ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#####
எட்டாம் பயிற்சி-அக்னிசார்! (வயிற்றை மடக்குதல்)
நற்பயன்கள்: ஜீரண உறுப்புகள் சீரடையும்
1.பத்மாசனம், சுகாசனம் ஆகிய ஆசனங்களில் ஒன்றில் அமர்ந்து கொள்ளவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வயிற்றின் மேல்பகுதி அடிப்பகுதி ஆகியவைகள் நெஞ்சிக்கூட்டின் உள்ளே செல்லும் மாறு செய்யவும்.
3.இந்த நிலையில் அப்படியே அடிவயிற்றை உள்ளே இழுத்தும் வெளியில் தள்ளியும் செய்யவும். சில நொடிகள் இருக்கவும். அதன்பிறகு மெதுவாக மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த பயிற்சியை 3/5 முறை செய்யவும்
#####