Print this page
வியாழக்கிழமை, 07 June 2018 19:33

நவகிரகங்கள்! சூரிய சபா!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

$$$$$

நவகிரகங்கள்! சூரிய சபா!

கிரகங்களின் நிலைகளால் உலக உயிர்களுக்கு அவ்வப்போது வரும் தீமைகளைப் போக்கிக் கொள்ளவே நவகிரகங்களின் வழிபாட்டை முன்னோர்கள் நெறிமுறைப் படுத்தியுள்ளனர். உயிர்கள் செய்த நல்வினை, தீவினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களை உயிர்கள் அடைகின்றன. துன்பங்களின் பாதிப்பை நீக்க / குறைக்கவே கிரஹ வழிபாடு செய்கின்றோம். நவகிரகங்கள்: கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாக கொண்டு இயங்குவதால் சூரிய சபா.

காலத்திற்குத் துணைபோவதுதான் கிரகங்களின் செயல்பாடுகள். உயிர்களின் கர்ம வினைக்கு ஏற்ப கோள்கள் பலன்களைத் தருகின்றன. அமைதியான வாழ்க்கை, செல்வம், உடல்நலம், நீண்ட ஆயுள், நாட்டில் பசுமைக்கு நல்ல மழை என்ற அனைத்தையும் இவைகளே கொடுப்பதால் இவைகளைத் திருப்தி படுத்த வேள்விகள் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

வருங்காலம் தெரியா நவக்கிரகங்கள்- ஒன்பது கிரகங்களும் இருக்கும் இடத்தை பொருட்டு அதன் பலனாக மனிதர்களுக்கு காலம் நேரம் கணித்து இன்னது நடந்தது. இது நடக்கும் எனக்கூறுவது ஜோதிடக்கலை. இக்கலைக்கு முக்கியமாக கிரகங்களின் நிலையே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எல்லோருக்கும் நிலையைக் கணிக்க உதவும் அந்த கிரகங்களுக்கு தங்களின் நிலை தெரியாத ஓர் காலம் வந்தது.

வருங்காலம் பற்றி சொல்ல ஏதுமில்லை என்ற கால மகரிஷியிடம் உங்கள் எதிர்காலம் பற்றித் தெரியுமா எனக்கேட்க அதிர்ந்தவர் வந்திருப்பது காலதேவன் என்பதை உணர்ந்து தன் எதிர்காலம் பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தார். எதிர்கால பாதிப்புகளை அகற்ற நவக்கிரக நாயகர்களை வணங்க அவர்கள் அவருக்கு அதைப் போக்க அருள் புரிந்தனர் ஒன்பது பேரும்.. காலவமுனிவருக்கு தொழுநோயிலிருந்து காப்பாற்ற வரம் அளித்தனர்.

ஒவ்வொரு கிரகங்களும் தங்களின் காலத்திலேயே ஆத்மாக்களுக்கு நன்மையோ தீமையோ அளிக்க வேண்டும் என்பது நியதி. அந்த நியதி மீறிய நவக்கிரகங்களை பிரம்மா சபித்தார். காலமகரிஷியின் தொழுநோய் நீங்க வரமளித்தவர்கள் அந்தக் காலம் முழுவதும் அதேநோயால் துன்புறுக என்ற சாபமடைந்த நவக்கிரகங்கள் தங்கள் சாபம் நீங்க திருமங்களக்குடி சுற்றியுள்ள ஒன்பது தீர்த்தங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்த்தத்தில் திங்கள் கிழமை காலையில் குளித்து எருக்க இலையில் தயிர் சாதம் உண்டு மற்ற நாளில் விரதமும் இருந்து பிராணநாதரை வணங்கி வழிபட்டு வர தொழுநோய் தோஷம் நீக்கியது,

தங்களுக்குத் தெரியாமல் வீடு- இடம் மாறிய நவகிரகங்கள்! -தொண்டை மண்டலத்தில் இடையன் காடு என்ற ஊரில் பிறந்த இடைக்காடர். ஆடு மாடு மேய்த்தல் தொழில் செய்து வந்தார். அவைகளை மேய விட்டு சிந்தனைவயப்பட்டு மரத்தடியில் அமர்ந்து அமைதியாய் இருப்பார். ஒருநாள் இவ்வாறு அமர்ந்திருக்கையில் வான்வழி சென்ற சித்தர் ஒருவர் கீழிறங்கி நீர் என்ன சிந்தித்துக் கொண்டிருந்தாய் என வினவினார்.

சுயநினைவிற்கு வந்தவர் அவருக்கு பால் கொடுத்து தாகம் தீர்க்க, மனம் மகிழ்ந்த சித்தர் இவருக்கு வைத்தியம், சோதிடம் ஞானம், யோகம் முதலியன உபதேசித்து மறைந்தார். அன்று முதல் இடைக்காட்டுச் சித்தர் ஆனார். அந்த திறமைகளால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குபின் ஏற்படும் பஞ்சத்தை அறிந்தார்.

முன்னெச்சரிக்கையாக எக்காலமும் கிடைக்கும் எருக்க இலைகளைத் திண்ண ஆடு மாடுகளுக்கு பழக்கினார். கெடாமல் இருக்கக்கூடிய குருவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். எதிர்பார்த்தபடி பஞ்சம் வந்தது. புல்பூண்டுகளும் அழிந்தன. எருக்க இலைகளைத் தின்றதால் ஏற்படும் அரிப்பை போக்க ஆடுகள்சுவரில் உடம்பைத் தேய்க்கும்போது சுவரிலிருந்து உதிரும் குருவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு உயிர் வாழ்ந்தார். பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிய இடைக்காடரும் அவருடைய ஆடுகளும் உயுருடன் இருப்பதைக் கண்ட நவகிரகங்கள் இவரைப் பார்க்க வந்தனர்.

அவர்களை வரவேற்று வரகு சாதத்தையும் ஆட்டுப்பாலையும் கொடுத்தார். பாலில் சமைத்த உணவை உண்டு அவர்கள் அப்படியே உறங்கி விட்டனர். நவகிரகங்கள் மயங்கி படுத்திருப்பதைக் கண்ட இடைக்காடர் தன் சோதிட அறிவிற்கேற்றவாறு மழை வருவதற்கான முறையில் கிரகங்களை இடம் மாற்றிப் படுக்கவைத்தார். கிரக நிலைகள் மாறியதால் வானம் இருண்டு மழை பொழியத் தொடங்கியது. பூமி குளிர்ந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிறைந்தன.

மழையின் குழுமை நவகிரங்களை எழுப்பியது. நாட்டின் பஞ்சத்தைப் போக்கிய சித்தரின் திறமையை பாராட்டினார்கள். மேலும் வரங்கள் கொடுத்து அவரை ஆசிர்வதித்தனர். பல ஆண்டுகள் வாழ்ந்து திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்

சூரியன் உருவத்தை செம்பிலும்-எருக்கு சமித்துடன், சந்திரனை ஸ்படிகத்திலும்-பலாசமித்துடன், அங்காரகன் எனும் செவ்வாய் உருவத்தை சிவப்பு நிறத்திலும்-கருங்காலி சமித்துடன், புதன் உருவத்தை சந்தன மரத்திலும்-நாயுருவி சமித்துடன், வியாழன் என்ற பிரகஸ்பதியை தங்கத்திலும்-அரசு சமித்துடன், சுக்கிரனை வெள்ளியிலும்-அத்தி சமித்துடன், சனி-வன்னிசமித்துடன், ராகு-அருகம்புல்லுடன், கேது-தர்ப்பையுடன் சனி, ராகு, கேது உருவங்களை ஈயத்திலும் வடித்து ஆராதனை செய்ய வேண்டும். இந்த சமித்துகளை தேன், நெய், தயிரில் தேய்த்து கோளுக்கான மந்திரங்களுடன் ஹோமகுண்டங்களில் பய பக்தியுடன் சேர்த்து முடிவில் அந்தணர்களுக்கு உணவளித்து தானங்கள் செய்தால் கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபடமுடியும்.

சந்தனக் குழம்பில் அந்தந்த உருவங்களை வரைந்தும் வழிபடலாம்.

நைசர்க்க பலம்!- நவகிரக சனியைவிட செவ்வாயும், செவ்வாயைவிட புதனும், புதனைவிட குருவும், குருவைவிட சூரியனும், சுக்கிரனைவிட சந்திரனும், சந்திரனைவிட சூரியனும் இவர்கள் அனைவரையும் விட இராகுவும் கேதுவும் பலம் பொருந்தியவர்கள் இந்த ராகு கேது மற்ற கிரகங்களைவிட பலம் பொருந்தியவர்கள். அதை நைசர்க்க பலம் -என்பர்.

நவக்கிரக பிரதிஷ்டை 1.வைதீகப் பிரதிஷ்டை, 2.ஆகமப்பிரதிஷ்டை, 3.சமப் பிரதிஷ்டை என 3 வகைப்படும்.

1.வைதீகப் பிரதிஷ்டை,
சூரியன் - கிழக்கு
சுக்கிரன், புதன் - கிழக்கு
சந்திரன், சனி - மேற்கு
செவ்வாய், ராகு, கேது - தெற்கு
குரு - வடக்கு

2.ஆகமப்பிரதிஷ்டை-
1.அந்தர் மண்டலம்- எல்லா கிரகங்களும் சூரியனைப் பார்த்து இருப்பர்.
சூரியன், செவ்வாய், சந்திரன், கேது – மேற்கு
குரு, சனி, ராகு - கிழக்கு
சுக்கிரன் - தெற்கு
புதன் - வடக்கு

2.பஹிர் மண்டலம்- எல்லா கிரகங்களும் வெளிப்புறம் பார்த்து இருப்பர்.
சூரியன், குரு, சனி, ராகு - மேற்கு
கேது, செவ்வாய், சந்திரன் - கிழக்கு
புதன் - தெற்கு
சுக்கிரன் - வடக்கு

3.சமப் பிரதிஷ்டை-எல்லா கிரகங்களும் ஒரே வரிசையாக மேற்கு பார்த்து இருப்பர்.

நவக்கிர ஸ்லோகம்
”ஓம் ஸ்ரீ ஆதித்யாய சோமாய
மங்களாய புதாய ச
குரு சுக்ர சனியச்ச
ராகுவே கேதுவே நம”

$$$$$

நவகிரகங்கள்!

1.சூரியன் எனும் மார்த்தாண்டன்
2.சந்திரன்
3.அங்காரகன் எனும் செவ்வாய்
4.சந்திரனின் மகன் புதன்
5.பிரகஸ்பதி என்ற தேவ குரு வியாழன்
6.சுக்கிரன் என்ற அசுர குரு வெள்ளி 
7.சூரியனின் மகன் சனி
8.நிழற் கிரகம்  ராகு
9.நிழற் கிரகம் கேது

$$$$$

Read 13909 times Last modified on சனிக்கிழமை, 25 December 2021 12:13
Login to post comments