Print this page
வெள்ளிக்கிழமை, 16 March 2018 10:08

துளசிதாசர்

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே

$$$$$

துளசிதாசர்

தத்துவஞானி ஆத்மாராமின் குழந்தை ராம்போலாவிற்கு பிறந்தபோதே 32 பற்கள் இருந்தன. பிறந்ததிலிருந்து அழவே இல்லை. திடிரென்று ராம் ராம் எனச் சொன்னது அக்குழந்தை. அதனால்தான் ராம்போலா எனப்பெயரிட்டனர். வலிப வயதை எட்டியவுடன் தாசி வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தான். அவனைத்திருத்த ரத்னாவளி என்றபெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப்பின் மனைவியை ஒருகணமும் பிரியாமாலிருந்தான். அவன் தந்தை பாதுஷாவிடம் சொல்லி ஏற்பாடு செய்த வேலைக்கு யார் சொல்லியும் செல்லாமல் மனைவியுடனே இருந்தான். பக்தனாகப் பார்க்க விரும்பிய மகன் மனைவி பக்தானாக மாறிவிட்டானே என மனம் வருந்திய ஆத்மாராம் தவம் செய்ய கானகம் சென்றார். அப்போது பாதுஷா கட்டாயம் அவனைக் கூட்டி வர ஆள் அனுப்பியதால் பாதுஷாவை பார்க்கச் சென்றான் ராம்போலா. அதுசமயம் ரத்னாவளியின் மாமியார் அவளை கொஞ்சநாள் அவளின் தந்தை வீட்டில் இரு, ராம்போலா ஒழுங்காக வேலைக்கு சென்றுவரட்டும் என்றாள்.

ரத்னாவளியின் பெற்றோர் விபரம் அறிந்தனர். ரத்னாவளி அம்மாவிடம் நான் மேலே சென்று ஒய்வு எடுக்கின்றேன். அவர் வந்தால் நான் இல்லை எனச்சொல்லி கட்டாயம் திருப்பி அனுப்பிவிடு என்றாள். வெளியில் காற்றுடன் கனத்த மழைபெய்து கொண்டிருந்தது. திடிரென்றுகதவு தட்டும் சப்தம் கேட்டது. யாரும் கதவு திறக்கவில்லை. அதுநின்றதும் மாடியில் ஜன்னல் தட்டப்பட்டது. எரிச்சலுடன் யார் எனக்கேட்டுத் திறக்க ஜன்னல் வழி ராம்போலா உள்ளே வந்தான். மனைவியைப் பிரிந்து அவனால் இருக்க முடியவில்லை. ரத்னாவளி துயருற்றார். குழந்தைபோல் அடம்பிடிக்கும் ராம்போலா நல்லவர். ஆனால் பெண்பித்து பிடித்து அலைவது கஷ்டமாயிருந்தது.

எப்படி மாடிக்கு வந்தீர்கள் என்ற ரத்னாவளிக்கு ஒரு கயிறை கட்டியிருந்தது. அதை பிடித்து வந்தேன் என்பதை நம்ப முடியால் விளக்கு ஒளியால் அதை பார்க்க இருவருக்கும் ஆச்சரியமாய் இருந்தது அது ஒரு மலைப்பாம்பு. நல்லவேளை தன்னுடைய தாலி பாக்யத்தால் தப்பித்திருக்கின்றான் என நினைத்தாள். அதுசரி ஆற்றை எப்படி தாண்டி வந்தீர்கள் இந்நள்ளிரவில் என்றாள். ராம்போலா படகு ஏதுமில்லை. ஒரு கட்டை மிதந்தது. அதைபிடித்துக்கொண்டு வந்தேன் என்றாள். அங்கு சென்று பார்த்தபோது அது ஆற்றில் மிதந்து வந்த ஒரு பிணமாக இருக்கக் கண்டு மிகவும் வேதனைகொண்டு தன் கணவனை மனம் போனபோக்கில் கடும் வார்தைகளால் திட்டினாள். என்றாவது இறக்கும் இந்த உடல்மீது இவ்வளவு ஆசை கொண்ட நீங்கள் இதில் ஒரு பகுதியாவதை ராமர்மேல் வைக்கக்கூடாதா எனக்கூறி அழுத அழுகை ராம்போலாவின் மனதை என்னவோ செய்தது. ரத்னாவளியின் கால்களில் வீழ்ந்து நீயே என் குரு. என்ஞானக்கண்ணை திறந்தாய் எனக்கூறி விடுவிடு என்று நடந்தான்.

கணவன் திருந்தவேண்டும் என நினைத்த ரத்னாவளி அவன் தன்னை விட்டு நிரந்தரமாய் போய்விடுவான் என நினைக்கவில்லை. அன்று சென்றவன் காசியில் ராமப்பித்து பிடித்து துறவியாய் அலைவதை தெரிவித்தார்கள். அவன் தந்தை மிகமகிழ்ந்து ராம ஸ்மரணையில் இருந்த அவனை கட்டித் தழுவிய அடுத்த கணம் அவரின் ஆவி பிரிந்தது. கணவனின் இறுதிக் கடன்களை நிறைவேற்றிய பின் அவன் தாய் கங்கையில் குதித்து மறைந்தாள். நிறையச் சொத்து வந்தது ரத்னாவளிக்கு. அதைக் கொண்டு காசியில் ஓர் மடம் நிறுவி அன்னம் பரிபாலித்து வந்தாள். துறவிகளுடன் வரும் கணவனுக்கும் அன்னம் பரிமாறி கண்களைத் துடைத்துக் கொள்வாள். கொஞ்ச காலத்தில் அவளும் காலமானாள்.

ரத்னாவளியை குருவாகக்கொண்டு துறவியான ராம்போலா, கவிஞராக மாறி ராமசரிதமானஸ் காப்பியம் எழுதியதையோ துளசிதாசர் என்ற மகானாய் போற்றப்பட்டதையோ அவள் அறிய வாய்ப்பில்லாமல் கடைசி காலத்தில் கணவனுக்கு அன்னமிட்ட திருப்தியுடன் விண்ணில் மறைந்துவிட்டாள் ரத்னமாலா.

$$$$$

Read 7333 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 08 April 2018 19:12
Login to post comments