Print this page
ஞாயிற்றுக்கிழமை, 17 May 2020 09:57

தவவேடம்! திருநீறு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

#####

தவவேடம்!

1661. தவத்தில் சிறந்து விளங்குபவரே முதன்மையான கோலம் கொண்டவர். பொய்யான கோலத்தைப் பூண்டவர் கொடுமையான கொலை செய்யும் கொடியவர் ஆவார். கீழான செயலையுடையவர் அக்கோலத்திற்குப் பொருத்தம் இல்லாதவர். அக்கோலம் தவத்தால் சிறந்தவர்களின்றிப் பொருந்தாது.

1662. சிவக்கோலம் கொள்வதற்கு உரிய வற்றில் சிறந்தது திருநீறு. காதில் அணிவது தாமிரத்தால் ஆன குண்டலம். கழுத்தில் அணிவது உருத்திராக்க மாலை. இவை வேத ஆகமங்கள் அறிந்தார்க்கு உடைய அடையாளாங்கள்.

1663. சிவயோகிக்கு உரியவை உள்ளாடை கைப்பை, மயில் இறகால் ஆன குல்லா.
சுற்றிய சடை. உடல் முழுவதும் அணியும் திருநீறும் கையில் மண்டையோடு. கையில் பிடிக்கும் கோல் ஆகிய கோலத்திற்குரியன ஆகும்.

1664 .செவியணியான குண்டலம், கழுத்தில் அணியும் உருத்திராட்சம், சிவசிவ என்ற ஒலி, ஊதும் வெண்மையான சங்கு, ஆறுகட்டி, மண்டையான சட்டி, குற்றம் இல்லாத பாதக்குறடு. சிவயோகத்திற்குரிய இருக்கை, குற்றமில்லாத யோகப் பட்டம், யோக தண்டம் என்ற பத்தும் சிவயோகியர்க்குரியவை.

#####


திருநீறு!

1665. பூண்நூல் சிகை ஆகியவற்றை அணிந்திருந்தும் அவற்றின் உண்மை இயல்பை மூடர்கள் அறியமாட்டார். பூண்நூல் என்பது வேதாந்தத்தை உணர்த்துவது. நுண்மையான குடுமி என்பது வேதாந்த் ஞானத்தை புலப்படுத்துவது. சிவபெருமானிடம் ஒன்றிய தனமை உடையவர் பரமும் உயிரும் ஒன்றாகும் என்று இருப்பர். ஒன்றாகாமல் நின்றவர் ஓ காரம் உச்சரித்தால் ஒன்றாவர்.

1666. எலும்பு மாலை அணிந்த சிவன் பூசும் கவசத் திருநீற்றை அதன் ஒலியானது கெடாமல் பூசி மகிழ்சி அடைந்தால் முன் வினைகளும் உங்களிடம் தங்காது. சிவகதியும் உங்களை வந்து அடையும் ஆனந்த மயனான திருவடியை அடையலாம்.

1667. அரச மரம், ஆலமரம், அத்தி மரம் ஆகியவற்றின் சமித்துகள் வேள்வித் தீயில் பொருந்தி உருவம் மாறித் திருநீறாகும். மலம் அற்றவனான சிவத்தின் திருவடியை உணர்ந்து அணுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் உருவமும் மாற்றம் அடைந்து இறைவன் தியானத்தால் உய்ர் குலத்தவர் ஆவர்.

#####

Read 1894 times
Login to post comments