ஓம் நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
யுகங்கள்-யுகதர்மங்கள்!
கிருதயுகம்- மக்கள் ஈசன் திருவடியை எப்பொழுதும் போற்றித் துதி செய்த வண்ணம் இருப்பர். தருமதேவதைக்கு நான்கு கால்கள். அனைவரின் வாழ்நாளும் ஒரே மாதிரியாக இருக்கும். பேதங்களின்றி மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர்.
திரேதாயுகம்- சிறந்த யாகங்கள் புரிவர். தரும தேவதை ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருப்பார். மழை நன்கு பொழிந்து மரம் செடி கொடிகள் நன்கு வளரும். காய் கனிகள் குறைவின்றி கிடைக்கும். பொன், பொருள், ஆடை, அணிகலன்கள் என்று ஆசைப்பட்டு மக்கள் கோபமுடன் சண்டையிடுவர். இளம் பெண்கள் இன்பமுடன் வாழ்வர்.
துவாபரயுகம்- மக்கள் கோபம், போட்டி, சண்டை, சச்சரவு என்றிருப்பர். தரும தேவதை இருகால்களை இழந்து இரண்டு கால்களில் நிற்கும். மக்கள் பாப புண்ணியங்கள் தெரியாமலும் தரும நெறியை அறிவதிலும் குழம்பித் தவிப்பர். வியாசர் தோன்றி வேதங்களை நான்காக பகுப்பார். புராணங்களை இயற்றுவார்.
கலியுகம்- மெய்ஞானம் விளங்கி மக்கள் தானம் புரிவர். தரும தேவதை ஒரு காலுடன் நிற்கும். அதர்மம் தலை தூக்கி இருக்கும். பொய், சூது, களவு, வஞ்சனை, கொலை, கொள்ளை ஆகியன தழைத்தோங்கும். வணிகர்கள், அந்தணர்கள், ஆளுநர்கள் பலவகை இன்னல்களுக்கு ஆளாகுவர். ஒழுக்கம் தவறி நடப்பர். வேதம் வேள்வியின்றி போகவாழ்வு வாழ முயற்சிப்பர். தர்மங்கள் நிலை குலையும். தீயவையும் அறியாமையும் மட்டுமே பெருகி இருக்கும்.
கலியுக பாவங்களுக்கு பரிகாரம் என்பது வேதங்களைப் படித்தல், தியானம், பிரார்த்தனை, யாகங்கள் செய்தல், தானங்கள் செய்தல் ஆகும்.
முடிந்த காலங்களில் நடந்தது என்ன! வெறுமனே செல்வமும் கல்வியும் அறநெறிகளையும் வளர்த்துக் கொண்டிருப்பதற்கு ஈடாக இன்றைய சிந்தனைகளை நாளைய செயல் திறன்களாக உருவெடுப்பதை உயர்த்துகிற தர்மமாக எதைச் செய்ய வேண்டும்! எதைச் செய்யக் கூடாது என்று சிந்தனை கொள்ளவேண்டும். இந்த நல்சிந்தனைகள் பழக்கமாக அமையவும் வாழ்வில் எதிர்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள உயிர்கள் தொடர்ந்து செய்துவரும் செயல்கள் உயிர்களுக்கு உதவுவதற்கும் இறை அடியேனுக்கு தெரிவித்த பாதையை உங்களுக்கு உணர்த்துவேன், யுகதர்மங்கள் எப்படி யிருந்தாலும் மக்கள் மெய்ஞானத்தில் நாட்டம் கொண்டு தங்களின் பிறவியை நன்னிலைப் படுத்த ஆன்மீக வழியில் பயனிக்க ஆன்மீக முறைகளை தெரிந்துகொள்ள உதவியாய் அமையட்டும் இந்தச் சிவம் பகுதி- குருஸ்ரீ பகோரா
சிவ வழிபாடு
சிவ 108-அஸ்டோதரா நாமங்கள்
சிவ 1008-நாமங்கள்
சிவ-நாமங்கள்-தலங்கள்
சிவ அஷ்டாஷ்ட திருஉருவங்கள்-64
சிவ சதாஷ்டகம்!
சிவ சமகம் / ருத்ர சமகம்!
சிவ தாண்டவங்கள்!
சிவ திருஉருவங்கள் 64 தவிர மற்ற.வை
சிவ திருஉருவங்கள் சிறப்பான 26
சிவ திருவிளையாடல்கள்!
சிவ நிர்வாணாஷ்டகம்!
சிவ பஞ்சாட்சார ஸ்தோத்திரம்.
சிவ பில்வாஷ்டகம்-வில்வாஷ்டகம்
சிவ லிங்கங்கள்
சிவ லிங்காஷ்டகம்
சிவ ஸித்தேஸ்வர அஷ்டகம்
#####