Print this page
வியாழக்கிழமை, 16 July 2020 12:10

சூக்கும பஞ்சாக்கரம்! அதி சூக்கும பஞ்சாக்கரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

#####

சூக்கும பஞ்சாக்கரம்!

2709. எம்பெருமானான சிவனை எள்ளி நகையாடி அவனது இயல்பைப் பற்றி வாதிடுபவர் அறியாதவர் ஆவார். அப்படியின்றி அப்பொருமானை ஒளிமயமாய் நினைந்து உருகும் மனம் உடையவராய் அவனே ஒளியாய் வெளிப்படுவான் என்று எண்ணிச் சிவயநம என்று ஓதுங்கள். அப்போது இரசவாதிகள் குளிகையையிட்டுச் செம்பை பொன் ஆக்குவதைப் போல் அவன் மலக் குற்றத்துடன்கூடிய உடலைப் பொன்னொளி பெறச் செய்வான்.

2710. சிவயநம் என்னும் ஐந்தெழுத்தில் முறையே சிவன் சத்தி சீவன் அடுகின்ற மலம் மாயை என்பன உள்ளன, அதைச் செபித்தால் துன்பத்தைத் தரும் ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி என்னும் ஐந்து மலங்களும் நீங்கச் சிகர வகரத்தால் உணர்த்தப்படும் சிவன் சத்தியுடன் ய ஆகிய சீவன் பொருந்தத் துன்பத்தை தரும் பாசம் சீவனைப் பற்றாமல் அகலும்.

2711. சிவசத்தியின் சிவயநம என்ற ஐந்தெழுத்தானது சிவன் சத்தி ஆன்மா திரோதாயி மாயா மலம் என விளங்கும் சீவன் சிகாரத்தை முதலாக ஓதும் முறையில் வினைகளை நீங்குதலுடன் பிறப்பு நீங்கிப் பரசிவனாகும்.

2712. சிவயநம என்று எண்ணுவதில் நம என்பதால் குறிக்கப்படும் மலமான இருள் அகன்று ஆதி சத்தியான குண்டலினி சத்தியை விட்டுச் சித்சத்தியாய் ஒளிமயமாய்ப் பிரகாசிப்பதில் தீமை இல்லாத சிவஞானயோகம் கைகூடும். அப்போது சிவய என்ற ஒளியை வழிபடுங்கள். இதுவே மலம் நீங்கிய உண்மை நிலையாகும்,

2713. நகரம் முதல் முறையாகவுடைய சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆஞ்ஞை ஆகிய ஆதாரங்களில் நனவு முதலிய நிலைகளில் தொழிற்படும் உணர்வு மறைப்பும் சத்தியால் இயங்கிச் சீவரின் ஆதிசத்தியினது நிலையான ஒளியில் பொருந்த நனவாதி நிலைகளில் பொருந்திய உண்ர்வு முடிவடையும். முடிவடைந்து சுத்த வித்தியா தத்துவம் தலையின்மீது விளங்கித் துரிய நிலையைத் தம்மிடம் பெற்று மூலாதாரம் முதல் பேரொளியாக விளங்குவதில் சமாதியுற்றுச் சிவயநம் என நினைப்பதில் சிவமாவர்.

2714. அருளின் வேறுபட்டவையான சத்திக் கூட்டமும் அத்தனாகிய சிவமும் கலப்பதில் ஆன்மாவை உடலுடன் பொருந்தும்படி செய்தவர் ஆவார். அந்த உடல் மாயையில் தங்கும் ஆயின் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களும் விலகச் சிவய என்று ஒளி உருவாக வழிபாடு செய்யுங்கள். அப்போது நீங்குதற்குரிய வினைக் கூட்டங்களைப் போக்குவது சிவய எனபதாகும்.

2715. வாய் பேசாத மௌனிகளும் சிவசிவ என்று எண்ணுவதில் உள்ள நன்மையை அறிகிலர். சிவசிவ என்று எண்ணுவதுடன் மூச்சின் கதியும் இயங்காமல் இலயம் அடையும். அடையச் சிவமும் சத்தியும் ஆகிய மகாமனுவைத் தெளிந்தவர்கள் திருவருள் பெற்றுச் சிவசத்தியாகவே அமைவர்.

2716. முறபிறவியில் செய்த தீவினையின் கரணமே சிவசிவ என்று ஓதாமல் இருக்கின்றனர். எத்தகைய தீவினையளரும் சிவசிவ எனச் சொல்வாராயின் தீய வினைகள் யாவும் கெட்டுப் போகும். மேலும் அவர்கள் தேவவுடல் பெற்று விளங்குவர். சிவசிவ என்று கணிப்பதால் சிவகதி உணடாகும்.

2717. சிவயநம என்ற ஐந்தெழுத்தை உச்சரிக்கும் முறையில் நம என்ற எழுத்துக்களை நாவுள் கழுத்த்ப் பகுதியில் நிறுத்திச் சிவ என்ற திருப்பெயரை தலையின்மீது மனமண்டலத்தில் நினைக்கப் பாவம் நீங்கும் தனமையும் அதுவாகும். அதனால் அஞ்ஞானம் நீங்கும் பிறவியும் நீங்கும்.

#####

அதி சூக்கும பஞ்சாக்கரம்!

2718. சிவயநம என்று உள்ளத்தி வெளியே சொல்லாது அந்நிலையதாக்கி மலத்தால் ஆன துன்பத்தை நீக்கிச் சிவத்துக்கு அடிமையாக்கிச் சிவய சிவசிவ என்று பலமுறை சித்தத்தில் எண்ணின் அச்சம் நீங்க் ஆனந்தம் உண்டாகும்.

2719. மிக நுண்மையான ஐந்தெழுத்துத் தரிசனத்தால் மூலாதாரத்தில் உள்ள அக்கினி கதிர மண்டலாத்தைப் பேதித்துச் சென்று தோளுக்குமேல் விளங்கும் சந்திரன் மண்டல ஒளியில் ஐயறிவுகளும் பொருந்தும் முறையில் சென்று யோக நித்திரையில் பொருந்தியிருக்கும் அவன் உலகை மறந்திருக்கும் அச்சமயத்தில் சிவத்தை நெஞ்சிடம் எனக் கொண்டு பிரியாமல் இருக்கும் நிலையைப் அடையலாம்.

2720. வேதம் ஆகமம் வேதாங்கம் என்பனவற்றை முறையாக ஓதினாலும் அவை எல்லாம் சிவபெருமான் எழுத்து ஒன்றான சி காரத்தில் இருப்பவையாகும். ஐயம் நீங்கி அவ்வெழுத்தின் உண்மையினை உணர்ந்து சாதனை செய்தால் அதுவே முத்திக் கரையை அடைவதற்குரிய அரிய தோணியாகும்.

2721. பழைய மறையில் சிரசில் உள்ள ஐந்தெழுத்துக்களான கனி முதிர்ந்து கிடக்கின்றது. ஆனால் அக்கனியை உண்பதற்கு அதனைச் சிந்தித்து அறிநெறியில் கொள்ளும் செயல் அறிபவர் இலர். மூடர்கள் அதன் பெருமையை அரியாமல் அஃது எழுத்துக்களானவைதானே என்று கூறுவர். அஃது அவர் தலையெழுத்தை மாற்றிப் படைக்கும் எழுத்து என்பதை அறியார்.

#####

Read 1687 times
Login to post comments