நடராஜ ஆசனம்-சிதம்பர நிலை- கடின தரம்-3
நற்பயன்கள்- கூர்ந்து நோக்கும் திறனை அதிகப்படுத்தி அறிவின் வலிமையை மேம்படுத்தும். அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் முதுகுத்தண்டில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும்.மார்பு, இடுப்பு, கால்களில் உள்ள தசைகளைச் சரிசெய்து சரியான இயக்கத்திற்கு உதவும்.
1.இருகால்களையும் சேர்த்து கால்களின் முன்பாதம் சிறிது அழுத்தத்துடன் கைகள் இரண்டும் தொடைகளுக்குப் பக்கவாட்டில் இருக்குமாறு தடா ஆசனத்தில் நிற்க.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து இடது காலை மடித்து கனுக்காலை இடது கையால் பிடித்துக் கொள்ளவும்.
3.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் தொடர்ந்து வலது கையை 45 டிகிரி கோணத்தில் இருக்குமாறு உயர்த்திக்கொண்டு இடதுகாலையும் பிடித்திருக்கும் இடது கையையும் முடிந்தளவிற்கு உயர்த்தவும்.
4.சில நொடிகள் அப்படியே இருந்து இயற்கையாக சுவாசிக்கவும். பின் மெதுவாகப் படிப்படியாக முதல் நிலைக்கு திரும்பவும்
இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்