ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப்
போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
#####
புவனேஸ்வரி!
புவனத்தில் இயற்கையாக திகழ்பவள். பிரபஞ்சத்தில் எல்லாவற்றிற்கும் ஆதாரமான பிரம்மஸ்வரூபம். அம்பிகைக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள தொடர்பு உயிருக்கும் உடலுக்குமான தொடர்பாகும். ஈஸ்வரன் உயிர், அம்பிகை உடல். பிண்டமாக விளங்கும் அம்பிகை அண்டமான உடலாகவும் இருக்கின்றாள். புவனத்தை ரட்சிப்பவள், வாக்கு அதன் பொருள் போல் உலகிற்கு அன்னையும் பிதாவுமாகி நமக்கு உருவம் கொடுத்த தாய் தந்தையர்போல் இந்த புவனங்களுக்கு உயிர்கொடுத்த தாய் தந்தையான சிவசக்தியை வணங்குவோம்.
பரமேஸ்வரனை செயல்பட தூண்டுபவள். அவள் இல்லையேல் உலகம் ஸ்தம்பித்து விடும். அந்த சக்தி தேவியே புவனேஸ்வரி. பதினான்கு லோகங்களுக்கும் தலைவியானவள். புவனம் என்றால் உலகம், தண்ணீர் என்று இரு பொருள் உண்டு. உலகத்திற்கு நீர் தந்து தண்ணீர் உருவமாக மாந்தர்களைக் காப்பாற்றுபவள். ஜீவராசிகளுக்கு உருவமும் பெயரும் ஏற்படுத்திய இவளே இயற்கை அல்லது பிரகிருதி எனப் படுபவள். பிரபஞ்ச சக்திகள் எல்லாம் யோகமாயாவின் பரிமாணமே.
இறைவனின் பரிபூரணத்துவம் உலகில் எங்கும் பரவியிருக்கின்றது. அவரது அபரிதமான சக்திப் பெருக்கு உலகில் பரவிப் பாய்கிறது. அந்த மகா சிற்பியின் லீலையே சத் சித் ஆனந்த நிலையை உண்டு பண்ணுகின்றது. வடிவம் உள்ளவனாகவும் ஒளிவீசும் தன்மை உடையவனாகவும் இருக்கும் ஸ்வயம் பிரகாச தன்மையே மாயை அவளே புவனேஸ்வரி. படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களையும் செய்ய ஒரு பரமாத்மாதான் பிரம்ம, விஷ்ணு, ருத்ரன் என ரூபங்கள் கொள்கிறது. பிரம்மாவின் படைத்தலுக்கு சிருஷ்டி சக்தியாகவும், விஷ்ணுவின் காத்தலுக்கு பரிபாலன சக்தியாகவும், ருத்திரனின் அழித்தலுக்கு சம்ஹார சக்தியாகவும் கிரியைகளுக்கு ஏற்ப மாறுபட்டு விளங்குபவள் புவனேஸ்வரி.
மாயை வடிவான இவள் பக்தர் உள்ளத்தில் ஞானவெளியாக இருப்பாள். மாயை- இருள் நீக்கி மெய்ஞானமளிப்பவள். உயிர்கள் அனைத்தின் வடிவமானவள்.
விஷ்ணுவின் வராக அவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் புவனேஸ்வரி. இவள் மேற்கு திசையில் தோன்றியவள்.
புவனேஸ்வரி மூலமந்திரத்தினால் ஹோமம் செய்தால் வெற்றி, செல்வம், வாழ்க்கை வளம், பதவி உயர்வு, மனோபலம், ஆத்ம தரிசனம் கிட்டும்.
புவனேஸ்வரி மூலமந்திரத்தினால் ஹோமம் செய்தால் வெற்றி, செல்வம், வாழ்க்கை வளம், பதவி உயர்வு, மனோபலம், ஆத்ம தரிசனம் கிட்டும்
#####