ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
சத்திய ஞானானந்தம்!
2825. பிரகிருதி மயை தூவாமாயை தூய மாயை ஆன யாவும் சூனியத்தை அடைய ஆன்மா தத்துவங்களின்றும் நீங்கி சமஷ்டி நனவு கனவு உறக்கம் என்னும் நிலைகளையும் கடந்து துரியத்தை அடையவே, இந்த துரிய நிலையும் சூன்யமாக அந்நிலை இன்ன இயல்புடையது என்று விளக்க ஒண்ணாத இன்பத்தில் தற்பரன் என்ற சிவன் ஆன்மாவில் நிலை பெற்ற போது ஆன்மா சிவத்தன்மை எய்தும். ஆனந்தமாய்ப் பொலியும்.
2826. தொம்பதம் தற்பதம் சொன்ன சிவதுரியம் பரதுரியம் போல் நம்பத்தகுந்த சிவதுரியம் பரதுரியம் கடந்து விளங்கும் சிவதுரியத்தில் ஆனந்தம் ஏற்படும். ஆன்மா பிரகிருதியை நோக்கி நினைக்காத அந்த நிலையில் செம்பொருளாக இருந்து சீவர்களைப் பக்குவம் நோக்கி ஆட்கொள்பவன் சிறப்புமிக்க சிவனே ஆகும்.
2827. பொருந்தும் சத்திய ஞான ஆனந்தத்தை மாணிக்க ஒளியின் பிரகாசத்துடன் ஒப்பாய் உரைத்தல் பொருந்தாது. அந்தச் சத்திய ஞானானந்தம் கண்ணுக்கு இனிய நீல மலரும் தூய்மையும் நாதமும் நிறமும் மணமும் பிரகாசமுமாகக் கூறப் பெற்ற ஆறும் போன்று இனிமை உடையதாகும்.
2828. சத்தி சிவம் மேலான ஞானம் ஆகியவற்றைச் சொல்லுமிடத்து எல்லா உயிர்களின் சமஷ்டி இன்ப நிலையே சிவத்தின் உயர்ந்த ஆனந்த நிலை. கூறப்பெற்ற சிறந்த வடிவத்தையுடைய சத்தியை விட்டு அகலாமல் நிற்கும் சிவம் நீல மலரை விட்டு அகலாமல் நிற்கும் அதன் பண்புகளைப் போன்றதாகும்.
2829. அழகான நீலமலரில் நிறமும் மணமும் அழகும் கலந்திருப்பதுபோல் சீவன் சிவனோடு வேறுபாடு இன்றி கலந்து நிற்க சிவம் என்ற தத்துப் பெருவாக்கியப் பொருளானவன் சத்திய ஞானாந்தம் விளங்க நின்றருளினான்,
2830. செல்லும் அளவு உள்ளம் நெகிழும்படியாகச் சிவபெருமானை வணங்கி பாடல்களீனால் துதிப்பின் அவனை உள்ளத்தில் அமைக்க முடியும்.. என்னையும் அப்படி எளிய தலைவனான நந்தி அவனது அருளுடன் சேர்ப்பித்து மறவாமல் நினைக்கின்ற அளவு எனக்கு அவனிடம் பற்று உண்டாகும்படி செய்தான்.
2831. பாலுடன் தேனும் பழச் சாறும் தூய அமுதத்தின் சுவையும் போல் விளங்கும் துரிய நிலையைச் சீவன் கடந்தபோது சிவன் சீவனுள் புகுந்து மயிர்க்கால்களீல் எல்லாம் இன்பம் பெருகும்படி நிறைந்திருப்பான்.
2832. அழியாத இயல்புடைய சீவனையும் அது பொருந்தியிருக்கும் அண்ட கோசத்தையும் கடந்து நாத தத்துவத்தைக் கடந்து தனித்து நிறபவன் சிவன் ஆவான். பவளம் போன்ற உதடுகளும் முத்தைப் போன்ற பற்களூம் தன்மையுடைய பனி போன்ற மொழியும் உடைய பெண்டிரின் கவர்ச்சியில் தளராத சோதியான அப்பெருமான் பலரிடத்தும் திரிந்த செல்வனாக உள்ளான்.
2833. முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டு மலத்தால் ஏற்படும் வாதனை நீங்கித் தூய துரியா நிலைக் குற்றங்களைக் கடந்து பெத்தநிலை மாறிச் சிவத்தை நோக்குவதாகி உண்மையான ஞானானந்தத்தைப் பொருந்தியிருப்பவன் ஞானி.
2834. சீவன் சிவத்தை அடைத்து சிவமாகியபோது பிறவியைத் தரும் ஆணவம் முதலிய மூன்று மலங்களும் நீங்க குற்றம் பொருந்திய பிரகிருதி மாயை அசுத்த மாயை சுத்த மயை ஆகிய மூன்றையும் கெடுத்து அவற்றில் பற்றும் நீங்கும்படி நீங்கி நின்றால் தவத்தால் உண்டாகும் உண்மை ஞானானந்தத்தில் சீவனும் சிவனும் பொருந்துவதில் துரியாதீதம் அடைந்து சிவ வடிவம் அமையும்.
#####