ஓம் நமசிவாய!
பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!
******
சக்தி-ஞான யோகம்
சக்தி, மந்திர சக்தியைப் பற்றியது ஆகும். சக்தி யோகம் அல்லது ஞான யோகம் எனப்படும். மந்திரங்களை உச்சரித்து உபாசிப்பவன் ஆத்மா. மந்திர வழி முறையாகும். மந்திரத்தால் சித்தமும் அவ்வாறு ஆகும் என சக்திகளால் உண்டாகும் வழிமுறைகளை கொண்டது. சிவ யோகத்திற்குப் பின் பயிலவும்.
1.சித்தம் மந்திரத்தில் விளங்கும் மாபெரும் சக்தியாக விளங்கும்.
சித்தம்-தெய்வத்தன்மையை உணருவது. மந்திரம்- ஒரு தேவதையை உள்ளடக்கி சொல்லப்பட்ட ஓர் ஓசை. சித்தம் மந்திரத்துடன் ஐக்கியப்படும்போது சித்தமே மந்திரமயமாகும். அந்த தேவதையின் சக்தியை பெறுவதால் மந்திராத்மா எனலாம்.
2.தீவிர முயற்சியே சாதகம். மந்திரத்தை பலமுறை சொல்லுதல், அதையே தியானித்தல், அந்த தேவதையை மனதில் ஆழமாகப் பதித்தல் ஆகியன தீவிர முயற்சி. சாதகம்- பயிற்சி. இரண்டும் சித்தத்தை மந்திரமயம் ஆக்கும்.
3.மந்திரத்தின்-ரஹஸ்யம் மறைவுப் பொருள் வித்யா என்கிற ஞானமயமான உடலைப் பெறுதல் ஆகும். வித்யா சரீரஸத்தா- தானும் கடவுளும் ஒன்று என உணருதல். பிரபஞ்சம் தனக்கு வேறானது இல்லை, தன்னால் உருவாக்கப் பெற்றதே பிரபஞ்சம் என்ற ஞான உணர்வை வளர்த்துக் கொள்வது. அஹம் பிரஹ்மாஸ்மி என்ற நிலையாகும்.
4.மயா சக்தியின் காரணமாக மனத்தின் விருப்பம் நிறைவேறுவது என்பது தெளிவில்லாத கனவு போன்றது. கர்பே-மாயா சக்தி. சித்த விகாஸோ- மனத்தின் விருப்பம் நிறைவு பெறுவது. அவிசிஷ்ட வித்யாஸ்வப்னஹ- குறைவான அறிவினால் தெளிவில்லாத கனவைக் குறிக்கும். விசிஷ்ட- தனித்த. தனித்த அறிவுடைய ஆத்மா உலக மாயையின் கர்ப்பத்தில் தெளிவற்ற கனவு போல் பல செய்திகளை மனம் தெளிய உணரமுடியாத நிலையில் இருக்கும்.
5.எல்லையில்லாத விரிந்த தியானத்தில் மட்டுமே இயல்பான மெய்யறிவான சிவநிலை கிடைக்கும். வித்யாஸமுத்தானே-கடவுளைப் போன்ற உயர்ந்த மெய்யறிவு. ஸ்வாபாவிகே- ஆத்மாவின் இயற்கை அறிவு. கேசரீ- பரந்து விரிந்த தியானம். சிவாவஸ்தா- சிவத்தின் அவஸ்தை நிலை. பரந்து விரிந்த தியானமே சிவநிலையையும் மெய்யறிவையும் தரும்.
6.ஒருவரை குருவே வழிநடத்த முடியும்.
குரு- யோக நெறியில் முன்பே பயிற்சி பெற்றவர். உபாய- வழி. குரூர்+உபாயா= குருருபாய= குருவே வழியாவார். குருவழியாக கடவுளின் சைதன்யம் ஒரு மாணவனை அடையும். மந்திரம், யோகம், தந்திரம், தத்துவம் ஆகிய எல்லாச் சித்திக்கும் குருவே வழியாக இருப்பது மரபு.
7.எழுத்தோசைப் பட்டியல் மெய்யறிவு தரும்.
சக்கரம்- வரிசை. மாத்ருகா சக்ரம்- தாய்ச் சக்தியைத் தனக்குள் கொண்டிருக்கும் உயிர், மெய், உயிர்மெய் எழுத்து வரிசையாகும். ஸம்போதா- குருவழியில் சென்றால் எழுத்து ஓசைகள் மந்திர ஓசையாக மலர்ந்து பலன் தரும். எழுத்தோசைகளும் தத்துவங்களும் கீழே உள்ளது.
க1, க2, க3, க4, ங |
பஞ்சபூதம் |
ச1, ச2, ஜ1, ஜ2, ஞ |
பஞ்ச தன்மாத்திரை |
ட1, ட2, ட3, ட4, ண |
கன்மேந்திரியம் |
த1, த2, த3, த4, ந |
ஞானேந்திரியம் |
ப1, ப2, ப3, ப4, ம |
அந்தக்கரணம் மற்றும் சீவன் |
8.எழுத்தோசைப் பயன் அறிந்தோர்க்கு அவர் உடலே வேள்விக்குரிய ஹவிஸாகும். ஹவிஸ்- வேள்வியில் போடும் பொருள்கள். எழுத்தோசையின் மாத்ருகா சக்தியை உணர்ந்து பயிற்சியடைந்த யோகியின் உடல், யோகமாகிய வேள்வியில் சொரியப்படும் அவிர்பாகம் ஆகும்.
9.யோகிக்கு அவன் பெற்ற அறிவே உணவாகும். சமாதி நிலையடைந்த யோகிக்கு பசியும் உணவும் தேவையில்லை. உலகியல் அறிவு குறைவுடையது. அந்த அறிவை இழந்து மெய்யறிவு உண்டாகும்.
10.புதிய பேரறிவு வந்ததும் சுத்த வித்யாவான அவரிடம் கனவுகள் போல பல புதிய ஞானத்தை தரிசிக்கலாம். வித்யாஸம்ஹாரே- உலகியல் அறிவு அழிவது. ஸம்ஹாரம்- தெய்வீகமான அறிவு தானே தோன்றும்.
சக்தி/ஞான யோக பாக்களின் தொகுப்பு:-
1. மந்திரத்தை தியானிக்கும் சித்தம் அம்மந்திர சக்தி மயமாகும்.
2. முயற்சியே சாதகம் எனப்படும்.
3. ஞான மயமான உடலைப் பெறுவதே மந்திரத்தின் மறை பொருளாகும்.
4. மாயா சக்திகளின் காரணமாக மனம் திருப்தியடையாது, தெளிவற்ற கனவாக உணரும்.
5. பரந்து விரிந்த தியானமே இயற்கையான மெய்யறிவைத்தரும் சிவ நிலையாகும்.
6. குருவே வழியாக இருந்து ஸித்தி அருள்வார்.
7. எழுத்தோசைப் பட்டியலே மெய்யறிவைத் தரும்.
8. யோகமாகிய யாக குண்டத்தில் யோகியின் உடலே அவிர்ப்பாகமாகும்.
9. யோகி தன் அறிவையே உணவாக உண்பான்.
10.பழைய அறிவு மறைந்து மெய்யறிவு தோன்றும். எல்லாம் கனவு போல் காட்சி தரும்.
&&&&&&