சக்திபீடம்-51-ஷ/க்ஷம்
ஓம்நமசிவய!
ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வானவ பகர்முன்னவாம் பரமே போற்றி!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-51
அட்சரம் ஷ/க்ஷம்(முப்பத்தி ஐந்தாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் பிருந்தாவன்.
அட்சரதேவிகள் ஷ்மாதேவி/ மாயாமாலினீதேவி
அங்கம் கேசம்
பைரவர்/இறைவன் பூதேசமகாதேவ்
அங்கதேவி/ இறைவி உமா
பீடங்கள் சாயச்சத்ராயை நம
51-ல் நம் உடலில் இதயம் முதல் தலை உச்சிவரை
ஊர் பிருந்தாவன்
அருகில் யமுனைக்கரையில், மதுரா-10,தில்லி-126
மாகாணம்/நாடு உத்திரபிரதேசம்
இது சத்ரபுரம் பீடம் எனும் மகாசக்தி பீடம்.சித்தி அளிக்கும் தலம். பூதேச மகாதேவ் ஆலயத்தில் 50 படிகளில் கீழிறங்கி அங்குள்ள பாதாள அறையில் அம்மன் குடியிருப்பு. உமாதேவியாயிருந்து காத்யாயினி என்று அழைக்கப் படுகின்றாள்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
சிவந்த நிறமேனி- ஐந்து முகங்கள்- சதுர் புஜங்கள்- வலது கரங்களில்- சூலம், அபய முத்திரை, இடது கரங்களில்- கட்கம், வர முத்திரையுடன் சிம்ம வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
க்ஷம் மாயா மாலிநீ தேவீ பஞ்சாந நவரஸ் திதா
பஞ்சாஸ்யா பாடலா தத்தே கட்க சூல வராபயாந்:
#####