அர்த்தகதி சக்ராசனம்-வளைவு நிலை- கடின தரம்-2
நற்பயன்கள்- இந்த ஆசனம் பக்கவாட்டத்தில் நல்ல வளைந்து கொடுக்கும் தன்மையை நமது முதுத்தண்டிற்கு அளிக்கின்றது. மேலும் கல்லீரலின் இயக்கத்தை மேன்மை படுத்துகின்றது.
1.கால்களின் பாதங்கள் அருகருகே இருக்குமாறு சேர்ந்து, கைகள் இராண்டும் தொடை அருகில் இருக்குமாறு நிற்கவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வலது கையை தலைக்குமேல் மெதுவாக தூக்கவும். கை காதை தொடுமாறும் கையின் பாதங்கள் இடது பக்கம் பார்த்த வண்ணமும் இருக்கட்டும்.
3.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இடது பக்கமாக மெதுவாக வளைந்து சாயவும். இடது கை இடது காலைத் தொட்டவாறு இருக்கட்டும்.மேலே உயர்த்திய வலது கை மடங்கக் கூடாது. அப்படியே சுமார் 1 நிமிடத்திற்கு இயற்கையாக நன்றாக சுவாசிக்கவும்.
4.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து சய்த்த வலதுகையை தலையுடன் நேரான நிலைக்கு வரவும்.
5.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் உயர்த்திய கையை கீழே கொண்டு வரவும்.
இந்த ஆசனத்தை இடது பக்க கையை உயர்த்தி வலது பக்கம் சாய்ந்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்.