சக்திபீடம்-47-ஷ/ஷம்
ஓம்நமசிவய!
எள்ளுருண்டை பொரி ஏற்போய் தள்ளுறு
தெவிட்டாத் தேனே மூவர் மொழியிடம்
மொழிந்தாய் தேவர்க்கு அரிய தேவா மாலுக்கு
அருளிய மதகரி பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-47
அட்சரம் ஷ/ஷம்(முப்பத்தோராவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஹிரண்யபுரம்/ விராபம்/ ஜூவாலேஷ்வரம்/ மாகேஷ்வரம்
அட்சரதேவிகள் ஷண்டாதேவி/ அனுக்ரியாதேவி
அங்கம் இடதுகை பெருவிரல்
பைரவர்/இறைவன் அம்ருதாஷர்
அங்கதேவி/ இறைவி அம்பிகா
பீடங்கள் வாமனாயை நம
51-ல் நம் உடலில் இதயம் முதல் இடது கை நுனிவிரல்வரை
ஊர் மகேஷ்வர்
அருகில் விராட்,ஜெய்ப்பூரருகில்
மாகாணம்/நாடு ராஜஸ்தான்
இது ஹிரண்யபுரம் பீடம் எனும் மகாசக்தி பீடம். வாம மார்க்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலம்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
சிவந்த நிறமேனி- மஞ்சள் நிற ஆடை- நான்கு கரங்களில் இரு தாமரை மலர்கள் மற்றும் வர- அபய முத்திரைகளுடன் ராஜஹம்ஸ வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ரக் தாபா நுக்ரியா தேவீ ராஜ ஹம்ஸ வரஸ் திதா
பீதாம்பரா கரைர் தத்தே பத்ம த்வய வராபயாந்:
#####