gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:15

மோட்ச நிந்தை! இலக்கணாத் திரயம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

#####

மோட்ச நிந்தை!

2558. வீடுபேறு உண்டு என்பதை இல்லை என்று மறுப்பவர்கள் நரகத்தை அடைவதை உலகவர் அறிவர். மேலும் அவர் வீடுதோறும் போய் இரப்பர். நாள்தோறும் உணவுக்காக அவர் குதிரைபோல் தாவிப் போய் அலையத் தொடங்குவர்.

2559. குருவானவர் காட்டிய நெறியில் நின்று இறைவனுடன் கூடமட்டார். இறைவனிடம் விருப்பம் இல்லாதவராய் நூல்களில் உள்ள நயத்தை அலங்காரமாகப் பேசிக் கொண்டிருப்பர் இறைவன் உயிர்களுக்குச் செய்யும் உதவியை எண்ணிப் பாடவும் மாட்டார். அவ்வாறு பாடிஆடுபவர் எய்தும் பேறு இப்படி ஆகாது.

2560. என் உள்ளத்திலிருந்து எண்ணமானது வெளியே செல்லும் உள்ளே தோன்றுவதுமாய் உள்ளது. அங்ஙனம் செல்லாது தடுத்து நிறுத்திச் செம்மையுற்ற சித்தத்தையே இறைவன் என எண்ணி மனம் அற்ற இடத்தில் உள்ளவனை என் தலைவன் என்று அழைத்தேன். எனது உயிர் அறிவு கெட்டு ஒழியும்படி இறைவனைப் பற்றி நின்றபோது இஃது என்ன என்று கேட்கின்றனன்.

2561. மேடான இடத்தில் தங்கியிராத நீரைப் போல உடம்புள் பொருந்தி நிற்காமல் ஓடும் உள்ளத்தில் அருளைச் சேர்த்து வைத்துக் கடலில் நில்லாமல் கடந்து செல்லும் மரக்கலம் கரை சேர்வதைப் போன்று பிறவிக் கடலில் நில்லாமல் உயிர்களைக் கரை சேர்ப்பதற்குத் தீ வண்ணனான சிவன் வெளிப்பட்டு நிற்பான்.

2562. தாமரைக் கொடியானது அந்நீர் நிலையைக் கடப்பவரைத் தடுப்பது போல் பரகதி இல்லை என்பவர் தடுப்பர். அன்னார் சிவத்தை அடைய வேண்டிய வழி வெளியே உள்ளது என்று திரிவர். அடைவதற்கான வழியைக் காட்டினாலும் அதைக்காணாத மூடர் ஆவார். அவர்கள் நன்னெறியை நாடாமல் தீய நெறியை நாடித் தேடுகின்றனர் என்னே அறியாமை.

2563. அஞ்ஞானத்தால் மூடப்படாத ஞானியர் சிவபெருமானைத் தம் சிந்தையுள் நாடிச் சிந்தித்திருப்பர். ஆனால் அஞ்ஞானியர் காட்டிலும் மலையிலும் மருத நிலத்திலும் ஊடுருவி நிற்கும் ஒப்பில்லாதவனை நினையாமல் கெடுகின்றனர்.

2564. செத்தபின்பு உயிர் பயணம் தொடங்குவது தெற்கு நோக்கி நரகத்துக்கும் வடக்கு நோக்கிச் சொர்க்கத்துக்கும் ஆம் ஆயின் அழியாத அமரத் தன்மை பெற்றவர் இலட்சியத்தை அடையாக் கிழக்கு நோக்கி நெற்றிக் கண்ணுக்கும் மேற்கு நோக்கிப் பிடரி கண்ணுக்கும் போவார். இந்த இரண்டுக்கும் இடையே நாவினுக்கு மேல் மந்திரப் பொருள் இருக்கின்?றது என்று நடுவில் உள்ள அக்கினிக் கலையை ஒளிபெறச் செய்து பொருந்தி விளங்குவர்.

2565. காம மயக்கம் ஏற்பட மங்கையர் பார்த்தாலும் அரிய தவம் செய்கின்ற ஞானியர் தம்மைப் பொருந்துமாறு சொன்ன வற்றை மனத்தில் வைத்துக் கொள்ளார். இஞ்ஞானியரைச் சினம் உண்டாகப் பேசிய தீவினையுடையவர் தமக்கு வல்வினைகள் பொருந்துமாறு தாங்கிக் கொண்டிருப்பர்.

#####

இலக்கணாத் திரயம்!

2566. விட்ட இலக்கணை ஆன்மா வானத்தில் செல்லும் என்பதாம். விடாத இலக்கணை ஆன்மா உபாசாந்தத்தில் அமைகிறது என்பதாம். விட்டும் விடாத இலக்கணை ஆன்மா சாந்தம் முதலியவற்றைக் கேட்டல் முதலியன செய்யும் என்பதாம். இவை மூன்றும் ஆன்மாவில் பொருந்தும் இலக்கணம். அவற்றில் உண்மை இலக்கணம் இம்மூன்று இலக்கணைக்கும் அப்பாற்பட்ட இலக்கணமாய்ச் பொருந்தும்.

2567. பிரணவ வில்லைக் கொண்டு புருவ நடுவையும் பிடரிக் கண்ணையும் சேர்க்கும் நாணின் விசையால் மேலே ந்ழும் அம்பு போன்ற சிவனைப் பிரமம் என்ற இலட்சியத்தில் செலுத்தத் தம்மைக் கொல்வதற்காக காத்திருக்கும் ஞானேந்திரியம் என்ற யானைகள் ஐந்தும் சீவன் கவிழ்ந்த சகசிரதளாத்தைக் கடந்தபோது விழுந்துவிட்டன. பிரணவமான வில்லில் இருந்து உயர்ந்து சென்றவர்க்குப் பிரகாசமான நவமணி ஒளி போன்று சிவம் வெளிப்பட்டு விளங்கும்.

#####

Read 1590 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27033773
All
27033773
Your IP: 3.140.185.170
2024-04-18 13:32

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg