ஓம்நமசிவய!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
####
கூர்ம அவதாரம்!
காஸ்யப முனியின் மனைவி அதிதி- இவரின் குழந்தைகள் இந்திரன் உள்பட தேவர்கள் மற்றும் பன்னிரண்டு ஆதித்தியர்கள். இன்னொரு மனைவி திதி- இவரின் குழந்தைகள் இரணியாட்சகன், இரணியகசிபு மற்றும் நிறைய அசுரர்கள். மேலும் அசுரகளின் அரசன் அசுரேந்திரன்- மங்களகேசி இருவருக்கும் பிறந்த சுரசை அசுர குரு சுக்கிரன் மூலமாக மாயையின் கல்விகளைக் கற்று மாயை என்று பெயர் பெற்று காஸ்யபரை மணந்தாள்.
தேவ வடிவெடுத்த அவர்களுக்கு முதலில் சூரபத்மன் பிறந்தான். அவர்களது உடலிலிருந்து வியர்வை தோன்ற அதில் முப்பதாயிரம் வெள்ளம் அசுரர்கள் தோன்றினர். அடுத்து சிங்க வடிவமெடுத்த அவர்களுக்கு சிங்கமுகாசுரன் பிறந்தான் .அப்போது ஏற்பட்ட வியர்வையில் நாற்பதினாயிரம் வெள்ளம் அசுரர்கள் தோன்றினர். யானை வடிவமெடுத்த அவர்களுக்கு தாருகாசூரன் பிறந்தான் அப்போது ஏற்பட்ட வியர்வையில் நாற்பதாயிரம் வெள்ளம் அசுரர்கள் தோன்றினார்கள். ஆட்டுருவம் கொண்ட அவர்களுக்கு அசமுகியும் அந்த வியர்வையில் முப்பதாயிரம் வெள்ளம் அசுரர்களும் தோன்றினர். நான்கு ஜாமத்திலும் நான்கு உரு கொண்டு கூடியவர்கள் அடுத்து யாளி, புலி, குதிரை, மான், பசு, கரடி, பன்றி, கூளி முதலிய வடிவங்களைக் கொண்டு கூடி அறுபதுனாயிரம் வெள்ளம் அசுரர்களை தோற்றுவித்தனர்.
காசிபர் அந்தக் அசுரக் குழைந்தைகளுக்கு அறநெறியில் நின்று தவம் செய்து வாழும்படி அறிவுறுத்தினார். சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாருகாசூரன் மூவரும் அசுர குரு சுக்கிரனின் ஆலோசனைப்படி பல ஆண்டுகள் தவமிருந்து சிவனிடம் தன்னுடைய சக்தி யன்றி வேறு ஒரு சக்தியால் வெல்ல முடியாது என்ற வரத்துடன் பாசுபத அஸ்திரம் பெற்றனர்.
தேவர்கள் அசுரர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் அடிக்கடி கருத்து மோதல்கள் அடிதடித் தகராறுகள் நடந்து கொண்டேயிருந்தன. சகோதர்களான அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் தோன்றிய பிரச்சனைகளே அடிக்கடி அசுரர்- தேவர் யுத்தம் நடைபெறக் காரணமானது. அசுரர்களின் ஆதிக்கத்தால் முதலில் பாதிக்கப்படுபவன் இந்திரன். ஹிரண்யாட்சசன், ஹிரண்யகசிபு, முதல் இராவணன், இந்திரஜித் போன்ற அசுரர்களால் ஆக்கிரமகிக்கப்பட்டு சிறைப்பட்டு அல்லல்களுக்கு ஆளாகி பிரம்மா, விஷ்ணு, சிவனின் அனுக்கிரகத்தால் மீண்டும் போராடி தேவருலகத்தை அடைந்துள்ளான்.
பாற்கடல்! பிருந்தாவனத்தில் இருந்த கிருஷ்ணனுக்கு ஒருநாள் பால் அருந்த ஆசையேற்பட அவர் சுரபியை நினைத்தார். சுரபி என்பவள் பசுக்களுக்கெல்லாம் தாயானவள். சுரபியிடமிருந்து பாலை ஒரு கலயத்தில் கறந்து குடித்துவிட்டு மீதியை வைக்க அதுவே க்ஷீரசரோவரம்-பாற்கடல் ஆனது. சுரபியின் உடலிருந்துதான் காமதேணு தோன்றியது. காமதேனுவிடமிருந்து தோன்றியதே நாம் காணும் பசுக்கள்.
தொடரும் பிரச்சனைகளுக்கு சுகுமமான முடிவிற்கு வர பிரம்மா பாற்கடலைக் கடையலாம் என்று கூறிய ஆலோசனையை மகாவிஷ்ணு அவ்வாறு பாற்கடலை கடைந்தால் அகண்ட ரத்தினங்களும் மற்றும் அபூர்வ பொருளகளும் கிடைக்கும் என்பதால் ஏற்றுக் கொண்டார்.
சாவா மூவா நிலைபெற அமுதம் உண்ணவேண்டித் தேவர்கள், அசுரர்கள் எல்லோரும் உணவு ஏதும் உண்ணாமல் உபவாசமிருந்து ஏகாதசி அன்று மந்தார மலையை மத்தாகக் கொண்டு வாசுகி நாகத்தை கயிறாக்கி பாற்கடலைக் கடைய திட்டம் தீட்டப்பட்டது திருமாலும் தேவந்திரனுக்காகவும் குபேரனுக்காகவும் இதற்கு ஒப்புக்கொண்டார். மந்தாரமலை சம நிலையில் இல்லாமல் கீழும் மேலும் சென்றுவர அதை ஒர் நிலையில் நிறுத்த திருமால் கூர்ம உருவெடுத்து கடலின் அடியில் சென்று மந்தாரமலையைத் தாங்கி ஓர் நிலையில் இருக்கச் செய்தார்.
வாசுகி துயரம் தாங்காமல் நஞ்சை கக்க தேவ அசுரர்களைக் காக்க திருமால் முயல நஞ்சின் வேகத்தால் அவரது நிறம் கருமை நிறமானது. எம்பெருமான் சுந்தரர் மூலம் ஆலகாலத்தை எடுத்து தானே உண்டார், மீண்டும் கடைய பாற்கடலிலிருந்து மூதேவி தோன்ற அவளை வருணனுக்கு அளித்தனர். தண்டம் கமலத்துடன் தன்வந்திரி என்ற மருத்துவன் தோன்றினான். பின்னர் அறுபது கோடி மகளிர் தோன்ற அவர்கள் தேவலோகத்திற்கு அணுப்பப் பட்டனர். பின்னர் மது தோன்ற தேவர்கள் பருக அசுரர்கள் அதனைப் புறக்கணித்தனர். பின் தொடர்ந்து வந்த உச்சைச்சிரவம் என்ற குதிரையை இந்திரனுக்கும், கசுத்துவமணியை திருமாலுக்கும், பஞ்சதருக்கள், காமதேணு, சிந்தாமணி ஆகியவை இந்திரனுக்கும், சந்திரன் உலகிற்கு ஒளியூட்டவும், திருமகளை திருமாலுக்கும் அளித்தனர். இறுதியில் அமிர்தம் வந்தது. திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு மட்டும் வழங்க ஒரு அசுரன் சுவர்ணபானு மட்டும் அமிர்தம் அருந்த அதைக் கண்ட சூரிய சந்திரர்கள் திருமாலிடம் சொல்ல அவர் அந்த அசுரனின் தலையை வெட்ட அமிர்தம் அருந்தியதால் சாகாமல் உயிர் வாழ்ந்து சிவார்ச்சனை செய்து இராகு, கேது கோள்களாக மாறினர்.
இந்நிலையில் ஆமை உருக்கொண்ட மாயை கடல் ஏழையும் ஒன்றாக்கி அதன் வெள்ளம் உலகை அழிக்கும் படியாக கலக்கி உயிரினங்களை துன்புறுத்தலாயிற்று. இந்திரன் பிரம்மன் இருவரும் கயிலை சென்று சிவபெருமானிடம் பாற்கடலில் அமுதம் கடைய ஆமை வடிவம் கொண்ட திருமால் இன்னும் ஆவேசம் அடங்காமையால் உயிர்கள் துன்புருவதைத் தெரிவிக்க, சிவபெருமான் தன் கையிலிருந்த சூலப்படையால் மாயை ஆமையின் வயிற்றில் குத்தி அதன் இறைச்சியை குடைந்து எடுத்ததன் காரணமாக ஆமையின் வலிமை குன்றியது. அந்த ஆமை ஓட்டினை தேவர்கள் விருப்பப்படி தன் மார்பில் அணிந்து கொண்டார். சுய உணர்வு கொண்ட திருமால் சிவனைப் பணிந்து வைகுந்தம் சென்றார்.
விஷ்ணுவின் கூர்மாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் பகாளாமுகி
இப்பெருமாளை வணங்கினால் சனி சங்கடம் நீங்கும்.-கூர்மாவதாரப் பெருமாள்- ஸ்ரீகூர்மம்-ஆந்திரா.
#####