gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

புதன்கிழமை, 15 March 2023 09:03

பித்ருக்கள் வழிபாடு!

ஓம்நமசிவய!


களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும்
மற்றவன்தாள்நண்ணுவதும் நல்லார் கடன்!


#*#*#*#*#

 

19.பித்ருக்கள் வழிபாடு!

 

முண்டம், தண்டம், பிண்டம் என மூன்று வகை.

அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் முன்னோர்களை நினைத்து நீராடி முடியை களைந்து வழிபடுதல் முண்டம்.

கங்கையில் நீராடி விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் வழிபடுவது தண்டம்

நதி அல்லது கடலில் நீராடி முன்னோருக்குப் பிடித்த பண்டங்களைச் செய்து வாழை இலையில் படையலிட்டு பக்கத்தில் மூன்று உருண்டைகளை வைத்து அதில் எள்ளும் தண்ணீரும் விட்டு வழிபடுதல் பிண்டம். இம்முறையே மிகவும் சிறப்பானது.

தாய், தந்தையர் உலக வாழ்வை நீத்த தினத்தன்று புத்திரன் செய்யும் சிரார்த்தத்தைவிட அந்த மனிதப் பிறவிக்கு நன்மை அளிக்கக்கூடியது வேறு எதுவும் இல்லை. அமாவாசை, மாதப்பிறப்பு, சூரிய, சந்திர கிரஹணங்கள், மற்றும் மஹாளயபட்சம் எனப்படும் மகத்தான புண்ணிய காலங்களில் செய்யும் தர்ப்பணம், தானம் ஆகியவற்றால் பித்ருக்கள் அளவற்ற திருப்தியும் ஆனந்தமும் அடைகின்றனர். அந்த திருப்தியும் ஆனந்தமுமே உலகில் காலம் தவறாத மழையாகவும் பசு, தன, தான்ய அபிவிருத்தியாகவும் மக்களுக்கு கிடைக்கின்றது.

பித்ருக்களுக்கு என்ன செய்ய வேண்டும்!

உலகில் பிறக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் மூன்று கடமைகளுடனே பிறக்கின்றன. கல்வியறிவைத் தந்து அகக்கண் திறந்த ரிஷிகள், பருவத்தில் மழை பொழியவைத்து பயிர் வளம் பெருக்கி உயிர்களின் உணவிற்கு வழி வகுக்கும் தேவர்கள், ஒவ்வொருவரின் வம்ச பரம்பரையை வளர்த்து அறத்தைக் காப்பாற்றி சங்கிலித் தொடர்போல் வாரிசுகளை நிலை கொள்ள அருள்பவர்களான பித்ருக்கள் ஆகியவர்களை நினைவில் இருத்தி, அவர்கள் மூவருக்கும் பணிவிடை செய்தல் சிறப்பு.

ஒரு ஆத்மா தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு செயலில் சித்த சுத்தி அளித்து பிறப்பின் இலக்கை தடையின்றி எட்டவைத்து மகிழும் தன்மைக்கு உதவி புரிபவர்கள் இவர்கள். இவர்களை அன்றாட அலுவல்களில் ஆத்மாவிற்கு ஒத்துழைக்கும் நபர்களுடன் சேர்த்து விடக்கூடாது. அவர்களை வியாபார நோக்கில் பார்க்கக்கூடாது.

பிரம்மாவின் படைப்பில் முதலானது பித்ருக்கள். பிறகு தேவர்கள், மனிதர்கள். மனிதர்கள் இறந்தபின் பித்ருக்கள் வரிசையில் சேர்த்து உயர்ந்த நிலையில் வைக்கின்றது வேதம். எனவே பித்ருக்களுக்கு நேரடையாக ஏதும் அளிக்க இயலாது. பித்ருக்கள் நித்ய பித்ருக்களான வஸுருத்ர ஆதித்தியர்களுடன் இருப்பதால் நாம் அளிப்பது அவர்களுக்குச் சென்று அவர்கள் மூலமாக பித்ருக்களுக்குச் சொல்லும். இதனால் பித்ருக்கள் திருப்தி கொள்வர்.

இறந்த முன்னோர்களுக்கு சிரத்தையுடன் நீத்தர்கடன் செய்யப்படுவதால் சிரார்த்தம் என்றழைக்கப்படும். சிரார்த்தம் விட்டிலும் அதற்கென்று இருக்கும் சிறப்பு இடங்களில் செய்யலாம். சிரார்த்த கருமங்களுக்கு எள், தர்பை உபயோகிக்க வேண்டும். எள் முக்கியமான தூய்மையான தான்யம். கருப்பு எள்ளினால் சிரார்த்தம் செய்தால் பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவர். தர்பை ஆகாயத்திலிருந்து தோன்றியது என்றும் இதன் ஒரு முனையில் பிரம்மாவும் மறுமுனையில் சிவனும் நடுவில் விஷ்ணுவும் வாசம் செய்வதாக ஐதீகம்.

இறைவனுக்கு படைக்கப்படும் பொருட்கள் சூட்சும வடிவில் அவரை சென்றடைவதைப்போல் சிரார்த்தத்தில் நாம் அளிப்பவை எல்லாம் சூட்சுமமாக பித்ருக்களை அடையும் என்கிறது வேதம். மஹாளயபட்சத்தில் பித்ருக்கள் பூமியில் 15 நாளுக்கு வாசம் செய்வார்கள். அப்போது சிரார்த்தம் செய்வது சிறப்பு. அப்போது பூனூல் இடமாக இருக்க வேண்டும். தேவர்களுக்கு பணிவிடை செய்யும்போது வலமாகவும் சித்தர்களுக்கு பணிவிடை செய்யும்போது மாலையாகவும் பூனூல் இருக்க வேண்டும் என்பதே சாஸ்திரம்.

பித்ருக்களின் ஆராதனை தினமும் நடத்தலாம். தினமும் நீராடியவுடன் தேவர்களுடன் சேர்த்து பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்யலாம். தர்ப்பணம் என்றால் திருப்தி படுத்துதல் என்று பொருள். பித்ருக்களின் செல்களிலிருந்து உருப்பெற்றவர்கள் அவர்களின் வாரிசுகள். மூன்று தலைமுறை செல்களில் தொடர்பு அதிமாக இருப்பதால் ஆராதனைக்குப் போதுமான நெருக்கத்துடன் இருக்கும். அதன் பிறகு பிருக்கள் செல்களின் தரம் நெருக்கம் குறையும். பித்ருக்களின் ஆராதனையிலும் பித்ருக்கள் திருப்தி அடைவர்.

#*#*#*#*#

 

ஓம்நமசிவய!


ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!


#*#*#*#*#

 

18.முன்னோர்களின் பெயரும், மூன்று உருண்டை சாதம் வைப்பதும் ஏன்!


கரு தோன்ற மூலகாரணம் ஆணிடமுள்ள தாது-சுக்கிலம் எனும் இந்த தாதுவில் 84 அம்சங்கள் உள. எனவே ஒரு மனிதனின் கர்மத்தினை 84 பகுதிகளாய் பகுந்திருக்கின்றனர் முன்னோர்கள். ஒரு கரு உருவாக அதில் 1/3=28 தந்தையின் அம்சங்கள் மற்றும் ஆண் அருந்தும் நீர், உணவு ஆகியவற்றால் தோன்றுகிறது. மீதி 56 கூறுகளில், பாட்டனாரின் 21 கூறுகளும், முப்பாட்டனாரின் 15 கூறுகளும், 4ம் வழி தந்தையின் 10 கூறுகளும், 5ம் வழி தந்தையின் 6 கூறுகளும், 6ம் வழி தந்தையின் 3 கூறுகளும், 7ம் வழி தந்தையின் 1 கூறும் இருப்பதாக கொள்கின்றனர். ஒருவரது கர்மம் தனது ஏழாவது வாரிசுக்கு செல்லும்போது தான் முற்றிலும் தீர்க்கப்படுகின்றது.

இந்த கூறுகளே ஓர் ஆன்மாவின் உடலுக்கும், அமைகின்றது. அவர்களின் செயல்கள், எண்ணங்கள், குணங்கள், நடவடிக்கைகளின் சாயல்கள் சில, பல அதற்குள்ளே இருக்கின்றது. எனவேதான் நாம் இவர், இன்னார் சாயல், இன்னார் குணம், இன்னார் செயல் கொண்டிருக்கின்றது எனக் குறிப்பிட்டு சொல்கின்றோம். நம் முன்னோர்களின் நடை, பாவணைகள், செயல்கள், நம் உடம்பில் உள்ளத்தில் தோன்றி நம்மை அவ்வாறே இயங்க வைக்கும்போது, அவர்கள் செய்த கர்மவினைகள் நம்மை ஏன் தொடராது என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். நம்மை மீறிய செயல்கள் நடக்கும் போது, கர்மவினை! என் விதி! என நம்மில் பலர் புலம்புவதை காண்கின்றோம். முன்னோர்களிடமிருந்து அவர்களின் மகன், மகனின் மகன் என வழி வழியாய் பழக்கங்கள் நம் தாய் தந்தைவழி நம்மிடம் வருகின்றது.

எனவேதான் எல்லா முக்கிய மான காரியங்களுக்கும் நாம் நம் உடம்பில் அதிக பங்களித்த முன்னோர்கள் மூவரை நினைத்தும் சாட்சியாகவும் கொண்டு செயல் படுகின்றோம். அதிக அளவில் தந்தை-28+பாட்டனார்-21+முப்பாட்டனார்-15=64 அம்சங்கள் தருவதால் அவர்கள் நினைவாக பிண்டம் கொடுக்கிறோம். அதாவது முப்பாட்டனார்(15), பாட்டனார்(21), தந்தை(28) மூவரின் பெயரையும் பயன்படுத்துகின்றோம்.

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 08:58

ஆடிச்சீர் ஏன்!

ஓம்நமசிவய!


யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!


#*#*#*#*#

 

17.ஆடிச்சீர் ஏன்!


ஒரு பெண் ஆடி மாதம் கருத்தரித்தால் அப்பெண்னிற்கு குழந்தை சித்திரையில் பிறக்கும். அது சித்திரை அக்னி நட்சத்திர காலம் என்பதால் வெயிலின் தாக்கம், பிறக்கும் குழந்தையை பாதித்து, வெப்ப சம்பந்தமான நோய்கள் அப்பெண்ணையும் பாதிக்கும் என்பதாலேயே பெண்கள் ஆடியில் கரு தரிப்பதை தவிர்க்க ஆடி சீர் என்று நம் முன்னோர்கள் ஏற்படுத்தி பெண்ணை பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைக்க செய்தனர்.

எனவே சித்திரையில் சீமந்தம் செய்தல், பெண் பார்த்து பேசி வைத்தல், நிச்சயதார்த்தம், உபநயனம் செய்தல், திருமண ஏற்பாடுகளைச் செய்தல், பேச்சு வார்த்தை நடத்துதல் பொன்றவற்றைச் செய்யலாம்.

#*#*#*#*#

ஓம்நமசிவய!

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!


#*#*#*#*#

 

16.அக்னி நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை!

 

பஞ்ச பூதங்களில் நெருப்பு மட்டுமே தன்னிடம் சேரும் பொருளை அதன் உருவை மாற்றி தானாக மாற்றிக் கொள்ளும் சிறப்பான தன்மையுடையது. இதனால் யாகம் மற்றும் ஹோமங்களில் அக்னி முதன்மையாக கருதப்படுகின்றது. மேலும் அக்னி யாகத்தில் இடப்படும் அவிர் பாகத்தை உரியவர்களிடம் (பித்ரு தேவர்கள், அதி தேவதைகள்) சேர்க்கும் பிரதி நிதியாகவும் செயல் படுகின்றது.

அவிர்பாகத்தை அதிகமாக உண்டு அவதிப்பட்ட அக்னி நட்சத்திரகாலத்தில் அந்த அகினிக்கு உதவியாக இருக்க வேண்டி சில காரியங்களைச் செய்யாமல் இருக்க நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.

இக்காலத்தில் செடி கொடி மரங்களை வெட்டுதல், மட்டை நார் உரித்தல், கிணறு குளம் தோண்டுதல், விதை விதைத்தல், விவசாய நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்பு பணிகள் செய்தல் கூடாது. பூமி பூஜை செய்தல், விவசாயப் பணிகள் ஆரபித்தல், கிரகஹப் பிரவேசம் செய்தல், புது வீட்டிற்கு பால் காய்ச்சுவது, முடி காணிக்கை செலுத்துதல், காது குத்தல், ஆகியவற்றை தவிர்க்கவும். குருவிடம் தீட்சை எடுத்துக் கொள்ளக்கூடாது.

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 08:48

திருமண இணைப்பு!

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.


#*#*#*#*#

 

15.திருமண இணைப்பு!

 

12 வயதிற்குட்பட்ட பெண்களை கன்யகா என்பர். அதற்குமேல் பூப்பெய்திய பெண்ணை ரஜஸ்வலா என்பர். பூப்பெய்திய பெண்ணை தந்தையானவர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். பெண்ணுக்கு தன் விருப்பம்போல் சுதந்திரமாக கணவனைத் தெரிந்தெடுக்கும் உரிமை உண்டு.

இருபக்க பெற்றோரும் தேர்தெடுத்து, உற்றோர் ஆசிகூற தந்தை மகளை ஆபரணங்களால் அலங்கரித்து சீலமுள்ள வரனுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது-பிரம்ம விவாஹம்

தந்தை மகளை ஆபரணங்களால் அலங்கரித்து யாகம் நடந்து கொண்டிருக்கும்போது ருத்விக்கு யாகதட்சனையாக கொடுப்பது-தைவம்

மணக்கப்போகிறவன் நேரில் வந்தோ அல்லது உறவினர் மூலம் பெண் கேட்கப்பட்டால், மணமகனை பூஜித்து நீங்களிருவரும் தர்மத்தை குறைவில்லாமல் அணுஷ்டிக்க ஆசீர்வதித்து தன் பெண்ணைக் கொடுப்பது –ப்ராஜாபத்யம்.

மணமகனிடமிருந்து ஒரு காளையையும், பசுக்களையும் மற்றப் பரிசுப் பொருட்களையும் வாங்கிக்கொண்டு தன் பெண்ணை முறைப்படி மணம் செய்து கொடுப்பது –ஆர்ஷம்.

மணமகன் மணப்பெண்ணுக்கும் அவளது முக்கிய உறவினர்களுக்கும் தன்னால் இயன்ற தனத்தை கொடுத்து அல்லது தந்தை பணம் பொருளுக்கு பெண்ணை விற்று விடுவது- விவாஹம் செய்வது- ஆசுரம்.

மணப்பெண்ணும் மணமகனும் ஒருவரையொருவர் விரும்பி தாங்களே கணவனும் மனைவியுமாக வாழ்வது - மணம் புரிவது- காந்தர்வ விவாகம்
போட்டியில் வெற்றி பெற்று அல்லது பலவந்தப் படுத்தி பெண்ணை அவளது உறவினர்களிடமிருந்து கவர்ந்து சென்று அவள் விருப்பமின்றி மணம் புரிவது-ராக்ஷஸ விவாகம்.

பெண்ணை ஏமாற்றியோ, உறங்கும்போதோ, மயங்கி கிடக்கும்போதோ அவள் அறியாமல் திருட்டுத்தனமாக மனைவியாக்கிக் கொள்வது –பைசாசம்

தர்மம் நான்கு கிளைகளாகப் பரவி, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் அறிஞர் பெருமக்கள் மதிக்கப்படும் உத்தமமான தேசத்திலிருந்து நல்ல குணவதியான பெண்ணை அடைய வேண்டும்.

திருமணம் நல்ல நாட்களில் நல்ல நேரத்தில் மங்கல வாத்தியம் முழங்க நடைபெற வேண்டும்.

திருமணம் என்றதும் உள்ளம் குதூகலிக்கும். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடும்போது அதன் ருசிமட்டுமே தெரியும். பின்னர் வயிற்று வலி ஏற்படும்போதுதான் அதன் தன்மை புரியும். திருமண உற்சாகம் எதிர்கால சிந்தனைகளைத் தோற்று விக்காது. பொறுப்பற்ற நிலையில் நடந்த திருமணத்தின் எதிர்காலம் பொறுப்பைச் சுமக்கும் குடும்ப வாழ்க்கையாகும். கண்முன்னே தோன்றும் பெண்ணின் அழகு, சீர் வரிசைகள், நண்பர்களின் பரிகாசம், உறவினர்களின் மகிழ்ச்சி, மற்றவர்களின் வாழ்த்துக்கள் எல்லாம் கொண்ட திருமணகால சந்தோஷம் என்றும் தொடராது. குடும்ப வாழ்க்கையில் குழந்தைகள் பிறந்து அவர்களின் வளர்ச்சிக்காக நினைவு கொள்ளும்போதுதான் அப்போதைய நேரமும் சூழலும் தெரியவரும். அந்த நேரம் கர்மவினைகளின் நிர்ணயமாகும்.

வசிஷ்டர்- அருந்ததி, அகத்தியர்- லோபாமுத்ரை, யாக்ஞவல்யர்- மைத்ரேயி, கச்யபர்- அதிதி ஆகிய ரிஷி தம்பதியினரும், துஷ்யந்தன் –சகுந்தலை, நளன்- தமயந்தி, அஜன்-இந்துமதி போன்ற அரச தம்பதியினரும் தாம்பாத்திய இணைப்பின் செழிப்பில் மகிழ்ச்சி கொண்டவர்கள். அக்னி ஸ்வாஹாவை தன்னுடன் ஐக்கியப்படுத்தியும், பெருமாள் தன் மனைவி இலட்சுமிக்கு மார்பில் இடம் கொடுத்தும், சிவனோ தன்னில் பாதி கொடுத்தும் அர்த்தநாரீஸ்வராக புகழ் பெற்றார். தம்பதியரின் மன ஒற்றுமைக்கு அவர்களின் உடல் நெருக்கத்தை சிறப்பாக சொல்கின்றது புராணங்கள். அறம் ஆற்ற திருமணத்தில் ஒன்றாகும் தம்பதியினர் பிரிவு கொண்டால் அங்கு அறம் அல்லல் படுவதை அனுபவ வாயிலாக கண்டிருக்கின்றோம்.

திருமணத்தை அறம் என்ற நோக்கில் வரவேற்று ஏற்றுக்கொள்ளவேண்டும் திருமணம் ‘இல்லறமே நல்லறம்’ என்ற பொருள் கொண்டது. பொதுவாக அழகு, மற்றும் திறமையுடன் கூடிய அழகு கொண்ட ஆண் அல்லது பெண் ஆகியோரிடம் ஆணவம் தோன்றுவது இயல்பு. அந்த ஆணவம் மேலோங்கினால் அகங்காரமாகி திருமண இணைப்பைத் துண்டிக்கும். எனவே திருமண இணைப்பை பாதுகாக்க அறமும் அடக்கமும் இரு பாலரிடையே வேண்டும். பிறவி என ஒன்றிருந்தால் வரும் பிறவிகளில் இவரே என் கணவன் என்று ஓர் பெண்ணுக்கும், இவளே என் துணைவி என்று ஓர் ஆணுக்கும் தோன்றும் வகையில் இல்லறம் பரிமளிக்க வேண்டும். திருமண இணைப்பு மகிழ்வான வாழ்க்கைக்கு தேவையான ஒன்று என்பதால் அதன் பெருமைகளைப் பேணிக் காத்து அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தினர் முன்னோர்.

பிரிக்க கூடாத ஒன்றைப் பிரிக்கும் துணிவுடன் தங்களது செயல்பாடுகள் இருக்கும் வண்ணம் ஒரு ஆணோ / பெண்ணோ தன் செயல்களில் செயலாக்கம் கொள்ளக்கூடாது. தொடர் வண்டியான ஆண் பெண் உறவு துண்டிக்கப்பட்டால் அந்த வாழ்க்கைக்கு தீமைகளே அதிகம். திருமணத்தில் ஆணும் பெண்னும் இணைவது சேர்ந்து வாழ்வதற்காக. வாழ்நாள் பூராவும் இணந்திருப்பதற்காக சேர்ந்தவர்கள் இடையில் பிரிவதென்றால் அது சரியன்று. அதற்கு ஆரம்பத்தில் சற்று யோசித்து இணையாமலே இருந்திருக்கலாம். இணைந்தபின் எக்காராணத்தை முன்னிட்டும் பிரிதல் கூடாது. பிரிதல் என்ற நினைவே தவறானது. பிரிவு ஏற்படும் எண்ணங்களைத் தவிர்த்து வாழ்க்கையை சீர்படுத்த பெரியோர்களின் ஆலோசனைகளை நாடவேண்டும்.

குறைகளை மறக்கும் மனோபாவம் வளர்க்க வேண்டும். எதையும் மன்னிக்கும் மனப்பக்குவம் வேண்டும். விட்டுக் கொடுக்கும் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். இரு கூறுகளான ஆணும் பெண்ணும் இணைந்தால்தான் முழுமை என்பதை உணரவேண்டும். இணைவது இயற்கையின் தூண்டுதல் மட்டுமல்ல, இயற்கையோடு இணைந்து வாழப் பழகுவதே வாழ்க்கையின் தத்துவம் என்பதை புரிதல் வேண்டும். கணவனோடு இணைந்து வாழ்வது நமது நாட்டின் உயர்ந்த பண்பாட்டின் அடையாளம். வாழ்வில் ஏற்படும் துயரங்களை சந்திக்க இருமனங்களின் சங்கமத்தின் தோன்றும் மகிழ்வே உதவும். அந்த மகிழ்விற்கு மனங்களின் சங்கமத்திற்கு தாம்பத்திய இணைப்பு வலுவாக இருத்தல் அவசியம்.

திருமண இணைப்பு என்பது சிற்றின்பத்திற்காக மட்டுமல்ல அதற்கு மேலான அலாதியான வாழ்க்கைப் பாதையின் இன்ப உணர்வுகளுக்கு என்பதை ஆத்மாக்களே புரிந்து செயல் படுங்கள்.

ஆணின் குறையை மறைத்தும், ஏற்கனவே திருமணமான பெண் என்ற உண்மையை மறைத்தும் திருமணம் செய்வித்தல் கூடாது.

அக்னியை வலம் வந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் ஏன்!

மணமகளின் வலது காலை அம்மி மீது வைத்து மணமகன் மெட்டி அணிவிப்பார். இல்லற வாழ்வின் இருகண்களில் ஒன்றான கற்பில் நான் இந்தக் கல்லைப் போல் உறுதியாக இருப்பேன் என்று மணமகளும், மற்றதான ஒழுக்கத்தில் என் மனம் காற்றில் ஆடும் இலைபோலில்லாமல் இந்தக் கல் போன்று நிலையாக இருக்கும் என மணமகனும் உறுதி கூறுவது ஆகும். இதுவே அம்மி மிதித்தல் நிகழ்வு.

சப்த ரிஷி மண்டலத்தில் இருக்கும் வசிஷ்டரின் பத்தினி அருந்ததி. அவரை விட்டுப் பிரியாமல் வானத்தில் கூட அவருடன் இருக்கும் பேறு பெற்றவள் அருந்ததி. அவளைப் போன்றே கற்பிலும், பெருமையிலும் சிறந்து விளங்க வேண்டும், கணவனை ஒருநாளும் பிரியக்கூடாது என்பதை உணர்த்தவே அருந்ததி பார்த்தல் நிகழ்வு.

மேலும் வாழ்க்கையில் 1. உணவுக்கு எந்த விதமான குறைவும் வராமல் இருக்கவும், 2. உடல் ஆரோக்கியமும் வலிமையும் கிடைக்கவும், 3. விரத காலங்களில் மன உறுதியும் கட்டுப்பாட்டையும் அருளவும், 4. சுகமும், மன அமைதியும் இல்வாழ்வில் நிறைந்திருக்கவும், 5. இல்லத்தில் பசுக்கூட்டமும், தானியங்களும் மிகுந்திருக்கவும், 6. தங்களது இல்லம் பல நல்ல உயிர்களுக்கு புகலிடமாக விளங்கி இல்லற தர்மத்தை கடைபிடித்து விருந்தோம்பி வாழவும், 7.இதுவரை இணைந்து நடந்த நாம் இனி இனிய நண்பர்கள், நம் வாழ்வில் நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை இணைந்து அனுபவித்து எந்த கணத்திலும் நாம் பிரியாமல் இருக்கவும் இறைவனை பிரார்த்தித்து வேண்டுதலே அக்னியை வலம் வருதல் நிகழ்வு.

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 08:45

திருமணம்-அறுபதாம் கல்யாணம்!

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!


#*#*#*#*#

 

14.திருமணம்-அறுபதாம் கல்யாணம்!

 

20 வயது- ஒரு உயிர் தன்னை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை

20-40 வயது வாழ்வின் உச்சத்தை தொடத் துடிக்கும் துடிப்பான வாழ்க்கை

40-60 வயது பெறுப்பான குடும்ப வாழ்க்கை

60 வயதிற்குமேல் உயிர்கள் மனதிற்கு பிடித்தமான தெளிவான வாழ்க்கை

அறுபதிற்கு மேலான வாழ்வில் ஒவ்வொரு ஆரோக்கிய நாளும் உயிர்களுக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.

ஆதிபௌதீகம், ஆதிதைவீகம், ஆதிஆத்மீகம் என்கிற இயற்கை, தெய்வ குற்றம், தன் செயல்களால் ஏற்பட்ட பாவகாரிய பலன்கள் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தன்னை காத்துக் கொள்ளவும், 59, 60, 61, 70 வயது துவக்கம், 78துவக்கம், 80நிறைவு, 100 ஆண்டு நிறைவு ஆகிய காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளைச் செய்து கொள்ள புராணங்கள் வலியுறுத்துகின்றன. அதாவது இதுவரையில் வாழந்த கட்டாயங்களினால் வாழ்க்கையில் நடைபெற்ற தவறுகளுக்கு வருந்தி குடும்ப பாரத்தை இறக்கிவைத்து ஒரு நல்ல ஆத்மாவாக மாற உறுதி எடுத்துக்கொள்ளுதலே இதன் சிறப்பு.

கலியுகத்தில் உயிர்கள் 120வயது வரை வாழ இயற்கை வழிவகுத்துள்ளது. அதன் படி முதல் அறுபதில் லௌமீக-கர்ம வாழ்க்கை வாழ்ந்து கடமைகள் முடிந்து அடுத்த அறுபதிற்குள் அடிஎடுத்து வைத்து தர்ம வாழ்க்கையை ஆரம்பிக்க முயலவேண்டும்.

இதை உறுதி செய்யவே அறுபதாம் கல்யாணம் நடைபெறுகின்றது. அதனால் ஒரு உயிர் தான் நிறைவான கர்ம வாழ்க்கை வாழ்ந்ததை அறிவிக்கின்றது. கர்மத்தின் காரணமாக தான் செய்த பாவங்களுக்கு வருந்தி பரிகாரம் செய்து மனதை சுத்தமாக்கிக் கொள்கின்றது.. இனிமேல் தர்ம வாழ்க்கை வாழ உறுதி பூண்டு தன் கூட இருந்த மனைவியை மீண்டும் மணந்து இவ்வளவு காலம் கடமைகளினால் தரமுடியாத சூழ்நிலையில் மனைவியின் தியாகங்களை நினைந்து இனிமேல் நல்ல வாழ்வை தருவதற்கு உறுதி கொள்கின்றனர்.

பிடிப்பு-பற்றுதல்!

ஒவ்வொரு திருமணத்தின் முடிவில் மணமகன் கையில் மணமகள் கையை வைத்து அல்லது சுண்டு விரலை கோர்த்துவிட்டு துண்டில் கட்டி திருமண மேடையைச் சுற்றி வரச் செய்வார்கள். இந்த நிகழ்வு ஏனென்றால் நீ சிறியவள். உன்னால் வரும் எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல், விவேகம் ஆகியன இல்லை. நீ என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தால் எந்தச் சந்தர்பத்திலும் அதிர்ச்சியில் கையை விட்டு விடுவாய். நீ தடுமாறும் போது உடனடியாக என்னால் உன்னை தாங்கி பிடிக்க முடியாது. ஆனால் நீ என் கையைப் பிடித்துக் கொண்டால் நீ தடுமாறினாலும் நான் உன்னைப் பிடித்திருப்பதால் உனக்கு எந்த துன்பமும் ஏற்படாது. எல்லா நிலையிலும் உன்னை நான் பாதுகாப்பேன் என்று அர்த்தமாகும். மேலும் இது சிவனுள் சக்தி அடக்கம் என்கின்ற தத்துவத்தை உணர்த்துவதாகும்.

உயிர்களாகிய நாம் இறைவனைப் பற்ற வேண்டியதில்லை. இறைவன் நம்மை எப்போதும் பற்றிக் கொண்டிருக்கின்றான் என்று நம்புங்கள். அந்த பிடிப்பே உங்கள் வழ்க்கை முழுவதற்கும் பயன்படும். அதைவிடுத்து சிறு குழந்தைபோல் என்னால் முடியும் என நினைத்து இறைவன் உங்களைப் பற்றியிருப்பதை தவிர்த்து நீங்கள் இறைவனை பற்ற ஆசைப்பட வேண்டாம்!

#*#*#*#*#

 

புதன்கிழமை, 15 March 2023 08:43

உயிரினங்கள்மீது!

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வனவ பகர்முன்னவாம் பரமே போற்றி!


#*#*#*#*#

 

13.உயிரினங்கள்மீது!

 

இயற்கையின் பிறப்பில் உயிருள்ள புல் பூண்டுகளைத் தேவையின்றி வெட்டித் தள்ளுதல், பிடுங்குதல் ஆகியன உயிர்க் கொலைக்குச் சமம்.

பறவைகள், விலங்குகள், மீன், பாம்பு ஆகியவற்றைப் பிடித்து அடைத்து வைத்திருப்பது, எளியவர்களின் செல்வத்தைக் கவர்ந்து தன் முன்னேற்றத்திற்குப் பயன் படுத்துவது, தெய்வ காரியத்திற்காக வைத்திருந்த பொருட்களை கவர்வது, பொய் பேசுவது, சிறு ஜந்துகள். பறவைகள், பூச்சிகள் ஆகியவற்றைக் கொல்வது ஆகிய செயல்கள் ஒருவனைத் தன்னைத்தானே அசுத்தப்படுத்தி அவனின் புண்ணியத்தைக் கெடுக்கும் செயல்கள்.

மற்ற உயிர்களைத் துன்புறுத்தாமலும், கொல்லாமலும் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்தால் அந்த உயிருக்கு அளவற்ற சுகங்களை இப்பூவுலகிலும் தேவர்கள் உலகிலும் அனுபவிப்பான். மாறாக துன்பம் விளைவிப்பவன் பலபிறவிகளில் கொடிய நோய்களினாலும், வறுமையினாலும், உற்றார், உறவினர்களால் இகழப்பட்டும் பலவித துன்பங்களை அனுபவிப்பான்.

பிறருக்கு தீங்கு விளைவிக்காத பசு, காளை, மான், யாணை, பறவை போன்றவைகளை வதை செய்பவன் அடுத்த பிறவியில் பார்வையற்ற குருடர்களாகவும் பிறர்காண விரும்பாத குஷ்டநோயினால் பீடிக்கப்பட்டும், அற்ப ஆயுளில் மரணமெய்தும் குழைந்தைகளைப் பெற்றும், காம வெறியினால் பிற ஆடவர்களிடம் செல்லும் பெண்களை மனைவியாகவும் அடையும் பாவிகளாக பிறவி எடுத்து துன்புறுவர். வேம்பு, வில்வம், அரசு, ஆலம், நாகலிங்கம், துளசி மற்றும் செழித்து வளர்ந்த மரங்கள் ஆகியவற்றை வெட்டுபவர்கள் உடல் குறைபாடுகளுடன் சரீரத்தில் துர்நாற்றத்துடன் பிறவி எடுத்து துன்புற்றும், இளம் வயதில் விபத்தில் சிக்கி அவயவயங்களை இழந்தும், துன்புறுவர்-கருட புராணம்.

#*#*#*#*#

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.


#*#*#*#*#

 

12.ஆசாரியர்,உபாத்தியாயர்,குரு/ரிஷி,மகாகுரு/மகரிஷி!

 

உயர்ந்த நிலை யக்ஞம், வித்தை, உபநிஷதம் ஆகியவற்றின் உள்ளார்ந்த ரகசியங்களைக் கற்பிப்பவர் ஆசாரியர் எனப்படுவார்.

வாழ்க்கையில் வேத விதிப்படி தொழில் செய்ய கற்றுத் தருகிறவர் உபாத்தியாயர்.

மாணவனைத் தன்னுடன் தங்கவைத்து அன்னமளித்து போஷிப்பவர் குரு/ ரிஷி ஆவார்.

அக்னி ஹோத்ரம், யாக சம்ரட்சனம் ஆகியன சொல்லிக் கொடுப்பவர் மகாகுரு/ மகரிஷி எனப்படுவார். எல்லா சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர். வேதங்கள், தர்மங்கள், நியாயம், தர்மம் எல்லாம் தெளிந்து புரிந்தவர்.

ஆச்சாரியார்- பிரம்மாவிற்கு சமமானவர், பிதா-பிரஜாபதி, மாதா-பிருத்வி-மண்மாதா, அண்ணன்- ஆத்ம மூர்த்தி, ஆகிய இவர்களை அனாதையாய் விடக்கூடாது. பிதாவைப்போல் பிதாவின் பெறிய சிரிய சகோதர்களையும் உயர்வானவர்களாக கருத வேண்டும்.

கற்றுத் தேர்ந்தபின் தன் சொந்த முயற்சியால் தனத்தைச் சேகரிக்க வேண்டும் எப்படி வேண்டுமானாலும் சேமிக்கலாம் என்றில்லாமல் தர்ம வழிகளில் சேமிக்க வேண்டும். சொந்தமாகத் தனம் பெற்று குருவிற்கு தட்சினை கொடுக்க வேண்டும். குரு தட்சணை கொடுத்தால்தான் தான் கற்றது முழுமையான பலனைத் தரும். தனம் இல்லையென்றால் இல்லறம் கேள்விக்குறியாகி விடும்.

எந்த மனிதனும் அவன் நடத்தையின் மூலம்தான் உயர்வாகக் கருதப்படவேண்டும் என்கிறது புராணங்கள். வேதங்கள் படித்தால் மட்டும் போதாது அதன்வழி நின்று செயலாக்கம் வேண்டும்.

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 08:39

பெண்களிடம் நிலைப்பாடு!

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!


#*#*#*#*#

 

11.பெண்களிடம் நிலைப்பாடு!

 

அம்மா, அக்கா, பெண் ஆகியோருடன் ஒரே ஆசனத்தில் அமரக்கூடாது.

பிறர் மனைவி பிறபெண்கள் ஆகியோரை தன்னைப் பெற்ற தாயாகவும் உடன் பிறந்த சகோதரியாகவும் நினைக்கும் தூய மனமுடையவனுக்கு மறு பிறவியில் கணவனே கண்கண்ட தெய்வம் என்று வணங்கும் கற்புக்கரசி மனைவியாக வாய்த்து மனைவி தரக்கூடிய அனைத்து இன்பங்களையும் தடையில்லாமல் அளித்து மகிழ்ந்திருப்பாள்.

மாதா, பிதா, குரு இவர்களை மகிழ்ச்சியாய் வைத்திருக்க எல்ல பலன்களும் கிட்டும். இவர்களின் அனுமதியுடன்தான் தவம், விரதம் முக்கிய காரியங்களை மேற்கொள்ள வேண்டும் இவர்களே 3 உலகங்கள், 3 ஆஸ்ரமங்கள், 3 அக்னிகள். (கர்ப்பத்தீ-அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே, தட்சிணாக்கினி- பிதா-பின்னை இட்டத்தீ தென் இலங்கையிலே, ஹோமத்தீ-ஆச்சார்யர் கடவுள் அழைக்கும்போது சொல்லும் ஹோமத்தீ.) முழு மனதுடன் இம்மூவரையும் ஆராதிப்பவன் தனது செயல்களில் வெற்றி அடைவான்.

தாயிடம் கொண்ட பக்தியினால் பிறவி இன்பத்தையும், தந்தையிடம் வைக்கும் பக்தியினால் மறுமையில் சொர்க்கமும் குருவிற்கு சேவை செய்தால் பிரம்மலோக பேரானந்தத்தையும், பசுவை பூஜிப்பதால் ஐச்வர்யங்களையும், துன்பப்படும் பிறருக்கு உதவுவதால் நீண்ட ஆயுளும் ஒருவன் அடைகின்றான் –மனுதர்ம சாஸ்திரம்.

ஒரு பெண்ணை ஒரு முறைதான் திருமணம் செய்து கொடுக்க முடியும். மணமான பெண்ணைக் கவர்ந்து செல்பவன் கொள்ளையனாகக் கருதப்படுவான்.

பெண்களையும் குழந்தைகளையும் விற்பவனுக்கு விமோசனம் என்ற நற்கதி கிட்டாது.

தன் மனைவி மக்களை நிராதரவாக தவிக்க விட்டு சந்நியாசி ஆனவனுக்கு இறையருள் கிட்டாது. அப்படிப்பட்டவன் அடுத்து வரும் பல பிறவிகளில் மனித பிறவி அல்லாத மற்ற பிறவிகளை எடுத்து அந்த பாவத்தை போக்க வேண்டும்.

சுந்தரமான குணவதியான பெண்ணை மணந்து கொள்ள வேண்டும். முப்பேறுகளான தனம், தர்மம், காமம் இவற்றை நடத்த மனைவியும் தர்மமும் இருந்தால்தான் வாழ்க்கையின் அர்த்தம் முழுமையாகும். ஒருவனிடம் வித்தை வரலாம். மற்றவை வராது. பூர்வ ஜன்ம புண்ணியத்தினால் தானம் கிடைக்கும். இந்த ஜன்மத்தில் புண்ணியம் செய்ய முடியும்.

தர்மமும் புண்ணியமும் இரண்டற கலந்து வாழ்வில் நிற்கும். பறவை பறக்க இரு சிறகுகள் கட்டாயம் தேவை என்பது போல மனைவி இல்லாமல் ஒருவன் செய்யும் தர்ம காரியங்கள் பலனைத் தராது.

மனைவி கணவனின் பாதி. புருஷன் அவளைக் கண்மணிபோல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

குடும்பம் ஒரு தெய்வீக விருட்சத்திற்கு ஆதாரம். அதனால்தான் திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்பர். அந்த ஆதார சக்தி மனைவியே! விருட்சத்தின் ஆணிவேரும் அவளே. குடுபத்தில் உள்ள அனைவரும் வாழ்வில் குறையில்லாமல் இருக்க தன் வாழ்க்கை சுகங்களைத் தியாகம் செய்பவள் மனைவியே. விருட்சத்தில் விளையும் கனிகளான குழந்தைகளைத் தருவதும் மனைவியே. பராசக்தியின் அம்சமான அவள் தாய் எனப் போற்றப்படுவாள். எனவே குடும்பத்தில் பெண்களை மரியாதையுடனும் அன்புடனும் நடத்த வேண்டும்.

#*#*#*#*#

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!


$^$^$^$^$

 

10.உத்தமர்கள் யார்! நற்குணங்கள்! ஒழுக்கம்!

 

கணவனின் கட்டளைக்கு பணிந்து நடக்கும் மனைவி,
தாய் தந்தையின் உள்ளத்தை மகிழ்விக்கும் மகன்,
தன்னுடைய சுகதுக்கம்போல் அடுத்தவன் சுகதுக்கத்தை நினைக்கும் நண்பன்.

நற்குணங்கள்.

பிராணிகளைக் கொல்லாமை,
உண்மையே பேசுவது,
எளியோரிடம் இரக்கப்படுதல்,
பிராணிகளிடம் அன்பு,
இறைவனிடம் பக்தியுடன் தளரா நம்பிக்கை
பெறியோர், மூத்தோரிடம் பணிவு,
பெற்றவர்களை ஆதரித்தல்,
அனைவரிடமும் நட்புடன் இருத்தல்,
மூதாதையர்களை வணங்குதல்,
அரசின்மேல் பக்தி,
கஷ்டங்களில் மனம் தளராமை,
கற்க வேண்டியதை தெளிவாக நுட்பமாக கற்றல்,
தூஷனை சொல்லாமலிருப்பது
வம்பு பேசாமலிருத்தல்
காம, குரோத, லோபங்களைத் தவிர்த்தல்.

ஆகியன ஒவ்வொரு ஆத்மாவும் கடை பிடிக்க வேண்டிய நற்குணங்களாகும்.

ஒழுக்கம்

நேரம் அறிந்து மகிழ்ச்சி அடைதல், நேர்மையாக லாபம் ஈட்டல், அதற்கான முயற்சியில் ஈடுபடுதல் ஆகியன 3வகை ஒழுக்கங்களாகும்

வீட்டிற்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று நீர்கொடுத்து உபசரித்தல் நன்மை. பெண்களாயிருந்தால் அவர்கள் திரும்பிச் செல்லும்போது பெண்கள் மஞ்சள், குங்குமம் கொடுப்பது சிறப்பு.

வீட்டில் தூசி, ஒட்டடை சேரவிடக்கூடாது. அடைசல்கள் இன்றி வீடு சுத்தமாக இருக்க வேண்டும். பகலில் குப்பைகளை வீட்டில் குவித்து வைப்பது கூடாது. இரவில் குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது.

வீட்டு வாசல் படியில் இருந்து கொண்டு யாருக்கும் எதுவும் தரக்கூடாது. கொடுப்பவரும் வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே அல்லது கீழே இறங்கி வாங்குதல் / கொடுத்தல் வேண்டும்.

இறைவன் கொடுத்ததே போதும் என்ற மனத்திருப்தியுடன் வழ்ந்தால் சுகமும், நிம்மதியும் தேடிவரும். நமக்கு என்ன வேண்டும் எதை, எப்போது கொடுக்க வேண்டும் என்பதை இறைவன் அறிவான். இந்த உண்மைதனை உணர்ந்து அனைத்து ஆசைகளையும் தவிர்த்து தன் வருமானத்திற்குள் வாழ்க்கையை நடத்திச் செல்லும் மனிதன் அதிக சோதனைகளுக்கு ஆட்படாமல் பிறவி என்ற வாழ்க்கைப் பயணத்தை எளிதில் பயணித்துவிடுவான்.

$^$^$^$^$

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26928858
All
26928858
Your IP: 52.90.40.84
2024-03-28 16:48

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg