gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

அணு/கிரியா யோகம்

Written by

          ஓம் நமசிவாய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்

மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்

வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்

உள்ளக் கருத்தின் உளன்!

                     ******

அணு-கிரியா யோகம்

அணுத்தன்மையாவது, கிரியா யோகம் எனப்படும். யோகத்தின் போது இந்திரியங்கள், பிராணன் ஆகியன அணுத்தன்மையடைந்து ஒரு நிலைப்படும் வழி முறை. அணு/கிரியா யோகம் சிவ யோகம், சக்தி-ஞான யோகத்திற்குப்பின் பயிலவும்.

1.சித்தமே ஆத்மாவின் அடையாளம். மனம்- விருப்பம், புத்தி– ஆராய்தல், அகங்காரம்– வெறுப்பு ஆகிய மூன்று பகுதிகள் ஒடுங்கிய நிலையில் நான்காவதான சித்தம் தலை எடுக்கும். நன்மையினை நாடும் நடுநிலை உணர்வே சித்தமாகும். அப்போது எல்லாவற்றிற்கும் பின் உள்ள ஆத்மாவின் வெளிச்சம் தெரியும். ஆத்ம, உடல் இரண்டிற்கும் தொடர்பாக இருப்பது சித்தம்.

2.நம்முடைய ஞானம் பந்தங்களால் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அது சிற்றறிவாக இருக்கும்.

3.பகுத்தறிய முடியாத கலை, தத்துவம், எல்லாம் அறிவற்ற மாயையால் வந்தது. ஐம்பெரும் பூதங்கள், ஐம்பொறிகள், ஐம்புலன்கள் யாவும் தத்துவம். இதை இயங்கச் செய்வது ஒலி, ஒளி, நிறம் முதலியவற்றின் அணுத்துகள்களாய் உள்ள கலைகள். ஜீவாத்மாவைத்தவிர தனு- உடல், கரண- உறுப்பு, புவன- உலகம், போகங்கள்- இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் உருவாக்கியது மாயாசக்தி. பரமாத்மா, ஜீவாத்மா தவிர யாவும் மாயை. இதனால் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஐக்கிய உணர்வு ஏற்படும்.

4.உடம்பிற்குள் பல்வேறு கலைகளும் ஒன்றாக கலந்துள்ளன.

உடல்- தூல உடல் ஆகும். புரியட்டகம் எனப்படும் எட்டுப்பகுதியும் உடையது சூக்கும உடல். அதற்குமேல் தத்துவம், கலை கொண்ட தூல உடல் ஆகும். பிறவியின் கருமங்களை ஏற்று நிற்கும் ஜீவாத்மாவே காரண உடம்பு ஆகும். தியானத்தால் உடம்பிற்குள் கலைகள் ஒன்றாகும்.

5.நாடியில் பிராண சக்தியை நிறுத்தும்போது பஞ்ச பூதங்களை வெல்வதும், அவைகளில் செல்லும் மனதை மீட்பதும், அவற்றை வேறுபடுத்துவதும் நிகழும். நாடி- சுழுமுனைநாடி. பூதகைவல்ய- பூதங்களில் ஒன்றிய மனதை மீட்பது. பிராணாயாமத்தால் நாடியில் பிராணன் செல்வதைக் கட்டுப்படுத்துவதாகும். பஞ்சபூதங்களால் ஆகிய ஞானேந்திரியம், கர்மேந்திரியம், அந்தக்கரணம் முதலியன பூத ஜய பலன்கள் ஏற்படும் இடம்.

6.இயற்கையை வெல்லும் அபூர்வ சித்திகள் அறியாமையை முதலியன மறைந்த பின்பே நிகழும். மோஹ+ஆவரணாத்-மோகமாகிய அறியாமையை மறைத்தல். ஸித்தி– இயற்கையை வெல்லக் கூடிய சக்தியுடைய சித்திகள். பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியன மூலம் உடல் புனிதமாகி சக்திகள் கைகூடும்.

7.மோகத்தை வென்றால் எல்லையற்ற எங்கும் பரவிய இயற்கை அறிவு கைகூடும். மோகம்-அறியாமைக்கு காரணம், மோஹஜயாத்- மோகத்தின்மேல் கொள்ளும் வெற்றி. அபோகாத்-பெரிய விரிவு. ஸஹஜ வித்யா- எப்போதும் இயல்பாயிருக்கும் அறிவு.

8.விழிப்புணர்வுடையவனுக்கு உலகம் தெரியாது. உள் ஒளியே தெரியும். ஜாக்ரத்- பரம்பொருளுடன் ஒன்றி உணரும் விழிப்புணர்வு. த்விதீய- யோகியின் இரண்டாவது காணும் உலகம். ஒன்று அவரும் பரமும் ஒன்றியதாகும். இரண்டு அவரை நீக்கிய புவனம். கரஹ- கை,செயல் பரம்பொருளோடு ஒன்றி உணர்வதை செய்வது.

9.உலக வாழ்வெனும் நாடகத்தில் ஜீவாத்மா ஒரு நடிகன். ஆத்மா-ஜீவாத்மா. நர்தக- நடிகன், ஜீவாத்மா வாழ்வு எனும் நாடகம் முடிந்தபின் பரம் பொருளை அடைகிறது.

10.அந்தராத்மாவே ஆத்மா எனும் நடிகன் நடிக்கும் அரங்கமாகும். ரங்க- வாழ்க்கை நாடகம் நடைபெறும் மேடை. அந்தராத்மா- ஆத்மாவின் உள் உணர்வு. அந்தராத்மா மூலம் ஆத்மா செயல்படும்.

11.இந்திரியங்களே இந்நாடகத்தை காண்பவர்கள். ப்ரேக்ஷகாணி- நாடகம் காணுவோர். இந்திராணி- ஞானேந்திரியம் ஐந்தும், கர்மேந்திரியம் ஐந்தும், அந்தக் கரணம் நான்கும் ஆகும். யோக முயற்சி அற்றவர்க்கு இந்திரியங்கள் மாயா உணர்வு தரும்.

12.மெய்ஞானத்தால் ஆத்மாவின் உள் ஒளியை உணர முடியும். தீர்வசாத்- உயரிய மெய்யறிவு. ஆத்மா. அந்தராத்மா இவைகளின் இயக்கத்தால் உள் ஒளித் தோன்றும்.

13.ஸித்தியடையும் யோகி விடுதலை அடைவான். ஸித்திஹ்- உள் ஒளியை உணரும் மெய்யறிவு நிலை. ஸ்வதந்த்ர பாவஹ –விடுதலை பாவனை. சுதந்திரம் என்பது யாவருக்கும் அடிமையற்ற பூரண நிலை,

14.தன் அளவில் பெறும் விடுதலை எங்கும் எல்லாவற்றிலும் யோகிக்கு கிடைக்கும் அந்யத்ர-எங்கும் எதிலும். தத்ர-தன் அளவில். ததா- அதுவே. யதா- எதுவோ. உடல் அளவானாலும் அது ஆத்மாவில் உணரப்படும் விடுதலையாகும்.

15.யோகியானவன் அடிப்படையான உள் ஒளியை உற்று நோக்குபவன் ஆவான். பீஜா (உலக உற்பத்திக்கு காரணமான உள் ஒளியை)+ அவதானம் உற்று நோக்கி இருப்பது= பீஜாவதானம்.

16.மிக உயரிய சித்தியடைந்த யோகி சாகாமை என்ற கடலில் எளிதில் மிதப்பான். ஆஸனஸ்தஹ- மிக உயரிய யோக ஸித்தி. ஸுகம்- மிக எளிதில். ஹ்ரதே- பெரிய நீர் நிலை அழியாமை என்ற கடலாகும். நிமஜ்ஜதி- ஆழ்தல், திளைத்தல், என்ற மிதத்தல் ஆகும். சாகாமை கடலாகையால் மூழ்கினாலும் சாவு இல்லை.

17.தன் அளவில் கருதிய எதையும் சித்தியடைந்த யோகி படைப்பவனாவான். ஸ்வமாத்ரா- மனதில் தியானிக்கும் யோகசக்தியின் அளவில். நிர்மாணம்- புதியன படைப்பது. ஆபாதயாதி- புதிய பொருள்கள். எல்லாவற்றையும் நன்கு அறிந்த பராசக்தியின் சக்தியால் யோகி எதையும் படைக்க வல்லவன்.

18.சுத்த வித்தை அழியாதிருக்கும்போது பிறவிப்பிணி அழிவது உறுதி. வித்யா-சுத்தவித்தை எனும் தெய்வீக ஞானம். அவிநாசே- அழியாதிருக்கையில். ஜன்ம விநாசஹ- பிறவியாகிய பிணி அழிவது உறுதி. பரஞானம் பிறவியை அழிக்கும்.

19.மஹேஸ்வரியும் மற்றச் சக்திகளாகிய எழுத்தொலிச் சக்திகளும் பிற சிற்றறிவு உயிர்களுக்கு தாய் ஆவர். மஹேச்வரி-பராசக்தி. ஆத்யாஹ- பராசக்தி முதலாகிய பிற சக்திகள். கவர்காதிஷு- எழுத்து வர்க்கங்களுக்குரிய மாத்ருகா சக்தி. பசு- சிற்றறிவு உயிர்கள். பசுமாத்ரஹ- சிற்றறிவு உயிர்களின் தாய்.

20.துரியமாகிய நிலை பிற மூன்று நிலைகளைத் தொடர்ந்து தைலாதாரைபோல் தொடர்ந்து வரும். த்ரிஷு- நனவு, கனவு, உறக்கம் ஆகிய நிலைகள். சதுர்தம்- நான்காவதாகிய துரியம். அஸேச்யம்- ஊற்றும்போது. தைலவாத்- தைலம் போல் இடைவிடாது வரும். துரியம்- இயற்கையான மூன்றையும் தொடர்ந்து நான்காவதாக வருவது.

21.தன் சித்தத்தில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுபவன் நான்காம் நிலையாகிய துரியத்தை அடைவான். மக்னஹ- ஆழ்தல். ஸ்வசித்தேன- தன் சித்தத்தில். ப்ரவிசேத்- உறுதியாய் அடைவர்.

22.துரிய நிலை எய்திய யோகிக்குப் பிராணவாயு முறையாகவும் மெல்லியதாகவும் எங்கும் பரவும். அவன் எல்லா உயிர்களையும் தன்னதாக உணர்வான். ப்ராண- உடம்பில் உள்ள தலையான பிராணன் எனும் வாயு. ஸ்மாசாரே-ஸம+ஆசாரே. ஒழுகுதல் –பரவுதல். எல்லா உறுப்புகளிலும் சமமாக பரவும் தன்மை உடையது. ஸமதர்சனம்- சம்மாகப் பாவித்தல்.

23.துரியத்தில் இருப்பதற்குள் நடுவே தாழ்ந்த நிலைக்குச் சிலர் மீண்டு வரலாம். மத்யே- உயரிய துரியத்தில் நிலையாவதற்கு நடுவே. அவர- நான்காம் நிலைக்கு கீழான மூன்று நிலைகள். துரியாதீத நிலைக்குப் போன பிறகு கீழான நிலைகள் வருவதில்லை. துரியநிலை- விகல்ப ஸமாதி, .துரியாதீத நிலை– நிர்விகல்ப சமாதி

24.காணும் காட்சி யாவும் தானே என்று ஆகும்போது அவை பார்வையிலிருந்து மறைந்தும் அப்படி மறைந்தவை நான்காம் நிலைக்குப் போவதற்கு முன் மீண்டும் யோகியின் காட்சிக்கு வரும். மாத்ரா- உலகில் காட்சிதரும் ஜீவன்கள், ஸ்வப்ரத்யய- தானே யாவுமாய் இருப்பதாய் எண்னுவது. நஷ்டயஸ்ய – காட்சியிலிருந்து மறைதல், புனருத்தானம்– மீண்டும் காட்சிக்கு வருதல்.

25.துரிய நிலைக்கு மேல் உயரத் தகுதி கொண்ட யோகி சிவமாகவே ஆவான். சிவதுல்யோ– முழு அளவான சிவம். ஜாயதே –ஆகுவான். ஐந்தொழில் புரியும் ஆற்றல் உடைய தெய்வமாவதே சிவமாகுதல் என்பது.

26.யோகி கடைபிடித்த விரதங்களால் சிவமான பிறகும் அவன் உடலில் ஆத்மா தடையின்றி ஒளிர்ந்து கொண்டு இருக்கும். சரீரவ்ருத்திர்- உடலுக்குள் ஆத்மா அஞ்ஞானமயமாகாது சுத்தமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும். வ்ரதம்– பக்தி வசத்தால் யோகி கொண்ட வாழ்க்கைமுறை மனநெறியை குறிக்கும்.

27.யோகியின் உரையாடல் ஜபமாகச் செய்வது ஒன்றேயாகும். கதா- உரையாடல். ஜபஹ- மந்திரம், நாமம் முதலியவற்றை திரும்ப திரும்ப கூரும் ஜபம். யோகிக்கு ஜபமே உரையாடலாகும்.

28.தானம் வழங்குவது ஆத்ம ஞானம் ஆகும். ஜீவாத்மாவின் ஞானம் என்றாகாமல் பரிபூர்ண தெய்வத்தை உணரும் ஞானம் ஆகும். எங்கும் நிறைந்த ஆத்மாவை அறியும் ஞானம்.

29.பல்வேறு சக்திகளைச் சித்தியாகப் பெற்ற யோகி உறுதியானஞானத் திரளாவான், ய+அவிபஸ்த- யோவிபஸ்த என்றானது. சக்திகள் எல்லாம் கைவரப் பெற்றவன் ஞானத்தை ஆள்பவனாவான்.

30.சுயமான சக்திகள் அளவிட முடியாத பிரபஞ்சம் தழுவியனவாகும். ஸ்வ– சுயமான. சக்தி– கைவரப் பெற்ற சக்தி.  ப்ரச யோஸ்ய– ப்ரசய+ அஸ்ய= கட்டுக் கடங்காத. விச்வம்– பிரபஞ்சம்.

31.நிலை பெறுத்தலும் நீக்கலுமாகிய சக்தி அந்த யோகிக்குரியதாம். ஸ்திதி – காத்தல் தொழிலை குறித்தல். நிலைப்பெறச் செய்தல். லயௌ- லயமாதல்- மீண்டும் அது ஆதல். தோன்றியது அழிந்து முன்பு இருந்த நிலையாகுதல்.

32.தோற்றம் அழிவு முதலியவை ஒன்றன்பின் ஒன்றாக நிகழும் போதும் யோகியின் உள் உணர்வு என்றும் அழியாது இருந்து யாவற்றிற்கும் சாட்சியாக இருக்கும். தத்ப்ரவ்ருத்தாவ்அப் – அந்த பிறவிருத்திகளாகிய தோற்றம் அழிவு என்பன. அநிராசஹ– தடையின்றி அடுத்தடுத்து நிகழுவது. ஸ்வேத்தர் பாவாத்- யோகியின் உள் உணர்வு சாட்சியாய் பாவித்திருப்பது.

33.யோகிக்கு இன்பதுன்பங்கள் அப்பாற்பட்டவையாகும். ஸுகதுஹ்க- இன்ப துன்பமாய் உணரப்படுதல். பஹிர்மனனம்- தனக்கு வேறுபட்டது. யோகிகள் இன்பத்தில் திளைப்பதும் துன்பத்தில் வருந்துவதும் இல்லாத சம நிலையில் இருப்பர்.

34.இன்ப துன்பங்களுக்கு ஆட்படாமல் இருக்கும் யோகி தனித்திருந்து ஆத்மாவில் ஆழ்வதாகிறான். தத்விமுக்தஸ்து– இன்ப துன்பங்களிலிருந்து விடுபட்டிருப்பதாம். கேவலீ- ஆத்மா உடலில் எதனையும் பற்றுக்கோடாக கொள்ளாது இருத்தல். கேவலநிலை என்ற எதிலும் ஒட்டாமலும் பற்றாமலும் இருப்பதாகும்.

35.மோக உணர்வு கொண்டிருக்க காரணம் அந்த ஆத்மா செய்த இருவினைப் பயனாம். மோஹம் –அறியாமை, மயக்கம் முதலியவற்றால் வரும் ஆசை. ப்ரதி ஸம்ஹதஸ்– நெருங்கி வந்து சேர்தல். து– ஆனால். கர்மாத்மா-முன் ஞன்ம கருமங்களால் பெற்ற பயன்- இருவினை-நல்வினை தீவினைப் பயன்.

36.பேதங்கள் விலகுவது என்பது அவரவர் வேறுபட்ட வாழ்க்கை அமைப்பை பொறுத்தது. பேதம்– ஒன்றாக நினைக்க வேண்டியதை வேறாக நினைத்தல். திரஸ்காரே– விலக்கி வாழ்வது. ஸர்காந்தர– ஸர்க– அந்தர் =பலவகைப்பட்ட வாழ்வு முறைகள். கர்மத்வம்- செய்யும் செயல்களைப் பொறுத்தது. சகலர்- மும்மலம் உடைய ஆத்மா. பிரளயகலர்- இருமலம் உடையவர். விஞ்ஞானகலர்- ஒரு மலம் உடையவர்.

37.படைப்புக்கான காரண சக்தி அவரவர் அனுபவத்தால் வருவது. கரணசாக்தி– செயலுக்கு காரணமான சக்தி.  ஸ்வதே- அவரவர்க்கு உரிய. அனுபவாத் –அனுபவம். ஒவ்வொருவருடைய நினைவு, கற்பனை, சிந்தனை முதலிவையின் அடிப்படையில்தான் செயல் நிகழ்வுக்கு காரண சக்தி உண்டாகும்.

38.ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் ஆதி சக்தியில் உள்ளன. துரியத்திலிருந்து பிற மூன்று நிலைகளும் உண்டாகின்றன. த்ரிபதா – மூன்று நிலைகள். ஆக்கல், ஐத்தல், காத்தல் உடன் நனவு, கனவு, உறக்கம் ஆகியவற்றையும் சேர்க்கலாம். பதாத்ய-பத+ஆத்ய –பதங்களுக்குத் தலைமையான. அனுப் ராணனம்–அடங்கி வாழ்வது. ஆதி–துரியம். ஆதிசக்தி சுதந்தர்ய சக்தி ஆகும்.

39.துரிய நிலையில் உள்ள யோகிக்கு சித்தமே உடலாகவும் அதன் உள் வெளி ஆகியன உறுப்புகளாகவும் கருதவும். துரிய நிலை யோகிக்கு சித்தமே உடலாகவும் அதன் உறுப்புகளாகவும் அருளப்படும்.

40.அபிலாஷையின் காரணமாக யோகியானவன் வெளி உலகப் பொருள்களை விரும்பி தன் வடிவம் விட்டு அந்த வடிவம் ஆவான். அபிலாஷாத்- அடங்காத ஆசையின் காரணமாக. பஹிர்திஹி – வெளியில் உள்ள பொருள்கள்.  ஸம்வாஹ்யஸ்ய– வேறு வடிவில் வாழ்வர், பிறவி முடிந்ததும் ஆசை காரணமாக வேறுவடிவில் வாழ்வர்.

41.துரிய நிலையில் முழுவதும் ஆழ்ந்தார்க்கு ஆசைகள் அடங்கிப் போவதால் வேறு வடிவங்களில் வாழத் தேவையில்லை. ப்ரமிதேஸ் தத் – ப்ரமிதேஹே + தத். ஸ்- ஹே. தத்- துரியம். தத்க்ஷயாஜ்-ஆசைகள் அடங்கும்.  ஜேவஸம் க்ஷயஹ- ஜீவன் என்று தனித்து உணரும் பாவனை இல்லாமல் ஆகும்.

42.துரிய நிலையில் இருப்பவர்க்கு ஆசைகள் அடங்கப்பெற்று உடம்பு பஞ்சபூதங்களால் ஆன சட்டையைப் போன்றது. வீடுபேறு அடையும்போது சிவனைப் போன்று எல்லாம் சிறந்த உணர்வு அடைவான். பூதம்- பஞ்ச பூதம். கஞ்சுகீ - சட்டை.  ததா – அதன்பின். விமுக்தோ –வீடுபேறு. பூய – அளவற்ற. பதி ஸ்மஹ- சிவனைப்போல. பரஹ- பர்மராவர். பஞ்ச பூதக் கலப்பாலான இவ்வுடம்பு யோகிக்கு ஒரு சட்டை போலாகும்.

43.பிராணசக்தி உடல் முழுவதும் பரவி இயற்கையாக இருக்கும். நைஸர்கிகஹ– இயற்கையாக. ப்ராணஸம்பந்தஹ- பிராணனின் சக்தி உடல் முழுவதும் தொடர்பு. பிராண சக்தி தெய்வீக சக்தியாகும். துரியநிலையில் தெய்வ சக்தி மிகுந்து பிராணனும் அதிகமாகும்.

44.துரிய நிலையில் உள்ளார்ந்து நிற்கும்போது இடா, பிங்களா, சுழுமுனை ஆகிய நாடிகளில் பிராணன் அதிகரிக்கும்.     நாஸிகா – மூக்கில் பிரியும் பிராண சக்தி. அந்தர்மத்ய – உள்ளார்ந்த நடுநிலைதியானம்- துரியம். கிமத்ர– சொல்வதுபோல். ஸவ்யா– இடா நாடி. அபஸவ்ய– வலது நாடி பிங்களை.  ஸௌஷும்னேஷு- மத்ய நாடி சுழுமுனை.

45.துரிய நிலைக்குச் சென்ற யோகி மேலும் மேலும் உள்ளிலும் வெளியிலும் தெய்வீகத்தை உணர்வான். பூய– மீண்டும். ஸ்யாத்– துரியம்.  ப்ரதி மீலனம்- தெவீகத்தை உள்ளிலும் வெளியிலும் உணர்வான். முக்தியடைவான்.

&&&&&&

அணு/கிரியா யோகத்தின் தொகுப்பு:-

1.  சித்தமே ஆத்மாவின் தொடர்பைத்தரும்.

2.  பந்தத்தால் அறிவு குறைவுபடும்.

3.  கலைகளும் தத்துவங்களும் மாயையால் வந்தனவாகும்.

4.  உடம்பிற்குள் பல்வேறு கலைகளும் ஒன்றாக கலந்துள்ளன.

5.  சுழுமுனை நாடியில் பிராண சக்தி செல்லாது தடுத்தால், பஞ்சபூதவெற்றி அவற்றை விட்டு மனத்தை மீட்டல், அவற்றை வேறுபடுத்தல் ஆகியன நிகழும்.

6.  மோகம் முதலான அறியாமை மறைந்த பிறகு அதிசய சக்திகள் கை கூடி வரும்.

7.  மோகத்தை வென்றால் எல்லையற்ற எங்கும் பரவிய இயற்கை அறிவு கூடும்.

8.  பரமும் தானும் ஒன்றாகக் காணும்போது புவனம் தோன்றாது உள் ஒளியே தோன்றும்.

9.  உலக வாழ்வில் ஜீவாத்மா ஒரு நடிகனாகும்.

10. வாழ்க்கை நாடகத்தை நடிக்க அந்தராதமாவே ஆத்மா விற்கு அரங்கமாகும்.

11. இந்திரியங்கள் ஆத்மா நடிக்கும் நாடகத்தைக் காண்பவராவர்.

12. மெய்யறிவு ஆத்மாவின் உள் ஒளியை உணர இயலும்.

13. பரிபூரணமாக விடுதலையை ஸித்தியின் மூலம் யோகி அடைகிறான்.

14. உடம்பளவில் பெற்ற விடுதலை எங்கும் எதிலும் காணப்படும்.

15. உள் ஒளியாகிய உற்பத்தி மூலத்தை யோகி உற்று நோக்கத்தக்கவன்.

16. ஸித்தி அடைந்த யோகி சாகாமையை அடைந்தவன்.

17. ஸித்தி அடைந்த யோகி தன் ஸித்தியின் அளவிற்கு புதியவைகளைப் படைக்க வல்லவன்.

18. பரஞானம் பிறவி நோயை அழிக்கும்.

19. மஹேச்வரியும் மற்ற மாத்ருகா சக்திகளும் சிற்றறிவு உடைய உயிர்களின் தாயாவர்.

20. மூன்று இயற்கை நிலைகளைத் தொடர்ந்து நான்காம் நிலை தைலம் ஊற்றியதுபோல் தொடர்ந்து வரும்.

21. சித்தத்தில் கொண்ட ஆழ்ந்த தியானத்தால் துரிய நிலைக்குள் யோகியால் செல்ல முடியும்.

22. துரியநிலை எய்திய யோகிக்கு முயற்சி இல்லாது பிராணன் எங்கும் பரவும் நிலையில் உயிர்கள் எல்லாம் சமமாகத் தோன்றும்.

23. துரியத்தில் இருப்பதற்குள் நடுவே பிற மூன்று கீழ் நிலைகள் வந்து போகும்.

24. பிரபஞ்சப் பொருள்கள் யாவும் நானாக இருக்கிறேன் என்ற நினைவில் மறைந்த காட்சிகள் துரிய நிலைக்கு முன்பு மீண்டும் நினைவில் எழும்.

25. துரிய நிலைக்குள் மேலும் போகவல்ல யோகி சிவத் தன்மை முழுவதும் அடைவான்.

26. சிவமான யோகியின் உடலில் சுத்த நிலையில் ஆத்மா திகழ்வது அவன் பக்தியாலாகும்.

27. ஜபம் செய்வதே யோகியின் உரையாடலாக இருக்கும்.

28. தானம் தரும் குணம் ஆத்மஞானமாகும்.

29. எல்லாச் சக்தியும் கைவரப் பெற்ற யோகி ஞானத்தை மிகவும் பெற்றவன் ஆவான்.

30. யோகியின் சுயமான சக்திகள் பிரபஞ்சம் தழுவியவனவாகும்.

31. உலகில் எதையும் நிலைக்கச் செய்வதும் அழிக்கச் செய்வதும் யோகின் ஆற்றலாகும்.

32. தோற்றம், நிலை பெறுதல், அழித்தல் முதலியவற்றை இயற்றும் யோகியின் ஆத்மா அழியாது, உணர்வும் குறைவதில்லை.

33. இன்ப துன்பங்களூக்கு தான் தொடர்பு உடையவன் அல்லன் என்றும், அவை தனக்கு வெளியில் உள்ளதாகவும் யோகி உணர்வான்,

34. இன்ப துன்பங்களூக்கு ஆட்படாமல் இருக்கும் யோகியின் ஆத்மா எதையும் பற்றாமல் தனித்திருப்பதாகும்.

35. ஓர் ஆத்மா செய்த நல்வினை தீவினைகளால்தான் மோக உணர்வு வரும்.

36. அவரவர் வாழ்க்கை அமைப்பு அல்லது செய்கைக்கு ஏற்பவே பேத நீக்கம் பெறுவர்.

37. அவரவர் பெறும் அனுபவத்தின் விளைவாகவே செயல்களைச் செய்யும் காரண சக்தி உண்டாகிறது.

38. ஆதி சக்தியிலிருந்தே படைத்தல், முதலிய மூன்று சக்திகள் பிரியும். துரியமாகிய ஆதியிலிருந்தே நனவு முதலிய மூன்றும் உண்டாகும்.

39. துரிய நிலை சென்ற யோகிக்குச் சித்தமே உடலும் அதன் உறுப்புகளாகவும் அருளால் இயங்கும்.

40. ஆசை அழியாதபோது ஒருவடிவை விட்டு மறுவடிவைப் பெற்று வாழ்வர்,

41. துரியத்தில் ஆழ்வோர்க்கு எல்லா ஆசையும் அடங்கிப் போகும்.

42. துரிய நிலையில் ஆழ்ந்தார்க்கு உடம்பு பூதங்களால் ஆகிய சட்டையாகும். விடுதலை பெற்று சிவமாக ஆவர்.

43. பிராணசக்தி மிகுந்த அளவில் துரியத்தை அடைந்த யோகிக்கு உடல்முழுவதும் பரவும்.

44. இடா, பிங்களா, சுழுமுனை நாடிகளில் பிராணசக்தி மிகுதியாவதை உணரலாம்.

45. துரிய நிலையில் தெய்வீக உணர்வை உள்ளும் புறமும் மீண்டும் மீண்டும் உணர்வான்.

&&&&&&

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880528
All
26880528
Your IP: 34.230.84.106
2024-03-19 15:01

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg