ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீக் களிப்பாம்.
மீண்டும் பிறவி! ஆவுடையார் என்றால் என்ன!
ஆத்மா ஈசனுக்குச் சொந்தமானது. ஆதனால்தான் ஆ என்ற ஆத்மாவை உடையவர் என்பதால்தான் ஈசனை ஆவுடையார் என்கின்றோம். ஈசனை அடைய வேண்டுமானால் அந்த உயிர் ஆத்மா மாசு மருவற்றிருக்க தூய்மையானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஈசனை சேரமுடியாது. ஆத்மாவை ஆணவம் என்ற மலம் பீடித்தால் அது மாசு அடைந்து விடும். அந்த மலம் நீங்கும் வரை அது மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துத்தான் ஆகவேண்டும். இதுவே மீண்டும் பிறப்பதின் ரகசியம். எனவே எல்லா உயிர்களும் ஆணவம் நீங்க முயன்று பிறவி பொருங்கடல் நீந்தி கரை சேர்வீர்.
இறைவன் உயிர்களைப் படைத்து அவை உடம்பு வழியாக வினைப் பயன்களை அனுபவிக்கச் செய்கின்றான். உலகத்தில் உழன்று தளர்ச்சியடையும் உயிர்களுக்கு சற்று ஓய்வு கொடுக்க உயிரை உடம்பிலிருந்து பிரித்து மீண்டும் புதியதாய் பிறக்க வைக்கின்றான். பிறவி பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்குட்பட்டது. பாவம் செய்தவர்கள் ஒன்று முதல் ஐந்தறிவு பிறவிகளாகவும், பாவம் செய்யாதவர்கள் சொர்க்கத்திற்கும், பாவம் புண்ணியம் சமமாக செய்தவர்கள் மானிடமாக ஆறறிவுள்ளவராகப் பிறப்பர். தேவர்கள் தங்கள் புண்ணியங்கள் தீர்ந்ததும் மீண்டும் மானிடராய்ப் பிறப்பர். செய்த வினைக்கு ஏற்ப வினைவட்டத்திலிருந்து தப்பிப் பிழைக்க புண்ணியங்கள் செய்திடல் வேண்டும்.
மூச்சுக் காற்றை ஒரே தடவையில் முழுமையாக உள்ளே இழுத்தால் நுரையீரல்கள் நிரம்பிவிடும். அதன் பிறகு இன்னும் கொஞ்சம் கொஞ்சம் என்று இழுப்பவர்கள் முதல் முறையில் முழுமையாக செயல்பட்டு மூச்சை உள்ளே இழுக்கவில்லை என்று அர்த்தம். உயிர்கள் மனதில் எண்ணங்களைப் பதியவைக்கும்போது எண்ணங்களின் தன்மையை உணர்ந்து அதற்கேற்றவாறு முழுமையாக பதிய வைக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அரை குறையாகப் பதித்துவிட்டு தோன்றும் போதெல்லாம் அதில் மாற்றங்களை செய்து கொண்டிருப்பதால் எண்ணங்களும் அது சம்பந்தப்பட்ட திட்டங்களும் முழுமையடைந்து முழு வெற்றியைத் தராது.
எல்லா உயிர்களிடமும் அன்பு கொண்டு நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் அந்த உயிருக்கு சாதகமாக வேறேதேனும் ஒரு வழியில் திரும்பிவரும் நல்ல பயன் விளையும். மாறான எதிர்மறை எண்ணங்களான கெடுதல் கொண்டிருந்தால் அது அந்த உயிருக்கு கெடுதலான வழி வந்து கெடுதல் புரியும். கெடுதல் கொண்டு தேடினால். அதுவே கிடைக்கும் உயிர்கள் நீங்கா.நினைவு கொண்டால் அதுவாகவே ஆகிவிடும் என்று வேதங்கள் சொல்கின்றன. கர்மா என்பது பழைய நல்ல+தீவினைகள் என்றாலும் இப்பிறவியில் உயிர்களின் எண்ணங்களே கர்மா ஆகிவிடும். எனவே கர்மா புண்ணியங்கள் நிறைந்த்தாக இருக்க வேண்டும். நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு தீவினைகள் குறைந்து வாழ்வில் நனமை பயக்கும்.
&&&&&