ஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
#*#*#*#*#
7. "ஸோம வேள்வி நடத்த தேவையான பாண்டங்களை சிவனிடம் வேண்டுதல்!
ஸோமச்சாறை பொழியவேண்டும் வேள்விக்கு பயன்படும் 29 பாண்டங்களை அளிக்கக் சிவனிடம் கூறுதல்.
மறைகளில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள ஸோம அர்ப்பணிப்பு இந்தப் பிரிவில் விரிவாக்கச் சொல்லப்பட்டுள்ளது. வேள்வி செய்யும் பொருட்டு, சரியான பாண்டங்களை பயன்படுத்தினால் மட்டுமே அதன் வெற்றி உறுதிப்படும். இந்தப் பாண்டங்கள் வேள்வி செய்யப்படும் தன்மையை வெளிக்கொணர்கிறது. ஒவ்வொரு பாண்டத்திற்கும் ஒருபாங்கும், தனித்தன்மையும் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாண்டமும் ஒரு குறிப்பிடத்தக்க கடவுளுக்கோ, குறிப்பிட்ட வழிபாட்டிற்கோ கோரப்படுகிறது. இதில், 'அதிபதி' மட்டும் விதிவிலக்கு. 'அதிபதி' என்பது தயிர் வைக்கப்படும் ஒர் பாண்டம். 'அதிபதி'க்கு மிக உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சோதனைக்கூடத்தில் எப்படி ரசாயனக் கலவைகளை கவனமாக கையாளவேண்டுமோ, அதே போல் இங்கும் வழிபாட்டு முறையைக் கையாள வேண்டும். தவறாக கையாண்டால், நாம் செய்யும் வழிபாடு வீணாகப் போய்விடும். ஒவ்வொரு கடவுள்களுக்கும் பயன்படும் பாண்டங்களை கொடுக்கக் வேண்டுவது சிறப்பு.
சமஸ்கிருதம்::
அகும்சுச மே ரச்மிச்ச மேதாப்யச்ச மேதிபதிச்ச ம உபாகும்சுச்ச மேந்தர்யாமச்ச ம ஐந்த்ரவாயவச்ச மே மைத்ரா வருணச்ச ம ஆச்வினச்ச மே ப்ரதிப்ரஸ்தானச்ச மே சுக்ரச்ச மே ம்ந்தீ ச ம ஆக்ரயணச்ச மே வைச்வதேவச்ச மே த்ருவச்ச மே வைச்வாநரச்ச ம ருதுக்ரஹாச்ச மேதிக்ராஹ்யாச்ச ம ஐந்த்ரரக்னச்ச மே வைச்வதேவச்ச மே மருத்வதீயாச்ச மே மாஹேந்த்ரச்ச ம ஆதித்யச்ச மே சாவித்ரச்ச மே ஸாரஸ்வதச்ச மே பௌஷ்ணச்ச மே பாத்னீவதச்ச மே ஹாரியோஜனச்ச மே ||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
அம்சு பாண்டமும், ரஸ்மியும், அதப்யமும், தயிரைத் தாங்கும் "அதிபத" பாண்டங்களும், ஸோமச் சாறைத் தாங்கிடும் ஊபம்சுவும், அந்தர்யாமமும், ஐந்த்ர வாயவாஸ்வமும், இரட்டைக்கடவுள்களான மித்ரனும், வருணனும், ஆச்வினமும், ப்ரதிப்ரஸ்தானமும், ஷுக்ரமும், மந்தியும், ஆக்ரயனமும், வைச்வதேவமும் த்ருவமும், வைச்வாநரமும், ரிது க்ரஹாசமும், அதிக்ரஹாசமும், இரட்டை கடவுள்களான இந்தரனுக்கும், அக்னிக்கும் பயன்படுத்தப்படும் பாண்டமும், விஷ்வதேவாசுக்கு பயன்படுத்தப்படும் பாண்டமும், மாருத்துகளுக்கு பயன்படுத்தப்படும் பாண்டமும், மற்றும் கடவுள்களில் அரசனான இந்தரனுக்கு பயன்படுத்தப்படும் எல்லாவிதமான் பாண்டங்களும், கதிரவக் கடவுளான ஆதித்தனுக்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும், சவிதாவிற்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும், சரஸ்வதிக்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும், பூஷாவிற்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும், பத்னேவதஸுக்குபயன்படுத்தப்படும் பாண்டங்களும், ஹரியோஜனாஸுக்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும் - ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்.
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி ||
#####