எங்களைப் பற்றி….
எங்களது கொள்கையும்…. குறிக்கோள்களும்…
குருஸ்ரீ பகோரா அனுபவித்து மகிழ்ந்த நிகழ்வுகளின் அனுபவம் எல்லோருக்கும் பயன்படவேண்டும், அனைத்து உயிர்களும் ஆரோக்கியத்துடன் ஆனந்த சந்தோஷத்தை அனுபவித்து வாழவேண்டும் என்ற குறிக்கோளுடன் 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நவபழனிகோ அறக்கட்டளை துவங்கப்பட்டு ஈரோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் 1558 எண்ணாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
எங்களைப் பற்றி….
அரசியல் சாராத வியாபாரத் தன்மையற்ற இந்த நிறுவனம், ஆன்மீகம், கல்வி, அறிவு, விளையாட்டு ஆகிய நோக்கங்கள் சம்பந்தப்பட்ட உதவிகள் மக்களுக்கு இலவசமாக கொண்டு சேர தொண்டு மனப்பன்மையுடன் செயல்படுவது என்ற உயரிய நோக்கம் கொண்டது.
மேலும் எந்த ஒரு நபரின் சுய தேவைகளைப் பூர்த்தி செய்யவோ, பெருள் சேர்க்கவோ செயல்படா நிலையில் இயங்கும் அமைப்பாகும்.
ஆன்மா வாழ்வில் சந்தோஷம்காண நிறுவனத் தலைவர் எழுதிய “சந்தோஷப்பூக்கள்” மற்றும் இதர நூல்களின் கருத்துக்கள் அனைத்து மக்களுக்கும் இலவசமாக போய்சேரவும், ஆன்மீகத்தை பரப்ப நோக்கங்கொண்டு தமிழில் தொகுக்கப்பட்ட விநாயகர், சிவன், அம்பாள், முருகன், விஷ்ணு, மகாலட்சுமி, சரஸ்வதி, ஆஞ்சநேயர்+ நவகிரகங்கள் துதிகள் அடங்கிய தனித்தனி தொகுப்புகள் சேர்த்தல், நீக்கல் இன்றி திருமண அழைப்புடனோ, திருமண நன்றி அறிவிப்பிற்கோ வேண்டுவோர் அனைவரும் இலவசமாக பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது.
அரிய மருத்துவத்திற்கு சிறப்பு சலுகை,
ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி,
வசதி குறைந்தவர்களுக்கு இலவச திருமண உதவி,
கலாச்சாரம் மேலோங்க சிறந்த வழிமுறை கூடங்கள்,
பள்ளி / கல்லூரி களில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு,
தொழில், விளையாட்டு, தொழிற் கல்வி சாலைகள் பயன்பாடு,
இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகாம்கள் நடத்துவது,
மரக்கன்றுகள் வளர்த்தல், நடுதல், பசுமைக்கு வழிகாட்டுதல்,
எல்லாதுறைகளிலும் நவீன ஆராய்ச்சி மையங்கள் - ஆகியவைகளை மேற்கொண்டு ஜாதி, மத, மொழி, இன வேறுபாடின்றி அகில உலக மனித சமுதாயத்திற்கும் பயன் தரக்கூடிய வகையில் சிறப்புற செயல்படுவது என்ற நிலைப்பாடுகளை கொண்ட அமைப்பாகும்.
ஆன்மா ஆரோக்கிய வாழ்வு வாழ தேக, மன, யோக, முத்திரைப் பயிற்சிகள் கற்று சீரான வாழ்வு முறைக்கு உதவிடல்,
ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பும் ஆன்மாக்களுக்கு உதவி புரிய தார்பாதை வரை படங்களுடன் கூடிய கோவில்கள் வழிகாட்டியாக செயல்படல்,
கால நிறைவில் ஆகம முறைப்படி உயர்ந்த, சிறந்த, மேலான நிறைந்த அதிர்வுகளுடன் கூடிய ஒப்பில்லாத நவீன “சிவநாராயணர்” தியானக்கூடம் அமைத்து ஆன்மாக்களுக்கு முக்தி, ஜீவன்முக்தி அடைய உதவிபுரிவது,
தூய மாசில்லா காற்று எல்லா உயிர்களுக்கும் கிடைக்க ஏதுவாக அதிர்வுகளுடன் கூடிய "மூலிகைகாற்றுவனம்” அமைப்பது ஆகியவை எங்கள் நோக்கம்.