gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வெள்ளிக்கிழமை, 13 July 2018 13:21

திரிபுர சுந்தரி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

திரிபுர சுந்தரி!

ஸ்ரீவித்யா, லிலிதை, ராஜராஜேஸ்வரி எனப்படுபவள். சாக்தம் விவரிக்கும் திரிபுர சுந்தரி ஸ்தூலம், சூட்சமம், கரணம் என்ற தேகங்களாகிய மூன்று புரங்களிலும் இடையறாது வசிக்கும் உட்கலந்த சக்தி. எனவே அம்பிகைக்குப் பிரியமான எண் மூன்று இதை திரி என்பர். எனவே திரிபுரா ஆனாள். மந்திரம், யந்திரம், ரூபம் ஆகிய மூன்றும் தேவி வழிபாட்டில் முக்கியம் என்பதாலும் திரிபுரா. சுந்தரின் பத்னி என்பதாள் சுந்தரி. திரிபுராசுந்தரி எனப்பட்டாள். பாசாங்குசம், மலர்கனை, கரும்புவில் கொண்டிருப்பவள். திரிபுரை, திரிபுரேசி, திரிபுரவாஸினி, திரிபுராஸ்ரீ, திரிபுராமாலினி, திரிபுரஸிக்க, திரிபுராம்பிகா, மகாதிரிபுர சுந்தரி ஆகியவை வேறு திருநாமங்கள். புலன்களின் ஒழுக்கம் மிகும்.

விஷ்ணுவின் கல்கி அவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் திரிபுர சுந்தரி. இவள் வடகிழக்கு திசையில் தோன்றியவள்.

லலிதா பரமேஸ்வரி சிதக்கனியில் தோன்றியபோது தேவர்கள்-ஆம்நாயநாதா, காமகோடிகா, காமராஜப்பிரியா, காமேசீ, குலநாத, சக்கிரவர்த்தினி, சக்ரநாதா, சக்ரிணி, சக்ரேஸ்வரி, சாபிநீ, சிவாநங்கவல்லபா, சிருங்காரநாயிகா, சுந்தரி, திரிபுரா, பரமேஸ்வரி, மகாதிரிபுரசுந்தரி, மகாதேவி, மகாராக்ஞி, மகாவித்யா, ஸர்வபாடலா, ஸர்வாம்நாயநிவாஸநி, ஸம்ராக்ஞி, ஸிம்ஹாஸநேசி, லலிதா, வராங்குசா என்ற இந்த இருபத்தைந்து நாமங்களால் துதித்துள்ளனர்.

திரிபுர சுந்தரி எனும் ப்ரம்ம சக்தியின் ஆசை லேசத்தில் தோன்றியதே. படைப்புகள் அனைத்தும். நாம் ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள அதைப்பற்றி ஒரு கோடி காட்டச் சொல்கின்றோம் அல்லவா! அதைப்போல் ப்ரம்மசக்தியின் ஆசையின் கோடி என்பது காமகோடி. படைக்க விரும்பிய தேவியின் ஆசையின் லேசம் விரிவாக்கம் அடைந்தபோது மனிதன் தன் ஆசைகளின் மூலம் குடும்பம், தொழில், வருவாய் மூலம் தன்னை ஒரு நிலைப் படுத்திக் கொள்ள முனைகின்றான். இப்படி படைப்புகள் விரிந்ததும் முடிவில் தேவி அவற்றை தன்னுள் இழுத்து ஒன்றச் செய்கின்றாள். வாழ்க்கையின் தோற்றமும் முடிவும் ப்ரம்மசக்தியின் ஆளுமையில் அடங்கியிருப்பதாக வேதம் சொல்கின்றது.
திரிபுரா என்பதில் தேவியின் மூன்று நிலைகளாக 1. அருள் சக்தி பாலாவாகவும், 2. புத்தி சக்தி மந்த்ரிணி என்ற மாதங்கியாகவும் 3.வீரசக்தி தண்டநாத எனும் திரிபுர பைரவி- வராஹியாகவும் குறிக்கப் படுகின்றாள்.

திரிபுர சுந்தரியின் வேற்றுருவம் ஸ்ரீராஜராஜேஸ்வரி இவரின் ஆளுமைக்குட்பட்ட மற்ற ஆண், பெண் தெய்வங்கள்.
1.அம்பிகையை குழந்தையாக பாவித்து வழிபடுவது-பாலாதிரிபுரசுந்தரி. என்றும் ஒன்பது வயது பெண். ஆலயம்- நேபாளத்தின் தலைநகர் கட்மாண்டுவில் தாலேஜி அம்மன் கோவில். இங்கு சிலையில்லை. உயிருள்ள பேதைப்பெண் பருவமடையும் வரையில் தேவிகுமாரியாக இங்கு இருப்பாள் பருவமடைந்தபின் வேறு சிறுமி தேர்தெடுக்கப் படுவாள்.

2.அம்பிகையை மங்கையாக பாவித்து வழிபடுவது-தருணி திரிபுரசுந்தரி. நரை மூப்பு, மரணம் எதுவுமே இல்லாமல் மறா இளமை கொண்டு விளங்குவதால் தருணி. என்றும் பதினாறு வயது மங்கை.

3. அம்பிகையை அரிவை / தெரிவை என்பதால் மகாதிரிபுரசுந்தரி.

4.அம்பிகையை பேரிளம் பெண்ணாக நினைத்து வணங்குவதால் ஸ்ரீமஹாதிரிபுர பாலபட்டரிகா என்பர். அம்பிகையின் தாயன்பின் உச்சகட்ட நிலை இது. ஸ்ரீ வித்யையை ஈசனுக்கு ஒருமுறை இறைவி உபதேசித்ததால் பட்டரிகா எனப் பெயர் வந்தது.

5.திரிபுர சுந்தரியை சுவாஸினியாக முதிர்ந்த சுமங்கலியாக மாந்தர் ரூபத்தில் வழிபடுவது. சோபமான மங்களத்தை அடைந்தவள் பிரம்ம ஸ்வரூபணீ எனும் ஸ்வாஸினி

திரிபுரசுந்தரியின் மூலமந்திரத்தால் யாகம் செய்தால் சாஸ்திர குணம், குபேர சம்பத்து, முக்திபேறு, சாதகம் ஆகியன அடையலாம்.

#####

Read 15710 times Last modified on சனிக்கிழமை, 14 July 2018 16:02
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27047898
All
27047898
Your IP: 13.58.197.26
2024-04-20 10:28

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg