gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 15:55

முத்துரியம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#####

முத்துரியம்!

2466. உயிர் கேவல சாக்கிரம் கனவு உறக்கம் என்பனவற்றைக் கடந்து சிவ துரியத்தை அடையும். சீவனுக்கு ஆதியான பரமும் கனவு நனவு உறக்கம் என்ற மூன்றையும் கடந்து பர துரியத்தை அடையும். சிவனும் பரனைப் போன்று நின்மலக் கனவு முதலிய மூன்றைக் கடந்து துரியத்தை அடையும். இப்படித் தொந்தத்தசி -தத்துவமசி என்ற பெருவாக்கியம் விளக்கும் நெறி அமையும்.

2467. சீவனின் நனவில் பொருந்தும் துரிய நிலையே தொம்பதம் ஆகும் சகல சாக்கிரத்தி; உள்ள துரியத்தில் ஆன்மா பரதுரியம் பொருந்தும். சீவன் அப்பர நிலை நீங்கிச் சிவநிலை அடைவது நின்மல நனவில் ஏற்படும் துரியம்-பேருறக்கம். ஆகும். மேன்மை பொருந்திய மேல் கூறப்பெற்ற சிவபர சிவதுரிய நிலைகள் இவ்வாறு அமையும்.

2468. சீவன் விளங்கும் துரியத்தில் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம் என நான்காகிப் பணியும் பரதுரியத்தில் பொருந்தும் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம் என்னும் நான்கும் மேலான பரமாகிப் பொருந்தும். சீவ பரசிவச் சேர்க்கையில் சீவ துரியம், பரதுரியம் என்ற பொதுமையில் இரண்டும் சீவபர துரியத்தில் உள்ள விரிவாகிய எட்டு நிலைகளுமாகப் பத்தாகும்.

2469. மேல் கூறப்பட்ட பத்து நிலைகள் பொருந்திய சீவபர துரியத்தில் சிவ்த்தை அடையும் பொருட்டு உபதேச முறைப்படி நின்று பராபரச் சேர்க்கையில் ஒரு முடிவை அடையச் செய்கின்ற நாத விந்துக்களான இரண்டு திருவடிகளையும் சேர்த்து நிற்பாயாக.

2470. சீவஒளி விளங்கும் துரிய நிலையில் நீங்காது பொருந்தியிருங்கள். இதை நீங்கள் அடைய முடியாது என்று எண்ணினால் அடையக்கூடிய நெறியை உணர்த்தும் ஞன நூல்களைச் சிந்தித்திருந்தால் பல் நா உதடுகள் பொருந்திச் சொல்வதற்கு மேற்பட்ட சிவதத்துவம் நாதமாய் அமையும்.

2471. அசத்தான முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டுச் சித்து வடிவான பரமாய் சார்ந்திருந்த சுத்த மாயை அசுத்தமயைகளை அருள் சத்தியால் சிதைத்து அதன் விளைவான பிரிவற்ற சிவ சத்தியைப் பொருந்திடும் இயல்பைச் சிவநெறியில் ஈடுபட்ட அன்பர் நெறி காடும் முடிவை அறிந்திருந்தனர்.

2472. நனவில் நான்காம் நிலையான துரியத்தில் தன் உயிர் விளங்கும் தொம்பதம் என்ற ஒளி நிலை ஆவது போல் வினைகளினின்றும் நீங்கிய சிவன் நின்மலச் சாக்கிரத்த்தை ஆதியாக உடைய நான்காம் நிலையான நின்மலதுரியம் அடைய பரதுரியம் அமைந்து அதனையும் கடந்த துரிய தீதத்தில் தற்பரம் என்ற நிலையை அடையும்.

2473. முத்துரியத்தில் தொம்பதம் என்றும் தற்பதம் என்றும் சொல்வது போல் நம்பத் தகுந்த மூன்றாம் துரியமான சிவதுரியத்து மிக நுண்ணிய நிலையாகும். அங்கு அப்பால் விளங்கும் பரம் பொருள் ஆன்மாக்களை ஆட்கொள்ளும் சிறப்பு மிக்க நந்தியாகும்.

#####

Read 1549 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26944682
All
26944682
Your IP: 18.206.76.160
2024-03-29 13:21

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg