ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#####
முத்தியுடைமை!
2633. முத்தி நிலையில் சிவபெருமானின் முழு அருளையும் உயிர் பெற்று முப்பத்தாறு தத்துவங்களும் வேறு எனக்கண்டு நீங்கி உண்மையுணர்ந்து தன் கடமை இறைவனை எண்ணியிருத்தலே என்று தவமாகும் என்று வினைகளின் நீங்கிய உண்மையான பத்தியில் ஈடுபட்டவர் மேன்மையுடைய சிவானந்தத்தைப் பெற்ற மெய்யறிவுடையவர் ஆவார்.
2634. சிவம் என்னும் கனியை நாடிய வன்மை மிக்க தாளையுடைய சீவன் என்ற பறவை உள்ள மண்டலத்தில் விளங்கும் சிவம் கனியை விரும்பிச் சித்தித்திருக்கும் போது கண்டத்துக்கு மேல் விளங்கும் அக்கினியில் சுழுமுனையாகிய விளக்கை பற்றி அந்தக்கரணங்கலான நால்வரும் உட;ல் அற்ற இடத்தில் இன்பத்தை நாடுபவர் ஆயினர்.
#####
சோதனை!
2635. பெருமையுடைய சிவபெருமானை உறையற்று விளங்கும் நிலையில் அப்பெரியோன் அடி ஞானத்தால் அருள் கடலில் முழுகினோம். எல்லா விதமான மாயா தொடர்புகளையும் கடக்கச் செய்து அவற்றினின்றும் வேறுபடுத்திச் செயல் அற்று இருக்கும்படி செய்வதே சோதனை.
2636. அகண்ட அறிவுடைய அரிய வேதத்தால் புகழ்ந்து பேசப்படுபவன் தேவர்களூக்குத் தலைவன், ஐம்ம்புல அறிவுகளையும் விட்டு அகன்அ அறிவை அறியும் பொறியை உடையவன். இத்தன்மையுடைய அடையாளங்கலையுடைய குருநாதனை நான் பொருந்தி யிருப்பேன்.
2637 உலகத்தவர் அறிவு அறிவு என்று ஓயாமல் கூறுகின்றனர். அவர்கள் சொல்லும் அறிவு பாச அறிவாகிய அறியாமை என்பதை எவரும் அறியவில்லை. பாச அறிவைக் கடந்து சிவஞானமாகில் உயிர்களிடமுள்ள பாச அறிவு என்ன இலக்கணம் உடையது என்பது புலனாகும்.
2638. சோதனைக்குப்பின் சுட்டறிவு இல்லாமல் யாவற்றையும் ஒரு சேர அறியும் அறிவில் கீழான மலங்கள் போய் அடையாத சேர்க்கையில், அவனது அறிவே கண்ணாகக் கொண்டு தம் அறிவு கெட்டு ஏகாக்கிரச் சித்தத்துடன் நெறியாக உள்ள மேலான நந்தியின் அருளுடன் ஒன்றுபட்டுத் தான் என்ற ஒன்று இல்லாமல் இருத்தலே சிவமாம் தன்மை அடைதல் ஆகும்.
2639. எம் தலைவன் காற்றில் பிரிக்க முடியாத் பரிசமும் கரும்பில் பொருந்திய இனிமையும். பாலுள் மறைந்துள்ள நெய்யும் இனிய பழத்துள் பொருந்திய சாறும், மலருள் பொருந்திய நறுமணமும் போல் சீவனுடன் உடனாய் இருக்கின்றான். அவனே யாவற்றிலும் கலந்து விளங்குகின்றான்.
2640. விருப்பத்துடனே சிவபெருமானை நாடி இமயத்தைச் சாரும் உமையம்மையைப் போல் விருப்புடன் இருப்பவர் மனத்தில் எம் இறைவன் ஒளிவமாய் விளங்கிடுவான்.
2641. தம்=லைவனான சிவபெருமான தலயின்மீது விளங்கும் பெருவெளியில் வந்து எனது மன மண்டலத்தையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருந்தான். அங்ஙனம் அப்பெருமான் எழுந்தருள என் உயிர் தந்தை வந்து விட்டான் என்று என் உயிர் அறிவு கெட்டு நின்றேன். அங்ஙனம் நின்றதும் எம் மனத்துள் சிவன் சிறந்து விளங்கியிருப்பதைப் பார்த்தேன்.
2642. சத்து சித்து ஆனந்தம் என்ற பண்புகளை உடையவனும் தவத்தின் பயனாக இருப்பவனும் தவம் செய்வார்க்கு நன்மை செய்பவனும் உள்ளமான நடுவில் வீற்றியிருப்பவனும் அழியும் இயல்புடையவற்றைக் கடந்து நிற்பவனும் ஆன இறைவனை நாடுங்கள். அவ்வாறு நாடினால் எண்ணில்லாத சீவ கோடிகளில் உம்மை மேலானவனாக அவன் ஆக்குவான்.
2643. சிவகுருவாய் எழுந்தருளி வந்து அத்துவா சோதனை செய்த போது நல்ல நாதனான சிவபெருமான் உடனாய் இருக்கின்றான். பரமாகவும் அபாரமாகவும் உள்ள அப்பெருமான் எல்லாவற்றிலும் கலந்து உள்ளான். மேலும் அவன் யாவற்றையும் கடந்து நின்று கலை முதலிய அத்துவாக்களைக் கடப்பதற்குத் துணையாகின்றான்.
2644. தேவராலும் அறிய இயலாத அப்பரம்பொருள் மேலே சொன்னபடி நல்ல நெறியில் செலுத்தும். இந்த வாழ்வில் தந்தையும் தாயும் தோழனும் போல் இனியவனாய் எனக்குத் துணை செய்யும். எனக்கு வழிகாட்டியாய் இருந்து சிவவுலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைக்கும். இந்த வகையாக நந்தி உதவி செய்வான்.
2645. சோதனைக்குப்பின்பு ஞானமாகிய வாளை உறையினின்றும் எடுத்து அஞ்ஞனமான இருளைப் போக்குவதாகும். அவ்வாறு அருளிய பெருமையுடையவன் இருப்பதை அறியவும் கூடும். அறிவதோடு தேவதேவனான அவனை நெருங்கிப் பொருந்தவும் கூடும். அப்போது அஞ்ஞான இருளில் செலுத்தும் பல கூட்டத்தை நீங்கக்கூடும்.
2646. சிவகுருவால் உணர்த்தப்பட்ட ஞானமென்ற வாளை மனம் என்னும் கையில் எடுத்தவுடன் என்னை வேறுபடுத்தி தன்னெறியினின்றும் நீக்க வல்லார் எவரும் இல்லை. சிவம் அல்லாதவை நிலைபெறாதபடி ஞான விசாரணையால் என் மனத்தைச் சோதனை செய்வேன். அப்போது ஆதி மூர்த்தியாகிய சிவத்தைப் பொருந்த்திச் சிவமாக இவன் ஆகின்றான்.
2647. குருவானவர் பிறவிக்குக் காரணாமான பாசத்தையும் அருவமான மாயையும் கன்மங்கள் உருவாக்கும் பந்தத்தையும் அங்ஙனம் செய்யும்போது உண்டாக்கும் அச்சத்தையும் அச்சத்தினால் தீய நெறியில் போகும் சிந்தையைத் திருத்தலுமாணவர் நன்னெறியைச் சேர்ந்தார். அங்ஙனம் சோதனை செய்யப்படும் திறமை உடையவர்க்கே சிவத்தைச் சார்ந்து சிவமாக முடியும்.
2648. சொல்லால் சொல்ல முடியாத ஒன்றை பிரணவ உப்தேசத்தை என் அக உணர்வில் குருநாதன் உபதேசம் செய்தான். எல்லை கடந்த நூல் ஆராய்ச்சியில் விருப்பத்தை ஒழித்து அலைபோல் வந்து அழியும் இயல்பு கொண்ட உடம்பை அழியாமல் இருக்கச் செய்து குற்றம் நீங்கப் பெற்ற என்னிடத்தில் பரன் வந்து பொருந்துவான்.
#####