gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை

Written by

சமாதி(அ)மெய்மறந்த உணர்வு நிலை
அடிப்படை ஏதுமின்றி மனம் முழுவதும் ஒரே அலை வடிவமாக இருந்து இடம், மையம் இவற்றின் உதவியின்றி எண்ணத்தின் கருத்து மட்டும் நிலைத்து இருப்பது சமாதியாகும். ‘நானே பிரம்மம்’ என்ற கருத்து மறைந்து அதுவே உண்மையாகிவிட்ட அனுபவமே சமாதி. இந்திரியங்கள் எதிலும் ஈடுபடாமலும் மனம் அங்கும் இங்கும் அலையாமலும், துன்பங்களை நீங்கி இன்ப நிலையை அனுபவிப்பது சமாதி. நிர்மலமான இதயத்தை அடையும்போது சமாதி நிலை ஆரம்பிக்கின்றது. முக்தி, - துரியம் – சமாதி எல்லாம் ஒரே நிலைப்பாடுதான். அதுவே ஜீவன் முக்தியாகும். மனத்தின் (உள்குட) ஆகாசம் பிரபஞ்ச மகா ஆகாசத்துடன் கலந்து ஒன்றாகும் போது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைகிறது.
12பிராணாயாமம்-1பிரத்தியாகாரம், 12பிரத்தியாகாரம்-1தாரணை, 12தாரணைகள்-1 தியானம், 12தியானம்- 1சமாதி ஆகும். மனத்தை ஒரு பொருளின்மீது 12 நொடிகள் நிறுத்தினால் அது தாரணை என்றும் அப்படி 12 தாரணைகளைக் கொண்டது ஒரு தியானம் (144 நொடிகள்) என்றும் அப்படி 12 தியானங்களைக் கொண்டது ஒரு சமாதியாகும்.(1728 நொடிகள்-28 நிமிடம் 48 நொடிகள்)
பிராணாயாமம், ஆசன வகைகளால் சமாதியை அடைய முடியாது, உடல் ஆரோக்கியத்திற்கும் குண்டலினி சக்தியை உயிர்த்தெழவும் செய்வதற்கானவை. தியானத்தல் மட்டுமே சமாதி நிலையை அடைய முடியும். பிரத்தியாஹாரத்தைச் செய்து விட்டுத்தான் தாரணை ஆரம்பிக்க வேண்டும். தாரணை, தியானம், சமாதி ஆகிய மூன்றும் இராஜயோகத்தின் இறுதில் உள்ளது. இவைகள் ஒன்று முடிந்து மற்றது தொடர்வதாகவே இருக்கும். இந்த மூன்றிற்கும் ‘ஸம்யமம்” என்று பெயர்.
மூச்சை நிறுத்தி அபானன் உயிர்காற்று உள்ளே சொல்லாவிடில் உடலின் உள்ளே ஆக்ஸிடேஜன் என்ற செல் எரிப்பு நிகழ்வு நிகழாமல் செல்கள் இறக்க நேரிடும். எனவே மூச்சை அடக்குவது என்றால் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுவது தெரியாமலும் காற்று செல்லும் பாதையில் உள்ள உறுப்புகள் சிறுத்தும் பின் பெருத்தும் மாறுவது தெரியாமல் இருப்பது என்பதாகும். மனத்தின் விருத்திகள் அடங்கினால் மூச்சும் அடங்கும்.
காலை உதயத்திற்குமுன் எழவேண்டும் என்ற கருத்து தோன்றினால் இரு மலைகளுக்கிடையில் சூரியன் சிவப்பாக அழகாக மேலெழுவது, ஒளி மிக லேசாக உலகின்மேல் பரவுதல். பறவைகள் ஒலிகொடுத்துப் பறப்பது, காலக் கடன்களை முடிப்பது, குளிப்பது, குளித்து உணவருந்தி அன்றையப் பணியைச் செய்ய கிளம்புவது என்ற நினைவுகளுக்கிடையில், குளியலறையில் இருக்கும் பிரச்சனைகள், குழாய் நீர்பிரச்சனைகள், உணவு என்றதும் வீட்டிற்குரிய பொருள்கள் பற்றிய நினைவுகள் எல்லாம் நன் மனதில் விரியத் தொடங்க மனம் தயாராக இருக்கின்/றது. இந்த எண்ணங்களே விருத்தி என்பதாகும். இவை வெளியே தோன்றாதபோது மூச்சும் அதுபோல அடங்கும் என்பதாகும். நமக்கு வெளி உலகம் போல் நம்முள்ளே உள் உலகமும் உள்ளது. பிரளயத்திற்குப்பின் பிராணன் ஆகாசத்துடன் சேர்ந்து உருவாண பொருள்கள் வெளி உலகில். எல்லாப் பொருள்களையும் ஒருவன் அறிவதில்லை. சில பொருள்களைப்பற்றிய கருத்துக்களை அறிந்தவன் மனதில் அவைகள் ஓர் உலகமாக சுழன்று வருகின்றது. அந்தப் பொருளைப் பார்த்தால், நினைத்தால் அந்தப் பொருளுக்கும் அவன் மனதிற்கும் ஓர் தொடர்பு ஏற்படுகிறது. அதை பற்றி அவன் தியானித்தால் அந்தப் பொருளின் மற்ற எல்ல விவரமும் அவன் கருத்துக்குள் வரும்.
இதுபோலவே கடவுளைப் பற்றி கேட்ட நாம் அவர் இருக்குமிடத்தை எல்லாம் நினைத்து தியானித்தால் அந்த இடம் சென்று மனம் கடவுள் பற்றிய எல்லாம் அறியும். இந்த நிலையே சமாதி. எனவே கடவுளை மட்டும் நினைத்து தியானம் செய்ய மற்றவை பற்றிய நினைவுகளை அழித்தால் நம் மனத்தின் விருத்திகளும் குறையும். விருத்திகள் இல்லா நிலையே சமாதிக்கு வழிகாட்டும்.
நம்பிக்கை கொள்ளும்போதும், தெய்வ சக்திகளைத் தெரிந்து கொள்ளும்போதும் நம் உடலில் பிராணன் அதிகமாகும். அதுபோல் விருத்திகள் குறைந்து மனம் அடங்கும்போதும் பிராணன் அதிகமாகும். இப்படி அதிகமாகும் பிராணன் சக்தி உடல் உயிர் வாழ்விற்கு சமாதி காலத்தில் துணையாயிருக்கின்றது. இறந்த கால நிகழ்வுகள், எதிர்கால கற்பனைகள் இல்லாததால் பிராணன் உடம்பில் அதிகம் சேருகின்றது.
சமாதி நிலைக்குச் சென்ற ஒருவரை பஞ்சபூத சக்திகளின் அசைவுகளால் எழுப்பமுடியாது. தாமாக அவர்கள் விழிப்பு நிலைக்கு வந்தால்தான் உண்டு. சமாதி நிலையை அடைந்தவர்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள். உடலின் மனம் மூளையோடு உள்தொடர்பு கொள்ளாத நிலையில் அவை உடல் பற்றிய உணர்வை கொள்வதில்லை. அப்போது உடல் சமாதி நிலையை அடையும்.
உணர்வோடு கூடிய செயலைவிட உயர்ந்த ஒரு நிலையில் மனம் செயல்பட்டு உணர்வைத் தாண்டி செல்ல முடியும். உணர்வற்றச் செயல்கள் உணர்வு நிலைக்குக் கீழே இருப்பதுபோல் உணர்வுக்குமேல் ஓர் செயல் இருக்கின்றது. நான் என்ற அகங்காரம் அங்கில்லை. அது இருப்பதெல்லாம் மனத்தின் நடுநிலையில்தான். இந்நடுநிலையைக் கடந்து மேலோ, கீழோ இருக்கும்போது நான் என்ற எண்ணம் கிடையாது. அது இல்லாமல் மனம் செயல்படும். உணர்வு நிலையைக் கடந்து மனம் உயர்ந்த நிலைக்குச் செல்லும்போது சமாதி அல்லது பேரின்ப உணர்வு என்கிறோம்.
ஒரு மனிதன் ஆழ்ந்து உறங்கும்போது உணர்வு நிலைக்கு கீழே சென்று விடுவான். மூச்சு விடுவான். உடல் அசையும். உடலில் செயல்கள் நிகழ்கின்றன. ‘நான்’ என்ற எண்ணமற்ற நிலையில் இவைகள் நடைபெறுகின்றது. அவனிடம் உணர்வு இல்லை. தூக்கத்திலிருந்து அவன் விழிப்பு நிலைக்குத் திரும்பி வரும்பொழுது, எவன் தூங்கினானோ அவனாகவே வருகிறான். தூங்குவதற்குமுன் அவனிடமிருந்த அறிவு முழுவதும் அவனிடமே உள்ளது. அது கொஞ்சமும் அதிகமாகவில்லை. அனுபவமும் ஏற்படவில்லை.
ஆனால் ஒருவன் சமாதி நிலைக்குச் சென்றிருந்தாலும், சமாதி நிலையிலிருந்து விழிப்பு பெற்றாலும் அவன் ஓர் ஞானியாக திரும்புகிறான். அவனின் அறிந்த அறிவும் அனுபவமும் அதிகம்.
ஒரு நிலையில் எவ்வாறு உள்ளே நுழைந்தானோ அவ்வாறே வருகிறான். இன்னொரு நிலையில் அனுபூதி பெற்று ஞானியாக வருகிறான். தோற்றமும் பொழிவும் மாறுகிறது. சமாதி நிலையிலிருந்து வரும்போது உண்டாகும் ஞானம், உணர்வற்ற நிலையில் கிடைக்கும் அறிவையும் மனத்தின் உணர்வு நிலையில் ஆரய்ந்து கிடைக்குக் அறிவையும்விட மிகவும் உயர்வானது. உணர்விலும் உயர்ந்த சமாதி நிலை ஆகும்.

யோகி அடையாளம் பற்றி கீதையில்
“எவன் எவ்வுயிரிடத்தும் பகைமை இல்லாதவனாய், நட்புப் பூண்டவனாய், கருணை உடையவனாய், ‘என்னுடைய’ என்ற எண்ணம் இல்லாதவனாய், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய் கருதுபவனாய், பொறுமையுடையவனாய், எப்போதும் மகிழ்சி பெற்றிருப்பவனாய், யோகத்தில் விருப்பமுடையவனாய், மனத்தையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பணம் செய்தவனாய் உள்ளவன் எவனோ, அவனே எனது பக்தன்.”
“எவனிடமிருந்து உலகம் துன்பம் பெறுவதில்லையோ, எவன் உலகத்திடமிருந்து துன்பம் அடைவதில்லையோ, எவன் மகிழ்சி, சினம், அச்சம், மனக்கிளர்ச்சி இவற்றினின்று விடுபட்டவனோ அவன் எனக்குப் பிரியமானவன். எவன் எதையும் விரும்பாதவனாய், தூயவனாய், சுறுசுறுப்பு உடையவனாய், துன்பம் வரினும் இன்பம் வரினும் பொருட்படுத்தாதவனாய், ஒரு பொழுதும் துயரப்படாதவனாய், தனது நலனைப் பெருக்குவதற்கான முயற்சியை விட்டவனாய், இகழ்சியையும் புகழ்சியையும் சமமாகக் கொள்பவனாய், மௌனியாயும், ஆழ்ந்த சிந்தனையுடையவனாயும் இருப்பவனாய், கிடைத்தைக் கொண்டு திருப்தியுற்றுக் களிப்புடன் இருப்பவனாய், வீடு வாசல் இல்லாதவனாய், உலகமே தன் வீடு என்று நினைப்பவனாய், தன் கொள்கையில் திடச்சித்தம் உள்ளவனாய் இருக்கிறனோ, அவனே எனக்குப் பிடித்த பிரியமான பக்தன்.”

“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.

   

1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை

                                   ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879611
All
26879611
Your IP: 44.221.43.208
2024-03-19 10:35

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg