gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:07

பராவத்தை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திணைபால் கடந்த தேவே புனையாய் இடர்க்கடல்
போக்குவோய் பேழை வயிற்றுப் பெம்மன்
ஏழைக்கிரங்கும் எம்மிறை அடியவர் உள்ளம்
அமர்ந்தாய் அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி

#####

பராவத்தை!

2269. ஐந்து சிவதத்துவத்தையும் கடந்த நிலையில் உள்ள அநாதியான பரமே தெய்வம் ஆகும். இதுவே எல்லாரின் மனமண்டலத்தில் பொருந்துவதாய் மலம் அற்றதாய் பிறப்பில்லாததாய் உள்ளது. இஃது அகண்டப் பொருளான படியால் உடலினுள் இருந்த உயிரை வேறுபடுத்துவதற்காக மறைந்திருந்த உண்மையை நான் அறிந்தேன்.

2270. பராசத்தியே அசுத்தமாயை. அசுத்தமாயையில் விரவித் தன்னிலை கெடாத சாந்தி கலையில் உள்ளது. மேலான ஆனந்த நிலையில் அந்தச் சத்தி ஒளிமயமாய் உள்ளது. அந்தச் சத்தியே அசுத்த மாயையில் பொருந்தி உடம்பின் சத்திகளான ஐந்துடன் சீவன் உடலால் பெறும் பயனுக்கு காரணமாகவும் இருக்கின்றது.

2271. முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அறிபவரே அறிபவர். அவ்வாறு கடந்த நிலையில் அவர் சத்தியில் அருளைப் பெறுபவர். அதனால் அவர்களுக்கு அங்கு எல்லா அறிவும் உண்டாகும். அப்போது அவர் சிவனோடு இனிதாகப் பொருந்தி யிருப்பார்.

2272. ஞனேந்திரியம் ஐந்தும் அந்தக் கரணம் நான்கும் தத்தம் செயல் மடங்கி உள்ளத்தில் அடங்க ஐந்து இந்திரியங்களையும் அணிகலமாகக் கொண்டு உறக்கத்தை அடையும் ஆறிவுமயமான ஆன்மா சிற்சத்தியுடன் நீல ஒளியில் மனம் தொழிற்படாமல் நிறபதில் இன்பத்தை அனுபவிக்கும்.

2273 நின்மல சாக்கிரத்தில் அமைகின்ற துரியமே சீவனது சுத்த நிலையாம். அத்தகைய பெருமைமிக்க தூய நிலையில் நனவு கனவு உறக்கம் என்னும் மூன்றையும் விரைவாய் கடக்கவே நின்மலத்துரியத்தில் சீவன் பரனாகும். சீவன் எனவும் சிவன் எனவும் என்றும் அறியாத மேல் நிலையில் அச்சீவன் சிவம் ஆவான்.

2274. நின்மலச் சாக்கிரதத்தில் சீவன் தத்துவங்களை விட்டுப் பரமாகும். இவ்வகையான அதிதீதத்தில் பலகால் பழகப் பழகப் பரம் பொருந்தும். இங்ஙனம் நிட்டையில் பொருந்தி அதிதீததை அடையாதவர் பரம் ஆகமாட்டார். அத்தகையவரை விட்டுப் பாசமும் அதனால் ஆன பற்றும் நீங்கமாட்டா.

2275. ஆராய்ச்சியினால் அறியப் பட்டபோது மாயை உடலில் உள்ளும் புறமுமாய் பொருந்தியிருக்கும் நின்மல துரியாதீதத்தில் வாயுவும் மனமும் கடந்த நிலையில் மய்க்கம் நீங்கினபோது தூய அறிவு சிவானந்தமாய் மேலே நிறைந்து மாயையை மூடும் பொருளாக அமைந்தது தானே.

2276. துரியம் என்ற குதிரைமீது இருந்த சீவனை மென்மையான பரவத்தையில் புகும்படி செய்து இந்திரியங்களான நரிகளை விரட்டிய நாதத்தைத் தரிசனம் செய்த அடியார்க்கு உரிய வினைகள் தளைப்படுத்தப் பட்டமையால் நின்று ஓலம் இட்டன.

2277. சாக்கிரத்தில் அதிதீதம் செய்யும்போது பரந்த பூத நாயகனான இறைவன் சீவனுடன் கலந்து நிற்பான். இறைவன் சீவனுடன் பொருந்தி விளங்கும் போது மாயையான இருளானது விலகி விடும். அப்போதே சீவனும் சிவனைப் போல் அகண்ட வடிவை அடைவான்.

2278. விழிப்பு நிலையில் உலக நோக்கில் மனம் விரியின் மாயா காரியமான உலகம் விளங்கும். அப்போது வன்மை மிகுந்த மாயை இருந்த இடத்தில் இருந்து கொண்டு தன்னைச் சார்ந்தவரைப் பற்றிக் கொள்ளும். ஆனால் சீவன் சிவப்பேற்றை அடையும் வகையில் சிவத்தைப் பற்றி மேலே செல்லின் சிவமாகும். மாயையுடன் கூடிய துரியத்தில் மாயையின் தீமை அகலாது.

2279. நீ ஆன்ம ஒளியை அறியாமல் உடல் அறிவுடன் முன்பு நின்றாய். பின்பு ஆன்ம ஒளியை அறிந்து துரியத்தில் நின்றாய். தன் இயலபை அறிந்தும் சிவப் பரப்பில் பொருந்த வில்லை என்றால் பிறவியானது நீங்காது. அவ்வாறு சிவத்தின் பரப்பில் அடங்கி விடுதலே மலமற்ற நிலையாகும்.

2280. கருவில் எல்லைக்கு கட்டுப்பட்டது துரியத்தில் உள்ள நுண்ணிய வித்தியா தேகம். பிறப்புக்கு உரிய காரணம் அகற்றப்படாதவரை நுண்மையும் பருமையும் பொருந்திச் சீவர்கள் பிறவியில் அகப்பட்டு பொருந்தும் அருளைக் கூடியவர் நுண்மையான வித்தியா உடலையும் பருவுடலையும் விட்டுச் சிவதத்துவத்தில் சிவத்துடன் ஒன்றாவர்.

2281. ஆன்மாவில் நின்மல சாக்கிரம் என்ற நனவு நிலையும் அதன்வழி ஏற்படும் கனவும் அதைக் கடந்து அதிகமான ஒளியில் அழுந்தித் தன்னை மறந்த நிலை உறக்கம் ஆகும். அந்தச் சுழுத்தியும் கடந்தவர் மேலான துரியத்தில் ஆன்ம தத்துவங்களைக் கைவிட்டுப் பரம் என்ற பெயரை அடைவர்.

2282. பரை ஒளியான சாக்கிரம் பரவி விரிந்த தூல நிலை கெட்ட கனவும் உண்மையான் சாந்தியில் ஏற்படும் பரை உறக்கமும் நீங்கில் சிவதுரியனாக உயிர் விளங்கும்.

2283. பராவத்தையில் அமையும் நின்மல சாக்கிரத்தின் பின்னான உலகம் காட்சிப்படாது ஒளியில் நிலைப்பெற்றுப் பொருந்தும் கனவும் அதன்பின் உண்டாகும் நின்மல சுழுத்தியில் சுட்டறிவும் நீங்கி உபசாந்தம் பொருந்துவதே துறவு நிலை. அதன்பின் தான் அந்த நிலையில் தங்கியிருப்பவனே சிவத்துடன் கலந்திருப்பான்.

2284. சீவன் துரியம் முதலாக பெருமை பெற்ற சிவதுரியம் இறுதியாக பத்து நிலைகளும் நீங்கும். மேலான சிவத்தின் நிறைவில் அடங்கியிருந்து அந்தக் கரணம் நான்கையும் அமைந்த வித்தியா தத்துவம் ஏழையும் விட்டு நின்ரான்.

2285.. எல்லாவற்றிலும் மேலாக விளங்குபவன் சிவன் அதனைவிட மேலானது பரமம். இது மேலானவற்றுக்கெல்லாம் மேலானது. அந்த இறையானது நினைவாக விரிந்து காட்சி தந்த சுகத்தை சூக்குமமாகப் பெற்ற கனவு நிலையை விட்டுப் பொருந்தும் பிரமரந்திரம் சீவனுக்குப் பற்றுக்கோடாக உபசாந்தம் அளிக்கும். இதன் மேல் மேலான சிவம் உண்மைக் காட்சியாம்.

2286. ஆராய்வோமானால் உயிர்களுக்குப் பற்றுக் கோடாக அருகில் நிலைகளான பரம், சிவம், சத்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவமும் உருவ மூர்த்திகளான நான்முகன், திருமால், தேவர் தலைவனான உருத்திரன், மகேசனும் எனப் பத்துபேர் உள்ளனர்.

2287. சொல்லப்பட்ட திருமேனிகள் உயிருடன் ஒன்றியிருந்து இயங்குவதை உலகத்தார் அறிய மாட்டார். கடலால் சூழப்பட்ட எல்லா உலகங்களும் அழிந்து விடுவதையும் இவர்கள் அறியமாட்டார்கள். உடலோடு உயிர் பொருந்தியிருக்கும் இயல்பை அறிந்து இங்கு மேன்மை அடைய மாட்டாதவர் மேலே கண்ட திருமேனிகளைத் தியானிப்பது வலிமை கொண்டது ஆகாது.

2288. குருவின் உபதேசத்தில் பின் விளங்கும் பெரிய தவத்தின் பயனாகிய பரவிந்து மண்டல்த்தை உணர்ந்தால் கருணை வடிவினனான எம் தலைவன் பழமையான சுட்டறிவு நீங்கும் காலத்தில் என் அகண்ட கலப்பை உணரும்படி செய்து நான் இன்பம் அடைந்து உய்ந்தேன்.

2289. பொன்னால் இயற்றப்பட்ட அணியைக் கணும்போதும் பொன்னைப் பற்றிய காட்சி இல்லை. பொன்னின் தன்மையை நோக்கும்போது பொன்னால் செய்யப்பட்ட அணியின் காட்சி பொன்னில் மறைந்து விடும். அது போன்று அந்தக் கரணங்கள் பகிர்முகமாக வியாபகம் பெற்றிருந்தபோது ஆன்மாவின் காட்சி இல்லை. ஆன்மாவின் இயல்பை உணர்ந்த போது அந்தக் கரணங்களின் பரப்பு இயல்பு ஆன்மாவில் ஒடுங்கி விடும்.

2290. மரத்தால் செய்யப்பட்ட யானை சிற்பத்தைப் பார்க்கும்போது மரத்தை பற்றிய உணர்வு அறிவு இருப்பதில்லை. மரத்தின் நிறங்களை அகற்றிப் பார்க்கும்போது யானைக் காட்சி மரத்தில் மறைந்து விடுகின்றது. அதுபோல் பரத்தால் விளக்கம் பெற்ற பார் முதலிய பூதங்களைப் பார்க்கும்போது பரமானது உணர்வுக்கு வருவதில்லை. குருவருளால் பார்க்கும்போது பரமே காட்சி தந்து பார் முதலிய பூதங்கள் பரத்தில் மறைந்து விடும்.

2291. முப்பதாறு தத்துவங்களைக் கடந்து திருவைந்தெழுத்தில் நம என்பதை விட்டு பேரறிவாகித் தத்துவங்களுக்கு வேறாய் ஆன்மா யகாரமாய் விளங்கிய போது பரையில் இறுதியில் உள்ள ஒளியான தற்பரனான சிவத்தில் பேறு நிறைத்த சிவய என ஆன்மா சிவசத்தியுடன் அடங்கி நிற்பதே வீடுபேறாகும்.

2292. பராவத்தையில் சாக்கிரம் முதலிய ஐந்தும் பின்கண்டவாறு ஆகும். பரையில் சொற் பிரபஞ்சத்துக்குக் காரணமான நாதமானது தோன்றும். கனவில் நாதம் ஒடுங்க பரையில் நின்மல் சுழுத்தியான உறக்கம் அமையும். நின்மல் சுழுத்தியில் அழுந்தாது மேல் விளங்கும். மேல் விளங்கவே மேலான சிவதுரியம் உண்டாகும்.

2293. பராவத்தை ஐந்தும் சகல நிலையில் சீவர்களுக்கு அருள்கொண்டு பந்தம் நீங்கச் செய்து சுத்த அவத்தையில் பொருந்துமாறு செய்யும். இந்த நிலையில் பொருந்தும் பிரம்ரந்திரத் துடிப்பால் மனம் பதியச் சிவத்தை அடைவதற்குரிய விருப்பம் உண்டாக மாலைக் காலத்தில் நில ஒளியின் முன் இருள் நீங்குவது போன்று தலையின் முன்பு உள்ள வெண்மையான ஒளியில் ஐந்து மல்ங்களும் நீங்கி விடும்.

2294. துவா மாயையில் இருக்கும் புருடனுடன் சேர்ந்த ஆன்ம தத்துவங்கள் இருபத்தைந்தும் பொய்யாகும்படி மாமாயையில் உடலுக்குரிய ஆன்மன் கண்டு எல்லாப் பொருளும் அறியும்படியாய் அவைகளேயாய் அவற்றினின்ற்று விலகி இருக்கவும் உய்தியைத் தரும் பராவத்தையே எண்ணிக் கொண்டிருத்தல் சுத்த நிலையாகும்.

2295. முன்னைய நல்ல தவத்தால் ஞானத்தில் விளங்கும் நாதனான சிவபெருமான் தான் ஆன்மாக்களிடம் செய்யும் அருளும் பரமும் அவர்கள் தன்மீது செலுத்துகின்ற அன்புமாய் இருந்தான். ஆன்மாக்களுடன் பிரிவின்றிக் கலந்து வடிவத்தில் பொருந்தியிருக்கும் ஆன்மாக்களின் சாக்கிரம் முதலிய உபாதிகளில் பொருந்தாமல் விளங்கினான். என்னைப் பருவுடல் நுண்ணுடல் ஆகியவற்றின் பிடிப்பினின்று விடுவித்தும் என்னைவிட்டு அகலாதனவாகவும் உள்ளான்.

#####

Read 1543 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26930671
All
26930671
Your IP: 3.81.221.121
2024-03-28 21:00

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg