gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வெள்ளிக்கிழமை, 08 September 2017 20:17

பிரமசிரச்சேத மூர்த்தி / பிரமசிரக்கண்டீசர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வாமமுறும் இருதோளும் வயங்கு கந்தபூர்வசர்
தாம் மகிழ்ந்து காக்க! ஏமமுறு மணிமுலை
விக்கின விநாசர் காக்க! இதயந் தன்னைத்
தோமகலுங் கணநாதர் காக்க!


பிரமசிரச்சேத மூர்த்தி / பிரமசிரக்கண்டீசர்!

 

பொன்மலை-மேருமலையின் சிகரத்தில் பிரம்மனும் திருமாலும் இருக்க தேவர்களும் முனிவர்களும் மும்மூர்த்திகளில் எல்லா உயிர்களிடத்தும் உறையும் முழுமுதற் கடவுள் யார் என்ற கேள்வியை எழுப்ப, ஆணவ முதிர்ச்சியின் காரணமாக நானே பரப்பிரம்மம் என பிரம்ம தேவன் கூறினான். மறுத்த திருமால் நானே உன்னை பெற்றவன் அதனால் நானே பரப்பிரம்மம் என்றார். வாதம் தொடந்து நடைபெற முனிவர்களும் தேவர்களும் அங்கிருந்து அகன்றனர்.
அப்போது வேதமும், பிரணவமும் வெவ்வேறு உருக்கொண்டு வந்து நீங்கள் இருவரும் வீணாக ஏன் வாதம் புரிகின்றீர்கள். சர்வ உலகங்களுக்கும் சிவபெருமானே பரம்பொருள் என்று கூறியதையும் அவர்கள் ஏற்கவில்லை. அவர்கள் சண்டையை நிறுத்த சிவன் ஜோதியுருவாய் காட்சி தந்ததை எதோ சுடர் என இருவரும் அலட்சியம் செய்தனர். ஜோதி நடுவே சிவபெருமான் உமையுடன் காட்சி கொடுக்க கண்ட திருமால் மெய்ஞானச் சுடர் சிவபெருமானே என அறிந்து வணங்கினார்.
மலரோனுக்கு தெளிவு பிறக்கவில்லை. ஆணவ மலம் அகலவில்லை. தன் நடுச்சிரத்தால் பெருமானை இகழ்ந்து பேச சிவபெருமான் சினமின்றி அமைதியாக பிரம்மனின் இறுமாப்பு அழியவும் மற்றவர்கள் தெளிவு பெறவும் வழி என்ன என்று சிந்திக்க அங்கே பைரவக்கடவுள் தோன்றினார். பிரமனின் ஐந்து தலைகளில் இகழ்ந்து பேசிய நடுச்சிரத்தை நகநுனியால் துண்டித்தார். அத்தலையை தன் கைகளில் ஏந்தியபடி பிரமனுக்கு உயிர்பிச்சை அளித்தார். தேவர் முனிவர் வாழும் இடங்களில் சென்று இரத்தப் பிச்சை ஏற்றார். இரத்தப் போக்கால் மயங்கி இருந்தோரை எழுப்பி ஆணவம் நீங்கி வாழ ஆசிர்வதித்தார்.
சிவபெருமான் அருள் பெற்ற பைரவர் மலரடி வணங்கி திருமால் வைகுந்தம் அடைந்தார். உறக்கத்திலிருந்து எழுந்தவன்போல் பிரம்மன் எழுந்து பைரவரை வணங்கி தன் அபராதம் பொருத்தருள வேண்டினான். நான்முகன் என நானிலத்தில் வாழ்வாய் என பைரவர் கூறிச் சென்றார்.
பைரவர்- அச்சுறுத்தும் போர்க்குரல் உடையவர் என்ற பொருளுடையது. வெண்ணிறத்தவர், நாற்கரத்தவர், வலக்கரங்களில் வச்சிரமும், கைக்கோடாரியும், இடக்கரங்களில் பிரம்ம கபாலமும் சூலமும் கொண்டு சுருட்டி உயர்த்திய தலை முடியுடன், புலித்தோலாடை, தோடு, மகரக்குழையுடன் இருப்பர்.
தானே பரப்பிரம்மம் என அகந்தைகொண்ட பிரம்மனின் நடுத்தலையை நக நுனியால் துண்டித்த பைரவக்கடவுளின் வடிவம் பிரம்ம சிரச்சேத மூர்த்தி. நிகழ்வு நடந்த தலம்: திருக்கண்டியூர். காட்சி: காஞ்சி கயிலாசநாதர் கோவில்

#####

Read 6535 times Last modified on புதன்கிழமை, 15 November 2017 04:54
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27038188
All
27038188
Your IP: 3.129.45.92
2024-04-19 04:28

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg