gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வெள்ளிக்கிழமை, 08 June 2018 04:42

வியாழன்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

$$$$$

வியாழன்!

வியாழன், ப்ரஹஸ்பதி, பொன்னன் எனப்படும் குரு மற்ற கிரகங்களின் தோஷங்களை தன் பார்வையின் வலிமையால் குறைக்கும் வல்லமை பெற்றவர். அதனால்தான் குரு பார்க்கின் கோடி நன்மை என்பர். மேலும் கடுமையான பாதிப்புகளை எற்படுத்துவதில்லை. ஒரு ராசியில் ஒருவருடம் இருக்கும் குரு 12 இராசிகளிலும் சஞ்சரித்து ஒவ்வொருவர் வாழ்விலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவார். குரு மனைவி -தாராதேவி, வியாழனின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-சந்தன மரம்

குருபார்வை கோடி நன்மை! -.குரு பிரகஸ்பதியின் மகள் எல்லோரையும் போல் க்ஷத்ரிய குலத்தில் ஒருவன்மேல் காதல் வயப்பட்டாள். குரு பகவான் அவனுக்கு ஆயுள் பலமில்லை என எதிர்ப்பு தெரிவித்தார். நல்லதே சொல்லினும் யார் பெற்றவர் பேச்சை கேட்கின்றார்கள்! மகள் பிடிவாதமாக இருந்தாள். குரு, நாரதரிடம் இதைப் பற்றி சிலாகித்தார். நாரதர் அந்த ஜாதகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு பிரகஸ்பதியே உங்கள் மகள் விருப்பப்படி திருமணம் செய்து வையுங்கள். ஆனால் முதல் நாள் இரவின்போது நீங்கள் அருகில் இருந்து ஒர் காரியம் செய்ய வேண்டும் என்றார். அவர் அது எப்படி சாத்தியம். அதுவும் பெற்ற தந்தை முதல்நாள் இரவின்போது என மனம் கலங்கினார். அப்போது நாரதர், அந்த நாள் இரவில் கர்ப்பகிரகத்திற்குள் இருக்கும் அம்பாளை உங்கள் மகளும் மருமகனும் விடிய விடிய வேறு சிந்தனை வயப்படாமல் வணங்க வேண்டும். இடையே தூங்கக்கூடாது. அவர்கள் தூங்காமல் பூஜை செய்ய உறுதுணையாக நீங்கள் அங்கேயே இருந்து உங்கள் மகளைக் கண்காணிக்க வேண்டும் அதுபோதும் என்றார். அவ்வாறே வியாழ பகவான் செய்து தன் மகளின் மாங்கல்யத்தை தக்க வைத்தார். இதற்காக நாரதருக்கு குரு நன்றி சொன்னார். அப்போது நாரதர் குருநாதரே, கர்ப்பகிரகம், அம்பாள் பூஜை, விடியவிடிய பூஜை, தூங்கக் கூடாது என்பதெல்லாம் வெறும் பொய். ஜாதகக் கட்டப்படி உங்கள் பெண்ணுக்கு குருவின் பார்வை இல்லாதுதான் குறை! அது கிடைக்கத்தான் நான் இப்படி ஒரு ஏற்பாடு செய்தேன் என்றார். குருவின் பார்வை விடிய விடிய இருந்ததால் அவர்களின் கோடி சாபங்களும் தீர்ந்தன. உங்கள் பலம் உங்களுக்கே தெரியவில்லை என்றார்!

குரு பார்க்க கோடி நன்மை! இது நமக்குமட்டுமல்ல! தேவர்களுக்கும் பொருந்தும். சிவபெருமான் பிரஹஸ்பதிக்கு தேவகுரு பதவியையும் இந்திர தர்பாரில் எப்போதும் வீற்றிருக்கும் பேற்றையும் அளித்தார். மேலும் நவகிரக பதவி, மக்களின் ஜீவன் ஆகி மற்ற கிரகங்களின் தீய பலனகளைக் குறைக்கும் ஆற்றல் கொண்ட சுப கிரகமாகவும் விளங்க அருள் புரிந்தார்.

ஒருமுறை இந்திரன் துர்வாசர் கோபத்திற்கு ஆளாகி பதவி செல்வம் அழிய சாபம் பெற்றான். அதனால் இந்திரன் நிலை மிகவும் தாழ்ந்தது. யாகங்கள், ஹோமங்கள் செய்தும் எந்த பலனுமில்லை. நாரத முனியைச் சந்தித்தபோது, இந்திரா உன் அவையில் குருபகவான் இருக்க அவர் பார்வை உன்மீது எப்போது பட்டுக் கொண்டே இருந்ததால் உன் செல்வத்திற்கும் பதவிக்கும் ஆபத்தில்லாமல் இருந்தது. இப்போது அவர் தவம் செய்ய சென்றதால் அவர் பார்வை இல்லாததும் முனிவரின் சாபமும் ஒன்று சேர்ந்ததால் உன் நிலை இப்படியாயிற்று. தேவகுருவை சந்திக்கச் சொல்ல அவரிடம் தன் நிலைப் பற்றிச் சொல்ல அவர் இந்திர பதவியில் இருந்தால் மட்டும் போதாது தான தர்மங்களும் செய்ய வேண்டும். கர்வமும் தடுமாற்றமும் பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு கூடாது என உபதேசித்து இழந்தவைகளைத் திரும்ப பெற வழிவகைகளைச் சொன்னார். குரு பார்வை பட்டு இழந்ததை மீண்டும் இந்திரன் பெற்றான்.

வழக்குகளில் இழுபறி, திருமணத் தடை, புத்திரபாகியம், அஜீரணம், வயிறு உபாதைகள், சலிப்பு ஏற்படுதல், திறமை மங்குதல் ஆகியவற்றிற்கு குருதோஷம் காரணமாகும். குருவாக நினைத்து தட்சிணா மூர்த்தியை சிலர் வணங்குவது தவறு. சிவன் சொல்லாமல் சொல்லியவர் குருவிற்கெல்லாம் குரு. சிவகுரு அவர். அவரை வணங்குவது தவறில்லை. ஆனால் கிரக தோஷ பரிகாரங்களுக்கு பிரகஸ்பதி-வியாழபகவான் குருவையே வணங்க வேண்டும். தென் குடித்திட்டையில் அம்மையப்பனை வணங்கி ராஜ குருவை வணங்குதல் சிறப்பு.

கிரகத்தின் பெயர்: குரு
உரிய மலர்: வெண்முல்லை
உரிய மரம்: சந்தன மரம்
தானியம்: கொண்ட கடலை
வாகனம்: அன்னம்
ரத்தினம்: புஷ்பராகம்
கிழமை: வியாழக் கிழமை
திசை: வடக்கு
உலோகம்: பொன்
நிறம்: மஞ்சள்
சமித்து: அரசு
வழிபடும் பலன்கள்: சகல சம்பத்துகள் மற்றும் வித்தைகள் தேர்ச்சி

நவகிரக ஸ்ரீ குரு/வியாழன் பகவான் காயத்திரீ-(கோடி நன்மைகள் பெற்றிட)

’ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத”
(இடபக்கொடி கொண்டவனே, தடங்கல் தடைகள் தகர்ப்பவனே, ப்ருஹஸ்பதி வியாழப் பரமகுரு நேசா க்ரஹதோஷ மின்றி கடாட்சித் தருள்வாய்.)

$$$$$

Read 17561 times Last modified on சனிக்கிழமை, 15 September 2018 08:21
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26933891
All
26933891
Your IP: 44.204.218.79
2024-03-29 05:07

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg