Print this page
திங்கட்கிழமை, 03 January 2022 09:57

சந்திரனுலோமா!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப் பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#####

நான்காம் பயிற்சி –சந்திரனுலோமா!

நற்பயன்கள்: நுரையீரல் சுத்தமாகும். வயிறு தசைகள் சீராகும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.இடது நாசித் (சந்திர நாடி) துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது நாசி வழியாக வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். காற்றை உள்ளே இழுக்கும்போதும், காற்றை வெளியே அனுப்பும்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். இதில் கும்பகம் இல்லை.

முதலில் தினமும் 9 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

Read 690 times
Login to post comments