ஓம்நமசிவய!
பரமன் ஆகிய கணேசா போற்றி!
பாரதம் எழுதி பரூஉக்கர போற்றி!
மாரத அச்சொடி மதவலி போற்றி!
சித்தி யானை தன் பொற்பதம் போற்றி!
சச்சிதானந்த போகமே போற்றி!
காரணனே எம் கணபதி போற்றி!
சந்தியா தாண்டவ மூர்த்தி!
சிவபெருமானைக் கலந்து ஆலோசிக்காமல் அசுர்ர்களும், தேவர்களும், பிரம்மனும், திருமாலும் ஒன்/றுகூடி அமுத்த்தைப் பெற திருப்பாற்கடலைக் கடைவதென்று முடிவெடுத்து மந்தாரமலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி, பாம்பின் தலைப் பகுதியை அசுர்ர்களும் வால்பகுதியை தேவர்களும் பிடித்து கடையத் தொடங்கினர். மந்தார மலை உறுதியாய் நிற்காமல் நிலை பிறழ, திருமால் ஆமை வடிவம் கொண்டு அதனைத் தாங்கிப் பிடித்தார். வேகமாகக் கடைய வாசுகி வலியால் துடித்து ஆலகால நஞ்சைக் கக்கியது. திருமால் அதனால் கருகினார். தேவர்களும் அசுரர்களும் இப்போதிருக்கும் வாழ்நாளையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அப்போது சிவன் ஞாபகம் வர அனைவரும் ஒன்று சேர்ந்து அபயக் குரலில் அழைக்க வந்த சிவன் நிலையறிந்து அந்த நஞ்சினை சுந்தரர் எடுத்து தர விழுங்கினார். சிவன் சிறிது நேரம் கண்ணயர உமை உபசரிக்க அமரர் சிவனை அர்ச்சித்தனர். தேவர்கள் இரவு முழுவதும் கண்விழித்திருந்தனர். அந்த இரவே ஏகாதசி எனப்படும். இறைவனின் திருப்பெயரை அன்று இரவு முழுவதும் மற்றும் அடுத்த நாளும் போற்றிக் கொண்டாடினர். அந்நாளை நாம் துவாதசி என்கின்றோம். அதற்கு அடுத்த நாளான திரயோதசியில் சிவன் எல்லோரும் காண சூலத்தைச் சுழற்றி தாருகமேந்தி ஒரு ஜாமப்பொழுது ஆடினார். அக்காலத்தை வேத ஆகமங்கள் பிரதோசம் என்கின்றன.
நித்ய பிரதோசமான மாலையும் இரவும் கலக்கும் பொழுதில் திருக்கயிலையில் சிவன் நடனமாடுவார். அம்பிகை அருகிலிருந்து காண நடனம் செய்யும் கோலத்தில் இருக்கும் வடிவமே மாலைநேர நடன வடிவம். இத்திருக்கோலத்தை காண்பவர்கள் தங்களது பாவங்கள் தோலைந்து புதிய வாழ்வினைப் பெறுவார்கள்.
பிரதோச காலமும், மாலைநேர நடனக் கோலமும் உணர்த்துவது என்ன வென்றால் அனைத்திற்கும் மூலமான சிவனாரின் அனுமதியின்றி செய்யப்படும் எந்தக் காரியமும் நிறைவடையாது. இதனை கௌரி தாண்டவம், இலக்குமி தாண்டவம், ரட்ச தாண்டவம், சந்தியா தாண்டவம் என்பர்.
இறவனுக்கு எட்டு அல்லது நான்கு கைகள். வலக்கைகள் இரண்டில் துடியும், அபய முத்திரை / மயிலிறகு இஅக்கைகள் இரண்டில் பாம்பும், கஜ அஸ்தம் இருக்கும். இடப்புறத்தில் நந்தி மற்றும் கௌரி / திருமால் இருப்பர்.
இன்பக்காத்தல் செயலைக் குறிக்கும் மாலைநேர நடனமான சந்திய தாண்டவம். காட்சி: கூரம் (காஞ்சி), திருமழபாடி, திருப்பரங்குன்றம், எல்லோராக் குகை.
#####