உரு கொண்டு அவதாரம் எடுக்கலாம் என்று சிவபெருமான் நினைத்தபோது அவருக்குத் தோன்றிய உருவம் வானரம். வானரம் என்றால் வீடு வாசல் தேவையில்லை. எந்த பந்தத்திற்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் எதுவும் கட்டுப் படுத்தாது. உணவு சமைத்தோ அல்லது சமைக்காததோ அதனால் பிரச்சனையில்லை. சக்தி வானரத்தின் வாலாக வர விருப்பம் தெரிவிக்க வானரம் உருவம் கொள்ள நினைத்து சிவன் தன்னை விதைக் கருவாக மாற்றிக்கொண்டார். ஈசனும் தேவியும் வானரங்களாக மாறியிருந்த போது அவர்களால் ஒர்கனி உதிர அதை வாயுபகவான் அஞ்சனையில் கரத்தில் சேர்க்க, தினமும் தன் கைக்கு வரும் கனி என்று நினனத்து உண்ண அதனால் அவள் கருவுற்றாள். நிலை அறிந்த அஞ்சனை வருந்த 'ஈசனின் கரு என அசரீரி ஒலித்து. தன் கணவரிடம் சொல்லி அக்குழந்தைக்கு அஞ்சனையின் மைந்தன் எனப் பொருள்படும்படி ஆஞ்சநேயன் என்று பெயரிட்டாள். இந்த சம்பவம் நடந்த மலை அஞ்சனா பர்வதம்..ஹம்பிஅருகில்,ஆனேகுந்தி-2. கருவிதையை சிவனின் அம்சம் தனக்கு மகனாக வர வேண்டி தவமிருந்த கேசரி மனைவி அஞ்சனையிடம் கனியாக வாயு சேர்த்ததால் வாயு புத்திரன் என்பர்.

சுந்திரன்! மாருதி! ஆஞ்சநேயர்! அனுமன்!

அஞ்சனை மைந்தன் சுந்திரனாகப் பிறந்தார். குழந்தை தூங்க அஞ்சனை இறை வழிபாட்டிற்கு செல்ல விழித்த சுந்தரன் வானில் சொக்கச் செவேலென்று பிரகாசிக்கும் சூரியனைப் பழம் என நினைத்து அதை பிடிக்கத் தாவினார். இந்தக் குழந்தை எங்கே சூரியனைப் பிடித்து விடுமோ என்று அஞ்சிய இந்திரன் தன் வஞ்ராயுதத்தை வீச அது முழந்தையின் முகத்தில் தாக்க முகவாய் சற்றே நீண்டது அதனால் அனுமன் எனப்பட்டார். மருத் என்றால் காற்று. வாயுவின் புத்திரன் என்பதால் மாருதி என்றும் அஞ்சனையின் மகன் என்பதால் ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்பட்டார்.

சூரியனே குரு!

எல்லாவற்றையும் கற்று உலகிற்கு வழிகாட்டியாக இருக்கும் சூரியனைக் குருவாகக் கொண்டு அவர் விருப்பப்படி நகர்ந்து கொண்டிருக்கும் அவரைத் தொடர்ந்து தானும் சென்றே கல்வி கற்றார். சூரியன் ஆஞ்சநேயரை நவவியாகரண பண்டிதர் என்றழைத்தார்.

உச்சநிலை!

மார்கழிமாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். வைணவத்தில் இராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பதால் ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விநயத்தில் உச்சநிலை ஆகிய எல்லாம் சேர்ந்த ஒரே ரூபமாய் திகழும் அனுமன். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு புத்தி, பலம், தைரியம் தந்திடும் வரப்பிரசாதி. ராமதூதனாக ராமபக்திக்கு இலக்கணம் வகுத்தவர்.

அனுமனின் சமயோசித அறிவு: ‘கண்டேன் சீதையை’-

இலங்கைக்குச் செல்ல சமுத்திரத்தின்மேல் பாலம் கட்ட கற்களைப் போட அவை நீரில் மூழ்கின. அப்போது என்ன செய்வது என்று அனைவரும் யோசனையில் ஆழ்ந்திருக்க ஆஞ்சநேயர் முனிவரின் சாபம் பெற்ற தன் நண்பர்கள் நளன், நீலன் என்ற இரு வானரங்களையும் அழைத்து அவர்களைக் கற்களைத் தூக்கிவரச் செய்து கடலில் போடவைத்தபோது அந்தக் கற்கள் கடலில் மிதந்தது. அதன் பின்னர் மிக விரைவாக இலங்கைக்குப் பாலம் கட்டும் பணி நடந்தேறியது. நளனும் நீலனும் சிறுவயதில் விளையாட்டாக ஒருமுனிவர் தின பூஜைக்கு வைத்திருந்த சாளக்கிராமங்களை எடுத்து பக்கத்தில் இருந்த நதியில் வீச முனிவருக்கு மூச்சைப் பிடித்துக்கொண்டு ஆற்றில் மூழ்கி அந்தச் சாளக்கிராமக் கற்களை எடுப்பதே பெரிய வேலையாயிருந்தது. அதனால் கோபங்கொண்ட முனிவர் இனி நீங்கள் எந்தக் கல்லை நீரில் வீசினாலும் அது மூழ்காது என சாபம் கொடுத்தார். இதை பயன்படுத்தியே நளன், நீலன் உதவியுடன் அனுமானும் மற்றவர்களும் பாலம் கட்டி முடித்தனர்.

இதற்கு முன்னமே சீதையை கண்டிராத அனுமன் இலங்கையில் பார்க்கும் பெண்களை எல்லாம் அழகுடன் தெரிய எப்படி அடையாளம் கணப்போகின்றோம் என திகைத்தார். கயவனால் கடத்திச் செல்லப்பட்ட ஸ்ரீராமபிரானின் பத்தினியை அரண்மணையிலோ அந்தப் புரத்திலோ வைத்திருக்க மாட்டார். எங்காவது ஒரு தனி இடத்தில்தான் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்று தேடி அசோக வனத்தில் கண்டார். சீதா பிராட்டியரிடம் பெற்ற ஜடைவில்லையைக் கொண்டு வந்தார். மற்ற திசைகளுக்குத் தேடச் சென்ற அனைவரும் எங்கேயும் அன்னை இல்லை என்ற செய்தியுடன் வந்து விட்டனர். இலங்கை சென்ற அனுமன் என்ன தகவல் கொண்டு வருவாரோ என தவித்திருந்த இராமரைக் கண்டதும் முதலில் சீதையை என்று ஆரம்பித்தால் என்னவோ ஏதோ என்று நினைக்கக் கூடும். ஆதலால் வந்ததும் ராமரை வணங்கி ‘கண்டேன் சீதையை’ என்றார்,

கல்யாணபிரம்ச்சாரி அனுமன்!-

அனுமன் பிரமச்சாரி என்பது அனைவருக்கும் தெரியும் அது என்ன கல்யாண பிரமச்சாரி! சஞ்சீவி மலையை வேகமாகக் கொண்டு வரும்போது அந்த வேகத்தால் உடலில் வெப்பம் அதிகரிக்க அந்த வெப்பத்தை தணிக்க அவரின் தந்தை வாயு தென்றலாக அனுமன் உடலைத் தீண்ட வெம்மையில் குளுமை பரவியதும் வியர்வை துளிர்க்க அப்போது அனுமன் கடல்மீது பறந்து கொண்டிருந்ததால் அந்த வியர்வைத் துளிகள் கடலில் சிந்தியது. சமுத்திரத்தில் மீன் உருவில் விளையாடிக்கொண்டிருந்த தேவகன்னி சுவர்ச்ச்சலை அதை விழுங்க அது அவள் வயிற்றில் ஒரு கருவாக மாறியது.

மச்சமாக இருந்தபோது தோன்றியதால் மச்ச குமரன் என அழைக்கப்பட்டு வீரனாகி தன் தாயின் மீன் வடிவினை தனது கொடியில் (த்வஜம்) கொண்டதால் மகரத்வஜன் என்று பெயர் பெற்றான். இராவணின் உறவினனான மயில் ராவணிடம் கோட்டை தலமைக் காவலானகப் பணிபுரிந்து வந்தான். யுத்தம் நடந்த சமயத்தில் மாருதியின் காவலில் இருந்த ராம், லட்சுமணனை மயில் ராவணன் வீபீடனாக வந்து கவர்ந்து சென்று கோட்டையில் அடைத்தான். அவர்களை மீட்கச் சென்ற அனுமன் மகரத்வஜனுடன் போர் புரிந்தான். போர் தொடர்ந்து நடைபெற சிறிது நிறுத்திவிட்டு அவனைப் பற்றி விசாரித்ததில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதால் மகரத்வஜன் மயில்ராவணன் உயிர் இருக்குமிடமான ஐந்து வண்டுகளைப்பற்றி சொல்ல அந்த ஐந்து வண்டுகளையும் தன் ஐமுகவாயில் போட்டு அனுமன் கடிக்க மயில்ராவணன் இறந்தான். ராம, லசுமணனை அனுமன் மீட்டு வந்தார். இதனால்தான் அனுமன் கல்யாண பிரமச்சாரி எனப்பட்டார்.

சனியின் தொல்லையில்லை!

ராம இராவணான் யுத்தத்தில் வானரப் படைகள் மயங்கிச்சாய, ஜாம்பவானின் ஆலோசனிப்படி சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர அனுமனை அனுப்பினர். அவசரத்தில் சரியான மூலிகையை கண்டு பிடிக்க முடியாத அனுமன் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தான். அவன் முயற்சியை தடுக்க தன் கட்டுப்பாட்டில் உள்ள கிரகம் சனீஸ்வரன் இராவனண் ஏவினான். தன்னைத் தடுத்த சனீஸ்வரனை ஆஞ்சநேயர் காலில் போட்டு மிதிக்க அவரின் பலம் தாங்காமல் சனி அலறி விடுபட வழிதெறியாமல் முழித்து கடையில் இராம நாமம்கூற அதைக்கேட்ட அனுமன் இனி ராமநாமம் சொல்லும் என் பக்தர் எவருக்கும் உன்னால் தீங்கு நேரக்கூடாது என உறுதி மொழி பெற்று சனியை விடுவித்தார். அது முதல் சனிபகவான் அனுமன் பக்தர்களைத் தொந்தரவு செய்வதில்லை.

 அனுமனை சோதித்த ஈசன்!

சிவபக்தன் இராவணனை கொன்ற தோஷம் ராமரைப் பற்ற அங்குவந்த அகத்தியரிடம் இத்துன்பம் நீங்க வழிகேட்க இரண்டரை நாழிகைக்குள் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்றார். லிங்கம் கொண்டுவர அனுமன் கைலாயம் விரைய அவரைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் சூரியனை அனுப்ப சூரியனின் வெப்பத்தால் தகித்த அனுமன் சூரியனை விழுங்க முயற்சித்தார். இந்த முயற்சியை கைவிட்டு விடு என்று சொன்ன ராகு பகவானுடன் போர் புரிய, போரில் தோற்ற ராகு ‘உன்னை வழிபடுபவர்களை ஒருபோதும் துன்புறுத்தமாட்டேன், என் தோஷம் அவர்களைவிட்டு நீங்கும் என்று வரம் அளித்தார்.

பின் கைலாயம் சென்று லிங்கத்தை எடுத்துக் கொண்டு வரும்போது சனிபகவான் உன்னை நான் பீடிக்கப் போகின்றேன் அந்த லிங்கத்தை என்னிடம் கொடு என்று அனுமனின் வாலைப் பிடித்து இழுத்தார். சினம் கொண்ட அனுமன் தன் வாலால் சனியை சுற்றி கீழெ தள்ள பூமியில் விழுந்த சனி உன் வால் அறுந்து போகட்டும் என சாபம் கொடுதார். சிவபெருமான் என்பக்தனான அனுமனின் செயலுக்கு தேவையில்லாமல் இடையூறு தந்த நீ உன் பதவியை இழப்பாய் என்றார். சாபவிமோசனம் கேட்ட சனிக்கு திருக்குரங்குக்கா சென்று வழிபட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரிவாய் என்றார்.

அந்தணர் வேடத்தில் வந்த காலபைரவர் இதைவிட சக்தி வாய்ந்த லிங்கம் சுருட்டப்பள்ளியில் உள்ளது என்றதும் கையிலிருந்த லிங்கத்தை அவரிடம் கொடுத்துவிட்டு சுருட்டப்பள்ளி சென்று லிங்கத்தை பெயர்தெடுக்க முயன்றார். முடியவில்லை. நேரம் கழியவே அந்தணரிடம் கொடுத்த லிங்கத்தையாவது திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று சென்றபோது அந்தணர் அங்கு இல்லை. தான் அவரிடம் கொடுத்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தது கண்டு வருத்தப்பட்டார். உடனே காசிக்கு சென்று லிங்கம் எடுத்துவரச் சென்றார்.

சேதுக்கரையில் இறைவனை நினைத்து சீதை மணற் லிங்கம் செய்ய அனுமன் வர காலதாமதம் ஆனதால் ராமர் சீதை செய்த லிங்கத்தை வைத்து வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டார்.

காசியிலிருந்து லிங்கத்தை எடுத்து வரும் போது காசியின் காவல் தெய்வமான பைரவர் என்னுடைய எல்லைப் பகுதியிலிருந்து நீ லிங்கத்தை என் அனுமதியின்று எடுத்துச் செல்லக்கூடாது என தடுக்க இருவருக்கும் போர் மூண்டது. காலபைரவர் தோற்க லிங்கத்தை எடுத்துக் கொண்டு சேதுக் கரைக்கு விரைந்த அனுமனிடம் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் சீதை செய்த மணல் லிங்கத்தை வைத்து வழிபட்டு ராமரின் தோஷம் நீங்கியது என்றார். மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் இத்தனை கஷ்டப்பட்டு கொண்டு வந்த லிங்கம் உபயோகமில்லயே என அனுமன் முகம் வாடியது.

அனுமனிடம் நீ கொண்டுவந்த லிங்கத்தையும் இங்கு பிரதிஷ்டை செய்து வழிபடுவோம் என்றார். ராமர். சீதை செய்த மணல் லிங்கத்தை தன் ஊரான சித்திரக்கூடத்திற்கு எடுத்துச் சென்று வழிபட்டால் தன் பாவம் தீரும் என்று நினைத்த அனுமன் மணல் லிங்கத்தை தன் வாலல் கட்டி இழுக்க முயற்சித்தார். எவ்வளவு முயற்சித்தும் முடிய வில்லை. சனியின் சாபப்படி வால் அறுந்தது. நீ செய்த அபச்சாரத்தால் உன் வால் அறுந்தது. அது தீர நீ தல யாத்திரை செல் என்றார் ராமர்.

யாத்திரையின்போது பழவாறு என்ற கணபதி நதிக்கரையோரம் மரத்தின் கீழ் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். இங்கேயே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடு மேலும் இத் தலம் உன் பெயரால் விளங்கும் என அசரீரி ஒலித்தது. அப்போது பார்வதி வயதான பெண் உருவெடுத்து அந்த நதியோரம் லிங்கம் வைத்து பூஜை செய்தார். அங்கு வந்த அனுமன் அவரை வணங்கி தன் சாபத்தை சொல்ல பார்வதி பூஜித்த அந்த லிங்கத்தை அனுமனுக்கு கொடுத்துவிட்டு நீ பூஜை செய் என்றார். அனுமனை சோதிக்க எண்ணிய பெருமான் அந்தனர் வேடம் கொண்டு அனுமனிடம் யாசகம் கேட்டார். தன்னிடம் கொடுப்பதற்கு ஏதுமில்லை என்ற அனுமனிடம் உன் இரு காதிலும் உள்ள குண்டலங்களை கொடு என்றார். அதிர்ந்த போன அனுமன் யார் கண்களுக்கும் தெரியாத அந்த குண்டலங்கள் அந்தணருக்கு தெரிகின்றது என்றால் வந்திருப்பது ஈசன் என்றுணர்ந்து வணங்கி தன் இரு குண்டலங்களையும் அறுத்துக் கொடுத்தார்.

மகிழ்வுற்ற ஈசன் சிவசக்தி சமேதராய் காட்சி கொடுத்து அனுமனின் சாபம் தீரவும் வால் பழையபடி வளரவும் இழந்தசக்தி திரும்ப கிடைக்கவும் அருள் புரிந்தார். சிவபெருமான் அனுமனின் காதிலுள்ள குண்டலங்களைப் பெற்றதால் இறைவன்: குந்தளேஸ்வரர்(சு), குண்டலகர்ணேஸ்வரர். இறைவி: குந்தளாம்பிகை. குந்தள நாயகி, ஏலாசௌந்தரி அம்மன் சிவபக்த ஆஞ்சநேய பீடம். சனி, ராகு கிரக தோஷம், பில்லி, சூன்யம் பாதிப்புகள் நீங்கும் தலம். திருகுரக்குக்கா.தி.த-82+அ-39. திருக்குரக்காவல். அனுமன் வழிபட்டது. குரங்கு இனமான ஆஞ்சநேயர் காவல் புரிந்ததால் குரங்குக்கா என்று அழைக்கப்பட்டு திருக்குரக்கா என்று அழைக்கப்படுகின்றது. திருவோண நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயரால் லிங்கம் பிரதிஷ்டை- திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபடுதல் சிறப்பு. அமாவாசையன்று அம்பாளுக்கு ஓமம். அப்பர் -பாடல் பெற்ற தலம்.

அனுமனின் வருத்தம்! எல்லாவற்றிலும் இறைவனின் சந்நித்யம்! ஆன்மீகன் ஆனந்தம்!

ஒரு தீவிர பக்தரின் கனவில் ஆஞ்சநேயர் தரிசனம் தந்தார். பக்தன், அவருடன் தான் தாயம் விளையாட விருப்பம் தெரிவித்தார். நான் விளையாட்டில் விட்டு கொடுக்க மாட்டேன், நீ வருத்தமடையக் கூடாது என்று அனுமான் ஒரு நிபந்தனையைச் சொன்னார். சம்மதத்துடன் இருவரும் விளையாட ஆரம்பித்தனர். ஒவ்வொருமுறையும் ‘ஜெய் அனுமான்’, அல்லது ‘ஜெய் ஆஞ்சநேயா’ எனக்கூறி காய்களை உருட்டினார் பக்தர். ஆஞ்சநேயர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உருட்டினார். பலமுறை விளையாடியும் பக்தனே வெற்றி பெற்றான்.

தோல்வியுற்றால் வருத்தப்படக்கூடது எனக்கூறிய ஆஞ்சநேயர் வருத்தமுற்றார். ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்தும் எனக்குத் தோல்வியா! என ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீராமர் அவர்முன் தோன்றி, ஆஞ்சநேயா.. நீ என் பக்தன்.. எனவே என் சக்தி உன்னிடம் இனைந்துள்ளது. அவன் உன் பக்தன்.. உன் சக்தி அவனிடம் இனைந்துள்ளது. ஆனால் நான் உன்னுள் இருப்பதால் உன்சக்தி இனையுமிடத்தில் என்சக்தியும் சேர்ந்துவிடும். நம் இருவரது சக்தி சேர்ந்திருப்பதுவே அவனது தொடர் வெற்றிக்கு காரணம் என்றார். ஆன்மாக்களே எண்ண அதிர்வுகளால் ஒருவரின் மனதை நீங்கள் கவர்ந்து விட்டால் அவரிடமுள்ள அனைத்து சக்திகளும் உங்களுக்கு உதவும்.

பாலில் தயிர் இருப்பது கண்ணுக்குத் தெரியாத உண்மை. அதே தயிரில் வெண்ணெய்யும், வெண்ணெய்யில் நெய்யும் இருப்பதும் கண்ணுக்குப் புலப்படாத உண்மைகள். ஆனால் அவைகள் ஒன்றினுள் இருப்பது நமக்குத் தெரியும். தெரிந்த ஒன்றினுள் தெரியாத ஒன்று இருக்கிறது என்பதை நாம் புரிந்து வைத்துள்ளோம். பாலில் ஒன்றிற்குள் ஒன்று இருப்பதைப்போலவே எல்லாவற்றினுள்ளும் இறைவன் இருக்கின்றான்.

காற்று மூங்கிலில் மோதும்போது இசை தோன்றுவதில்லை. அதே மூங்கிலில் துவாரம் ஏற்படுத்தி புல்லாங்குழல் ஆனபிறகு அதனூடே செல்லும் காற்று இனிமையான ஓசையை தருகின்றது. அதைப்போன்றே ஆகமமுறைப்படி கட்டப்பட்டுள்ள கோவில்களில் இறைவனின் சந்நித்யம் நிறைந்து அருள் அதிர்வலைகள் இயங்கிக் கொண்டிருப்பதால் கோவில்களுக்குச் செல்லும் ஆன்மீகன் ஆனந்தம் அடைகின்றான்.

சனி-இராகு தோஷம்!

எல்லோரையும் கலங்கச் செய்யும் சனியை கலங்கச் செய்தவர் ஆஞ்சநேயர்.. இதனால் சனி தோசத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டு பலன் அடைகின்றனர். ராகு-கேது விற்குப் பிடித்த உளுந்தும் சனிக்குப் பிடித்த எள் எண்ணெய்யாலும் தயாரித்த வடைமாலையை ஸ்ரீஆஞ்சநேயருக்குச் சார்த்தி வழிபட்டால் சனிராகு இடையூரிலிருந்து உயிர்கள் விடுபடுவார்கள்.

வடைமாலை அலங்கார தரிசன பலன் –சனி, ராகு கிரக தோஷங்கள் விலகும் பிணிகள் நீங்கும். வடைமாலை சார்த்தி வழிபடும்போது சொல்லவேண்டிய துதி-

அஞ்சனை மைந்தா போற்றி! அஞ்சினை வென்றாய் போற்றி!
வெஞ்சினக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி!
மஞ்சன மேனிராமன் மலர்ப்பாதம் மறவாய் போற்றி!
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் போற்றி!

வெண்ணெய் காப்பு!

இராம இராவண யுத்தத்தில் அனுமனுக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அதைக் கண்ட சீதா அவருக்கு வெண்ணெய் தந்து அந்த காயத்தின்மேல் தடவச் சொல்ல அனுமனுக்கு காயங்கள் குளிர்ந்து ஆறுதல் அடைந்தார். அதனால் வெண்ணெய் தடவுவது அவருக்கு குளிச்சியை ஏற்படுத்தும் என்பதால் வெண்ணெய் காப்பு செய்து பக்தர்கள் நீண்ட ஆரோக்கியத்திற்கு பிரார்த்தனை.

வெண்ணெய் காப்பு- அலங்கார தரிசன பலன்- நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும். முயற்சிகளில் வெற்ரி கிட்டும். வெண்ணெய் காப்பு- சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிருத மஸ்த காஞ்சலிம்
பாஷ்ப வாரிம் பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷா ஸாந்தகம்


வெற்றி இலை!

அசோக வனத்தில் இருந்தபோது சீதையை இராம நாமத்தால் குளிரவைத்தார் அனுமன். மேலும் இராமரது கணையாழியைக் கொடுத்து வணங்கினான் அனுமன் அப்போது மகிழ்வுற்ற சீதை அருகிலிருந்த இலையைப் பறித்து அனுமன் தலையில் போட்டு எப்போதும் உனக்கு வெற்றி கிட்டட்டும் என ஆசீர்வாதித்தாள். அந்த வெற்றி இலையே காலப் போக்கில் வெற்றிலை என்றானது. அதனால் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபடுவது பழக்கமானது.

வெற்றிலை மாலை - அலங்கார தரிசன பலன்- சகல சௌபாக்கியமும் கிடைக்கும். வெற்றிலை மாலை காப்பு- சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

அன்னை கை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து
இன்னெடும் கடலை நீயும் எங்ஙனம் கடந்தாய். என்ன
உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று
மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி!

முத்தங்கி சேவை - அலங்கார தரிசன பலன்- ராஜயோகம் கிடைக்கும். முத்தங்கி சேவை - சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம் தவகிம் வத
ராம தூத க்ருபாஸிந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ!

சந்தனக் காப்பு - அலங்கார தரிசன பலன்- செல்வ வளர்ச்சி உண்டாகும். துன்பங்கள் நீங்கும். சந்தனக் காப்பு - சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

ஓம் புத்திர்பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக் படுத்வம் ச
ஹநூமத் ஸ்மரணாத் பலேத்!

மஞ்சள் பட்டு வஸ்திரம் - அலங்கார தரிசன பலன்- சுக்கிர தோஷம் விலகும். பார்வை நலம் கிட்டும். மஞ்சள் பட்டு வஸ்திரம்- சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

அஞ்சனை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமதூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமோ!

எழுமிச்சைமாலை!

ஆண் தெய்வங்களுக்கு எழுமிச்சைமாலை சர்த்துவதில்லை. ஆனால் அனுமன் சக்தியின் அம்சம் ஆதலால் அவருக்கு எழுமிச்சை மாலை சார்த்தி வழிபட்டால் பில்லி சூன்யம், திருஷ்டி தோஷங்கள் விலகும்

பூ / துளசி மாலை:

ஆரோக்கியம் பெருகும். நியாயமான சகல காரியங்களும் வெற்றி. சர்வ சம்பத்து சேரும். வாழ்க்கை வசந்தமாகும்.

செந்தூர ஆஞ்சநேயர்!

சீதா தேவி தன் நெற்றியிலும் வகிட்டிலும் செந்தூரம் இடுவதைப் பார்த்த அனுமன் அதன் காரணம் கேட்க, நெற்றியில் வைப்பது சுமங்கலி அடையாளம், வகிட்டில் வைப்பது லட்சுமி சீனிவாசன் மார்பில் வாசம் செய்வதுபோல் எப்போது தானும் ராமரின் இதயத்தில் வசம் செய்ய என்பதைக் கேட்ட அனுமனுக்கு தானும் அப்படி செந்தூரம் இட்டால் ராமனை பிரியாமலிக்கலாம் என்ற நினைவில் நெற்றில் வைக்க தனக்கு அது அழகாயில்லை என்று முகம் முழுவதும் பூச, அதுவும் திருப்தி தராததால் உடல் முழுவதும் பூசிக் கொண்டார். இதன் காரணமாகத்தான் அனுமனுக்கு செந்தூரம் சாத்துகின்றோம். செந்தூரம் அணிந்த ஆஞ்சநேயர் சகல நன்மைகளையும் தருவார்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்! 

இராம இராவணப் போரில் இராவணன் அழிந்தனால் கோபம் கொண்ட சதகண்டன் என்ற அசுரன் தன்னுடன் போரிட இராமரை அழைக்க அசுரனுடன் அனுமனின் தோளில் அமர்ந்து போரிட்டார். அப்போது மாயாவியான அசுரனிடம் போர் புரிய தனக்கு அனுமதி கேட்ட அனுமன் தன் பலத்தால் அனுமன், நரசிங்கம், கருடன், பன்றி, குதிரை ஆகிய ஐந்து முகங்களை கொண்ட உடலுடன் சதுகண்டனிடம் போரிட்டு அவனை வீழ்த்தினார். அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுபவர் பஞ்சமுக ஆஞ்சநேயர்.

அனுமன் முகம் கிழக்கில்-பகை அழியும், கருடன் முகம் மேற்கில்- எப்போதும் எதிலும் வெற்றி. வராஹர் முகம் வடக்கில்-ஊழ்வினை நோய், விஷ நோய் போக்கும், நரசிம்ம முகம் தெற்கில்-தீராத கடன், பொருள் இழப்பு நீக்கி மனதில் நிம்மதி சாந்தி நிலவும். ஹயக்ரீவர் முகம் மேல்நோக்கி- பில்லி சூன்யம், துஷ்ட தேவதைகள் கெடுதல்கள் நீக்கும், ஆகிய ஐந்து முகங்களுடன் அருள் பாலிக்கின்றார்.

பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோவில்களில் தனி சன்னதியிலும் சிவன் கோவில்களில் தூணிலும் அருள் பாலிப்பது வழக்கம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் இடம் பெறும். இவரது சன்னதியில் துளசி பிரதான பிரசாதம்.

ஆஞ்சநேயரை வழிபட்டால், நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை, தளர்ச்சியின்மை, வாக்குச்சாதுர்யம் முதலிய நன்மைகள் கிட்டும். நவகிரக தோஷங்கள் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் நலம் பெறுவர்.

#####

வெள்ளிக்கிழமை, 20 July 2018 18:37

கருடாழ்வார்!

Written by

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

####

பெரியதிருவடி! கருடாழ்வார்!

கருடன் எப்படி வாகனமானது!

விநதையும் கத்ருவும் சகோதரிகள். காஸ்யப முனிவரின் மனைவியான விநதை காஸ்யபரிடம் வரம் கேட்க சக்திவாய்ந்த அருணன், கருடனும் பிறந்தனர். கருவில் குறைபாடு ஏற்பட்டதால் ஊனமான அருணன் அதற்கு தன் தாயே காரணம் என நினைத்து பல ஆண்டு காலம் கத்ருவின் அடிமையாக இருக்க தாய்க்குச் சாபமிட்டு இரண்டாவது முழுமையான கருவினால் இந்த சாபம் நீங்கும் என விமோசனம் அளித்தான். அருணன் தவமிருந்து சூரியனின் தேரோட்டியானான் இன்னொரு மனைவி கத்ரு காஸ்யபரிடம் வரம் பெற்று ஆயிரம் பாம்புகளைப் பெற்றாள்.

சகோதரிகள் இருவரும் உலா வரும்போது உச்சைச்வரசுவைப் பார்த்த இரு சகோதரிகள் அதன் வாலின் நிறம் வெண்மையா, கருப்பா என நடந்த போட்டியில் வெற்றிபெற கத்ரு தன் பாம்புக் குழந்தைகளை அழைத்து குதிரையின் வாலில் சுற்றிக்கொள்ள சொல்ல அது சரியில்லை, பாம்புகளின் தர்மம் அதுவல்ல என சில பாம்புகள் மறுக்க அவைகளை பாண்டுவின் வம்சத்தில் ஒருவன் செய்யும் சர்ப்ப யாகத்தில் அழியும்படி சபித்தாள்.

தாயின் சாபத்தினால் கலக்கமுற்ற மற்ற பாம்புகள் பிரம்மாவின் ஆலோசனைப்படி அவர்களது சகோதரியை ஜரத்காரு என்பவருக்கு மணமுடிக்க அவருக்குப் பிறந்த ஆஸ்திக மகரிஷி ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தை பாதியில் நிறுத்தினதால் மீதி பாம்புகள் தப்பின.

விநதைக்கு மகன் அருணனின் சாபம் இருந்ததால் பந்தயத்தில் தோற்று கத்ருவுக்கு அடிமையானாள். விநதைக்கு கருடன் பிறந்ததும் அவனுக்கு பாம்புகள் உணவாகும் என பிரம்மா வரம் அளித்தார். பாம்புகளின் மீது பகைகொண்டு கொன்று புசித்த கருடனிடம் தலைமை பாம்பான வாசுகி நியாயம் கேட்க தொடர்ச்சியாக கொல்லவில்லை, ஆனால் தினமும் ஒரு பாம்பு தனக்கு இறையாக வர ஒப்புக்கொண்டான் கருடன். அதன்படி தினமும் ஒவ்வொன்றாக பாம்புகள் கருடன் குறிப்பிட்ட பாறைமீது சென்று கருடனுக்கு இறையாகின.

அப்பகுதியை ஆண்ட மன்னன் ஜீமூதவாகனன் பதேர்வாவுக்கு வந்து வாசுகியுடன் நண்பரானார். ஜீமூதவாகனன் செல்வம் துறந்து காட்டிற்குச் சென்றபோது நாக கன்னிகையின் அழுகுரல் கேட்டு அவளை விசாரிக்க ஒவ்வொரு நாளும் பட்சி ராஜாவுக்கு ஒரு பாம்பு இறையாக கட்டளை உள்ளது. அதன்படி இன்று என் மகன் சங்க சூடன் முறை என்பதால் துயரம் தாங்க முடியவில்லை என்றதைக் கேட்ட ஜீமூதவாகனன் அந்த பாம்பிற்குப் பதிலாக தானே சென்று பாறை மீது படுக்க, மன்னனின் தியாக உணர்வைப் பாராட்டி கருடன் அன்றிலிருந்து பாம்புகளை கொல்வதை கைவிடுவதாகக்கூறி இதுவரை தனக்கு இறையான பாம்புகளின் எழும்புக் கூட்டிலிருந்து அந்த பாம்புகளை உயிர்ப்பித்துக் கொடுத்தான். எனவே பாம்புகள் தொடர்ந்து அழிக்கப்படுவதை தடுத்த வாசுகி மற்றும் ஜீமூதவாகனன் இருவரும் இங்கு கருவரையில் மூலவர்களாக அருள். மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படும் வாசுகி கையில் சங்கு சக்கரத்துடன் காட்சி. பனிக்காலத்தில் மூடப்பட்டு பைசாகியன்று (தமிழ் புத்தாண்டு) திறக்கப்படும். பதேர்வா வாசுகிநாக் ஆலயம். காஷ்மீர்மாநிலம்-தோடா மாவட்டம்-தோடாவிலிருந்து33கி.மீ.

நாகபஞ்சமிக்கு அடுத்துவரும் ஆடிமாத வளர்பிறை பஞ்சமியை கருட பஞ்சமியாக கொண்டாப்படுகின்றது. பெரிய திருவடி எனப்படும் கருடன் அவதரித்த சுவாதி நடசத்திரம் பஞ்சமி திதியே கருடபஞ்சமி. ஆடி மாதத்தில் நாகருக்கும் கருடனுக்கும் பூஜை செய்து நல்ல பலன்கள் பலவும், நீண்ட ஆயுளையும் செல்வ செழிப்பையும் பெற்று நல்வாழ்வு வாழ்க!-குருஸ்ரீ பகோரா

கருடன் தன் தாயின் அடிமைத்தளை போக்க இந்திரலோகம் சென்று இந்திரனை வென்று அமிர்தம் கொண்டுவரும்போது அவனின் செயல் சரியில்லை என விஷ்ணுகூற இருவருக்கும் இருபத்தியோறு நாட்கள் போர். இறுதியில் பெருமாள் அவனிடம் நாகங்களுக்கு அமிர்தம் கொடுப்பது தர்மமாகாது. அதற்குப் பதிலாக என்ன வரம் வேண்டும் என்று கேட்க, நீ யார் எனக்கு வரம் தருவது, உங்களுக்கு நான் வரம் தருகிறேன், என் தாய் மீது சத்யம், கேளுங்கள்! என கருடன் அகங்காரத்துடன் சொல்ல, நீ எனக்கு வாகனமாக பணிபுரியும் வரத்தை தா என பெருமாள் கேட்டார். இதனால் கருடனின் கர்வம் அழிந்து விஷ்ணுவை வணங்கி வாகனமானான். விநதையின் மகனானதால் கருடனுக்கு வைநதேயன் என்ற பெயர் ஏற்பட்டது.

தன் வாகனமாகிய கருடனுக்கு அருள்புரிய நினைத்த விஷ்ணு அவனை கலசகுடத்துடன் அனுப்பிவைத்தார். கருடன் கலசத்தை தர்ப்ப புல்லின்மேல் வைக்க, வாயுவிற்கு விஷ்ணு சைகை செய்ய அவர் தன் அசைவால் கலசத்தை தட்டிவிட அமிர்தம் கீழே சிந்தி கற்பூரமாய் கரைந்தது. அப்போது அங்கிருந்த பாம்புகள் அந்த தர்ப்பையை நக்க அவைகளின் நாக்குகள் பிளவு அடைந்தன. பாம்புகளின் நாக்குகள் பிளவுபட்டிருக்க இதுவே காரணம் என்கிறது புராணம். விநதையின் மகனானதால் வைநேயன் என கருடன் அழைக்கப்பட்டார்.

ஸ்ரீவைகுண்டத்தில் பெருமாளுக்கு இடையறாது தொண்டு செய்பவர்கள் நித்திய சூரிகள் எனப்படுவர். அவர்களுள் முக்கியமானவர் கருத்மான் –பெரிய திருவடி- கருடாழ்வார் என அழைக்கப்படும் கருடனே! பறவைகளில் இவர் இராஜாவாக கருதப்படுவதால் பட்சிராஜன் எனப்படுபவர். எந்த ஒரு நற்செயலைச் செய்யத் தொடங்கும்போது கருட சகுனம் கிடைப்பது உயர்வாகச் சொல்லப்பட்டுள்ளது. கருடப் பத்து என்ற செய்யுட்கோவையை ஜபம் செய்தால் விஷ சந்துக்களால் நேரக்கூடிய அபாயம் விலகும்.

பெரியாழ்வார் கருடபகவான் அம்சமாகத் இதே சுவாதி நட்சத்திரத்தில் தோன்றியவர். அவரது மகளே ஆண்டாள். பெரியாழ்வார் மாமனார் ஸ்தானத்தில் அமைந்ததால் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்கமன்னார்- ஆண்டாளுடன் கருடபகவானும் ஒரே ஆசனத்தில் இந்த அமைப்பு சிறப்பு இங்கு மட்டும்தான்.


#####

வெள்ளிக்கிழமை, 20 July 2018 09:19

பிரம்மன்-சரஸ்வதி!

Written by

ஓம்நமசிவய!

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

####

பிரம்மன்-சரஸ்வதி!

பிரம்மன்!

இறைவனின் உயிர்களின் படைப்புக்குமுன் பிரபஞ்சம் பெயர் உருவமில்லாமல் சுத்த அண்டைவெளியாய், நிர்க்குணமாய், சின் மாத்திரப் பரப்பிரம்மாய் இருந்துள்ளது. அந்த பரப்பிரமத்திலிருந்து பிரமையினால் கானல்நீர் போன்று மூலப்பிரகிருதி என்ற மாயை வெண்மை, சிகப்பு, கருப்பு எனும் மூன்றுவித நிறங்களோடு மூன்று சக்திகளாய் தோன்றியது. ‘பிர’ என்றால் மிகச்சிறந்தது என்றும் ‘கிருதி’ என்றால் மிகச் சிறந்த உற்பத்தி என்றும் பொருள். பிரகிருதி தனிப்பட்டது இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இது பரப்பிரமத்துடன் இணைந்திருப்பது. பிரகிருதியின்றி பரப்பிரம்மம் இல்லை. அந்த மூன்று சக்திகளில் வெண்மை நிறம் மாயா (மாயை) சக்தியாகவும், சிகப்பு நிறம் அவித்யா (அறியாமை அஞ்ஞானம்) சக்தியாகவும் கறுப்பு (கருமை) நிறம் ஆவரண விஷேச சக்தி (முனைப்பு/அகங்காரம்) என்றும் ஆகியது.

மாயா சக்தி எப்போதும் பிரபஞ்சத்தின் மூன்று குணங்களில் (1.ராஜஸம்-எழுச்சி, 2.தாமஸம்-மயல் (மயக்கம்), 3.ஸாத்வீகம்-நன்மை (அமைதி), சத்துவ குணத்தை முதன்மையாகக் கொண்டு விளங்கும். அதில் பரப்பிரம்மம் பிரதிபலிப்பதனால் தோன்றிய பிரதிபிம்பமே ஈசுவரன் ஆகும். ஈசுவரனின் அருட்சக்தியே ஸ்திரி(சக்தி) உருவமாக இயங்குகின்றது. ஈஸ்வரன் அமைதி நிலை (static) சக்தி ஆற்றல் நிலை (dynamic). பிரணவப் பொருளே ஈஸ்வரன் சொரூபம். அது எல்லா விதைகளுக்கும் விதை போன்றது. மிக சூட்சமம் ஆனது. உலகின் எல்லா ரூபங்களிலும் காணப்படுவது. அதுவே பரபிரம்மம் ஆகும். ஏகாட்சரம்- ஆதி மந்திரம் என்றும் சொல்லலாம்.

அப்படித் தோன்றிய ஈஸ்வரன் அந்த மாயையைத் தன்வசப்படுத்திக் கொண்டு பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் வடிவங்களைத் தோற்றுவித்து உலகங்கள் யாவையும் சிருஷ்டி(படைத்தல்), ஸ்திதி(காத்தல்), சம்ஹாரம்(அழித்தல்) என முத்தொழில்களுடன் மறைத்தல், அருளல் என்று இயக்கி உலகை இயக்குகின்றார். இந்த முத்தொழிலுக்கும் உதவி செய்ய அவர்களுக்கு ஈசுவர் தன் சக்தியை மூன்று பெண்வடிவ சக்தியாக்கி சரஸ்வதி, லட்சுமி, உமை என உருவாக்கினார். சிருஷ்டி தொழிலை செய்ய பிரம்மாவிற்கு பிரகிருதி அனைத்தும் ஸ்திரீ உருவமாகி உதவியது.

முதலில் பிரகிருதி சரஸ்வதி ஸ்வரூபம் புருஷனுடன் கூடிட பிரம்மனின் முகத்திலிருந்து காயத்ரீ மந்திரமாகிய இருபத்திநான்கு எழுத்துகள் உண்டாயின. இதன் அடிப்படையிலே மற்ற தெய்வங்களுக்கான மந்திரங்கள் சொல்லப்பட்டு அவைகள் அந்த தெய்வங்களின் காயத்திரி என அழைக்கப்பட்டன.

இந்த உற்பத்தியில் மிகச் சிறப்பானது பெண்கள்தான். மற்ற பெண்கள் எல்லாம் முதலில் உற்பத்தியான பெண்களிலிருந்தேதான் உற்பத்தி செய்யப்பட்டனர். அதனால் மற்றவர்கள் இவர்களின் அம்சத்துடன் கூடியவர்கள். அடிப்படி பிரகிருதியிலிருந்தே தோன்றியதால் பெண்களுக்குத் தீங்கிழைப்பது தாய்மைக்குச் செய்யும் கொடுமைக்குச் நிகரான பாபச் செயல் எனப்படும். பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதை பிரகிருதிக்கு அளிக்கப்படும் மரியாதையாகும்.

உலகில் படைப்புத் தொழிலை ஆரம்பிக்குமுன் பிரம்மன் தன் உடலை இரு கூருகளாக்கி ஆண்- பெண் என்றமைத்தான். ஆண்-ஸ்வாயம்புவ மனு என்றும் பெண் சதரூபா என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர் தன் மனத்தின் மூலம் நாரதர், தட்சன், வசிஷ்டர், பிருகு, கிருது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மாரீசு ஆகிய மகன்களை உருவாக்கி அவர்கள் பிரஜைகளின் உற்பத்திக்கு காரணமாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார். அதனால் அவர்கள் பிரஜாபதிகள் எனப்பட்டனர். சிருஷ்டி வளர்ச்சி பெற்று நவகோடிகள் தோன்றின. உலக விவகாரம் அறிய உதவும் நிலையில் காலப் பிரமாணம் உருவாகியது.

சரஸ்வதி!

முத்தொழிலுக்கும் உதவி செய்ய ஈசுவர் தன் சக்தியை மூன்று பெண்வடிவ சக்தியாக்கி சரஸ்வதி, லட்சுமி, உமை என உருவாக்கினார். சிருஷ்டி தொழிலை செய்ய பிரம்மாவிற்கு பிரகிருதி அனைத்தும் ஸ்திரீ உருவமாகி உதவியது. சரஸ்வதிதான் உலகின் முதல் பெண் தெய்வம். இதனால் வேதங்கள் சரஸ்வதியை ஆதிகாரணி என்கின்றன. புரட்டாசி மாதம் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சரஸ்வதி தோன்றினாள். மூலம்-என்றாள் அடிப்படை- ஆனால் வாழ்க்கைக்கு அடிப்படை கல்வி. கல்விக்கு அதிபதி சரஸ்வதி

சரஸ்வதி தேவியின் முகம்- பிரம்ம வித்யை, கைகள்- நான்கு வேதங்கள், கண்கள்- எண், எழுத்து. மார்பு- இசையும் இலக்கியமும், பாதங்கள்- இதிகாச புராணம், யாழ்- ஓங்காரம் என வேதங்கள் விவரிக்கின்றன. காயத்ரி, சாவித்திரி, தண்டா சிறப்பினள், நாமகள், தூயா, பாமகள். பாமுதவல்லி, பாரதி, பிராமி, பூரவாகினி, வாக்காள்வாணி, வெண்தாமரையாள், கமலவல்லி, கலைவாணி, கலைமகள், கலைக்கொடி, கலைஞானதோகை, கலுங்கன் (பாலித்தீவு), பெண்டன் (ஜப்பான்), யங்சன்ம (திபெத்), ஹம்சவல்லி எனப் பலப் பெயர்களால் ஆராதிக்கப்படுகின்றாள்.

மக்கள் உற்பத்தி செய்யப் பட்டால் அவர்கள் பிழைப்பதற்காக எண்களும், பேசுவதற்கு மொழியும், வழிபடுவதற்கு பூஜை முறைகளும் தேவை என்பதை உணர்ந்த சரஸ்வதி. மக்களின் மன இறுக்கத்தைப் போக்க அறிவாற்றலைப் பெருக்கப் 64 கலைகளைத் தோற்றுவித்தாள்.

வாகீஸ்வரி, சித்தேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினிசரஸ்வதி ஆகிய எட்டு ரூபங்களில் சரஸ்வதி காட்சியளித்துள்ளாள். இந்த ரூபங்களை ஆராதித்தால் கிடைத்த செல்வத்தை பேணிக் காக்க அறிவும் ஞானத்தால் கிடைக்கும் புகழும் மனநிம்மதியும் பெருகும். வாக்கு, புத்தி, வித்தை, ஞானம் (சொல், அறிவுணர்வு, கல்வி, மெய்யாறிவு) ஆகியவற்றின மூலமாக நிலைக்களமாகவும், சகல வித்தைகளின் வடிவமாகவும் விளங்குபவள் சராஸ்வதி.

சிவனைப் போன்றே சரஸ்வதியும் மூன்றாம் பிறையை அணிகின்றாள். சகலகலாவல்லியான அவளே மூன்றாம் பிறை அளவிற்குத்தான் தனக்கு கலைகள் தெரியும் என அடக்கத்துடன் இருப்பதைக் குறிக்கின்றது.

கலை என்றால் வளர்வது என்று அர்த்தம். மாக எனும் மாசிமாத வளர்பிறை பஞ்சமி வசந்த பஞ்சமி- சரஸ்வதி பிறந்த நாள் என்பதால் அன்றும், கலைகளைக் கற்க நன்னாளான விஜயதசமி அன்றும் சரஸ்வதியைத் தொழ வேண்டும். வெள்ளை நிறப் பூக்கள், வெள்ளை ஆடைகள், வெண்சங்கு, சந்தனக் குழம்பு ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். பூஜா என்பதிலிருந்து பிறந்தது பூஜை. பூ என்றால் பூர்த்தி, ஜா என்றால் உண்டாக்குவது. ஞானத்தை உண்டாக்கச் செய்வதே பூஜா என்கிற பூஜை. பொதுவாக தெய்வபூஜைகளில் பூஜை என்ற வார்த்தையைச் சேர்ந்து சொல்வது சரஸ்வதி பூஜை மட்டுமே.

தம்பதியர்கள் ஒற்றுமை!

பிரம்மனும் சரஸ்வதியும் சத்ய லோகத்தில் தன்னால்தான் இந்த சத்ய லோகம் பெருமை படுகிறது என்று ஆரம்பித்து சச்சரவில் முடிந்து இருவரும் ஒருவரை ஒருவர் சபித்தனர். அதன்படி இருவரும் சோழ நாட்டில் புண்னிய கீர்த்தி-சோபனை என்ற அந்தண தம்பதிக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் பிறந்தனர். திருமண வயதில் இருவருக்கும் தாங்கள் யார் என்ற நினைவு வந்தது. சகோதர நிலையில் உள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பெற்றோருக்கு தெரிய வந்து அனைவரும் முடிவெடுத்து சிவனைத் துதிக்க, தம்பதியர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் இது போன்ற குழப்பங்கள் வாழ்வில் ஏற்படும் என்பதை உணர்த்தவே இந்த பிறப்பு உங்களுக்கானது. எனினும் நீங்கள் இருவரும் இப்பிறவியில் திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே சரஸ்வதியாகிய நீ இங்கேயே இருந்து பக்தர்களுக்கு செல்வத்தை வழங்கு என ஆசி அருள்- கூத்தனூர்.

ஏளனம்- நகைப்பு- சாபம்- சரஸ்வதி பூலோகப் பிறப்பு!

விகார உருவம் கொண்ட மகரிஷி மரீசிக்கைப் பார்த்து அங்கு வந்த சரஸ்வதி சிரிக்க அடுத்தடுத்து பிறவியில் கூன் உருவத்துடன் பிறக்க சாபம். ராமாவதாரத்தின் போது கூனிமந்தரை- இங்கு தவம். குப்ஜாசங்கமம்-மத்தியபிரதேசம் அடுத்து கிருஷ்ணாவதாரத்தின் போது சகுனி கண்ணனின் மகிமையால் விமோசனம்.-

சரஸ்வதி நதி!

லக்ஷ்மி, சரஸ்வதி, கங்கை மூவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓர் நிலையில் லக்ஷ்மி அமைதியுடன் இருப்பதைப் பார்த்த சரஸ்வதி, சச்சரவை தீர்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றாய்! நீ துளசி மரமாக ஆவாய் எனச் சாபமிட, கங்கை சரஸ்வதியைப் பார்த்து நீ நதியாக ஆவாய் என்றும் சரஸ்வதி கங்கையைப் பார்த்து நீ நதியாய் ஆவாய் எனவும் சாபம் இட்டனர். அதன்படியே லட்சுமி துளசிச் செடியாகவும், சரஸ்வதி- சரஸ்வதி நதியாகவும், கங்கை- பகீரதி எனும் நதியாகவும் தோற்றமெடுத்தனர். நதி வடிவடைந்து பாபிகளின் பாபங்களை ஏற்றனர்.

ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் சரஸ்வதி தேவியே அதிபதி. அவைகள்
1. ஆடல்,
2. இசைக்கருவி மீட்டல்,
3. ஒப்பனை செய்தல்,
4. சிற்பம் வடித்தல்,
5. பூத்தொடுத்தல்,
6. சூதாடல்.
7. சுரதம் அறிதல்,
8. தேனும் கள்ளும் சேகரித்தல்,
9. நரம்பு மருத்துவம்,
10. சமைத்தல்,
11. கனி உற்பத்தி செய்தல்,
12. கல்லும் பொன்னும் பிளத்தல்,
13. கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்,
14. உலோகங்களில் மூலிகை கலத்தல்,
15. கலவை உலோகம் பிரித்தல்,
16. உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்,
17. உப்பு உண்டாக்குதல்,
18. வாள் எறிதல்,
19. மற்போர் புரிதல்,
20. அம்பு தொடுத்தல்,
21. படை அணி வகுத்தல்,
22. முப்படைகளை முறாஇப்படுத்தல்,
23. தெய்வங்களை மகிழ்வித்தல்,
24. தேரோட்டல்,
25. மட்கலம் செய்தல்,
26. மரக்கலம் செய்தல்,
27. பொற்கலம் செய்தல்,
28. வெள்ளிக்கலம் செய்தல்,
29. ஓவியம் வரைதல்,
30. நிலச் சமன் செய்தல்,
31. காலக் கருவி செய்தல்,
32. ஆடைக்கு நிறமூட்டல்,
33. எந்திரம் இயற்றல்,
34. தோணி கட்டல்,
35. நூல் நூற்றல்,
36. ஆடை நெய்தல்,
37. சாணை பிடித்தல்,
38. பொன்னின் மாற்றி அறிதல்,
39. செயற்கைப் பொன் செய்தல்,
40. பொன்னாபரணம் செய்தல்,
41. பொன் முலாமிடுதல்,
42. தோல பதனிடுதல்,
43. மிருகத் தோல உரித்தல்,
44. பால் கறந்து நெய்யுருக்கல்,
45. தையல்,
46. நீச்சல்,
47. இல்லத் தூய்மையுறுத்தல்,
48. துவைத்தல்,
49. மயிர் களைதல்,
50. எள்ளில் இறைச்சியில் நெய்யெடுத்தல்,
51. உழுதல்,
52. மரம் ஏறுதல்,
53. பணிவிடை செய்தல்,
54. மூங்கில் முடைதல்,
55. பாத்திரம் வார்த்தல்,
56. நீர் கொணர்தல், நீர் தெளித்தல்,
57. இரும்பாயுதம் செய்தல்,
58. மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல்,
59. குழந்தை வளர்ப்பு,
60. தவறிணைத் தண்டித்தல்,
61. பிற மொழி எழுத்தறிவு பெறுதல்,
62. வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்,
63. மேற்கூரிய கலைகளை உள்வாங்கும் விரைவு,
64. வெளிப்படுத்தும் நிதானம்.

சரஸ்வதி பூஜை செய்வது எப்படி!
மாசிமாத சுக்லபக்ஷ பஞ்சமி திதியிலும் வித்தியா ஆரம்ப நாளிலும் முற்பகலில் அன்றாடக் கடமைகளை முடித்துக் கொண்டு தூய்மையுடன் ஆகம விதிப்படி விக்னேஸ்வரரை முதலில் வணங்கவும். கடத்தை ஸ்தாபித்து சரஸ்வதி தேவியை அதில் ஆவாகனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

நவநீதம், தயிர், பால், பொரி, எள், லட்டு, கரும்பு, கரும்பின் சாறு, வெள்ளைப்பாகு, வெல்லம், மது, ஸ்வஸ்திகம், சக்கரை, பிளவுபடாதவெள்ளத் தான்ய அட்சதை அவற்றால் உண்டாக்கிய அவல், வெண்மோதகம், நெய்யும் உப்பும் கலந்த வெண் பொங்கல், நெய் கலந்த தினை கோதுமை சுவஸ்திகம் (ஆசனம்) ஆகியவற்றில் மாம்பழம், வாழைப்பழம், ஆகியவற்றை தோல் உரித்து சேர்த்து பிசைந்து செய்த பலகாரம், பரமான்னம் நெய்கலந்த தூய அன்னம் தேங்காய் இளநீர், வெட்டிவேர், பக்குவ நிலையிலுள்ள வாழைப்பழம், வில்வ பழம், இலந்தைப் பழம் அந்தந்த பருவ காலத்திலுண்டாகும் வெள்ளைப் பழங்கள், வெள்ளைச் சந்தனம், புத்தம் புதிய வெண்ணிற ஆடை, அழகான சங்கு அணிகள், முத்தார ஆபரணம் ஆகியன சரஸ்வதி பூஜைக்குரியனவாகும்.

பின் வெண்மை நிறமுடையவளாயும், புன்னகை, சந்துஷ்டி, புஷ்டியான திருமேனியுடன் இருப்பவளும், தூய்மையான ஆடைகளுடன், வீணை புத்தகம் தரித்தவளும், இரத்தின ஆபராணகளை அணிந்தவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும், முனிவர்களால் போற்றப்பட்டவளுமான சரஸ்வதி தேவியை உளமாற துதிக்கின்றேன் என்று வணங்கி மூல மந்திரத்தால் தியானிக்கவும்.

சரஸவாணி!

தேவலோகத்தில் துர்வாசர் வேதம் சொல்லியபோது உச்சரிப்பில் சிறிது தடுமாறினார். கோபம் கொண்டால் சபித்து விடுவாரென அஞ்சி அனைவரும் அமைதியாயிருக்க கலைவாணி மட்டும் சிரித்துவிட்டாள். பிரம்மாவும் அமைதியாக இருந்தார். சீற்றமடைந்த துர்வாசர் மானிடராய் பிறந்து இருவரும் சிலகாலம் வாழவேண்டும் எனச்சாபமிட்டார்.

ஒருவரின் அறியாமையை எள்ளி நகையாடியது தவறு என வருந்தினாள் சரஸ்வதி. கனிவுடன் சொல்லி சரி செய்வதற்குப் பதிலாக தவறு செய்துவிட்டோமே என்று நினைத்து துர்வாசரிடம் பணிவுடன் சாப விமோசனம் வேண்டினாள். சிவன் ஆதிசங்கராக அவதரிக்கும்போது அவர் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் என்றார். துர்வாசரால் சாபம் பெற்ற பிரம்மாவும் சரஸ்வதியும் மண்டனமிச்ரர், சரஸவாணியாக மாகிஷ்மதி நகரில் பிறந்திருந்தனர். மண்டனமிச்ரரைப்பற்றி குமாரிலபட்டர் சொல்லக் கேள்விப்பட்டு அவரது மீமாம்ச தத்துவத்தை வென்று அத்வைதத்தை ஸ்தாபிக்க சங்கரர் அங்கு வந்தார்.

மண்டனமிச்ரர் வீடு பூட்டியிருந்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி உபதேசித்த ஒரு மந்திரத்தை ஜபிக்க நிமிர்ந்து நிற்கும் பொருட்கள் வளையும் என்ற முறையில் மண்டனமிச்ரர் வீட்டின் தென்னை வளைய அதை பிடித்துக் கொள்ள அம்மரங்கள் மீண்டும் உள்ளே வளைய இல்லத்தின் உள்ளே இறங்கினார் சங்கரர். வியப்புடன் சங்கரைப் பார்த்த மண்டனமிச்ரர் அன்னப்பிச்சை வேண்டுமா எனக்கேட்டதற்கு வாத பிட்சை என்றார். வாதபிட்சை ஆரம்பித்தது. சரஸவாணியின் ஆலோசனைப்படி இருவர் கழுத்திலும் மலர்மாலை சூட்டப்பட்டது. மண்டனமிச்ரர் தோற்றால் துறவறம் பூண வேண்டும். மண்டனமிச்ரர் வென்றால் சங்கரர் துறவறம் துறந்து இல்லறத்தில் ஈடுபடவேண்டும். 21 நாட்களுக்குப் பிறகும் போட்டி தொடர தோல்வியடைந்து விடுவோமோ என்ற நினைப்பில் வந்த உஷ்ணமூச்சால் மண்டனமிச்ரர் கழுத்தில் இருந்தமாலை வாடத் துவங்கியது. சரஸ்வாணி திகைப்படைந்தாள். முழுதும் வாடினால் தன் கணவர் தோற்றவராவர். எனவே குறுக்கிட்டு இல்லற தர்மப்படி எங்கள் இருவரையும் வென்றால்தான் நீங்கள் வென்றதாகும் எனக்கூறி கணவரை எழுப்பி அந்த இடத்தில் தான் அமர்ந்தாள். போட்டி தொடர்ந்தது. வேதம், வேதாந்தம், சாஸ்திரம், சம்பிரதாயம், இதிகாசம், புராணம், கணிதம், ஜோதிடம் எனறு ஆய கலைகள 64- கிலும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் இருபக்கமும் சரியாக வந்தன. 15 நாட்கள் முடிவில்லாமல் போட்டி தொடர சங்கரர் ஞானக்கண்ணால் தன் முன்னே அமர்ந்திருப்பது சரஸ்வதி என்பதை அறிந்தார். நெற்றியில் வியர்வை படர்ந்தது. போட்டியில் சங்கரர் வென்றால் தன் கணவர் துறவறம் ஏற்கவேண்டும் என்பதால் துறவியிடம் கேட்ககூடாத இல்லற இன்பம் என்றால் என்ன என்று கேட்டாள்.

திகைத்த சங்கரர் ஞானதிருஷ்டியால் பதில் சொல்லமுடியும். ஆனால் மக்களுக்கு அவரது துறவு நிலையில் சந்தேகம் வரும். பதில் சொல்லவிடில் வாதத்தில் தோற்றதாக ஆகும். ஒரு ஞான வித்திடம் சந்நியாசியிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டோமே, இது எத்தனை பெரிய பாவம் என நினைத்த சரஸவாணி ஒரு மாதம் தவணை தருகிறேன் அதற்குள் பதிலைத் தெரிந்து கொண்டு வாருங்கள் என்றாள். சங்கரர் சீடர் பத்மபாதர் மற்ற சீடர்களுடன் கானகம் சென்றனர்.

அமருகன் என்ற மன்னனின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து அரண்மனைக்குச் சென்று தன் ஆத்மாவின் தூய்மைக்கு பாதிப்பு இல்லாமல் அரசாண்டார். மதுவும் மங்கையுமாக இருந்த மன்னனிடம் மாற்றம் கண்டவர்கள் அதை வரவேற்றார்கள். அமைச்சர்களுக்கு தங்கள் மன்னன் முன்னைவிட அதி புத்திசாலித்தனமாக செயல் படுவது கண்டு சந்தேகம் வர ஒற்றர்களை அனுப்பி விவரம் சேகரித்து சங்கரர் உடல் இருந்த இடத்தைக் கண்டு உண்மை புரிந்து நாடு நலமுடன் இருக்க மன்னரின் உடலில் சங்கரர் இருப்பது அவசியம் என்று சங்கரரின் உடலுக்கு தீ வைத்தனர். சீடர்கள் அலறியடித்துக் கொண்டு வர, அதே சமயத்தில் மன்னன் உடலிலிருந்து தன் உடலுக்கு கூடுவிட்டு கூடு பாய்ந்தார் சங்கரர். அதற்குள் ஒரு கை தீயினால் வெந்து கருகியது. பத்மபாதர் விருப்பப்படி லஷ்மிநரம்மர் துதிபாட கருகிய கை மீண்டும் ஒளிபெற்றது. 

ஒரு மாதத்திற்குள் சரஸவாணியின் கேள்விக்கு விடை அறிந்து திரும்பிவந்து கூற மண்டனமிச்ரர் நிபந்தனைபடி துறவியாகி சங்கரர் பின் சென்றார். மண்டனமிச்சர்ருக்கு சுரேச்வராசாரியார் என்று திரு நாமத்தை சூட்டினார் சங்கரர்.

கண்ணீர்மல்க கணவருக்கு விடைகொடுத்த சரஸவாணி தான் பிரம்ம லோகம் செல்வதகாச் சொன்னாள். சங்கரர், தாயே நான் பின்னாளில் சிருங்கேரியில் சாரதா மடம் நிறுவும்போது அங்கு நீ சாரதாதேவியாக அருள்பாலிக்க வேண்டினார். சரஸ்வாணி சந்தோஷத்துடன் பிரம்ம லோகம் சென்றாள். 

#####

ஓம்நமசிவய!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
####

குபேரன்சபை- 12 ராசிக்குரியவர்.

குபேரன்!

பிரம்மாவின் பேரன் விஸ்வராவின் முதல் மனைவி, பரத்வாஜ மகரிஷியின் மகள் இத்விதாவின் மகன் வைஸ்ரவணன்- குபேரன். சிறிய வயதில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்.

முற்பிறவியின் காரணமாக விச்ரவஸ் முனிவர் ஒர் அரக்கியை திருமணம் செய்ய வேண்டிவந்தது. அக்காலத்தில் முனிவர்கள் தவம் செய்யும்போது யாராவது வரமாக கேட்டால் கேட்பதை கொடுக்கவேண்டும் என்பது நியதி. அப்படி அவர் தவமிருக்கும்போது கேசகி என்ற அரக்கி தன்னை மணம் புரிந்துகொள்ள வேண்டும் என வரம் பெற்றதனால் இரண்டாவது மனைவி கேசகி என்ற கைகசியிக்கு இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற மகன்களும் கும்பாஷினி-சூர்ப்பனகை என்ற மகளும் பிறந்தனர்.

முனிவர்கள் வம்சத்தில் தந்தையின் மரபினையும் அசுர இனத்தில் தாயின் மரபை பின்பற்றுவது வழக்கமாக இருந்ததால் வைஸ்ரவணன் ரிஷியின் வம்சம் ராவணனும் அவன் உடன் பிறப்புகளும் அசுர வம்சமாகியது. எப்படியிருப்பினும் இலங்கேஸ்வரன் இராவணின் அண்ணன் வைஸ்ரவணன். முறைப்படி வைஸ்ரவணனுக்கு இலங்காபதியாக மகுடம் சூட்டியது இராவணனுக்கு பிடிக்கவில்லை.

தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதிய இராவணன் தவம் செய்து ஈசனை மகிழ்வித்து கிடைத்த வரத்தின் சக்தியால் வைஸ்ரவணனை தோற்கடித்து இலங்கையையும், தேவேந்திரன் வைஸ்ரவணனுக்கு கொடுத்த புஷ்பக விமானத்தையும் கைப்பற்றினான்.

மகாலட்சுமியிடம் சிவன் எல்லா தேவர்களின் நிதிக்குவியல்களையும் அளித்து அதை பரிபாலனம் செய்யுமாறு சொல்ல லட்சுமி எனக்கு நிதி நிர்வாகம் செய்ய ஒருவர் வேண்டும் என வேண்டினாள். நாரதர் ஆலோசனைப்படி வைஸ்ரவணனும் கடுந்தவம் செய்து சிவனை மகிழ்விக்க தேவர்களின் பொக்கிஷத்தை கவனிக்கும் பொக்கிஷதாரனாக்கிய சிவன் வைஸ்ரவணனுக்கு குபேரன் பட்டம் அளித்தார். கு என்றால் குரு, செல்வம், பேரன் என்றால் நிர்வாகம் செய்பவன். குபேரன் செல்வத்தை நிர்வாகம் செய்பவன். சிவன் எதிரில் தோன்றி காட்சியளிக்க வேண்டுவனவும் உண்டோ என ஒன்றும் கேட்காமல் ஆனந்தமான திருமுக மண்டலத்துடன் இருக்க, சிவன் அவரை வடக்கு திசைக்கு அதிபதியாக்கி மலையடிவாரங்களில் வாழும் யட்சர்களின் தலைவனாக்கினார்.

வைஸ்ரவணன் மீண்டும் தவம் செய்து ஈசனே என்னை நெறிப்படுத்த தாங்கள் எப்போதும் என்னோடு இருக்க வேண்டும் என வரம் கேட்டுப் பெற்றதால் குபேரனோடு எப்போதும் சிவசாந்நித்யம் நிறைந்திருக்கின்றது என்பதால் சிவ வழிபாட்டில் குபேரனுக்கும் சேர்த்து ஆரத்தி. எனக்கான பூஜைகளில் ஆரத்தி காட்டும்போது உன்பெயரைச் சொல்லி ஆராதிக்கும் ஆகமத்தை ஏற்படுத்தி, குபேரனை வழிபடுவோருக்கு சந்தான பாக்யமும், தனபாக்யமும் கொடுக்கும் விசேஷ வரத்தை அளித்தார்.

ஓம் ராஜதிராஜாய ப்ரசஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸமே காமான் காம காமாய மஹ்யம்
காமேச்வரோ வைச்ரவணோ ததாது
குபேராய வைச்ரவணாய மஹாராஜாய நம! எனச் சொல்லி ஆரத்தி காட்டுவர்.

அதாவது எல்லாச் செல்வங்களுக்கும் அதிபதியான வைச்ரவணனே விருப்பங்களை நிறைவேற்றி வைக்கக்கூடியவரே, எனது நியாமான கோரிக்கைகளை இறைவனிடம் சொல்லி ஈடேற அருள் செய்ய உம்மை வேண்டி வணங்குகின்றேன் என்பதாகும்.

திருமகள் எப்போதும் குபேரனினின் இருப்பிடத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் அளாகாபுரியில் அளவற்ற செல்வம் நிறைந்து இருக்கின்றது. குபேரனுடன் லட்சுமிகரம் அதாவது லட்சுகடாட்சம் நிறைந்திருப்பதால் அதனைக் குறிப்பிடவே குபேர லட்சுமி படம். எந்த வீட்டில் தீபங்கள் ஏற்றுகின்றார்களோ அந்த சமயத்தில் குபேரன் லட்சுமியை குப்பிடுவான். அதனால் வீட்டில் தினமும் விளக்கு ஏற்றினாலே அங்கே லட்சுமி கடாட்சத்துடன் சிவபக்தன் குபேரன் சதாகாலமும் சிவனை துதிப்பதால் சிவ அருளும் நிறையும்.

யட்சர்கள் மனிதர்கள் போலவே உருவம் கொண்டவர்கள். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோருக்கும் நன்மை செய்ய விரும்புவர்கள். அன்பும் தெய்வ நம்பிக்கையும் கொண்ட இவர்களின் சக்தி அசாத்தியமானது. இவர்கள் மனித குலத்தின் நண்பர்கள். இந்த யட்சர் கூட்டத்தின் தலைவன் குபேரன். குபேரபண்டாரி- பொக்கிஷக்காரன், சிவமித்திரன், வடதிசை ரட்சகன் என்ற பெயர்களும் உண்டு.

ஒரு சிட்டிகை விபூதி ஏன்!

குபேரன் சிறந்த சிவ பக்தன். குபேரன் சிவத்தலங்களுக்கு சென்று பூஜைசெய்து வழிபட்டு வந்தான். ஒருநாள் சிவன் காட்சி கொடுக்க தான் விரும்பும் போதெல்லாம் தரிசிக்க வரம் கேட்க மகிழ்ந்தார் சிவன். யாருக்கும் கிடைக்காத இந்தப் பேறு தனக்கு கிடைத்திருப்பது பற்றிய பெருமிதத்தினால் நாளடைவில் கர்வம் கொண்டான். நாரதரை சந்தித்த குபேரரை அவர் குழப்பிவிட ஒரு பிரயோஜனமும் இல்லாத இந்த வரத்தை தாம் ஏன் கேட்டோம் என நினைத்தான்.

அடுத்தமுறை இறைவனை சந்தித்தபோது அன்று ஏதாவது வரம் வேண்டுமா என்றீர்கள். இந்த உலகத்தில் உள்ள சொத்துக்கள் எல்லாம் எனக்கு வேணும் எனகேட்க அவ்வாறே என சிவன் அருளினார். எல்லா சொத்துமே எனக்குன்னா உங்க சொத்தான பார்வதியும் எனக்குத்தானே சொந்தம் என்ற குதர்க்கத்தைக் கேட்ட பார்வதி ஈன புத்தியுள்ள உன் உடல் ஷீனம் அடைய என்று சாபம் கொடுத்தாள். உருக்குலைந்த குபேரன் பூவுலக சிவத்தலங்களுக் கெல்லாம் சென்று தன்னை மன்னிக்க வேண்டினான்.

பல காலத்திற்குப்பின் இத்தலத்தில் ஈசன் அவனை மன்னித்து ஒரு சிட்டிகை விபூதி அளிக்க அதை அவன் ஓர் சிமிழில் வைத்து பூஜை செய்து வந்தான். உரிய காலம் வந்ததும் உலகத்து செல்வம் எல்லாவற்றிற்கும் அவனே அதிபதி என்றார் எம்பெருமான். ஒரு சிட்டிகை விபூதி உலகத்து சொல்வம் எல்லாம் தரவல்லது என்பதால்தான் கோவிலில் பூஜை முடிந்ததும் ஒரு சிட்டிகை விபூதி பிரசாதம் தரப்படுகின்றது. அதை உபயோகிக்கும் பக்தர்களைப் பொருத்தது அதன் மகிமை.—விழுப்புரம் கைலாசநாதர்.

குபேரனுடைய மனைவி மனோரமா. குபேரனுடைய சேவகர்கள் குஹ்யகர்கள் எனப்படுவர். குபேரனின் அவைக்கு விழல் என்று பெயர். புஷ்பக விமானம் வைத்திருப்பவன். கையிலையின் நடுவில் உள்ள நிதிபதி என்று பெயரைவுடைய குபேரனின் அனகாபுரி-குபேரபுரிக்கு அவர் நண்பரான சிவபெருமான் அடிக்கடி வருவார். குபேரன் தன்னுடைய ரத்தினசபையில் வெண்ணிற ஆசனத்தில் மனைவியுடன் அமர்ந்திருக்க அவனைச் சுற்றி நவநிதி தேவதைகள் இருக்க சங்கநிதியும் பதும நிதியும் குபேரனை வணங்கியபடி நிற்கின்றன.

மீண்டும் குபேரன் அம்பாளை நோக்கி கர்நாளி என்ற இடத்தில் தவமிருந்து இராவணனிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றான். கர்நாளி குபேரன் கோவிலில் குபேரன் படமில்லை. லிங்கமும் பார்வதியின் விக்ரமும் உள்ளது.குஜராத்-பரோடாவிலிருந்து 60 கி.மீ.

செல்வங்களுக்கு அதிபதி குபேரன். அவன் லட்சுமி கடாட்சம் பெற்றவர். அஷ்ட ஐஸ்வர்யத்தையும், பதினாறு வகை செல்வத்தையும் அளிப்பவர். எனவே செல்வம் ஒருவனை அடைய தீபாவளி திருநாளுக்கு அடுத்தநாளன்று லட்சுமி குபேர பூஜை செய்வது நலம். குபேர பூஜை காலத்தில் நவநிதி சேவை எனும் வழிபாட்டினை செய்வது மேலும் சிறப்பு. லட்சுமி குபேர பூஜையுடன் குபேரருக்கு நாணய வழிபாடும் செய்யலாம். பொதுவாக வியாழக்கிழமை மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரை உள்ள நேரம் குபேரகாலம் எனப்படும். அல்லது வெள்ளிக்கிழமையும் செய்யலாம்.

இந்த பூஜை முறைகளை பிரம்மாவிடமிருந்து அவர் மகன் புலஸ்திய மகரிஷிக்கும் பின்னர் அவர் பேரனுக்கு இரகசிய முறையில் கற்றுத்தரப்பட்ட விதிகளை நாரதர் பூவுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இரகசிய பூஜை முறை ‘மூர்த்தி இரகசியம்’ எனப்படும். சிந்தாமணி சிந்தையில் விரும்பியதைத் தரும் குபேரசிந்தாமணி மந்திரம் ஆகும். ஒரு தெய்வத்தின் மூர்த்தி ரகசிய பூஜையினை தெரிந்து வழிபட்டால் அத்தெய்வத்தின் அருளை விரைவில் பெறலாம்.

குபேரபூஜை
ஒன்பது வாரம் தொடர்ந்து அல்லது ஒன்பது மாதங்கள் குறிப்பிட்ட தினத்தில் செய்ய வேண்டிய பூஜை இது. ஆண், பெண் இருபாலரும் செய்யலாம். யார் செய்தாலும் தொடர்ந்து அவரே செய்வது சிறப்பு. தொடர்ந்து செய்கையில் ஏதாவது காரணத்தினால் செய்ய இயலவில்லையென்றால் குடும்பத்தில் உள்ள வேறு ஒருவர் செய்யலாம். எல்லா பூஜைகளிலும் குடும்ப உருப்பினர்கள் கலந்து கொள்வது நலம் பயக்கும். ஒவ்வொரு பூஜைக்கும் ஒரே மதிப்பிலான காசுகள் ஒன்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் எடுத்த மதிப்புள்ள காசுகளையே அடுத்த பூஜைகளுக்கும் பயன் படுத்த வேண்டும் மொத்தமாக சம் மதிப்புள்ள எண்பத்தொரு காசுகள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நவநிதி சேவை- அதிகாலை எழுந்து குளித்து பூஜை அறையை சுத்தம் செய்து லட்சுமி குபேரர் படத்தை வைத்து அதன் முன் குபேரன் கோலம் போடவேண்டும். பூஜை தடையின்றி நடைபெற மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து கணபதியையும் குல தெய்வத்தையும் வழிபடுங்கள். பிறகு நல்ல நேரத்தில் ஒரே அளவுடைய ஒன்பது கலசங்களில் உள்ளே சிறிது ஏலக்காய் பச்சைக் கற்பூரம் போட்டு பாதியளவு தண்ணீர் ஊற்றி நூல் சுற்றி மாவிலை, தேங்காய், சந்தனம், குங்குமம், பூச்சரம் வைத்து குபேரன் கோலம் போட்ட கட்டத்திற்குள் வைக்கவும். அந்த கட்டத்திற்குள் ஒரு கட்டத்திற்கு ஒன்றாக ஒன்பது காசுகளையும் வைக்கவும். பூஜை அறையில் சுவஸ்திக் கோலம் போட்டு அதன்மீது வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் மேல் நடுவே குபேரனுக்கு தனி கலசம் அலங்கரித்து வைத்து இரு பக்கமும் குத்து விளக்கேற்றி 1.சங்க நிதி, 2.பத்ம நிதி, 3.மகாபத்ம நிதி, 4.சங்காக்ய நிதி, 5.மகராக்ய நிதி, 6.சுகச்சப நிதி, 7. குமுதநிதி-முகுந்த நிதி, 8.குந்தாக்ய நிதி, 9.நீல நிதி ஆகிய ஒன்பது நிதியங்கள் என்ற நவநிதி பெயர்களைச் சொல்லி நவநிதிகளையும் குபேரனையும் அந்த கலசங்களில் எழுந்தருளச் செய்து லட்சுமி குபேர மந்திரங்களை செல்லி வணங்கவும். இதில் ஸ்வர்ணம்-பொன், ரஜதம்-வெள்ளி, வைரம், வைடூரியம் எல்லாம் அடங்கும். குத்துவிளக்கு ஏற்றும்போது மங்களகரமான தீபத்தில் ஜோதியாய் வீற்றிருக்கும் மகாலட்சுமி தாயே உன்னை மனதார வணங்குகின்றோம். எங்கள் மனையில் மங்களங்கள் யாவும் பெருகி, மங்காத செல்வங்கள் சேர அருள் புரிவாய் தாயே என வேண்டி ஏற்றவும்.

ஓம் ஸ்ரீம் வசுதே வசுதாரே வசுகரி
நவகரி தான்யகரி ரத்னகரி ஆவாஹயாமி என்ற ஸ்லோகத்தை மும்முறை கூறி

ஓம் நிதி ரூபாய வித்மஹே
நித்ய மங்களாய தீ மஹி
தந்தோ குபேர ப்ரசோயாதயாத்! என்ற காயத்ரியை மூன்று முறை கூறவும்.

பின்னர் கற்பூரதீபம் காட்டி ஆராதனை செய்யவும். நிவேதனமாக அவல் பாயாசம், லட்டு. கேசரி. சர்க்கரை அன்னம் ஆகியவற்றில் ஒன்றும் ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, கொய்யா, திராட்சை ஆகிய பழங்களையும் வைக்கலாம். இறுதியில் மங்கள ஆரத்தி செய்து பூஜை நிறைவு செய்ய வேண்டும்.

பூஜை முடிந்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை தட்சனைகளூடன் ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. வசதி குறைவின் ஒன்பதாவது வாரமுடிவில் கொடுத்தாலும் போதும்.

எல்லா கலசங்களின் நீரை ஒன்று சேர்த்து சிறிதளவு எல்லோரும் உட்கொள்ளலாம். பின்னர் வீடு முழுவதும் மாவிலையால் அந்த நீரை தெளிக்க வேண்டும். பூஜையில் வைக்க வேண்டிய குபேர கட்டம்.

 

 

 

ஸ்ரீ

 

 

 

27

20

25

 

ஸ்ரீ

22

24

26

ஸ்ரீ

 

23

28

21

 

 

 

ஸ்ரீ

 

 

 

 

இராசிகள்

அதிபதி

நண்பர்கள்

பகைவர்கள்

மேஷம்

செவ்வாய்

தனுசு,கும்பம்,மீனம்

ரிஷபம்,மிதுனம்,கடகம்,கன்னி, விருச்சகம்,மகரம்

ரிஷபம்

சுக்கிரன்

மிதுனம்,விருச்சகம்,தனுசு,மகரம்,கும்பம்,மேஷம்

கடகம்,சிம்மம்

மிதுனம்

புதன்

கடகம்,துலாம்,விருச்சகம்,தனுசு,மகரம்,கும்பம்,மேஷம்,ரிஷபம்

சிம்மம்

கடகம்

சந்திரன்

கன்னி,தனுசு,மீனம்,மிதுனம்

சிம்மம்,துலாம்,மகரம்,கும்பம்,மேஷம்

சிம்மம்

சூரியன்

தனுசு,கும்பம்,மீனம்

கன்னி,விருச்சகம்,மகரம், ரிஷபம்,மிதுனம்,கடகம்

கன்னி

புதன்

துலாம்,விருச்சகம்,தனுசு,மகரம்,கும்பம்,மேஷம்,ரிஷபம்,கடகம்

சிம்மம்

துலாம்

சுக்கிரன்

விருச்சகம்,தனுசு,மகரம்,கும்பம்,மேஷம்,மிதுனம்

கடகம்,சிம்மம்

விருச்சகம்

செவ்வாய்

ரிஷபம்,மிதுனம்,கன்னி,துலாம்

தனுசு,கும்பம்,மீனம்,சிம்மம்

தனுசு

குரு

கும்பம்,ரிஷபம்,மிதுனம்,சிம்மம், கன்னி,துலாம்

மேஷம்,விருச்சகம்

மகரம்

சனி

மீனம்,ரிஷபம்,மிதுனம்,கன்னி, தனுசு

கடகம்,சிம்மம்,விருச்சகம்

கும்பம்

சனி

மீனம்,ரிஷபம்,மிதுனம்,கன்னி, தனுசு

கடகம்,சிம்மம்,விருச்சகம்

மீனம்

குரு

ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,கன்னி, துலாம்,கும்பம்

மேஷம்,விருச்சகம்

 

பூமி சூரியனைச் சுற்றிவரும் நீள்வட்டப் பாதையை 12 ஆகப் பிரித்து அவற்றை ராசிகள் என்பர். 360 டிகிரியில் ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி. முதல் ராசி மேஷம் 0 டிகிரியில் தொடங்கும். இதன்படி சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் மாதம் சித்திரை. இது இளவேனில் காலம். எனவே இதிலிருந்து தமிழ் மாதங்கள் ஆரம்பிக்கும்.


சங்கராந்தி:
சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு நுழையும் வேளையே சங்கராந்தி-இதுவே மாதப் பிறப்பும் ஆகும். 12 ராசிக்கு 12 சங்கராந்திகள்
1.தான்ய சங்கராந்தி-சித்திரை-சூரியன் மேஷ ராசியில் நுழையும் வேளை.
2.தாம்பூல சங்கராந்தி-வைகாசி-சூரியன் ரிஷப ராசியில் நுழையும் வேளை.
3.மனோதர சங்கராந்தி-ஆனி-சூரியன் மிதுன ராசியில் நுழையும் வேளை.
4.அசோக சங்கராந்தி-ஆடி-சூரியன் கடக ராசியில் நுழையும் வேளை.
5.ரூப சங்கராந்தி-ஆவணி-சூரியன் சிம்ம ராசியில் நுழையும் வேளை.
6.தேஜ சங்கராந்தி-புரட்டாசி-சூரியன் கன்னி ராசியில் நுழையும் வேளை.
7.ஆயுள் சங்கராந்தி-ஐப்பசி-சூரியன் துலாம் ராசியில் நுழையும் வேளை.
8.சௌபாக்யசங்கராந்தி-கார்த்திகை-சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் வேளை
9.தனுஷ் சங்கராந்தி-மார்கழி-சூரியன் தனுசு ராசியில் நுழையும் வேளை.
10.மகர சங்கராந்தி-தை-சூரியன் மகர ராசியில் நுழையும் வேளை.
11.லவண சங்கராந்தி-மாசி-சூரியன் கும்ப ராசியில் நுழையும் வேளை.
12.போக சங்கராந்தி-பங்குனி-சூரியன் மீன ராசியில் நுழையும் வேளை.

12 இராசிகளும் இராசி புருஷனின் அவயங்களாக கருதப்படும்.
மேஷம்- சிரம்
ரிஷபம்– முகம்
மிதுனம்- கைகள்
கடகம்- இதயம்
சிம்மம்- வயிறு
கன்னி- அரை/இடுப்பு
துலாம்- வஸ்தி
விருச்சகம்-லிங்கம்
தனுசு- துடைகள்
மகரம்- மூட்டு
கும்பம்- கணுக்கால்
மீனம்- பாதம்

1 முதல் 60 வரை இராசியைப் பிரித்து அதில் இனைந்திருக்கும் கிரங்களை வைத்து தனித்தனி பலனை ஒன்று சேர்த்து சொல்வது இராசி பலனாகும். தனி மரம் தோப்பாகாது என்பது போல் இராசியின் ஒரு சிறு பகுதி மட்டும் ராசி பலனாகாது. தானியத்தின் குவியல் போன்றது ராசி பலன்கள். காடு என்றால் பல மரங்களின் தொகுப்பு என்பதுபோன்றே இராசி என்பதும் சரம், ஸ்திரம், உபயம், பகல்ராசி, இரவுராசி, ஒற்றைப்படைராசி, இரட்டைப்படைராசி, ஜலராசி, மனுஷ்யராசி, விலங்கினராசி, ஊர்வனராசி, பறப்பனராசி என அதன் பிரிவுகள் விரிந்திருக்கின்றது. பலன்கள் சொல்லும்போது ராசியின் திசைகள், ராசியின் மாறுபட்ட இடங்கள், லக்னராசி, சந்திரன் இருக்கும் ராசி, அவர்களின் அதிபதிகள் இருக்கும் ராசி, சந்திர லக்ன அம்சகராசி, லக்னாம்சகராசி ஆகியவற்றை இணைத்துச் சொல்லப்படும். கேந்திரம், த்ரிகோணம், உபசயம், அபசயம் போன்ற நிலைகள், அதில் இணையும் கிரகங்கள் ஆகியவற்றையும் சேர்த்து பலனில் சொல்வதால் ராசியின் விரிவாக்கம் துல்லியமான பலனை தேட உதவும்.

ஒரு ராசியில் பிறந்தவனின் இயல்பு மற்றும் உணவு தென்படும் வகையில் இராசிக்குரிய உயிரினங்கள் சொல்லப்பட்டுள்ளன. பிறந்தவனின் இயல்பையும் செயல்பாட்டையும் முடிவு செய்ய இராசிகள் உதவும். இராசியை வழிபட்டால் அத்தனை கிரகங்களையும் வாணங்கியதாகும். பிறந்த நட்சத்திரத்தை வழிபடும்போது இராசியையும் சேர்த்து வழிபடுதல் சிறப்பு.

குருபகவான் தவமிருந்து பிரம்மாவிடமிருக்கும் புஷ்கரத்தைக் கேட்டார். புஷ்கரம் பிரம்மாவிடமே இருக்க விரும்பியது. அதனால் பிரம்மன் விருப்ப்ப்படி 12ராசிகளில் அந்தந்த ராசிக்குரிய புண்ணிய நதிகளில் குருபிரவேசிக்கும் காலத்தில் இருக்க ஒப்புக்கொண்டது. இந்தக் காலத்தில் புண்ணிய நதிகளில் நீராடல் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மூன்றரைக் கோடித் தீர்த்தங்களில் நீராடிய பலனைத் தரும். இந்தக் காலம் பூஷ்கரணி தீர்த்த நீராடல் ஆகும்.

மேஷம்-ஆடு- காரமான கொஞ்சம் சூட்டுடன் கூடிய உணவில் விருப்பம். மேஷராசியானால் (மேஷலக்னமாக அல்லது சந்திர லக்னமாக இருந்தாலும்) நான்கு கால் பிராணிகள் போல் நடைப்பயணத்தில் விருப்பம். அவசர அவசரமாக உண்பான். நீரில் பயம் இருக்கும். அளவிற்கு அதிகமான ஆசை இருக்கும். தன்னை தூய்மை படுத்த அக்கறை காட்டமாட்டான்.மேஷம்- ராசிக்குரிய மூலிகை- வைகுண்ட மூலிகை. ராசிக்குரிய புனித நதி. கங்கை

ரிஷபம்–மாடு- புல்லை உணவாக விரும்பும். இது லக்னமானால் பயணத்தில் வேகம் இருக்காது. மெள்ள நடப்பான். பாரத்தை சுமப்பான். துயரங்களைப் பொறுத்துக் கொள்வான். உடல் உழைப்பில் சளைக்க மாட்டான். உட்கொண்ட உணவு ஜீரணிக்கும்படியான அக்னி பலமுண்டு.ரிஷபம்- ராசிக்குரிய மூலிகை- அம்மான் மூலிகை.ராசிக்குரிய புனித நதி.நர்மதை

மிதுனம்-மனிதன்- அரிசி கோதுமை விருப்பம். மிதுனம்- ராசிக்குரிய மூலிகை- அற்ற இலை ஒட்டி.ராசிக்குரிய புனித நதி.சரஸ்வதி

கடகம்-நண்டு- மீனை விரும்பும் கடகம்- ராசிக்குரிய மூலிகை- நத்தை சூரி.ராசிக்குரிய புனித நதி.யமுனை

சிம்மம்-சிங்கம்- மிருகங்களை விரும்பும்  சிம்மம்- ராசிக்குரிய மூலிகை- ஸ்ரீவிஷ்ணு மூலிகை.ராசிக்குரிய புனித நதி.கோதாவரி

கன்னி-ஓடத்தில் அமர்ந்துள்ள கன்யகைப் பெண்- கன்னி- ராசிக்குரிய மூலிகை- துளசி.ராசிக்குரிய புனித நதி.கிருஷ்ணா

துலாம்-தராசு துலாம்- ராசிக்குரிய மூலிகை- செந்நாயுருவி.ராசிக்குரிய புனித நதி.காவிரி

விருச்சகம்-தேள்.விருச்சகம்- ராசிக்குரிய மூலிகை- மஞ்சை கிலுகிலுப்பை.ராசிக்குரிய புனித நதி.தாமிரபரணி

தனுசு-வில் தனுசு- ராசிக்குரிய மூலிகை- சிவனார் மூலி.ராசிக்குரிய புனித நதி.சிந்து

மகரம்-மகரமத்ஸம்.மகரம்- ராசிக்குரிய மூலிகை- யானை வணங்கி.ராசிக்குரிய புனித நதி.துங்கபத்ரா

கும்பம்-குடம்.கும்பம்- ராசிக்குரிய மூலிகை- தகரை மூலிகை.ராசிக்குரிய புனித நதி.பிரமபுத்ரா

மீனம்-இரண்டு மீன்கள். மீனம்- ராசிக்குரிய மூலிகை- குப்பைமேனி.ராசிக்குரிய புனித நதி.பிரணீதா.

 


#####

செவ்வாய்க்கிழமை, 17 July 2018 20:40

ஞான பண்டிதன் சபா!

Written by

ஓம்நமசிவய!

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!

####

ஞான பண்டிதன் சபா!

முருகன்!

சனத்குமாரர் கண்ட கனவு!

பிரம்மாவின் மானசீக புத்திரரான சனத்குமாரர் ஒரு வித்தியாசமான கனவு கண்டார். அதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடப்பதாகவும் அதில் தேவர்கள் சேனாபதியாகத் தான் நின்று அசுரர்களை அழிதத்தாகவும் கண்டார். இது பற்றி தந்தையிடம் வினவ, பிரம்மா, நீ பூர்வ ஜென்மத்தில் தேவாசுரப் போரில் சேனாதிபதியாக இருந்து தேவர்களைக் கொடுமைப் படுத்தும் அரக்கர்களை அழிக்க வேண்டும் என நினைத்தாய். அந்தப் பிறவியின் எண்ணங்கள் பிரதிபலித்ததே இந்தக் கனவு. இந்த ஜென்மத்தில் நீ பிரம்ம ஞானியாய் இருப்பதால் இன்னொரு ஜென்மத்தில் அந்த எண்ணங்களும் அதனால் உண்டான இந்தக் கனவும் நிறைவேறும் என்றார். சனத்குமாரர் தொடர்ந்து தியானத்திலேயே இருந்ததால் கனவைப் பற்றி நினைக்க வில்லை. ஆனால் காரண கர்த்தாவான சிவன் நினைத்தார்.

ஈசன் கேட்ட புத்திர பாக்கியம்!

சதச்ருங்க மலையில் விஷ்ணு அம்சம் கொண்ட சனத்குமாரர் ஈசனைக் குறித்து தவம் செய்ய அவருக்கு அம்பிகையுடன் காட்சி கொடுத்தும், தியானத்தினால் சகலமும் பிரம்மமாகக் காட்சி அளிக்கும் நிலையில் ஈஸ்வர தரிசனத்தை உணராத நிலையில் சனத்குமாரர் காட்சி கொடுத்தவர்களை பூஜிக்கவில்லை. தியானம் என்றால் அப்படியொரு தியானம். சிவன் தன் கையிலிருந்த ‘டமரு’ என்ற உடுக்கையில் ஒலி எழுப்ப சனத்குமரர் கண் திறந்து பார்த்து வணங்கினார். சிவன் தன்னை பூஜிக்காததால் சபித்துவிடப்போவதாக கோபம் கொண்டவர் போல கூற, சனத்குமாரர் “உம் சாபம் என்னையோ என் ஆன்மாவையோ பாதிக்காது” என்றார். அவரது ஞானத்தை அறிந்த சிவன் இந்தப் பிறவியில் பிரம்ம புத்திரராக பிறந்த அவரை இன்னொரு ஜன்மத்தில் தன் புத்திரானாக பிறக்க கேட்டுக் கொள்ள சனத்குமாரர் சம்மதம் தெரிவித்தார். எத்தனையோ பேருக்கு புத்திர பாக்கியம் அருளும் ஈசன் தனக்கு கேட்ட புத்திர பாக்கியம் இது.

பிரம்மபுத்திரன்-சிவபுத்திரன்!

ஈசனோடு எழுந்தருளியிருக்கும் தன்னைப் பார்த்து சனத்குமாரர் ஏதும் கூறாததால் உமை வருத்தமுற்றதை உணர்ந்த சனத்குமாரர், “கேட்காதவர்களுக்கு எதையும் தரக்கூடாது” என்கிறது சாஸ்திரம். எனக்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும் என்று ஈசன் மட்டும் கேட்டார், தேவி கேட்கவில்லை, அதனால் ஈசன் மட்டும் என்னை உற்பவிக்கச் செய்து கொள்ளட்டும் என்றார் சனத்குமார். என்ன வித்தியாசமான வேண்டுகோள். தாயில்லாமற் பிள்ளையா! உடனே உமை “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனால் நான் கேட்காவிட்டாலும் நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்றாள். சனத்குமரர், ”எனக்கு ஸ்திரீபுருஷ சம்பந்தத்தில் பிறப்பதில் விருப்பமில்லை. உங்கள் பதி மட்டுமே என்னை ஜனிக்கச் செய்யட்டும்” என்றார். இதைக் கேட்ட சிவன் புன்னகைக் கொண்டார். அவருக்குத் தெரியும். இது முன்கூட்டியே நிர்ணயக்கப் பட்டது என்று.

தேவர்கள் மனைவியிடம் கரு ஏற்படக்கூடாது என சபம்!.

பிரம்மாவிடம் பெற்ற வரத்தின்படி பார்வதி தன் கருமை நிறம்மாறி பொன்னிற மேனியாளாக வர சிவனும் பார்வதியும் ஆனந்தமாக இருக்க உலகம் இருண்டது. பார்வதி பரமேஸ்வரருக்கு குழந்தை பிறந்தால் அது சொர்க்க ராஜ்யத்தைக் கைப்பற்றும் என்பதால் பயமுற்ற இந்திரன் தேவர்களுடன்கூடி ஆலோசனை செய்தான். உமா சங்கரின் ஏகாந்தத்தைக் கெடுக்க அக்னியை அன்னப் பறவை வடிவில் அனுப்பி தேவர்கள் வெளியில் காத்திருக்கும் தகவலைச் சொல்லச் சொன்னான். சிவன் வெளியில் வந்தார். உலகம் இருண்டு வருகிறது. தங்கள் மோகத்தை விடாவிட்டால் எல்லாம் தலைகீழாகும் என்றனர். புரிந்த காமேஸ்வரரான சிவன் என் வீர்யத்தை யார் சுமப்பர் எனக் கேட்க அக்னி அதற்கும் முன்வந்தான். இதனால் கோபமடைந்த பார்வதி தங்களின் தனிமையைக் கெடுத்த தேவர்கள் யாருக்கும் அவரவர் மனைவியிடம் கரு ஏற்படக்கூடாது என சபித்தாள்.

உமையின் வேண்டுகோள்!

கயிலையில் ஒர்நாள் பார்வதி சிவனை நோக்கி தங்களை நிந்தனை செய்த தட்சனின் மகளாகப் பிறந்து தாட்சாயணி என்ற பெயரை நான் சுமக்க விரும்ப வில்லை. இந்த தேகத்தைக் கரைக்க விரும்புகின்றேன் என்றாள். உன்னை மகளாக அடைய இமவான் தவமிருக்கின்றான். நீ அவனுக்கு மகளாய் பிறப்பாய். தக்க தருணத்தில் நான் உன்னை மணப்பேன் என்றார். இமவான் மகளாகப் பிறந்து பார்வதி என்று அழைத்து இமவான் ஆனந்தித்தனர். பார்வதி வயது வந்தவுடன் சிவனை நோக்கித் தவமிருந்தார்.

சிவன் பஸ்மாசூரனுக்கு வரம் கொடுத்து அவன் அதைச் சோதிக்க வந்தபோது அந்தர் தியானமானார். சிவனைக் கானாத உமை அவர் பிரிவால் வருந்தி உருகி ஓர் நீர் நிலையானாள். அந்த நீர் நிலையே சரவணப் பொய்கையாகும். தேவியின் சரீரமே சரவணப் பொய்கை. பாஸ்மாசுரனை மோகினி உருக்கொண்டு திருமால் அழித்ததும் ஈசன் வெளிப்பட்டார். தியானத்தில் இமயமலைச் சாரலில் ஓர் குடிலில் தவம் செய்ய அமர்ந்திருந்தார்.

சிவனார் இமயமலைச் சாரலில் தவம் புரிவதை அறிந்த பார்வதி அக்குடிலுக்குச் சென்று அவருக்கு இடையூறு செய்யாமல் பணிவிடை செய்ய விரும்பி தன் தந்தை இமவான் அனுமதியுடன் குடிலுக்குச் சென்று அவர் பாதங்களில் மலர்களைச் சமர்பித்து அருகிலேயே அமர்ந்திருந்தாள்..

பிரஜாபதிகள் பிரம்மனின் மானஸ புத்திரர்கள். இவர்களில் ஒருவரான காசியப முனிவர்-திதி என்ற பெண்ணின் வழியாகப் பிறந்தவர்கள் அசுர குலத்தவர்கள். அசுர குரு சுக்கிராச்சாரியாரால் ஏவப்பட்ட மாயை என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்கமுகன், யானைத் தலையுடைய தாரகன், ஆட்டின் தலைகொண்ட அஜமுகி(பெண்) முன் ஜென்மத்தில் சிவபெருமானால் கொல்லப்பட்ட தட்சனே மறு ஜென்மத்தில் சூரபத்மன்

சூரபதுமன், சிங்கமுகாசூரன், தாரகாசுரன் என்ற மூவரும் தேவர்களை எதிரியாகக் கொண்டு அவர்களை அழிக்க ஈசனை நோக்கித் தவமிருந்து சாகாவரம் வேண்டினர். சிவன் பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் இறந்துதான் ஆகவேண்டும். அதனால் வேறு வரம் கேட்குமாறு கூறினார், உங்களுக்குச் சமமான ஒருவன், பெண் சம்பந்தமில்லாமல் தோன்றியவனால் மட்டுமே எங்கள் அழிவு ஏற்படவேண்டும் என்றனர். அவ்வாறே சிவ வரம் பெற்ற அசுரர்கள் அஷ்ட திக்பாலகர்கள், சூரியன், சந்திரன், தேவர்கள் அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்திரனும் இந்திராணியும் பூ வடிவெடுத்து மறைந்தனர். இந்திரன் மகன் ஜெயந்திரன் சிறைப்பட்டான். தேவர்கள் பெருமாளிடம் முறையிட்டனர்.

அப்போது ஈசன் தியானத்தில் இருப்பதை உணர்ந்த பெருமாள், ஈசனும் அன்னையும் தனித்தனியே தவமிருந்தால் வரம் பெற்ற சூரபதும சகோதர்களை சம்ஹாரம் செய்ய குமரன் தோன்றுவது எப்படி என ஆலோசித்து நாரதரின் யோசனைப்படி மன்மதனை அழைத்து சிவன்மீது மலர் பாணத்தை எய்யச் சொன்னார். முதலில் மறுத்த மன்மதன் உலக நன்மைக்காக தன்னிடமிருந்த தனது சேனைகளான வசந்தகாலம், இனிய நறுமனம், பூக்களின் மகரந்தப் பொடி, மிகிழ்ச்சிகரமான சூழல் ஆகியவை கொண்டு கயிலை வந்தான். அவன் வந்ததும் மலர்கள் பூத்து இனிமையான சூழல் உருவானது. கரும்பு வில்லை வளைத்து மலர் அம்பை சிவன்மேல் செலுத்தினான்.

யோக நிஷ்டை கலைந்த சிவன் கண்விழிக்க மன்மத பாணமகிமை மகேசனை மதிமயங்கச் செய்தது. கண் திரையில் பார்வதியின் அழகிய ரூபம் சிற்பமென தோன்றியது. பார்வதி இத்தனை அழகா என நினைத்தார் சிவன். மன்மதக்கணை காமத்தை ஊட்டியது. உடலைச் சிலிர்த்து திரும்பினார்.

தவம் கலைந்த சிவன் தன்னை திசை திருப்பிய மன்மதனை கோபத்தால் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தார். அருகிலிருந்த பார்வதி மயக்கமானாள். கணவனின் நிலைக் கண்ட ரதி அழுது புலம்பி வேண்ட ரதியே யாம் பார்வதியை மணக்கும்போது உன் கணவன் மன்மதன் உயிர்பெற்று எழுவான். அனங்கனாக- அங்கமில்லாதவனாக இருப்பான், உன் கண்களுக்கு மட்டும் தெரிவான். மேலும் துவாபரயுகத்தில் மன்மதன் ஸ்ரீகிருஷ்ணன்-ருக்குமணிக்கு பிரத்தியும்னன் என்ற பெயரில் மகனாக தோன்றும் போது அவனுக்கு உருவம் உண்டாகும். பிரத்தியும்னனை சம்பரன் என்ற அசுரன் கவர்ந்து செல்ல பிரதியும்னன் யுத்தத்தில் சம்பாசுரனை அழிக்க சம்பாசுரனின் மகளான மாயாவதியாகிய உனக்கும், பிரத்தியும்னனுக்கும் திருமணம் நடைபெறும் என அருளினார். மன்மதன் சாம்பலானதை அறிந்த தேவர்கள் வருந்தினர். சிவன் அந்தர் தியானமானார். விபரம் அறிந்த இமவான் தன் மகள் பார்வதியை தன் இருப்பிடத்திற்கு அழைத்துப் போனான்.

மகட்கொடை!

சிவனின் தவச்சாலையிலிருந்து வந்த பார்வதி தன் தவத்தை மீண்டும் தொடங்கினாள். ஒர் நன்னாளில் முதிய அந்தணர் வேடம்கொண்டு பார்வதியின் தவச்சாலைக்கு வந்த ஈசன் பார்வதியின் மனதைச் சோதிக்க எண்ணி ‘’சிவனார்க்கு தோலாடை, எருது வாகனம், பாம்பு ஆபரணம், தலை மாலையோ எழும்பு, பன்றிக்கொம்பு இவைகள் மட்டுமல்லாமல் உண்ணும் பாத்திரம் தலைஓடு, உணவோ பிட்சையும் விஷமும், ஆடுகின்ற இடமோ சுடுகாடு, போட்டுக்கொள்வதோ வெள்ளெருக்கு, அறுகு, கொன்றை, நொச்சி, ஊமத்தம்பூ மாலை, தலையில் கங்கை, கழுத்தில் பாம்பு, கையில் மான், மழு, சூலம், உடுக்கு, அக்னி என்று இருப்பவன். பூதங்கள் சூழ இருப்பவன். இன்னும் சொல்லப்போனால் தாயுமில்லை, தந்தையுமில்லை, உற்றார் உறவுமில்லை, குலம், குணம் எதையும் சொல்ல முடியாது. அநாதியானவன். மன்னன் மகளான நீ இவனை மறந்து என்னை மணந்துகொள் என்று தன்னைப்பற்றி தாமே சுயவிமர்சனம் செய்தார். சிவசிவ என காதுகளைப் பொத்திக்கொண்ட அழுத பார்வதிக்கு காட்சிதந்து விரைவில் உன்னை மணமுடிக்க வருவோம் என்று அருளினார்.

சிவன் சப்த ரிஷிகளை நினைக்கத் தோன்றிய அவர்களிடம் இமவானின் வீட்டிற்குப்போய் பெண்கேட்க அனுப்பிவைத்தார். இப்படி மணமகள் வீட்டிற்குப் போய் பெண் கேட்பதை மகட்கொடை என்று இலக்கியங்கள் பகர்கின்றன.

சப்த ரிஷிகளை வரவேற்ற இமவான் தன் சம்மதத்தை சந்தோஷத்துடன் தர மலையரையனிடம் சொன்னார்கள். மலையரையன்-சிவன் தேவர்கள், முனிவர்கள், தபஸ்விகள் எல்லோருக்கும் திருமணத் தகவல் அனுப்ப ஏற்பாடு செய்தார். பங்குனி உத்திர நன்னாளில் மணம் முடிக்க இமயமலைக்கு எழுந்தருளினார்.

இந்த திருமணத்தைக் காண அனைத்து புவனங்களிலிருந்தும் அனைவரும் அங்கு குழுமி விட்டதால் வடபாகம் தாழ தென்பாகம் உயர்ந்தது. சிவன் நந்தியிடம் அகத்திய மாமுனியை அழைத்துவரச் சொன்னார். அகத்தியரிடம் தென்நாடு சென்று இந்த தாழ்நிலையைச் சமன்செய்ய பொதிகைமலை மீது இருக்கக் கடவது என ஆணையிட்டார்.

அகத்தியர் அடியேன் இழைத்த குற்றம் என்ன! தங்களின் திருமணக் காட்சியைக் காணாமல் நான் எவ்வாறு இவ்விடம் விட்டு செல்வது என்றார். நீ சற்றும் சிந்தியாமல் பொதியமலைக்குச் எல் யாம் அங்கு எமது திருமணக் காட்சியை உமக்கு காட்சி அருளுவோம் என்றார். சிவனை வணங்கி அகத்தியர் பொதியமலை செல்ல தென்பால் நிலம் வடதிசை இரண்டும் சமன் பட்டு நின்றது. ரதிதேவி மன்மதனை அனங்கனாக உருவத்துடன் பார்த்தாள். மற்றவர்களுக்கு அருவமாக இருந்து தன் தொழிலை தொடர்ந்து செய்தான். அனங்கனாக உயிர்பெற்ற மன்மதன் வணங்கிய தலம் குத்தாலம்- மன்மதீஸ்வரர். சிவ-பார்வதி கயிலையை அடைந்தனர்.

கயிலையில் நந்தியம்பெருமான் அனுமதியுடன் பிரம்மா மற்றும் முனிவர்கள் தேவர்களது நிலையையும் அசுரர்களது அட்டகாசத்தையும் சிவபெருமானிடம் எடுத்துக் கூறினார்கள். முன்பு கூறிய வீரமகனை உருவாக்கும் நேரம் வந்ததை உணர்ந்தார் சிவன்.

உரிய காலத்தில் பரமேஸ்வர தேஜஸாக சனத்குமாரர் ஜனிப்பது என்றானதும் பார்வதிதேவிக்கு புத்திரனாகப் பிறக்காவிட்டாலும் ஈஸ்வர தேஜஸை நீர்நிலையாக மாறிய பார்வதியின் சரீரத்தில் தாங்கி சுப்பிரமண்ய செரூபமாகத் தருவது என முடிவானது.

சிவன் அம்ச ஆறுமுக முருகன்!

சிவனின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் ஞானிகள் பார்க்கும் ஞானமுகம் அதோமுகம் ஆகியவற்றிலிருந்து யாரும் அனுக முடியாத வெம்மையுடன் நெருப்பு பொறி தோன்றி ஞானம், வீரம், செல்வம், சித்தி, கருணை, இரக்கம் ஆகிய ஆறு பொறிகளாக சனத் குமாரர் தேஜஸாக ஜனித்து வெளிப்பட அக்னி பகவான் வாயுபகவான் இருவரும் அந்த தேஜஸை தாங்கும் சக்தியை இறைவனிடம் பெற்று தேஜஸை முதலில் கங்கையிலும் பின்னர் அன்னை நீர்நிலையாக இருந்த சரவணப் பொய்கையிலும் சேர்த்தனர். சிவன் அன்னை பார்வதியின் அம்சமான கார்த்திகைப் பெண்களை அழைத்து ஆறுவரையும் வளர்க்கச் சொன்னார். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டதால் கார்த்திகேயன்.

சிவசக்தி ஐக்கிய நாள்! ஆறுமுகன் பிறந்தநாள்! தைப்பூச நன்னாள்!

அம்மையும் அப்பனும் ஆறு உருவங்களாக சரவணப் பொய்கையில் விளையாடிக் கொண்டிருந்த குழைந்தைகளைக் கண்டு மனம் மகிழ்ந்து அவர்கள் அறுவரையும் அணைக்க ஆறுமுகமும் ஓர் உடலுமாக ஆறுமுகப்பெருமானக மாறினார். இது சிவசக்தி ஐக்கிய நாளாகும். ஆறுமுகனின் பிறந்தநாள்- தைப்பூச நன்னாள். ஆறுமுகனின் அவதார நிகழ்வு இது. உமையும் நீர் நிலையிலிருந்து உருமாறி தன் திவ்விய சரீரம் கொண்டாள்-பழநி.

அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞானத்தை வழங்கி!
தாருகா முனிவர்கள் அபிசார வேள்வி செய்து கஜாசூரனை பிட்சாடனர் மேல் ஏவ கஜாசூரன் பிட்சாடனரை விழுங்கி விடுகின்றான். அம்பாள் இடுப்பில் முருகன் இருக்க கண்ணுற்ற பார்வதி வருத்தம் அடைந்தாள். அப்போது யாணையின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவந்து கஜாசூரனை வதம் செய்கின்றார் பிட்சாடனராகிய சிவபெருமான்.

அழகிய திருமேனியுடன் தாயின் இடுப்பில் இருக்கும் சிவக்குமரன் முருகன் தாயை நோக்கி ‘இதோ தந்தை’ என தன் விரல் நீட்டி காண்பிக்கின்றார். இந்தக் காட்சியே அஞ்ஞானத்தால் அல்லலுறும் பார்வதியின்(உயிர்களின்) துயர் நீங்கும் பொருட்டு கருணை வடிவான முருகப் பெருமான் ஞானாசிரியராக இருந்து ஆணவத்தை அடக்கி அஞ்ஞானத்தை நீக்கி, ஞான வடிவாகிய பரம் பொருளைக் காணச் செய்து, மெய்ஞானத்தை வழங்கி உயிர்களுக்கு பிறவிப் பயனை நல்குவதை விளக்கும் காட்சியாக ஆன்மீகப் பெரியோர்கள் குறிப்படுவது

சிவனின் ஞானவடிவான ஞானபண்டிதன் சிவபாலனுக்கு காவடி ஏன்!
அகத்தியர் தன் சீடன் இடும்பனிடம் தான் வணங்குவதற்காக இமயமலைச் சாரலிலிருக்கும் சிவகிரி, சக்திகிரி என்ற இருமலைகளையும் கொண்டுவரச் சொன்னார். அம்மலைகளை ஒரு நீண்ட கழியில் இருபுறமும் கட்டி காவடியாக தோளில் தூக்கி வரும்போது ஒர் இடத்தில் களைப்பு மேலிட காவடியை கீழே வைத்துவிட்டு சற்று ஓய்வெடுத்தான். பின் காவடியைத் தூக்க முயற்சிக்கும்போது அம்மலைமேல் இருந்த சிறுவன் அம்மலை தனக்குச் சொந்தம் எனக்கூற இருவரும் போரிட்டனர். முடிவில் சிறுவனாக வந்திருப்பது சிவக்குமரன் என்றறிந்து இடும்பன் வணங்க அருளினார் முருகப்பெருமான். இந்நிகழ்வு நடந்த தினம் ஒர் தைப்பூச நன்னாள். அன்றிலிருந்து முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. காவடிகள்- பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, மயில்காவடி, அக்னிகாவடி, பறவைக்காவடி, மச்சக்காவடி, சர்ப்பக்காவடி என பலவிதமுண்டு.

ஒருவனுக்கு வரும் பிரச்சனைகள், சங்கடங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து சுமந்தால் மனதில் அழுத்தம் அதிகமாகும். மூளையின் செயல் குன்றும். எனவே பிரச்சனைகள் தோன்றியவுடன் அதை ஓரமாக ஒதுக்கி வைக்கப் பழகவேண்டும். இதைத்தான் முருகனுக்கு விரதம் இருந்து காவடி எடுக்கும் பக்தர்கள், முருகா இத்தனை நாட்கள் விரதம் இருந்து காவடி சுமந்து வந்தேன் உன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்தது. காவடி இறக்கி வைத்தது போன்றே என்மனதில் உள்ள சுமைகளை இறக்கி வைத்து அருள்வாய் எனச் சொல்லாமல் சொல்லும் செயலாகும்.

காவடி எடுக்கின்றேன் என மனதாரப் பிரார்த்தனை செய்து அதனைச் செலுத்தும்பொது தன் மனதைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றனர். பக்தியுடன் இறைவன்மேல் பாரத்தைப் போட்டு நம்பிக்கையுடன் சுமந்து செல்கின்றனர், பக்திப் பிரவாகத்தில் தன்னை மறக்கும் நிலை ஏற்படுவதால் அவரது குடும்பம், சுற்றம் சொந்தங்கள் பற்றியும் நடப்பது நடக்கப்போவது எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தெய்வ சிந்தனையால் மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்த நிலையில் இருப்பர். அப்போது சத்து சித்து என்ற ஆனந்த நிலை கிட்டும் உண்மையான பக்தர்களுக்கு.

குருநாதர் ஏன்!
சிவனைத் தரிசிக்க தேவர்களுடன் வந்த பிரம்மன் அங்கிருந்த குமரப்பெருமானை அனைவரும் வணங்க தான் மட்டும் இவர் இளைஞன்தானே என்று செருக்கடைந்து வணங்காமல் சிவனை தரிசிக்கச் சென்றார். சிவனைத் தரிசித்து செல்லும் பிரம்மனுக்கும் மணியும் ஒளியும்போல், மலரும் மணமும் போல் தாமும் சிவமும் பிரிக்க முடியாத நிலையாமை என்பதை உலகிற்கும் உணர்த்தவும் பிரம்மனின் செருக்கை அடக்கவும் விரும்பிய முருகன் பிரம்மனை அழைத்து நீவிர் செய்யும் தொழில் யாது என்றார்.

படைக்கும் தொழில் என்பவரிடம் வேதங்கள் தெரியுமா உங்களுக்கு என்று கேட்க, ரிக் வேதம் பற்றி பிரம்மன் ஓம் என்று கூற ஆரம்பித்தார். ஓம் என்பதன் பொருள் என்ன வென்று கேட்க தடுமாறிய பிரமனை இது அறியாமல் படைப்புத் தொழிலை செய்வது சரியாகாது எனக்கூறி பிரமனைச் சிறையெடுத்தார். அவர் செய்துவந்த படைப்புத் தொழிலை தாமே மேற்கொண்டார்.

திருமால் பிரமனை விடுவிக்க எண்ணம் கொண்டு தேவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட, புன்னகைப் பூத்த சிவபெருமான் பிரம்மனின் செருக்கை அடக்கவே அவனை சிறையிலடைத்துள்ளான் என்றவர் நந்தியெம்பெருமானை அழைத்து முருகனிடம் சென்று பிரமனை விடுவிக்க சொன்னார். நந்தியின் பேச்சை கேளாதாதால் எம்பெருமான் அனைவருடனும் முருகனைக் காணப் புறப்பட்டார்.

ஓம் எனும் ஓங்கார முதல் எழுத்தின் பொருள் தெரியாமல் படைக்கும் செயலை செய்தல் சரியன்று. இருப்பினும் உங்களது திருவுள்ளப்படி அவனை விடுவிக்கின்றேன் என பிரமனை விடுவித்தார். பெருமான் பிரமனை மீண்டும் தனது படைப்புத் தொழிலைச் செய்ய அனுமதித்தார்.

பெருமான் குமரனை நோக்கி ‘பிரணவத்தின் பொருள் உனக்கு வருமாயின் சொல்லுக‘ என்றார். அப்போது அன்னைக்கு பிறர் அறியாவண்ணம் நீவிர் உபதேசித்த பிரணவத்தின் பொருளை யான் யாவரும் கேட்கும்படி சொல்வது முறையில்லை. இருப்பினும் காலம், இடம், அறிந்து முறைப்படி(குரு-சிஷ்ய பாவனையில்) கேட்கின் யான் கூறுவோம் என்றார்.

 

தன் குமரனிடம் திருவிளையாடல் புரிய நடந்த இந்த நிகழ்விற்காக, ஞானத்தின் பிறப்பிடம் ஓங்காரத்தின் சொரூபமான பெருமான் மைந்தா, நன்கு உரைத்தாய் என்று இருக்கையில் இருந்து எழுந்து, சிரந்தாழ்த்தி, வாய் பொத்தி, செவி சாய்த்து நின்றார்.. கல்லால மரத்தின் அடியில் எழுந்தருளி நால்வருக்கும் ஞான உபதேசம் செய்த ஞானகுரு, சீடனாகி குருவிடம் பாடம் கேட்கும் நிலையில் இருந்தார். குமரன்

தன் மழலை மொழியில் பிரணவ மந்திரத்தின் பொருளை மிகத் தெளிவாகக் கூறினார்-.சுவாமிமலை சுவாமிநாதன்.

இந்த நிகழ்வு ஏன் என்றால் எத்தகைய வாழ்வும் ஞானமும் பெற்றவர்கள் ஆனாலும் ஒன்றை கற்கும்போது குருநாதர் வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்த திருவருள் புரிந்தார்.

சரியான குரு!

உயிர்களுக்குத் தெரியாத ஒன்றை தெரிந்துகொள்ள ஒருவரின் துணை அவசியம். அதற்காக உயிர்கள் தேடிக்கொள்ளும் துணை அதைப்போன்றே தெரியாத ஒன்றாக அமைந்து விட்டால் அந்த உயிர்கள் தெரியாத ஒன்றை எப்படி தெரிந்து கொள்ளமுடியும். ஆரம்பத்திலிருந்து தடுமாற்றங்களும் குழப்பங்களும்தான் மிஞ்சும். எனவே சரியான வழிகாட்டியைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். உலகியல் மற்றும் உயிரியல் பாதைகளில் வழிகாட்ட குரு என்பவர் தேவை.

 குரு என்றால் ஒளி, செம்மை, முளைப்பு என்றாகும். நாரையை குருகு என்று சொல்வது அதன் ஒளிர் வெண்மை நிறத்தால்தான். இரத்தத்தை குருதி என்று சொல்வது அதன் செம்மையை வைத்துதான். வாழையின் அடியில் வளரும்/ தழைத்துவருவதை குருத்து என்று சொல்வது அதன் முளைப்பை வைத்துதான். எனவே ஒளியுடையதாய், செம்மையுடையதாய், முளைத்து பெருகக்கூடியது எதுவோ அதுவே குரு எனப்படும். ஒளியையும் செம்மையையும் முளைப்பையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் கற்றதை இவ்வுலக மக்களுக்கு என தன்னிலிருந்து மற்ற உயிர்களுக்கு கடத்துபவரே குரு ஆவார். அந்த வகையில் குருந்த மரத்தடியில் இருந்து குருவாக மாணிக்கவாசகருக்கு அறிவு தந்தவர் இறைவன். ஒளியும், செம்மையும், முளைப்பும் வேண்டும் உயிர்கள் சரியான குருவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். குருவிடம் உயிர்கள் எதிர்பார்ப்பது அறிவையல்லவா!

மாலின் கண்ணீரில் இரு பெண்கள்!

இந்த நிகழ்வைக் கண்ணுற்ற உமையின் தமையன் திருமாலின் கண்களிலிருந்து ஆனந்த நீர் துளிர்கள் துளிர்க்க அந்த இரு சொட்டு கண்ணீர் துளிகளும் இரு பெண்களாக அமிர்தவல்லி என்றும் சுந்தரவல்லி என்றும் மாறினர். இருவரும் என்றும் இளைமையுடன் இருக்கும் அழகு குமரனை மணந்து கொள்ள விரும்பி சரவணப் பொய்கையில் சடக்கர மந்திரத்தை ஜபித்து தவமிருந்தனர். அவர்கள் முன் தோன்றிய குமரன் மூத்தவள் அமிர்த வல்லியை நோக்கி நீ தேவலோகத்தில் இந்திரனின் மகளாகவும், சுந்தரவல்லியை பூலோகத்தில் சிவமுனியின் மகளாகப் பிறந்து வேடராஜனுக்கு மகளாகவும் வளர்ந்து வாருங்கள் உரிய காலத்தில் யாம் உங்களை திருமணம் புரிவோம் என்றருளினார்.

அமிர்தவல்லி சிறுமி வடிவம் எடுத்து மேருமலையில் இந்திரன்முன் சென்று நான் உன்னுடன் பிறந்த உபேந்திரனுடைய மகள் என்னை உன்னுடைய வளர்ப்பு மகளாக வளர்ப்பாயா என்றாள். இந்திரன் மகிழ்ந்து சஷ்டிதேவி-தேவசேனா எனப்பெயரிட்டு வளர்த்து வந்தான். அங்கு ஐராவதம் அவளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியதால் தெய்வயானை எனவும் பெயர் பெற்றாள்

திருமால் சிவமுனிவராக தவம் செய்து கொண்டிருக்கும்போது மகாலட்சுமி மான் உருவில் வர திருமாலான சிவமுனி இச்சை கொண்ட பார்வையை வெளிப்படுத்த அம்மான் கருவுற்று உரிய காலத்தில் வள்ளிக்கிழங்கை அகழ்ந்து எடுக்கும் குழியில் குழந்தையை ஈன்று பின் மறைந்தது. அந்தப் பகுதிக்குச் சொந்தக்காரனாகிய நம்பி பெண் குழந்தை இல்லாததால் அக்குழந்தையைக் கண்டெடுத்து வள்ளி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தான்.

நவசக்தி-நவவீரர்கள்! சிவபெருமானின் முகங்களிலிருந்து யாரும் அனுக முடியாத வெப்பத்துடன் தேஜஸ் வெளிப்பட்டபோது அதை தாங்காமல் அருகிலிருந்த பார்வதிதேவியும் பதட்டம் கொண்டபோது பார்வதி காலிலிருந்த சிலம்புகளின் நவரத்தினங்கள் சிதறின. அதை அரனார் நோக்க அம்பிகையின் திருவுருவம் ஒன்பது வடிவங்களாய் ஒன்பது சக்திகளாய் தோன்றின. பரமனாரின் தீட்சப்பார்வையால் ஒன்பதுபேரும் கர்ப்ப முற்றனர், கோபம் கொண்ட சக்தி அவர்களை இக்கர்ப்பத்துடன் பலகாலம் இருக்க சாபமிட்டார்.

நவசக்திகள் இந்த சாபத்தைக் கேட்டு அஞ்சி நடுங்க அவர்கள் வியர்வைத் துளிகளிலிருந்து லட்சம் வீரர்கள் தோன்றினர். மைந்தர்களே நீங்கள் அனைவரும் அவுணர்களை அழிக்க முருகனுக்கு உதவியாய் இருங்கள் என்று சிவன் அருள் புரிந்தார். நவசக்திகளும் பலகாலம் கர்ப அவதியுடன் தவம் செய்து வந்தனர். கர்ப்பம் உள்ளேயிருந்த வண்ணம் சிவயோகம் செய்து வளர்ந்தன. கர்ப்பம் வளர வளர தாங்கமுடியாத நவசக்திகள் பார்வதி பரமேஸ்வரனைப் பர்த்து தங்கள் குறைநீக்க வேண்ட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த புதல்வர்களைப் பெற அருள்.

நவசக்திகளான
மாணிக்கவல்லிக்கு-தீரமிக்க வீரவாகுத்தேவர்,
முத்துவல்லி-மௌத்திகவல்லிக்கு வீரகேசரி,
புஷ்பராகவல்லிக்கு வீரமகேந்திரர்,
கோமேதகவல்லிக்கு வீரமகேசுவரர்,
வைடூர்யவல்லிக்கு வீரபுரந்தார்,
வைரவல்லிக்கு வீரராக்கர்,
மரகதவல்லிக்கு வீரமார்த்தாண்டர்
பவளவல்லிக்கு வீராந்தகர்,
இந்திர நீலவல்லிக்கு வீரதீரர் என மகவாக அவதாரம் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியே வாள் கொடுத்து லட்சம் வீரர்களுடன் நீங்களும் கூடி ஆறுமுகனுக்கு உதவி புரிவீர் என ஈசன் அருள்.

11 ருத்திரர்கள் ஏன்!
பதினொரு ருத்திரர்களை ஈசன் நினைக்க அவர்கள் தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டம், வில், மழு என்று 11 படைக்கலன்களாகி முருகனின் கைகளில் அமர்ந்தார்கள். ஆறுமுகனுக்கு 12 கரங்கள். அப்படியிருக்க பெருமான் 11 ருத்திரர்களை மட்டும் உருவாக்கினார். ஏனெனில் 12வது கரத்தில் சக்தியின் வேலை அளிக்க இருப்பதால். மேலும் ஐம்பெரு பூதங்களையும், சகல பிராணிகளையும் அழிக்க வல்லதும், எவ்வளவு வரங்கள் பெற்றிருந்தாலும் அவைகளைக் மறுத்து உயிரை வாங்கக் கூடிய வேலாயுதத்தை சக்தி ஆயுதமாக முருகனிடம் கொடுத்தருளினார். விஷ்ணு, பிரம்மாவின் அலோசனைப்படி ஆகாயத்தில் செல்லும் தேர் மீது தன் இன வாயுக்களுடன் சேர்ந்து முருகப் பெருமானை ஏற்றிக் கொண்டுத் தேரை வாயுபகவான் செலுத்தினான்.

சனத்குமாரர் கண்ட கனவின்படி முருகன் தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி செல்லும் வழியில் நாரதர் தோன்றி, பெருமானே, கிரௌஞ்சமலை என்பது இதுதான்.. அந்தணர், அருந்தவத்தோர் செல்லும் போது வழி காட்டுவதுபோல் மாயை செய்து கொல்லும் கொடுங்குணத்தை உடையது. மகாவிஷ்ணுவை வென்று அவருடைய சக்ராயுதத்தை பதக்கமாக மார்பில் அணிந்துள்ளான் சூரபத்மனுடைய இளயவன் யானை முகத்தோன் தாரகாசூரன் இம்மலையில் வாசம் செய்கின்றான் என்றார்.

கிரௌஞ்சமலை- தாருகன்!

முருகன் படையுடன் வருவதை தூதர்கள் மூலம் அறிந்த தாருகன் தன் படையுடன் எதிர்க்க வீரபாகுத்தேவர் முதலில் போரிட, அவரிடம் தோற்றதுபோல் ஓடிய தாருகனைத் தொடர்ந்து சென்ற வீரபாகுத்தேவரும் அவரைத் தொடர்ந்த வீரர்களும் கிரௌஞ்ச மலையின் மாயையில் சிக்கினார். இதை அறிந்த சிவக்குமரன் தானே நேரில் போரிடச் சென்றார். சிறிது போரிட்ட பின் மனதில் அச்சம் கொண்டு கிரௌஞ்ச மலையில் ஒளிந்தான் தாருகன். முருகன் தன் வேலாயுதத்தைப் பிரயோகித்து கிரௌஞ்சமலையின் மாயைகளை அழித்து வீரபாகுத் தேவர் மற்றும் உள்ள வீரர்களை மீட்டுத் தாருகனை அழித்தார். போரில் தாருகன் செலுத்திய சிவப்படை.-பசுபதி அஸ்திரத்தை கையில் வாங்கிய குமரன் அதை வீரபாகுத்தேவரிடம் அளித்தார். தேவர்கள் விருப்பப்படி கிரௌஞ்ச மலைமீது தானும் தனது தம்பியரும் தங்க ஓர் நகரை உருவாக்க தேவதச்சனிடம் சொல்லி அங்கு எழுந்தருளினார். கிரௌஞ்சமலை-கர்நாடகா-சந்தூர்- 10கி.மீ.(பெல்லாரி மாவட்டம்)

சூரபதுமனுடன் போரிட்டு அவனை இரண்டாகப் பிளப்பதற்குமுன் தன்னை மயில் வாகனமாகவும் சேவல் கொடியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றான். அந்த வேண்டுகோளை முருகப் பெருமான் ஏற்றார். ஆனால் அவர் போருக்குப் போகும் போதே இந்திரன் மயில் வடிவாக தேரிலும் அக்னி சேவல் வடிவாக முருகனின் கொடியிலும் வீற்றிருந்தார்கள் என்கிறார் கச்சியப்ப முனிவர் கந்த புராணத்தில்.

கிரௌஞ்சமலை தேவாசுரப் போரில் தாருகன் இறந்து பட்டதை அவன் மகன் அசுரேந்திரன் வீரமகேந்திரபுரியைத் தலை நகராக கொண்டு ஆண்டு வந்த தன் பெரியப்பா சூரபதுமனிடம் கண்ணீர் மல்க கூறினான். பின்னர் நடந்த போரில் சூரபதுமன் மகன் பானுகோபன் இறக்க, சூரபதுமனின் கடைசி தம்பி சிங்கமுகனும் கொல்லப்பட சூரபதுமன் தானே நேரில் வந்து போர் புரிய குமரனின் வேல்படை. தவம் செய்து 1008 அண்டங்களையும் 108 சதுர்யுகங்களுக்கு அரசாள வரம் பெற்ற சூரபதுமனுடன் போரிட்டு தேவர்களையும் ரிஷிகளையும் மீட்டார். போரில் காயமடைந்தவர்களுக்கு சிவபெருமான் வைத்தியராக பார்வதி தேவியுடன் வந்து தேவையான மருந்துகளை மலைபோல் குவித்து அதன்மீதமர்ந்து உதவி செய்தனர்.-பரளி (ஒளரங்காபாத்) –வைத்தியநாதர்-ஜோ.தலம்-5/12

108 யுகங்கள் அரசாண்ட சூரபதுமனை இறுகூறாக்கி பிளக்க சிவனிடம் பெற்ற வரத்தால் உயிர்பெற்று தான் உருவாக்கிய வீரமகேந்திரபுரம் அழிந்து தன் ஆணவம் அழிந்துபட குமரனை வழிபட்டு நிற்க இருகூறான அவனின் ஒரு கூறை சேவல் கொடியாகவும் மற்றதை மயிலாகவும் குமரன் ஏற்றார். சூரபதுமனின் மகன் இரண்யன் தந்தை இறந்ததைக்கண்டு புத்திரர்கள் செய்யும் கடமைதனை செய்யமுடியாமல் சேவலும் மயிலுமாய் ஆனாய் என புலம்பி நின்றான். முருகப்பெருமான் தனது தம்பியருடன் தங்க ஓர் நகரை உருவாக்க தேவதச்சனிடம் சொல்லி அங்கு எழுந்தருளினார்-திருச்செந்தூர். சனத்குமாரர் கண்ட கனவின்படி முருகன் தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி தேவாசுரப் போரில் அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.

சூரசம்ஹாரத்தின் தத்துவம்!

ஒவ்வொரு உயிருக்கும் மும்மலங்கள் இருக்கின்றன. அந்த ஆத்மாவை அழிக்க அவையே போதுமானவை. மாயாமலமான தாரகாசூரன் உலகமே உண்மை என நம்பி வாழ்ந்து பின்னர் அது பொய் என்றுணர்ந்து அழிகின்றான். சிங்காமுகாசூரன் கன்ம மலம். ஆணவத்தின் அடையாளமான சூரபத்மன் இறக்கும் தருவாயில் அதை உணர்கின்றான். அம்மூன்று மலங்களையும் ஞானவேல் அறுத்து பந்தத்திலிருந்து விடுவிக்கின்றது.

எல்லா அறிவும் சக்தியும் பெற்ற மூன்று அசுரர்களும் இறைவனின் வலிமையை உணராமல் தான் என்ற அகந்தையால் அழிந்தார்கள். சரணடைந்த சூரபத்மனை தன்னோடு வைத்துக்கொள்கின்றார் முருகப் பெருமான். இறைவனிடமிருந்து வந்த நாம் மலங்களை ஒழித்து மீண்டும் இறைவனிடம் சேரவேண்டும் என்பதே சூரசம்ஹாரத்தின் தத்துவம்.

சஷ்டிதேவி-தேவயானையை திருமணம்!

தேவர்களைக் காக்க சூரபதுமனுடன் நடந்த போரில் அவருக்குத் துனையாக இந்திரனின் மகளான சஷ்டி தேவியும் போரிட்டு போர் வெற்றிகரமாக முடிந்ததும் முருகனுக்கு சஷ்டிதேவி-தேவயானையை மணம் முடிக்க இந்திரன் விரும்பி ஏற்பாடுகள் ஆரம்பித்து நிச்சயிக்கப்பட்டது.

ஆசை, அகந்தை, பொறாமை, சினம் இல்லமலிருக்க முசுமுகம்!

திருக்கயிலையில் சிவனும் பார்வதியும் ஏகாந்தமாய் இருக்கையில் அம்மரத்தில் பல முசுக்கள்-குரங்குகள் அமர்ந்திருந்தன. ஓர் ஆண்முசு மரத்திலிருந்த வில்வ இலைகளைப் பறித்து கீழே போட அந்த இலைகள் மரத்தின் கீழே இருந்த சிவ பார்வதிமேல் விழுந்து கொண்டே இருக்க கோபம் கொண்ட பார்வதியிடம் வில்வ இலைகளால் முசு நம்மை அர்ச்சிக்கின்றது, எனவே கோபம் வேண்டாம் என்றார். அப்போது அம்முசுவிற்கு ஞானம் உண்டாகி தன் தவறுக்காக வருந்தி சிவ பார்வதியை வணங்கி நிற்க, சிவன் முசுவிடம் நீ உன்னை அறியாமல் என்னை வில்வத்தால் பூசித்தாய் அதன் பயனாக அடுத்த பிறப்பில் நீ உலகம் முழுவதையும் ஆட்சி செய்யும் பேறு கிட்டும் என்றார்.

இதைக் கேட்டு மகிழ்ச்சியடையாத முசு, எனக்கு அரச பதவி வேண்டாம் நான் எப்போதும் தங்களையே தொழுது கொண்டிருக்க அருள் புரிய வேண்டியது.. முசுவே நீ மண்ணுலகை ஆண்டபின் இங்கு என்னிடம் வந்துவிடுவாய் என்றார். இதில் விருப்பமில்லாத முசு, பெருமானே மண்ணுலக வாழ்வில் எனக்கு நாட்டமில்லை. இருப்பினும் தங்களின் ஆணைக்கு அடிபணிகின்றேன். உலகில் அரசாட்சி செய்யும் போது எனக்கு மானிட உரு கிடைத்தாலும் என் முகம் முசுவின் முகமாகவே இருக்க வேண்டியது. ஏனெனில் அப்போதுதான் ஆசை, அகந்தை, பொறாமை, சினம், போன்ற குணங்கள் என்னை தீண்டாமல் இருக்கும் என வேண்ட, அதன்படி அரிச்சந்திரன் வம்சத்தில் முசுவின் முகத்துடன் முசுகுந்தன் என்ற பெயருடன் கருவூரை அரசாண்டு வந்தான்.

மன்னுலக மன்னனுக்கு தேவர்கள் வீட்டு திருமண அழைப்பு!

சூரன் மாண்டான் என்பதால் மகிழ்வுற்ற முசுகுந்தன் முருகப் பெருமானின் திருமணத்தைக் காண தன் புடைசூழ வந்திருந்து இந்திரன் முதாலானோர்களைச் சந்தித்து மகிழ்ந்தான்.

திருமணம் பங்குனி உத்திர நாளில் திருப்பரங்குன்றத்தில் இனிது நடந்தது, சஷ்டிதேவி தெய்வானையாக மாறினாள்.

வள்ளி திருமணம்!

சில காலம் கழித்து முருகன் திருத்தணிகை மலைக்கு வந்தார். அங்கு அவரைச் சந்தித்த நாரதர் முன்னைப் பிறவியில் திருமாலின் மகளான சுந்தரவல்லி இங்கு வள்ளியாக இருப்பதும் அவரை தாங்கள் உரிய காலத்தில் மணம் புரிய வேண்டும் என்றார். முருகப்பெருமான் வள்ளிக்கும் நம்பிக்கும் தன் உருவைக்காட்டிட அனைவரும் மகிழ்ந்தனர். விரைவில் திருமணம் இனிது நடந்தது தேவ தச்சனை அழைத்து கோவில் அமைக்கச் சொன்னார்..-திருத்தணி. பின்னர் அங்கு தெய்வானை வர வள்ளியும் அவரும் முற்பிறவியில் திருமாலின் மகள்கள் சகோதரிகள் என்பதை உணர்தினார்.

சிவகுமரனின் பெயர்கள்!

நெற்றிக்கண்களிலிருந்து தீப்பொறிகளை கங்கை சுமந்து சென்றதால் காங்கேயன்.

சரம்-நாணல், வனம்-காடு. பவன் -தோன்றியவன். நாணல்கள் மிகுந்த நீர் காட்டில் சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன்
கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன்
தன்னை நாடும் பக்தர்களை பற்றுக்கொண்டு காப்பவன்.அறுவரையும் ஒன்றாக செய்ததால் கந்தன் அம்மை யப்பருக்கு நடுவில் அமர்ந்ததால் சோமாஸ்கந்தன்.
அழகின் உருவம் முருகன்
முருகனுக்கு ஆறு முகமாதலால் ஆறுமுகன், சண்முகன் (ஷண்-ஆறு)
குரு திருமுருகனின் அருட்பார்வை தன்மீது விழ தவம் செய்து பூஜை குருபரன். கு-அஞ்ஞான இருள், ரு-நீக்குபவன் ஆன்மாக்களின் அஞ்ஞான இருளை நீக்குபவன் குருபரன்.
சிவனுக்கும், அருணகிரியாருக்கும், அகத்தியருக்கும் பிரணவத்தை போதித்ததால் குருநாதன்.
மயிலில் சஞ்சரிப்பதால் விசாகன்.விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் விசாகன். வி- பட்சி, சாகன்- சஞ்சரிப்பவன். பறவையாகிய மயிலை வாகனமாகக் கொண்டு சஞ்சரிப்பவர் எனப் பொருள்.
குன்று இருக்கும் இடமெல்லாம் இருப்பதால் குமரன்..
ஸ்வம்- சொத்து. உலக உயிர்களை சொத்தாக உடையவன் சுவாமிநாதன்.
தேவர்களின் தலைவானக போரிட்டதால்- சுரேசன்.
.குழந்தை முகமாக தோன்றுவதால் சேயோன்.
முத்தைப்போல் இயற்கையாக ஓளிர்பவன் முத்தையன்.
வள்ளிமூலம்-இச்சா சக்தி, தெய்வானைமூலம்-கிரியா சக்தி, வேல்மூலம்- ஞானசக்தி அளிப்பவன் - வள்ளல் பெருமான்.
ஆணவத்தின் வடிவம் மயிலை அடக்கி வாகனமாக்கியதால் மயில்வாகணன்.

பிரணவ ஸ்வரூபியான சிவனே முருகனாக விளங்குகின்றார். முருகனும் சிவனும் ஒன்றேயாதலால் அ கார, உ கார, ம கார மாகிய ஓம் காரத்தின் ஸ்வரூபம் சுப்ரமண்யர். ஒவ்வொரு மந்திரத்திற்கும் உயிராகத் திகழ்வது ஓம். அந்த ஓம் காரத்தினன் ஜீவராசிகளின் இதயக் குகையில் அமர்வதாலே குகன் எனப்பெயர். அனைத்திலும் பரவியிருப்பதாலும், எந்தப் பூஜைக்கும் முதல் அங்கமான ஆத்ம பூஜை செய்தபிறகே என்பதனாலும் அப்போது இதயகுகையில் அமர்ந்திருப்பதாலும் குகபரமன் என்றாகிறது. ஞானத்தின் வடிவாக திகழ்பவன். எங்கும் நிறைந்த அழகுப் பொருளே முருகன் என்று அறிவு கூறினாலும் வடிவத்தை நினைந்து நினைந்து பழகிய நெஞ்சில் அந்த உருவம் மங்குவதில்லை.

முருகனின் திருவுருவங்கள்- 1.சக்திதார், 2.கந்தசுவாமி, 3.தேவசேனாபதி, 4.சுப்ரமண்யர், 5.கஜவாகனர், 6.சரவாபவர், 7..கார்த்திகேயர், 8.குமாரசுவாமி, 9.சண்முகர், 10.தாரகாரி, 11.சேனாபதி, 12.பிரமசாத்தர், 13.வள்ளி கல்யாணசுந்தரர், 14.பாலசுவாமி, 15.கிரஞ்ச பேதனர், 16.சிகிவாகனர்.

முருகனுக்கு உகந்த நாட்கள்- ஐப்பசிமாத சஷ்டி- அவதார நோக்கமாகிய சூர சம்ஹாரம் நிறைவேறிய நாள். கார்த்திகைமாத திருக்கார்த்திகை- ஆறுமுகனை வளர்த்த அன்னையரைச் சிறப்பிக்கும் நாள். தைமாத தைபூசம்- குருபகவான் தன் ஜென்ம நட்சத்திரமான பூசம் சந்திரனோடு சேரும் நாள்-பௌர்ணமி அன்று தவம் செய்து பூஜித்து திருமுருகனின் அருட்பார்வை தன்மீது விழ வழிபாடு செய்தார். அன்று அருள் அலைகள் அதிகம் இருக்கும் நாள். சரணடைந்த பக்தர்கள் விரதம் இருந்து வழிபட சிறந்தது. அசுரனை அழிக்க அன்னையிடம் வேல்வாங்கிய நாள். இடும்பனுக்கு அருள் புரிந்த நாள்.

முருகன் அடைந்த சாபம்! புகழ்ச்சிக்கு மயங்குவதும், தற்புகழ்ச்சியுடன் பேசுவதும் ஆபத்து!

 

ஒங்காரத்தின் பொருள் கேட்டு சொல்லாததால் பிரமனை சிறை செய்த முருகனை அதன் பொருள் சொல்லக் கேட்க பொருள் சொல்லிவிட்டு கடைசியில் சுப்ரமணி ஓம்! என்றார். சதாசிவ ஓம்! என்பதற்குப் பதில் சுப்ரமணி ஓம்! என்று முருகன் சொன்னதைக் கேட்டு தேவர்களும் முனிவர்களும் அதிர்ந்தனர். புகழ்ச்சிக்கு மயங்குவதும், தற்புகழ்ச்சியுடன் பேசுவதும் ஆபத்து. இது தவறு என தன் குமரினிடம் கூறிய சிவன் சர்ப்பமாக மாறச் சபித்தார். ஸ்ரீபிரம்மாவை சிறையிலிருந்து மீட்டார். சர்ப்பமான முருகன் பல தலங்கள் சென்று வழிபட்டு திட்டை வந்தார். பல வருடங்கள் பூஜை செய்து வழிபட்டு அருள் பெற்று தன் பழைய உருவை அடைந்தார்.. ஸ்ரீசுப்ரமணியராகவும், அருவமாக சர்ப்ப வடிவிலும் முருகன் அருள். தென்குடித்திட்டை.தி.த-132.வசிஷ்டேஸ்வரர்(சு)


தந்தைக்கு உபதேசம் செய்தது சரியா!

சின் முத்திரையுடன் தியான நிலையில் தண்டபாணி. தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி முருகன் வருந்த சிவலிங்கத் திருமேனியை வழிபடச் சொல்லி மாமன் பெருமாள் அறிவுறை. வாய்மூடி மௌனியாய் தன் பேச்சுத்தன்மையைக் குறைத்து பலதலங்கள் சென்று வழிபட்டார் சுப்ரமண்யர். சிவானந்தேஸ்வரை வழிபட்டு தன் பேச்சாற்றலைப் பெற்றார். திக்குவாய்க்காரர்கள் தண்டாயுதபாணிக்கு நாற்பத்தைந்து நாள் தேன் அபிஷேகம் செய்து வழிபாடு.

சிவகாமசுந்தரியின் மகன் குமரகுருபரன். குமரகுருபரன் ஐந்து வயது வரை ஊமை. பேச்சாற்றலில்லை. கவிராயர் குழந்தையுடன் இங்கு வந்து உப்பில்லா விரதம் இருந்து தவறு செய்திருந்தால் தண்டணையைத் தங்களுக்குத் தந்திடவும் குழந்தையை பேசவைக்கவும் வேண்டுதல். சரவணப எனத் தொடங்கும் கந்தர் கலிவெண்பாவை குழந்தை வாய்திறந்து பாடியது. பிச்சாடனர் சிறப்பு. வழக்கத்திற்கு மாறாக சந்திரசேகரர் லிங்கோத்பவர் இடத்தில். முருகனுக்கு அருளி சிவானந்தேஸ்வரர் என்ற நாமத்தில்.-திருப்பேணுபெருந்துறை-நாச்சியார்கோவில் அருகில்

வேத உட்பொருளை கவனியாதலால் சிவன் உமையை சபிக்க கோபம் கொண்ட முருகன் வேதாகமங்களை கடலில் வீச பாவம் சூழ்ந்து உருத்திரசன்மராக -ஊமையாய் பிறந்து சாபம் நீங்கிய தலம்- எருக்கத்தம்புலியூர்.

சோமாஸ்கந்த தத்துவம்!

சிவபெருமான் ஓங்கி உயர்ந்து வளர்ந்த தாணு மரமாக நிற்க, அம்பிகை பார்வதி அந்த மரத்தில் பற்றிப் படர்ந்த கொடியாக- அபர்ணாவாக பிணைந்திருக்க அந்த மரத்தின் கீழ் சிறிய கன்றுச் செடியாக முருகன் தோன்ற அதுவே முதல் முதலாக அமைந்த சோமாஸ்கந்த வடிவம் என்கிறது ‘சோமாஸ்கந்த தத்துவ நூல். வைகாசி விசாக நாளில்தான் தாணு அபர்ணா விசாக அவதாரம் நிகழ்ந்துள்ளது.

ஞானவேல்!

ஒவ்வொரு உயிருக்கும் மும்மலங்கள் இருக்கின்றன. அந்த ஆத்மாவை அழிக்க அவையே போதுமானவை. எனவே அவைகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே முருகனின் ஞானவேலால் ஆணவமலம்- சூரபத்மன், கன்மமலம்-சிங்கமுகன், மாயாமலம்-தாரகன் ஆகியோரை வதம் செய்வதன் மூலம் அம்மூன்று மலங்களையும் ஞானவேல் அறுத்து பந்தத்திலிருந்து விடுவிக்கின்றது என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

அம்மன் அம்ச நான்முக முருகன்! தோற்றம்!

விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் வேண்டி தவம் இருக்க ஈசன் தோன்றி பாலதிரிபுரசுந்தரியை நோக்கித் தவம் செய்யச் சொன்னார். குழந்தையாய் வந்த சுந்தரிக்கு திலகமிட அவர் குளத்தில் குணிந்து திலகத்தைப் பார்க்க அதிலிருந்த குங்குமம் குளத்தில் விழ ஒன்றின்பின் ஒன்றாக நான்கு முகங்கள் தோன்றி திரிபுரசுந்தரியை வணங்க நான்முக முருகா வருக எனக்கூறி அணைத்துக் கொண்டாள். விஸ்வாமித்திரா! ஈசன் அன்று என் அம்சம் இன்றி ஆறுமுக வேலனை படைத்தார். இன்று அவரது அம்சமின்றி நான்முக வேலனை உனக்காக படைத்தேன். இவனே உனக்கு வேண்டியது தருவான் என்றாள். தூரத்தில் கல் மழை பெய்த இடத்திற்கு வரச்சொல்ல அங்கு ஒர் கோவிலில் பாலதிரிபுரசுந்தரியுடன் நான்முக முருகன் சேர்ந்து காட்சி. இறையருள் பெற தவம் செய்யாமல் வேறு எதையோ தேடிக்கொண்டிருந்தேனே என வருந்தினார் விஸ்வாமித்திரர். சதுர்முகமுருகன் சிறப்பு.சின்னாளப்பட்டி

சாமுத்திரிகா லட்சணம் யார் உருவாக்கியது!

கார்த்திகேயன் ஆண், பெண் லட்சணங்களை சீரமைத்துக் கொண்டிருக்கும்போது தம்மை மதிக்காமல் செய்கின்றாறே என்பதால் அவர் செயலுக்கு இடையூறு விளைவித்தார் விநாயகர். சினமுற்ற கார்த்திகேயன் கணேசரை வீழ்த்த எண்ணி அவரின் பல் ஒன்றை பிடுங்கி விட்டார். பரமசிவன் அங்கு வந்து பிள்ளைகளின் சச்சரவிற்கு காரணம் கேட்க. கார்த்திகேயன் தான் ஆண், பெண் லட்சணங்களை சீரமைக்கும் பணியில் இருக்க அதைக் கெடுத்துவிட்டார் என்றார், அப்போது ஆண், பெண் லட்சணங்கள் என்று கூறுகின்றாயே என்னிடம் எத்தகைய புருஷ லட்சணம் எனக்கேட்டார். கபாலி எனப் பெயர் பெற்ற தங்களிடம் எப்படி புருஷ லட்சணம் காணமுடியும் என்பதைக் கேட்ட சிவன் கோபமுற்று ஆண்களின் லட்சணங்கள் பற்றிய சுவடிகளைக் கடலில் தூக்கி எறிந்துவிட்டு அந்தர் தியானமானார்.

சமுத்திரராஜனை அழைத்து நீ பெண் லட்சணங்களைப் பற்றிப் பகுத்து ஆராய்ந்து உருவாக்கு. கார்த்திகேயன் சொன்ன புருஷ லட்சணங்கள் அப்படியே இருக்கட்டும் என்றார். அப்போது சமுத்திர ராஜன் இவை என்வசமிருந்து வருவதால் இவற்றிற்கு சாமுத்திரிகா லட்சணம் என்ற பெயரில் விளங்க அணுக்கிரகம் வேண்டினார்.

கார்த்திகேயன் முன் தோன்றி, தேவலோக நியதிப்படி யார் எந்த வேலையைத் துவக்கினாலும் கணேசரின் அனுமதியோடு துவக்கினால் தான் விக்னமின்றி நிறைவேறும். நீ சகோதரின் பல்லை திருப்பிக் கொடுத்துவிடு. உன் விருப்பப்படி லட்சண ஏடுகளை சமுத்ர ராஜனிடமிருந்து பெற்றுக்கொள். ஆனால் அது சமுத்ர ராஜன் விருப்பப்படி சாமுத்ரிகா சாஸ்திரம் என்றே அழைக்கப்படும். என்றார்.

கார்த்திகேயன் தான் அண்ணனின் பல்லைக் கொடுத்து விடுகின்றேன். ஆனால் அவர் அதைக் கையிலேயே வைத்திருக்க வேண்டும் கீழே கண்ட இடத்தில் வைத்தால் அந்த பஸ்பம் அவரை எரித்துவிடும் என்றார். என்வே சாமுத்ரிகா லட்சணம் என்ற சாமுத்ரிகா சாஸ்திரம் முருகனால் எழுதப்பட்டது.


கார்த்திகைப் பெண்கள் யார்!

சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய ரிஷிகள் நால்வரின் வேண்டுகோளுக்கிணங்கி சிவன் அஷ்டமா சித்திகளை அடையும் வழிகளைப் போதித்தார். அருகிலிருந்த ரிஷிபத்தினிகளான நிதர்த்தினி, அப்ரகேந்தி, மேகந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய அறுவரும் தங்களுக்கும் அஷ்டமா சித்திகளை உபதேசிக்க வேண்டினர். மனதில் பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும் என்பதால் சிவன் தயங்க பார்வதி அவர்களுக்காக வாதாட சிவன் அவர்களுக்கும் அஷ்டமா சித்திகளை உபதேசித்தார்.

உபதேசம் பெற்றவர்கள் தாங்கள் உமைக்கு இணையாக இருப்பதால் ஏன் உமைக்கு பணி புரிய வேண்டும் என நினைத்ததால் சிவன் அவர்களை கல்லாக மாற சாபம். உண்மை நிலை உணர்ந்த பெண்கள் வருந்தி அன்னையை மனதால் பூஜிக்க உமை மன்னிக்க சிவனும் மன்னித்தார். மீண்டும் பணிப் பெண்ணான அவர்கள் ஐயனே காரணமின்றி ஏதும் செய்யமாட்டீர்கள் என்ற ஞானம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கல்லாகமாற்றி மீண்டும் பெண்ணாக மாற்றியதின் அர்த்தம் என்ன என்றனர்.

தீயவற்றை அழிக்கவும் தேவர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க சிவ அம்சத்தில் பிறக்கப் போகிறவனை வளர்க்கப் போகின்றீர்கள். மற்றவர்கள் செல்வம் வீடு எனக் கேட்க நீங்கள் ஞானத்தை கேட்டுள்ளீர்கள். ஆனால் அந்த ஞானத்தை முறையாக பயன்படுத்தும் பக்குவம் உங்களிடம் (கார்த்திகைப் பெண்கள்) இல்லை. அதை முறைப் படுத்தவே இந்த நிகழ்வு என்றார்.

கார்த்திகைப் பெண்கள்! கிருத்திகை நட்சத்திரம்! கார்த்திகேயன்!

குழந்தையாய் இருந்த முருகனை எடுத்து பாலூட்டி பாசம் காண்பித்த கார்த்திகைப் பெண்கள், முருகா! உன்னை வளர்த்த எங்களை உலகம் மறந்துவிட்டதே! என வருத்தப்பட, அன்னைக்குச் சமமாக என்னை சீராட்டி பாலுட்டிய நீங்கள் அனைவரும் ஒன்றாகி கிருத்திகை நட்சத்திரமாக வானில் சுடர் விடுவீர்கள். இந்த நாளான ஆடிக்கிருத்திகை இனி எனக்கு மிகவும் உகந்த நாள். இந்தநாளில் விரதமிருந்து வணங்கும் பக்தர்கள் துயர் தீர்ப்பேன். உங்கள் பெயரால் நான் கார்த்திகேயன் என்ற பெயரிட்டு அழைக்கப்படுவேன் என அருள் புரிந்தார். மேலும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தின்போது மக்கள் தீபமேற்றி வழிபடுவர் என அருள்.

முருகனின் அறுபடை வீடு!

முருகனுடைய ஆறு படைவீடுகளும் நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைக் குறிக்கும். பிரமச்சரிய, கிருகஸ்த, சந்நியாச கோலங்களில் முருகன் வணங்கப்படுகிறார்

1.மூலாதாரம்- திருப்பரங்குன்றம். தெய்வானையுடன் மணக்கோலத்தில் உள்ள தலம்.

2.சுவாதிஷ்டானம்-திருச்செந்தூர். செந்தில்வேலவனாக பக்தர்களது துயர் நீக்கும் தலம்.

3.மணிபூரகம்-பழநி. ஞான தண்டமேந்தி யோக நிலையில் உள்ள தலம்.

4.அநாகதம்- திருவேரகம்-சுவாமிமலை. தந்தைக்கு உபதேசம் செய்த அறிவுத் தலம்.

5.விசுக்தி-திருத்தணிகை. தேவசேனாவுடன் களிப்புடன் இருக்கும் தலம்.

6.ஆக்ஞை-பழமுதிர்ச் சோலை. ஞானப் பழமாக இருக்கும் தலம்

#####

செவ்வாய்க்கிழமை, 17 July 2018 19:45

பைரவ சபை!

Written by

ஓம்நமசிவய!

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!

####

பைரவ சபை!

பைரவர்!

இரண்யாட்சனின் வளர்ப்பு மகன் அந்தகாசுரன். சிவனை நோக்கி கடுந்தவமிருந்து யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றான். தேவர்கள், முனிவர்களை வென்று பெண்டிரை அவமானம் செய்தான். அனைவரும் சிவனிடம் முறையிட சிவன் தன்னுடைய அம்சமாக காலபைரவரைத் தோற்றுவித்து அந்தகாசுரனை அம்ஹாரம் செய்தார். 

ஆதிசங்கரர் அருளிய “காலபைரவ அஷ்டகம்” - போகம், முக்தி இவைகளை அளிப்பவரும், பிரசித்திபெற்ற அழகிய வடிவினரும், அடியார்களிடம் அன்பு கொண்டவரும், காத்தல் கடவுளாக இருப்பவரும், எல்லா உலகையும் தன் வடிவில் கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவரே, காசியம்பதியின் தலைவரே உங்களுக்கு நமஸ்காரம். எனக்கு அருள் புரிவாய் ஐயனே!-

பைரவர் என்றால் எதிரிகளுக்கு பயத்தை தருபவர். தன்னை அண்டியவர்களுக்கு பயத்தைப் போக்கி பலத்தை அளிப்பதால் சிவன் இவருக்கு திரிசூலம் அளித்து காவல் உரிமையை அளித்தார். ஈசனைப்போலவே 64 அம்சங்களை உடையவர் பைரவர். சிவாலயங்களில் பைரவரின் ஏதாவது ஓர் அம்சம் பரிவார மூர்த்தமாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அஷ்ட-எட்டு திக்குகளிலும் பைரவரே காவல் புரிகின்றார். இந்த சிறப்பான எட்டு வடிவங்களே அஷ்ட பைரவர் என போற்றப்படுகின்றது. கார்த்திகை தேய்பிறை அஷ்டமியில் தோன்றியவர் காலபைரவர். இவர் சூரியனுடைய அம்சத்தை பெற்றவர். ஆதலால் ராகு காலத்தில் ஞாயிறு தோறும் வழிபடுவது சிறப்பு.

“பைரவ துதி”
ஓம் ஏம் க்லாம் கிலிம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும்
சகவம் ஆப துத்தாரணாய அஜாமல பக்தாய
லோகேஸ்வராய சுவர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்ரிய வித்வேஷ்ணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ.

சிவபெருமானின் ஐந்து குமாரர்களில் ஒருவர் (கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயப்பன், பைரவர்). பைரவரை க்ஷேத்ர பாலர் என்பதுண்டு. 

க்ஷேத்ரபாலர்:-“பைரவ அஷ்டகம்” - செந்நிறமான ஜ்வாலைகளையுடைய ஜடாமகுடம் தரித்திருப்பவரும், சிவப்பு நிறமுடையவரும், வெண்ணிலவை முடியில் அணிந்திருப்பவரும், தேஜோமயமானவரும் உடுக்கை, சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றைக் கைகளில் வைத்திருப்பவரும், உலகத்தைக் காவல் காப்பவரும், பாதகர்களுக்கு பயங்கரமானவரும், நிர்வாணமேனியரும், நாயை வாகனமாக உடையவரும், முக்கண்ணரும், எப்போதும் குதூகலமாக இருப்பவரும், பூத கணங்கள் பேய் பிசாசுக்களுக்குத் தலைவரும், க்ஷேத்ர பாலர் என்ற பெயரை உடையவருமான பைரவரை வணங்குகிறேன்.

அஷ்ட பைரவரை பூஜித்து வழிபட்டால் க்ஷேத்திரத்தில் செய்த பாபங்கள் நிவர்த்தி. காசியின் எண் திசைக்கும் காவல் தெய்வங்கள். 1.குருபைரவர்- அனுமத்கட்டம், 2..சண்டபைரவர்- துர்க்காகுண்டம், 3.அஸிதாங்கபைரவர்- விருத்தகாலம், 4.கபாலபைரவர்- லாட்டுபஜார், 5.க்ரோதண பைரவர்- காமாக்ஷாமே, 6.உன்மத்தபைரவர்- பீமசண்டி, 7.சம்ஹாரபைரவர்- திருலோசனா சங்கமம், 8.பீஷணபைரவர்- பூதபைரவம்

தன் ஐந்து தலையால் செருக்குற்ற பிரம்மனின் ஐந்தாவது தலையை பைரவரைக் கொண்டு கிள்ளச் செய்தார். அந்தக் கபாலம் அவர் கையில் ஒட்டிக் கொண்டது. பைரவர் பிரமஹத்தி தோஷத்தால் பல தலங்கள் சுற்றி காசியம்பதியில் அன்னபூரணி அம்மன் அன்னம் அளிக்கும்போது கீழே விழுந்த அன்னத்தை எடுக்க் முயன்ற கபாலத்தைத் தன்காலால் நசுக்கினார். கபாலபைரவராக இருந்து காலபைரவராக மாறி காசியில் அருள்புரிகின்றார். ஒரே பைரவர் எட்டு செயல்களை எண் திசைகளில் செய்யும்போது அஷ்டபைரவராகின்றார்.

அஷ்ட பைரவர்கள்
1.ஸ்ரீ அசிதாங்க பைரவர்-6கரங்கள்.அன்னவாகனம். சக்தி-பிராம்மி,  அஸிதாங்க பைரவ அஷ்டகம்”- முக்கண்ணரும், கோரிய வரங்களைத் தானே முன் வந்து அளிப்பவரும், சாந்த சொரூபியும், கபாலமாலை தரித்தவரும், கதை, கபாலம், பாணபாத்ரம், கட்கம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றைத் தாங்கியவரும் திகம்பரனாகவும், இளமையாகவும் இருப்பவரும், நாகத்தைப் பூனூலாக அணிந்தவரும், அலங்கார சொரூபரும், ப்ராஹ்மணி என்ற சக்தியை அருகே வைத்திருப்பவரும், அன்னப் பட்சியை வாகனமாக உடையவரும், அழகுள்ளவரும், சுந்தரரும், கேட்டதைக் கொடுக்க வல்லவருமான அஸிதாங்க பைரவரை வணங்கி தியானிக்கிறேன்..

வழிபட எதிரிகள் தொல்லை விலகும். எடுத்த நல்ல காரியங்கள் இனிதே முடியும்

2.ஸ்ரீ குரு பைரவர்-4கரங்கள், காளைவாகனம், சக்தி-மஹேஸ்வரி, "குரு பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், டங்கம், புள்ளிமான் என்ற கிருஷ்ணம்ருகம் ஆகியவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், பான பாத்திரம், கத்தி இவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், காளை வாகனத்தைக் கொண்டவரும், புன் சிரிப்பான முகமுடையவரும், வெண்மையான சுத்த ஸ்படிகம் போன்ற மேனியைக் கொண்டவருமான குரு பைரவ ஸ்வாமியை வணங்கி தியானம் செய்கிறேன்..

வழிபட அரசுப் பணிகளில் சிறந்த முன்னேற்றம் கிட்டும். 

3.ஸ்ரீ சண்ட பைரவர்-4கரங்கள், மயில்வாகனம், சக்தி-கௌமாரி, "சண்ட பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் வில், கத்தி, பானபத்திரம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், கௌரி என்ற தேவியை சக்தியாகக் கொண்டிருப்பவரும், மயிலை வாகனமாகக் கொண்டு வெண்மையான நிறத்தை உடையவருமான சண்ட பைரவரை தியானிக்கிறேன்..

பரிகார பூஜைகள் செய்து வழிபட இவரது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நவகிரக தோஷங்களும் நீங்கும் 

4.ஸ்ரீ குரோத பைரவர்-4கரங்கள், கருடவாகனம், சக்தி-வைஷ்ணவி,  "க்ரோத பைரவ அஷ்டகம்” முக்கண்ணரும் கதை, சங்கு, சக்கரம், பாசம், பாத்ரம் இவற்றை கைகளில் ஏந்திக் கொண்டிருப்பவரும், வேண்டிய வரங்களைக் கொடுப்பவரும், இளைஞராகவும் திகம்பரராகவும் இருப்பவரும், அமைதியான சுபாவமுடையவராக இருப்பவரும், இடது பக்கத்தில் திருவான சக்தியை கருடவானத்தில் அமர்த்திக் கொண்டிருப்பவரும், நீல நிறமான மேனியைக் கொண்டவருமான க்ரோத பைரவரை வணங்கி தியானிக்கிறேன்...

வழிபட உயிர்களின் மன அழுக்குகளான அழுக்காறு, அவா, வெகுளி ஆகியவற்றை நீக்குபவர்

5.ஸ்ரீ உன்மத்த பைரவர்-4கரங்கள், குதிரைவாகனம், சக்தி-வராஹி,  "உன்மத்த பைரவ அஷ்டகம்” முக்கண்ணரும், சாந்த ஸ்வரூபியும், இளைஞராகவும், திகம்பரராகவும் திகழ்பவரும், பொன் வண்ணரும், அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவரும், கத்தி, கபாலம், உலக்கை, கேடயம் ஆகியவற்றைக் கைகளில் தாங்கி இருப்பவரும், வாராஹி என்ற சக்தியுடன் காட்சியளிப் பவருமான உன்மத்த பைரவரை வணங்குகிறேன்..

மனநிலை பாதிக்கப்பட்டவர்களும், நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களும் தேய்விறை அஷ்டமியில் நெய்தீபமேற்றி வழிப்ட்டால் நலன் பெறுவர்.

6.ஸ்ரீ கபால பைரவர்- 4கரங்கள், யாணைவாகனம், சக்தி-ஐந்த்ரீ, இந்திராணி, "கபால பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், பக்தர்கள் வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் பாசக்கயிறு, வஜ்ராயுதம், கத்தி, பானபத்திரம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், இந்திராணி என்ற தேவியுடன் காட்சியளிப்பவரும், பத்ராகம் போன்ற ஒளிமயமான மேனியுடையவருமான கபால பைரவரை வணங்கி தியானம் செய்கிறேன்..

பஞ்ச பூதங்களையும் இயக்கும் இவரை வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அகற்றி நல்வாழ்வு அளிப்பார்.

7.ஸ்ரீ பலி பீஷ்ண பைரவர், சிம்மவாகனம், சக்தி-சாமுண்டி, பீஷ்ண "பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் கத்தி, சூலம், கபாலம், உலக்கை ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், சாமுண்டி தேவியுடன் இனைந்து காட்சி தருபவரும், பிரேத வாஹனம் எனப்படும் இறந்த பூத உடல் மீது அமர்ந்திருப்பவரும், சிவந்த நிறத்தையுடையவருமான பீஷணபைரவரை துதித்து வணங்குகிறேன்..

நெய் தீபமேற்றி வழிபட்டால் திருமணத்தடை விலகும். புத்திர பாக்யம் கிட்டும்.

8.ஸ்ரீ கால சம்ஹார (வடுக)பைரவர்-8கரங்கள், நாய்வாகனம், சக்தி-சண்டிகை "சம்ஹார பைரவ அஷ்டகம்” பத்துக் கைகளோடு முக்கண்ணனாக இருப்பவர், சர்ப்பத்தை பூனூலாக அணிந்தவர், கோரைப் பற்களுடன் பயங்கர முகத்தோற்றத்தை உடையவர், பக்தர்களுக்கு எட்டு விதமான ஐஸ்வர்யங்களைக் கொடுப்பவர், இளமையான தோற்றம் கொண்ட இவர், திகம்பரராகவும் இருப்பவர். ஸிம்ஹத்தை வாகனமாகக் கொண்டவர். தம் கைகளில் சூலம், கட்கம், டமருகம், சங்கு, சக்ரம், கதை, பானபத்திரம், கட்வாங்கம், பாசம், அங்குசம் ஆகியவற்றைக் கொண்டவர், அசுரர்களின் மண்டையோடுகளைக் கோத்து பெரிய மாலையாக அணிந்திருப்பவர், பருமனான உடலையும், மத்தமான பயங்கர உருத்தோற்றத்தையும் கொண்டவரான, சம்ஹார பைரவரை ,எப்போதும் எனக்காக வேண்டி தியானிக்கிறேன்..

இவரின் அம்சமே மற்ற ஏழு பைரவர்களும். தேய்பிறை அஷ்டமியில் இவரை பூஜித்தால் அனைத்து பலன்களும் கிட்டும்.  இவர் காலத்தில் நனமை அளிப்பவர். ஆபத் உத்தாரணர். இவரே மகாகாலர், க்ஷேத்ரபாலர், சட்டபாலர் என பூஜிக்கப்படுகின்றார்.

 

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26932493
All
26932493
Your IP: 3.90.205.166
2024-03-29 02:22

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg