ஓம்நமசிவய!
நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!
&&&&&
நவமி திதி!
திதிக்குரிய விநாயகர்- விக்ன கணபதி, அக்னியில் சமைக்காத உணவு- விருத்திரன் என்ற அசுரன் கடல் நுரையால் இந்திரனால் கொல்லப்பட்டான். மறுபிறவில் முற்பிறப்பில் நடந்ததைபற்றி அறிந்ததும் விருத்திரன் இந்திரனைக் கொல்லத் துடித்தான். வேட்ரவதி ஆறு பெண்ணாக வடிவெடுக்க அவளை மணந்த விருத்திரனுக்கு வெட்ராசுரன் பிறந்தான். தேவர்களுக்கு பரம விரோதியான இவன் மற்றவர்கள் கண்ணுக்குப் புலப்படாதவன். பிரம்மா காயத்திரி ஜபத்தை கங்கை கரையில் செய்து கொண்டிருந்தபோது தேவர்கள் அங்குவந்து முறையிட்டனர். அப்போது காயத்திரிதேவி தோன்றி வெட்ராசூரனுடன் பல ஆண்டு போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்த நாள்.
பொதுவாக நவமி திதி ஆகாது எனச் சொல்லுவர். நல்ல காரியத்திலிருந்து விலக்கிவிடுவர். இதனால் வருந்திய திதியின் தேவதை பிரம்மனிடம் சென்று முறையிட. உலகம் போற்றும் அவதாரம் உன் திதியில்தான் நடைபெற இருக்கின்றது என ஆறுதல் கூறினார். ஸ்ரீ ராமர் பிறந்த நாள். இராமவதாரம் நவமியில் நடந்து ஸ்ரீராமநவமி எனப் புகழ்பெற்றது. பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதி- புனர்பூச நடசத்திரத்தில் பிறந்தார் ராமர்- ஸ்ரீராமநவமி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை சிறப்பு. ஐப்பசி நவமி விஷேச பலன்.
$$$$$