Print this page
திங்கட்கிழமை, 18 May 2020 09:35

அபக்குவன்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

#####

அபக்குவன்!

1680. அறிவால் அறியாமையைப் போக்கும் குருவை ஏற்றுக் கொள்ளார். அறியாமையை நீக்காத குருவை ஏற்பர். இது எத்தகையது என்றால் குருடன் ஒருவன் மற்ற குருடனுடன் சேர்ந்து குருட்டுத்தனமான ஆட்டம் ஆடி இருவரும் அறியாமை குழியில் வீழ்வதைப் போன்றதாகும்.

1681. மானிடர் நினைப்பவை எல்லாவற்றையும் பிரதிபலித்துக் கொண்டிருப்பது காரண உடல். எண்ணங்கள் நிறைந்த மனம் உடையவர் காரண உடலின் நிழலைக் கூட அணுகமாட்டார். எண்ணங்க:ளால் உண்டாகிய வினைப் பயன்களை மாற்றவும் அறியார். அறியாமையால் மீண்டும் காமவழியை விரும்பிபோய் எண்ணங்களைப் பெருக்கி கொள்கின்றனர்.

1682. மக்கள் ஏய் எனக் கூப்பிட்டால் என்ன என்று கூட விடை கூறமாட்டார். உலகத்தின் இயல்பு இது. குழந்தையின் வாயில் தாயின் மார்பகத்தை வைக்கப் பால் சுரக்கும். தாயின் மார்பில் எவ்வாறு பல் சுரக்கின்றது என்பதை நம்மவர் அறிவதில்லை. அமுதம் ஊனில் அளித்து உயிரை நிலைக்கச் செய்பவன் உருவம் இல்லாத சிவனே ஆகும்.

1683. உறுதியும் பெருந்தன்மையும் உடையவளே. வாய் ஒன்றைச் சொல்ல மனம் வேறொன்றை எண்ண நீ பிறிது ஒன்றைச் செய்யாதே. முக்கரணத் தூய்மையுடன் இருந்தால் நீ சிவாக்கினியைப் பெற்றவள் ஆவாய் என்பேன், அவ்வாறு தெளிந்தபின்பு என் சொல் பித்தனின் சொல் என யாரும் சொல்லமாட்டார்.

1684. ஐம்பெரும் பாவங்களைச் செய்பவரை அஞ்சும்படி தக்க சமயத்தில் அறிந்து ஒரு மன்னன் மிக்க தண்டனை தந்து நாட்டினின்று கடத்தாவிட்டால் நாடானது வறுமைக்குள் சிக்கி முற்றிலும் பாழாகும்.

1685. தவத்தை மேற்கொண்டவர் தாம் அனுபவிக்கும் கன்மம் சிவத்தினால் அனுபவித்துக் கழிப்பதற்காக அமைக்கப்பட்டது. தேவரும் இதை அறியமாட்டார். தவத்தில் நிலையாய் நின்று அறியாதவர் எல்லாம் பிறவித் துன்பத்தில் அகப்பட்டு வருந்துவர்.

1686. பிறரிடம் சினம் கொள்ளுதல், எதையாவது சிந்தித்தல், செயல்களைச் செய்தல், தின்னுதல், சுவைத்தல், மற்றவர்க்குத் தீமை செய்தல், குறைவு, நிறைவு படுதல், தன் பெருமையைச் சொல்லுதல் இந்த ஒன்பதும் இறைவனிடம் அன்பு கொண்டவர்க்குகு கூடாதவையாம்.

1687. அபக்குவிகள் தங்களுக்கு அனுகூலமானதை அறியமாட்டார். பரமாகாயத்தை காணமாட்டர். தமக்கு அனுகூலமான பர வெளியில் தம் பார்வையைச் செலுத்த மாட்டார். பக்குவம் அற்றவர்களே காவலோடு உள்ள கண் இமைகளை வெளி நோக்கிலிருந்து தடுத்து நிறுத்துங்கள். அக நோக்கத்தை நோக்குங்கள். தொடர்ந்து வரும் இடையற்ற தவிர்க்கும் ஒளியாய் சிவம் உங்களுக்கு இருக்கும்.

1688. அனாதி காலம் முதல் ஆன்மாவுடன் கட்டப் பெற்றது ஆணவ மலம். அதை மாற்றும் வழியை உண்டாக்கி மலக்குற்றம் நீங்க முத்தியில் விருப்பம் உடையவனாகி உலக இயலில் மாறுபட்டு உண்மையான பொருளை நாடி மேன்மையை அடையாதபடி மனஉறுதி இல்லாதவனுக்கு ஞானத்தை தரக்கூடாது.

1689. ஆணவம் முதலிய ஐந்து மலங்களையும் நீக்கும் வகையை ஆராய மாட்டான். பொய்கலந்து பேசுபவன் பிறப்பு இறப்புகளுக்கு அஞ்சாதவன். இந்த இயல்பினன் மாணவனாய் ஏற்க்கத் தக்கவன். அல்லன் என்று விலக்கத் தக்கவன் ஆவான்.

#####

Read 1783 times
Login to post comments