ஓம்நமசிவய!
நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ
#####
தூமாவதி!
மாகாவிஷ்ணுவின் யோக நித்திரை வடிவம் உறங்கிக் கிடப்பது போல் தோன்றினாலும் புதிய எண்ணங்கள் தோன்றக் காரணமாகி அழிவிற்கும் ஆக்கத்திற்கும் இடைப்பட்ட இவள் அமைதியின் உருவம். வழிபட்டால் சோம்பல் நீங்கும். இவள் நிறம் புகை நிறம். தூமம்-புகை- தூமாவதி எனப்பட்டாள்.
விஷ்ணுவின் வாமன அவதரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் தூமாவதி. இவள் தென்கிழக்கு திசையில் தோன்றியவள்.
தட்சயக்ஞத்தில் தாட்சாயிணி ஹோமகுண்டத்தில் குதித்தபோது அந்த யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்ட புகைப் படலம் ஒரு சக்தியாக உருமாற அந்த சக்தி துமாவதி எனப் பெயரடைந்தாள். தூம்- புகை என்று பொருள். இமயமலைச் சாரலில் அவள் குடியிருக்கத் தேர்தெடுத்த தலம் ஜ்வாலாமுகி ஆகும்.
ஜ்வாலமுகி – எரிமலை என்று பொருள். ஜ்வாலாமுகி பச்சையும் நீலமும் கலந்து கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் அரிய ஜோதி ஸ்வரூபிணியாக தரிசனம் அளிக்கின்றாள்.
விதையில் மரத்தின் சூட்சம அணுக்கள் மறைந்திருக்காவிட்டால் விதை மரமாகாது. அழிவிற்கும் தோற்றத்திற்கும் இடையே படைப்புகள் சக்தியின் ஒளியினால் படைப்புகளாக மாறும் முக்கிய நிலை. பிரளயத்திற்கும் படைப்பிற்கும் இடையே உள்ள இருட்டும் வெளிச்சமுமான நிலையின் சக்தி உருவமே தூமாவதி. இருட்டு முழுவதும் அகலாமல், வெளிச்சம் முழுவதும் தோன்றாமல் இருக்கும் புகை போன்ற நிலை. படைப்புகளின் தோற்றத்திற்கு முந்தைய நிலையையும் அவை அழிவதற்கு முந்தைய நிலையையும் குறிக்கும் அந்த இடைவெளி இருட்டு முழுவதும் அகலாமல் வெளிச்சம் முழுவதும் மிளிராமல் இருக்கும் புகை போன்றது.
ஆதியில் இருட்டை இருட்டு மறைத்து அஞ்ஞானத்தின் எதிர்மறையான அஞ்ஞானக் கடலில் அறிவுக்கு எட்டாத வகையில் மனித ஞானம் என்ற வெளிச்சம் புகமுடியாத அளவிற்கு அக இருட்டு எங்கும் பரவி இருந்தது.
அந்த இருள் அகன்று படைப்புத் தோன்றப் போவதை சூசகமாக சொல்பவள். தூமாவதி. ஜ்யேஷ்டா, மூதேவி, மூத்த தேவி எல்லோருக்கும் முந்தையவள் உடைந்த பற்கள் குறைந்த பற்களுடன் கிழவி தோற்றம், உயிர்களைப் புடைத்து அகற்றுபவள் ஆதலால் கையில் முறம், காக்கை வாகனம், மங்களங்களுக்கு விரோதமான குணங்களையும் தோற்றத்தையும் கொண்டவள் ஆதலால் துஷ்டா எனவும் பெயர்.
தூமாவதின் மூலமந்திரதை ஓதி வேள்வி நட்த்தினால் ரோக நிவாரணம் அடைவர், சத்ரு பயம் நீங்கும்,ஞானபலம் பெறுவர்.
#####