திருமூலர் சித்தர்
எல்லா சித்தர்களுக்கும் முதன்மையானவர். இயற்பெயர் சுந்தரநாதர். அகத்தியரிடம் சீடராயிருந்து அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப் பெற்றவர். குருவின் ஆலோசனையின் பேரில் கயிலை சென்று நந்தியம் பெருமானிடமும் சிவ பெருமானிடமும் உபதேசம் பெற்றவர். அகத்தியரின்மேல் கொண்ட அன்பால், அவருடன் சில காலம் தங்க கயிலையிலிருந்து தென் திசை நோக்கி வந்தார்.
வழியில் கேதாரம், பசுபதி, நேபாளம், காசி (அவிமுத்தம்விந்தமலை) திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, திருவதிகை வீரட்டானம் ஆகிய தலங்களில் வழிபட்டு அங்குள்ள சிவ யோகியர்களைக் கண்டு மகிழ்ந்தார்.
திருவாவடுதுறை இறைவனை வழிபட்டு சொல்லும் வழியில் காவிரிக்கரையில் ஆட்டிடையன் கர்ம யோகத்தின் வழி உணர்ந்து பாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒருகருநாகம் அவனைத்தீண்ட மண்ணில் விழுந்து மாண்டான். பசுக்கூட்டங்கள் கண்ணீர் சிந்தி வருந்துவதைக் கண்டார். சாத்தனூரில் ஆனிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் பசுக்களை மேய்க்கும்போது தன் விதி முடிந்த காரணத்தாலோ அல்லது சுந்தரநாதரின் வாழ்வின் மாற்றம் ஏற்படவோ, உயிர் நீங்கி இறந்து கிடந்தான். அவனைச் சுற்றி சுற்றி வந்தன பசுக்கள். பசுக்களின் துயர் துடைக்க ஓர் எண்ணம் உண்டாக தம் உடலை மறைவாக ஓரிடத்தில் கிடத்திவிட்டு பரகாயப் பிரவேசம் என்ற முறையில் கூடு விட்டு கூடு பாய்தல் செய்து தம் உயிரை இடையனின் உடம்பில் புகச் செய்தார். மூலன் எழுந்ததும் பசுக்கள் சதோஷமடைந்து இறையை தேடி உண்டது. நீர் பருகச் செய்தபின் பசுக்கள் பழக்கம் காரணமாக சாத்தனூரை நோக்கிச் செல்ல இவர் பின் தொடர்ந்தார்.
பசுக்கள் அதனுடைய இடம் செல்ல மூலனின் மனைவி அன்புடன் வீட்டிற்கு அழைக்க மூலனின் வடிவில் இருந்த சிவயோகியர் நான் உன் கணவனில்லை என்று கூறி அருகில் இருந்த இடத்தில் அமர்ந்தார். மனைவி ஊர் பெரியோர்களைக் கூட்டிவர அவர்களிடம் நடந்ததைக் கூறினார். எல்லோரும் காட்டைநோக்கி நடந்தனர். சிவயோகியர் தம் உடலைத் தேடிச்சென்றார். சிவனின் அருளால் அது மறைக்கப்பட்டிருந்ததால் மரப்பொந்தில் அவர் உடல் இல்லை. அது உமை வாகனமான சிம்மம் எடுத்து போயிற்று. வேறு வழி தெரியாமல் திருவிடைமருதூருக்கு சென்று ஓர் மரத்தடியில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தார். ஊர் பெரியவர்கள் இவர் பொய் சொல்லவில்லை ஆனால் உடல் இல்லை என்ன செய்வது என குழம்பினர். அவர் முகத்தில் தோன்றிய ஒளி அறிந்தவர்கள் அவர் கூறியதை ஏற்றனர். மூலனின் மனைவிக்கு ஆறுதல் சொன்னார்கள்.
ஓர் ஆண்டிற்கு ஒரு பாடலாக மூவாயிரத்திற்கு அதிகமான பாடல்களைப் பாடினார்.
திருமூலர் கிரந்தகம் 8000, சிற்ப நூல் 1000, சோதிடம் 300, மாந்திரிகம் 600, சல்லியம் 1000, வைத்தியகாவியம் 1000, வைத்திய கருக்கிடை 600, வைத்திய சுருக்கம் 200, சூக்குமஞானம் 100, பெருங்காவியம் 1500, கோர்வை வீதி 16, தீட்சை விதி 8, தீட்சை விதி 18, யோகஞானம் 16, விதிநூல் 24, ஆறாதாரம் 64, பச்சைநூல் 24, பெருநூல் 3000 ஆகிய நூல்களை அருளியுள்ளார்.
காலங்கி சித்தர், கஞ்சமலைச் சித்தர் மற்றும் 14 சீடர்கள் இருந்துள்ளனர்.
திருமூலர் சித்தர் தியானப்பூசைக்கு
“சித்து விளையாட்டில் சிறந்தவரே நந்தியின்
மாணாக்கரே சிவனுடன் கலந்தவரே, ஆயசித்தி
அனைத்தும் அறிந்தவரே, அபயம் அளிக்கும் அருளாளரே
திருவாவடுதுறைவாழ் மகத்துவமே உன்பாதம் சரணம்”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் திருமூலர் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து வில்வத்தால் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அகத்தியரின் நண்பரே போற்றி
அவதார புருஷரே போற்றி
ஆனிரை காப்பாளனே போற்றி
சகல சித்திகளை உடையவரே போற்றி
சித்தர்களில் முதல்வா போற்றி
சிவன் உபதேசம் பெற்றவரே போற்றி
நந்தீசர் மாணாக்கனே போற்றி
பரகாய பிரவேசம் செய்தவரே போற்றி
ஐஸ்வரியம் அளித்து ஜீவராசிகளைக் காப்பவரே போற்றி
வில்வ அர்ச்சனையை ஏற்பவரே போற்றி
நிவேதனமாக பொங்கல் இவற்றுடன் காவி வஸ்திரம் வைத்து வியாழக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
புத்ர பாக்யம் உண்டாகும். நல்ல பழக்கங்கள் தோன்றும். பிரமை வியாதி குணமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். நோய்கள் தீரும். வறுமை அகன்று வளமான வாழ்வாகும்.
“ஓம் ஸ்ரீ திருமூலர் சுவாமியே போற்றி”
******
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்
அகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்