குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: உளம் ஒன்றிய செயல்கள் நல்ல பலன்!
உளம் ஒன்றிய செயல்கள் நல்ல பலன்!
உளம் ஒன்றிய செயல்கள் நல்ல பலன்!
வீடு கட்டும் நிறுவனத்தில் அவர் மேஸ்திரியாகப் பணியாற்றி வந்தார். குறித்த நேரத்தில் சென்று குறித்த காலத்தில் வேளைகளைச் சீராக செய்து நல்ல பெயர் எடுத்திருந்தார். ஒருநாள் தனக்கு வயது ஆகிவிட்டது என்று நினைத்தார். இனிமேல் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் எனநினைத்து அதை தன் முதலாளியிடம் சொன்னார். ஒரு நல்ல திறமையான நேர்மையானவர் பணியிலிருந்து நிற்பது என்பது முதலாளிக்கு வருத்தத்தைக் கொடுத்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டவர் மனதில் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு இன்னும் கொஞ்ச நாள் .அந்த ஒரு கட்டுமானத்தை முடித்துவிட்டு நீங்கள் தாராளமாக ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்றார். ஒப்புக்கொண்ட மேஸ்திரி எப்போதும் போல தன் பணியைத் தொடர்ந்தார்.
அந்த புதிய விட்டின் கட்டுமானத்தை செய்யும்போது இந்த கட்டிடத்துடன் தான் வேலையை விட்டு நிற்கப்போகின்றோம் என்ற எண்ணம் அவருள் தோன்றியதால் அவரால் தன் முழுக்கவனத்தை கட்டிடத்தின் மேல் முன்புபோல் செலுத்த முடியவில்லை. சின்ன சின்ன குறைகளுடன் கட்டிடப் பணி பூர்த்தியானது.
கட்டிடம் முடிந்ததும் முதலாளியிடம் சென்று தான் அடுத்த நாள் முதல் நின்று கொள்வதாகக் கூறியபோது, நீங்கள் இதுவரை விசுவாசமாக என்னிடம் வேலை பார்த்ததிற்கு பலனாக நீங்கள் கடைசியாக கட்டின வீட்ட உங்கள் பெயருக்கே பதிவு செய்துவிட்டேன். இந்தாருங்கள் என்று பத்திரம் மற்றும் சாவியை முதலாளி கொடுத்தார். சிறிது இன்ப அதிர்ச்சி அடைந்த மேஸ்திரி, இந்த வீடு எனக்கு என்று முன்பே தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். வேலை விட்டு நிற்கப் போகின்றேன் என்று ஏனாதானோவென்று கட்டி விட்டேனே என்று மனதில் நினைத்து வருந்தினார். .
தன் வேலையில் உளம் ஒன்றி செய்ததற்காகக் கிடைத்த பலனில் அவர் உளம் ஒன்றாமல் செய்ததே பரிசானது. பல உயிர்கள் இந்த நிலையைத்தான் மேற்கொள்கின்றன. நம் வாழ்க்கையை நாமே வடிவமைக்க கடவுள் பல சந்தர்ப்பங்களை சுற்றுச் சூழல்களை ஏற்படுத்திக் கொடுத்த போதும் அதை புரிந்து கொள்ளாமல் அலட்சியத்துடன் நம் வாழ்க்கையை.நாமே சரியாக கட்டமைப்பதில்லை. ஏனோ தானோ என்று இருந்துவிட்டு பின்னாளில் இப்படி ஆகுமென்று தெரியாமல் போய்விட்டதே என்று புலம்புவது வேடிக்கையானது.
எந்தச் செயலாக இருந்தாலும் அதில் மனம் ஒன்றி நல்ல நினைவுகளுடன் திறம்பட செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருந்து செயலாக்கம் கொண்டால், நல்லதை செய்தோம், நல்லது நடந்துள்ளது என்று மனம் நிறைவுகொள்ளும் அளவிற்கு நற்காரியங்கள் நடைபெறும். எதையும் மனம் ஒன்றி செயலாற்றுங்கள்-குருஸ்ரீ பகோரா.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.