ஓம்நமசிவய!
இயங்கிய ஞானக் குன்றே அரவக் கிண்கிணி ஆர்ப்பாய்
இலகக் கொம்பொன்றேந்தினோய் வஞ்சனை பலவும் தீர்ப்பாய்
அழகிய ஆனைக்கன்றே இளமத யாணை முகத்தாய்
இரகுபதி விக்கின விநாயகா அனந்தலோடாதியில் அடிதொழ அருளே
$$$$$
அமாவசை திதி!
திதிக்குரிய விநாயகர்- நிருத்தகணபதி, வேகவைத்த சாதம் சாப்பிடவும். இருவேறு தன்மைகள் கொண்ட சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் அமாவாசை. இந்த நாளில் எந்த ஒரு கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை. மற்ற எல்லா திதிகளிலும் ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் பெற்றிருக்கும். அமாவாசைய்னறு எந்த கிரகமும் தோஷம் அடைவதில்லை. அமாவாசை, பௌர்ணமி என்ற இரு நாட்களும் விரத நாட்களாக கருதப்படுவது இதனால்தான். அமாவாசையன்று தந்தை மற்றும் தாயை இழந்தவர்கள் வழிபாடு செய்யும் முறை பிதுர் தர்ப்பணம் / சிரார்த்தம் ஆகும். ”பித்ரு தேவதா நமஹ, மாத்ரு தேவதா நமஹ” என வேதங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்ட தன்மந்திரங்களிடம் உயிர்கள் அனைத்திற்கும் பித்ருஸ்தானம் கொள்ளுமாறு சொன்ன நாள். அமாவாசை தர்ப்பணத்தினால் தன்மந்திரங்களை கௌரவித்தால் பாவங்கள் நிவர்த்தியாகி நன்மைகளையும் தரும் பித்ருக்களின் ஆசி கிட்டும். உயிர்கள் அனைத்திற்கும் பித்ரு ஸ்தானம் சிறந்தது. ஆவணி மாதப் பௌர்ணமி- பிரதமையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரை உள்ள 15 நாட்கள் கொண்ட காலம் மகாளய பட்சம் எனப்படும். ஒரு ஆத்மாவின் ரத்த சம்பந்தப்பட்டவர்கள் பித்ருக்கள். நமக்குப் பிரியமானவர்களாக இருந்து இறைவனிடம் சேர்ந்த அனைவரும் காருண்ய பித்ருக்கள். பித்ருக்களுக்கும் காருண்ய பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்ய சிறந்த காலம் மகாளய பட்சம். மகா ஆலயம் என்பதே மகாளயம் என்றானது. ஆன்மாக்கள் ஒன்று சேருமிடம் ஆலயம். முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் காலம் மாகாளய பட்சம். மகாளயபட்ச அமாவாசையன்று செய்யும் பித்ரு தர்ப்பணம் அனைத்து பித்ருக்களுக்கும் காருண்ய பித்ருக்களுக்கும் சென்று சேர்வதால் மகாளயபட்ச அமாவாசை சிறந்ததாக போற்றப்படுகின்றது.
அவிஸ் எனப்படும்- புரட்டாசிமாத சுக்லபட்ச தசமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்தசி-ஐப்பசி மாத அமாவாசைவரை- 21 நாட்கள் மேற்கொள்ளும் விரதம் கேதார கௌதாரி விரதம்- சிவ சக்தி அருளால் சகல பாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். கேதார கௌரி விரதம் முடிந்தபின் தீபாவளியன்றே சக்தியை சிவன் தன்னில் ஒருபாதியாக ஏற்றுக்கொண்டார். கேதாரம் என்பது இமயமலைச் சாரலில் வயல் சூழ்ந்த பகுதியில் ஆலமரத்தடியில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதார கௌரி விரதம் என்றும், ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் என்றும் சொல்லப்பட்டது.
$$$$$